Thursday, October 24, 2013

மறுமலர்ச்சி பயணம் ,விருதுநகர் மாவட்டம் -பாகம் 1

தமிழகம் முழுவதும் #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ தலைமையில் கட்சியினர் மறுமலர்ச்சி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 

தூத்துக்குடியில் 5 நாள் சுற்றுப்பயணமும்,ஈரோட்டில் 2 நாள் சுற்றுப்பயணமும் மேற்கொண்டனர்.அதற்கடுத்தபடியாக விருதுநகர் மாவட்டத்தில் 4 நாள் சுற் றுப் பயணமாக மொத்தம் 100 இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின் றனர்.

அதன் முதல் நாளான நேற்று (23.10.13) அருப்புக்கோட்டை ஒன்றியம் செட்டி குறிச்சியில் தொடங்கிய பயணம் சின்னசெட்டிக் குறிச்சி, வாழ்வாங்கி, பெரிய நாயகிபுரம், ராமலிங்காபுரம், போடம்பட்டி, தும்மக்குண்டு, சின்னதும்மக் குண் டு உள்ளிட்ட கிராமங்களில் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் மேற்கொண் டார்.

இறுதியாக பந்தல்குடியில் முடிவடைந்தது. பொதுக்குழு உறுப்பினர் மாரியப் பன் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வைகோ பேசினார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடவில்லை. வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடுகிறது. விருதுநகர் பாராளு மன்ற தொகுதியிலும் ம.தி.மு.க. போட்டியிடும்.

இத்தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகளும் போட்டியி டுகிறது. தேர்தலில் பணம் கொடுக்கப்படும். பணத்தை வாங்கிக் கொள்ளுங் கள். ஆனால் வாக்களிக்கும் போது சிந்தித்து வாக்களியுங்கள்.

ஈழத்தமிழர் பிரச்சினையில் பாரபட்சமாக நடந்து கொண்ட காங்கிரஸ் தோற்க டிக்கப்பட வேண்டும். காங்கிரஸ் மட்டுமல்லாது, காங்கிரசுக்கு துணை போ கின்ற கட்சிகளும் தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இளைஞர்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும். 

மது ஒழிப்புக்காக நடைபயணம் சென்றேன். இந்த நடை பயணத்தின்போது பெண்களிடம் ஏற்பட்டுள்ள தாக்கத்தை உணர முடிந்தது. தங்கள் கணவரும், குழந்தைகளும் மதுப்பழக்கத்தினால் கெட்டுப் போய் விடக்கூடாது என்று பெண்கள் பதறுகின்றனர்.

விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வலியுறுத்தி விருதுநகரில் உண் ணாவிரதம் இருந்துள்ளேன். இதுபோன்று மக்கள் பிரச்னைகளுக்காக போராட் டம் நடத்தி வருகிறேன்.

ஏற்கெனவே நான் இத்தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்து பொது மக்களுக்கு சேவையாற்றியுள்ளேன். மீண்டும் ஒருமுறை சேவையாற்ற வாய்ப்பு தாருங்கள்

தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தை காக்கவும், இளைஞர்களை நல்வழிப்படுத்த வும் வருகிற பாராளுமன்றத்தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு ஆதரவு அளியுங்கள். 

இங்கு பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. இங்குள்ளவர்களின் முகத்தில் புதிய மாற்றம் தெரிகிறது. அது வருகிற தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்துவதாகவே உள் ளது. எனவே பாராளுமன்றத்தேர்தலில் ம.தி.மு.க. அமோக வெற்றி பெறு வது உறுதி. டெல்லி கோட்டையில் தமிழகத்தின் வாழ்வாதாரத்திற்காக ம.தி.மு.க. தொடர்ந்து குரல் எழுப்பும்.

இவ்வாறு வைகோ பேசினார்.

சுற்றுப்பயணத்தின்போது விருதுநகர் மாவட்டச்செயலாளர் ஆர்.எம்.சண்முக சுந்தரம், முன்னாள் எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க் கள் ஆர்.வரதராஜன், ஞானதாஸ், மாநில மாணவர் அணி செயலாளர் தி.மு.ரா ஜேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment