Friday, May 31, 2013

ஆலையை அகற்றும் எங்கள் தர்ம யுத்தம் தொடரும்! வைகோ

ஸ்டெர்லைட் ஆலை குறித்து பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு அதிர்ச்சி தருகிறது!

ஆலையை அகற்றும் எங்கள் தர்ம யுத்தம் தொடரும்!

வைகோ அறிக்கை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் இன்றைய தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரி யத்தின் ஆணையை எதிர்த்து ஆலை நிர்வாகம், தமிழகத்தில் உள்ள மேல் முறையீட்டு ஆணையத்தில்தான் வழக்கு தொடுக்க வேண்டும் என்றும், அந்த ஆணையத்தின் தீர்ப்பின் மீதுதான், பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்ய வேண்டும் என்றும் சட்ட விதிகள் இருக்கின்றன என்று இந்தத் தீர்ப்பாயத்தில் ஆட்சேபனை தெரிவித்திருந்தேன், அதுகுறித்து தீர்ப்பு ஆயம் தந்துள்ள பதில் விளக்கம் என்ன என்பதை தீர்ப்பின் முழு விவரம் கிடைத்தால்தான் தெரியும்.

Thursday, May 30, 2013

தூத்துக்குடி நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்

தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் வைகோ வாதம்

ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலையை மூடுமாறு, தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு வாரியம், மார்ச் 29 ஆம் தேதி ஆணை பிறப்பித்ததால், ஆலை மூடப்பட் டது. அந்த ஆணையை இரத்து செய்யக்கோரி, ஸ்டெர்லைட் நிர்வாகம், தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் தொடுத்த வழக்கு மீதான விசாரணை, டெல்லி முதன்மைத் தீர்ப்பு ஆயத்தில் நடைபெற்று வருகின்றன. நிறைவுக் கட்ட வாதங்கள் இன்று முன்வைக்கப்பட்டன.

இந்த வழக்கில் வைகோ பின்வருமாறு வாதத்தை எடுத்து வைத்தார்:

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குக... தடைக்காக அரசாணையில் கூறப்பட்ட காரணங்கள் நொறுங்கிப் போயின!-பகுதி 2

இந்திய அரசு விடுதலைப்புலிகள் இயக்கத் தைத் தடை செய்திருப்பதால் மற்ற உலக நாடுகளும் தடை செய்துள்ளன. இலங்கைத் தமிழர்கள் ஆறுதலும்,உதவி யும் பெற இந்தியாவிற்கும் வர முடியாதநிலை உள்ளது.இதையும் கடந்து 
இந்தியாவிற்குள் வருகின்றவர்கள் விடு தலைப்புலிகள் என்று சொல்லி சிறை முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ள னர். தமிழர்கள் கண்ணீரில் மிதக்கிறார் கள்.

எனவே, நீதியின் கதவைத் தட்டுவதற்காக இந்தத் தீர்ப்பாயத்தின் முன்பாக உள்ளேன்.

தீர்ப்பாயம் முன்பு வைகோ வாதம் 

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

மாண்புமிகு நீதிபதி அவர்களே!

திரு. பிரபாகரன் அவர்கள் உரையாற்றுகின்ற மேடையில் அமைக்கப்பட்டுள்ள வரைபடத்தை ஒருகணம் பாருங்கள். தமிழ் ஈழத்தின் எல்லைகளைக் குறிக் கின்ற இப்படத்தில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகள்தான் தமிழ் ஈழமா கக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்?

Wednesday, May 29, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 27

பாபர் அந்நியர் என்றால் கைபர், போலன் கணவாய் வழியே வந்த நீங்கள் யார்?

பாபர் அந்நிய நாட்டிலிருந்து வந்தவர் என்று விமர்சிப்பவர்களை நோக்கி நான்
கேட்பதெல்லாம் நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? மத்திய ஆசியாவிலிருந்து ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு சிந்து நதி தீரத்திற்குள் நுழைந்த கூட்டம் தானே உங்கள் கூட்டம். -வைகோ 

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

1991ஆம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.அமெரிக்காவின் ஆக் கிரமிப்பு யுத்தத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் மிகக் கடுமையாக முழங்கி ய தலைவர் வைகோ அவர்கள், இந்தியா யார் பக்கம் நிற்கப் போகிறது என்று கேள்வி எழுப்பினார்.

அமெரிக்கப் போர் விமானங்களுக்கு இந்தியாவில் எரிபொருள் நிரப்பியது தொடர்பாக 1991, பிப்ரவரியில் மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று தலைவர் வைகோ ஆற்றிய உரை..

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குக... தடைக்காக அரசாணையில் கூறப்பட்ட காரணங்கள் நொறுங்கிப் போயின!-பகுதி 1

தீர்ப்பாயம் முன்பு வைகோ வாதம்

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புத் தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப் பட்ட டெல்லி உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி மாண்புமிகு விக்ரம்ஜித் சென் அவர்கள், டெல்லி உயர் நீதிமன்றத்தில், 2010 நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதி களில் விசாரணை நடத்தினார்.

அந்த விசாரணையின்போது மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இரண்டு நாள்களும் கலந்து கொண்டார். தீர்ப்பாயத்தின் எல்லா விசா ரணை நாள்களிலும் வைகோ கலந்து கொண்டு பங்கேற்றார் என்பது குறிப்பி டத் தக்கது.

Tuesday, May 28, 2013

அணு உலை அறிவோம் -நூலில் இருந்து..

செய்திகளில் இருந்து கருத்து பிறக்கிறது. செய்திகளுக்கு எப்போது பண மதிப்பு கிடைத்ததோ, அப்போ திருந்தே செய்திகளில் உயிராக இருந்து வந்த உண்மை செத்துப்போய்விட்டது.செய்திகளில் உள்ள உண்மையைக் கூட்டியோ, குறைத் தோ, மறைத்தோ கொடுப்பதன் மூலம் செய்தியைக் கொடுப்பவர் செய்தியைப் பெறுபவரை தன் விருப்பப்படி சிந்திக்க வைக்க முடியும். அணு உலை விசயத் தில் இது நடந்து வருகிறது.

அணு உலையை ஆதரித்து நீண்ட நேரம் பேசிய இளைஞனிடம், செர்னோபில்
பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது, செர்னோபில் என்று எதைச்
சொல்கிறீர்கள் எனத் திருப்பிக் கேட்டார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழ கத்தில் கோடி மக்களில் ஒரு இலட்சம் பேருக்குக் கூட செர்னோபில் என்றால் என்னவென்றே தெரியாது.

விடுதலைப்புலிகளை இந்தியா தடை செய்ததால்தான் ஈழத் தமிழர்கள் சர்வதேச அநாதைகளாகி விட்டனர்!

தமிழகத்திலேயே ஈழத்தமிழர்கள் தஞ்சம் புக முடியவில்லை!
டெல்லி தீர்ப்பாயத்தில் வைகோ வாதம்

புது டெல்லியில் விடுதலைப்புலிகள் தடை மீதான தீர்ப்பாயத்தின் தலைவரா ன டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரம் ஜித் சென் அவர்கள் முன்னிலையில்
02.11.2010 அன்று விசாரணை நடைபெற்றது.மறுமலர்ச்சி திராவிட முன்னேற் றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பின்வருமாறு வாதங்களை எடுத்து வைத்தார்.

தமிழ் ஈழத்தை அடைவதற்காக விடுதலைப் புலிகள் போராடுவது தமிழ்நாட் டையும் அதில் சேர்த்துக் கொள்வதற்காகத்தான் என்றும், இதனால் இந்தியா வின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டார். அவர் மேலும், தமிழ் ஈழத்தை அமைப்பதன்மூலம் இந்தியாவிலுள்ள தமிழர்களையும் முஸ்லிம்களையும் அதில் சேர்த்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்கள் என்றும் கூறினார்.

Monday, May 27, 2013

தீரர் வ.உ.சியும், நாமக்கல் கவிஞரும் வலியுறுத்திய மதுவிலக்கு!

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்,வீரத்தலைவர் வ.உ.சி (5.9.1872 - 18.11.1936)

1908 நெல்லை எழுச்சியில் நாட்டு விடுதலைக்காக சிறைசென்ற வ.உ.சி. (1908 - 1912) கண்ணனூர் சிறையில் சில காலம் இருந்தார். அப்போது ‘உண்மையான அறம்’ என்ன என்பதை விளக்கி 125 அதிகாரங்களில் ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களால் ஆன ‘மெய்யறம்’ எனும் நூல் எழுதினார்.அது 1914 இல் முதல் பதிப்பு வெளியாயிற்று வ.உ.சி. உயிரோடு இருந்த காலத்திலே மேலும் இரு பதிப்புகளைக் கண்டது.

தியாக வரலாறு படைத்த காசி ஆனந்தன் பாடல்கள் தமிழர் இல்லந்தோறும் ஒலிக்கட்டும்! -பகுதி 2

நமது நியாயமான கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சொல்வோம். இளை ஞர்களிடம் எடுத்துச்செல்வோம்.கல் லூரி மாணவர்களின் கவனத்தைக் கவரு கின்ற வகையிலே கொண்டு செல் வோம். நம்பிக்கையோடு இந்தப் பணியில் ஈடுபடுவோம்.-வைகோ (25.10.10)

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

பிரபாகரனை உயிரோடு பிடிக்காவிட்டாலும் கொன்று பிடிப்பது என்று முடிவெ டுத்தபோது, ஒரு கமாண்டோகூட உயிரோடு திரும்பாமல் அழிக்கப்பட்ட போ து, அந்தச் சண்டையிலே குண்டு பாய்ந்ததனால்.... நீண்ட நாட்கள் மருத்துவ மனையில் இருக்க நேர்ந்ததற்குப்பிறகு, இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் எல்லாம்
நடந்து முடிந்ததற்குப் பிறகு, நவம்பர் மாதத்தில் கூடிய நாடாளுமன்றத்தில், கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து, தொடங்கி வைத்து ஐம்பத்தைந்து நிமிடங்கள் நான் பேசி இருக்கிறேன்.

அந்தப் பேச்சுக்குத்தான் இந்தியப் பிரதமர், ‘இந்திய இராணுவத்தை விமர்சித் தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்’ என்றார்.

தமிழர்களின் மீது தொடர்ந்து ராஜபக்சே கொடூரங்களை நடத்தி வருகிறார்

தமிழர்கள் மீது தொடர்ந்து ராஜபக்சே கொடூரங்களை நடத்தி வருகிறார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்டு வைகோ பேசியதாவது:

திருச்சி தீரர்களின் கோட்டையாக விளங்கி வருகிறது. அண்ணாதுரை முதல் பல தலைவர்களும் கட்சி சார்ந்த முக்கிய முடிவுகளை திருச்சியில் தான் அறிவித்துள்ளனர். அந்த வகையில் ம.தி.மு.க. வும் முக்கிய முடிவுகளை திருச்சியில் இருந்து அறிவித்துள்ளது.

Sunday, May 26, 2013

தியாக வரலாறு படைத்த காசி ஆனந்தன் பாடல்கள் தமிழர் இல்லந்தோறும் ஒலிக்கட்டும்! -பகுதி 1

1987 யில் புலிகளை பற்றி நாடாளுமன்றத்தில் பேச கூடாது என தடை போட்ட கருணாநிதி , தடையை மீறி பேசிய வைகோ ...

கவிஞர் காசிஆனந்தனின் ‘தமிழ் எங்கள் உயிரினும் மேலாகும்’தமிழிசைக்குறு வட்டு வெளியீட்டு விழா, 25.10.2010 அன்று சென்னை இராணி சீதை மன்றத்தில்
நடைபெற்றது. குறுவட்டை வெளியிட்டு கழகப் பொதுச் செயலாளர் வைகோ
ஆற்றிய உரை வருமாறு:-

நாங்கள் கவரிமான் ஜாதி
நாய்போல்எஜமான் அடிகளை நக்கோம்
தீங்கு படைத்தவன் எங்கே
தேடி உதைப்போம் செருக்களம் வாடா
ஓங்கி முழங்குக தானை
உடைந்து நொறுங்கி சிதறுக விலங்கு
தூங்கி வழிந்தது போதும்
துள்ளி எழுக தமிழ்த்திருநாடே

தமிழ்மொழிக்கு இடம் இல்லை என்ற நிலையை உருவாக்குகின்ற பெரும் விபரீதம் ஏற்படும்

ஆங்கில வழியில் பயிற்சி ஏடுகள் மற்றும் தேர்வுகளை எழுத கல்லூரிகளுக்கு உயர்கல்வி மன்றம் விடுத்துள்ள பரிந்துரையை அரசு எக்காரணத்தை முன்னிட்டும் ஏற்கக் கூடாது

வைகோ அறிக்கை

அரசு பள்ளிகளில் தமிழ்வழிப் பிரிவுகளை, ஆங்கில வழிப் பிரிவுகளாக மாற் றும், தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்புத் தோன்றியது. தாய்மொழி கல்விக்கு எதிரான இந்த திட்டம் கூடாது என்று நாம் வலியுறுத்தும் பொழுது, தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தற்போது செய்துள்ள பரிந்துரை, தமிழ்நாட்டிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் இனி தமிழ்மொழிக்கு இடம் இல்லை என்ற நிலையை உருவாக்குகின்ற பெரும் விபரீதம் ஏற்படும். தாய்த் தமிழகத்திலேயே தமிழுக்கு அழிவு நேரும்.

Saturday, May 25, 2013

கானக் குரலால் கோடான கோடி நெஞ்சங்களைக் கவர்ந்த டி.எம்.எஸ். மறைந்தார்!

வைகோ இரங்கல்

அறுபது ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படங்களில் ஒலித்ததும் நாதவெள்ளமாக தமிழக மக்கள் சிந்தையைக் கவர்ந்ததுமான பாடல்களை தன் கானக் குரலால் பாடிய இசைவேந்தர் டி.எம். சௌந்தர்ராஜன் மறைந்தார் என்ற செய்தி கேட்டு, அளவற்ற வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன்.

‘உள்ளம் உருகுதய்யா...’ என்பது உள்ளிட்ட அவரது பக்திப் பாடல்கள் கேட்போ ரை பரவசத்தில் ஆழ்த்தும்.

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 26

இந்தியாவில் மதவெறியை வளர்க்க பாரதிய ஜன தா கட்சி செயல்படுவதைப் போலத்தான் இந்திரா காங்கிரசும் மதவெறியைத் தனது அரசியல் லாபத்திற்கு பயன்படுத்த முயன்றதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன


முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

இந்து-இந்தி-இந்து ராஷ்டிரம் என ஒலிக்கும் ஓங்காரக் குரல்களால்
இந்தியா பல துண்டுகளாகும்!

இந்தியாவின் கோடானகோடி பிற்பட்ட சமூக மக்களுக்கு சமூகநீதி கிடைக்கும்
வகையில்,மண்டல் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வி.பி.சிங் தலை மையிலான தேசிய முன்னணி அரசு உத்தரவு பிறப்பித்தவுடனேயே, அவ்வர சுக்கு பாரதிய ஜனதா கட்சி கொடுத்துவந்த ஆதரவைத் திரும்பப் பெற முடிவு செய்தது. நேரிடையாக சமூகநீதிக்கு எதிராக கருத்து கூறாமல் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்று பிரச்சார இயக்கத்தை தீவிரமாக்கியது.

பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர்கோவில் எழுப்புவோம் என்று பாரதிய ஜன தா கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி வரிந்துகட்டிக் கொண்டு ரத யாத்திரை மூலம் ரத்தக்களறி நடத்துவதற்கு ஆயத்தமானார்.

கொலைகாரன் தலைமையில் காமன்வெல்த் மாநாடா? காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை வெளியேற்று!

நான் இப்போது கேள்விப்பட்டேன்.நான்கு நாள்களுக்கு முன்பு,இங்கிலாந்து
வெ ளிவிவகாரத்துறை அதிகாரிகளை ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் சந்தித்து இ ருக்கின்றார்கள்.அப்போது,அவர்களுக்குக்கிடைத்த தகவல் என்ன தெரியுமா?

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் வைகோ

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில்,முள்ளிவாய்க்கால் படு கொ லை யில் உயிர் ஈந்தவர்களுக்கு, 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட் டம் 17.05.2013 அன்று புரசைவாக்கத்தில் நடைபெற்றது. வடசென்னை மாவட் டக் கழகம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, கழகப் பொதுச்
செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து....

Friday, May 24, 2013

நவரத்னா தகுதிபெற்ற, என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்கக் கூடாது!

வைகோ அறிக்கை!

இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களிலேயே தனிச்சிறப்புமிக்க ‘நவரத்னா’ தகுதியைப் பெற்று உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், மின்உற்பத் தியில் ஈடு இணையற்ற நிறுவனமாகத் திகழ்கிறது. பொன்விழா கண்ட என்.எல். சி. நிறுவனம், தமிழ்நாட்டுக்கும், தென் மாநிலங்களுக்கும் 2,490 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்து அளிக்கிறது. கடந்த நிதி ஆண்டில், 1,411 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய இந்நிறுவனம், விரிவாக்கத் திட்டங்கள் பலவற்றைச் செயல்படுத்தி, நன்கு வளர்ச்சி பெற்று வருகிறது. தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துவரும் என்.எல்.சி. நிறுவனத்தை, தனியார்மயமாக்கும் முயற்சியில் முதற்கட்டமாக 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு எடுத்து உள்ளது.

Thursday, May 23, 2013

கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்!

விடுதலைப் புலிகள் மீதான தடை விசாரணை தீர்ப்பு ஆயத்தில்,
அரசு சாட்சியிடம் வைகோ குறுக்கு விசாரணை!

விடுதலைப்புலிகள் மீதான தடை விசாரணைத் தீர்ப்பு ஆயத்தின் விசாரணை 20.10.2010 புதன்கிழமை அன்று, உதகமண்டலத்தில், தமிழகம் மாளிகையில் நடைபெற்றது.தீர்ப்பு ஆயத்தின் தலைவரும், தில்லி உயர்நீதிமன்றத்தின் நீதி பதியுமான, மாண்புமிகு விக்ரம்ஜித் சென், விசாரணையை சரியாக 10.30 மணிக் குத் தொடங்கினார்.

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சட்டத்துறைச் செயலாளர் ஜி.தேவதாஸ், நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, நீலகிரி மாவட்டச் செயலாளர் அட்டாரி நஞ்சன், கழக வழக்கறிஞர்கள் சு.குருநாதன், சூரி நந்த கோபால், பிரியகுமார், ஆசைத்தம்பி மற்றும் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஈழத்தமிழர்கள் அநாதைகளா ? நீதியின் கதவை தட்டுகிறேன்...பகுதி 2


இந்திய அரசே நாங்கள் ஈழத்திற்கு நம்பிக்கை துரோகிகள் தான் என ஒப்புகொண்டு உள்ளது ....

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.


அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டு உள்ள இரண்டாவது காரணம், இலங்கை யில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி, விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் அதன் நோக்கத்திற்கும் ஆதரவு திரட்ட, தடையை மீறி ஊர்வலங்கள், ஆர்ப் பாட்டங்கள் நடத்தி வருவது, தமிழகத்தில் ஓர் அமைதியற்ற நிலையை உரு வாக்கவும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற வகையிலும் அமைந்து உள்ளது என்பது ஆகும்.

Wednesday, May 22, 2013

ஈழத்தமிழர்கள் அநாதைகளா ? நீதியின் கதவை தட்டுகிறேன் ! பகுதி 1

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர் கள், கடந்த 24.09.2010 அன்று, டெல்லியில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப் புச் சட்டம்) தீர்ப்பு ஆயம் முன்பாக ஆஜராகி, விடுதலைப்புலிகள் அமைப்பின்
மீதான தடை நீட்டிப்பு தொடர்பாக, நடுவண் அரசு வெளியிட்ட அரசு ஆணை மீதான விசாரணையில், தன்னையும் ஒரு தரப்பாகச் சேர்த்து விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.

டெல்லி உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி மாண்புமிகு விக்ரம்ஜித் சென் அவர்கள் இந்தத் தீர்ப்பு ஆயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

வைகோ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை,24.9.2010 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்கியது. இந்த விசாரணை,டெல்லி உயர் நீதிமன்ற அறை எண். 2-இல் நடைபெற்றது.

தமிழ் ஈழத் தாயகம் வரலாற்றுக் கட்டாயம் என்ற உணர்வை உலகத் தமிழர்களின் உள்ளங்களில் தூண்டுவதற்கு புகழேந்தியின் ஓவியங்கள் துணை நிற்கும்!

ஓவியர் புகழேந்தியின் ஈழத்தின் துயர்கூறும் ஓவியக் கண்காட்சி நெல்லை யில் கடந்த 2009 ஆகஸ்ட் 13, 14, 15 தேதிகளில் நடைபெற்றது. கண்காட்சியைத் தொடங்கி வைத்து கழகப் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய சிறப்பு உரை யில் இருந்து...

காலத்தால் அழியாத புகழையும்,நற்பெயரையும் தன்னுடைய தூரிகையிலும், தனக்குப்பெற்றோர் சூட்டி உள்ள பெயரிலும் ஏந்தி உள்ள தமிழ் இனத்தின் சொத் து களுள் ஒன்றாகப் பாதுகாக்கப்பட வேண்டிய எனது ஆருயிர்ச் சகோதரர் புகழேந்தி அவர்கள் தீட்டிய நெஞ்சை உலுக்கும் போர்முகங்கள் சித்திரங்களின்
காட்சிக்கூடத்தைத் திறந்து வைக்கின்ற வாய்ப்பைப் பெற்று இருக்கிறேன்.

காவிரிப் பிரச்சினையில் ஒன்றுபட்டுக் குரல் எழுப்புவோம்

காவிரிப் பிரச்சினையில் ஒன்றுபட்டுக் குரல் எழுப்புவோம்! 
-வைகோ அறிக்கை

கர்நாடக மாநிலத்தில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் இழைப்பதே வாடிக்கை ஆகி விட்டது. கர்நாடகத்தில் புதிய முதல்வராகப் பதவி ஏற்று உள்ள சித்தராமையாவும் இதற்கு விதி விலக்கு அல்ல.

தமிழ்நாட்டுக்குக் காவிரி நீரைத் திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்திரவைச் செயல்படுத்த, பா.ஜ.க. முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் முயன்ற போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சித்தராமையா கடும் எதிர்ப்புத் தெரி வித்தார்.

Tuesday, May 21, 2013

தமிழகத்தை பாதுகாப்பது நமது கடமை

குமரி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் தில்லைசெல்வம் இல்ல திருமண விழா வில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.

அவர் பேசியதாவது:

குமரி மாவட்டம், இது புராதன தமிழர்பூமி. கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல் உடன் இருக்கிற தீரர்களை இங்கு நான் பார்க்கிறேன். தமிழகத்துக்கு வழிகாட்டுகிற பூமி கன்னியாகுமரி மாவட்டம். தமிழகத்தின் நாலாபுறமும் இன்னல்கள் சூழ்ந்துள்ளன.

Monday, May 20, 2013

தமிழீழ இன அழிப்பின் 4-ம் ஆண்டு நினைவு தினம் -சென்னை தமிழர் கடற்கரையில் நடந்த நிகழ்வு

'எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இனப்படுகொலையை மறக்க மாட்டோம், தமிழீழம் மலரும் வரை ஓயமாட்டோம்'

புகைப்பட தொகுப்பு ...


இயற்கையைக் காப்போம்!



அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் நீண்ட ஆராய்ச்சிகள் செய்து ஒரு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.இன்னும் எட்டு முதல் பத்து ஆண்டுகளுக்குள், இந்த உலகம் பெரும் வறட்சியை, பஞ்சத்தைச் சந்திக் கப் போகிறது.அதனால், ஏராளமான உயிர்ச்சேதம் ஏற்படப் போகிறது என் கிறார்.

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 25


பிற்படுத்தப்பட்ட வேடர் குலத்தைச் சேர்ந்த வால்மீகிதானே இராமாயணத்தை எழுதினார்.மகாபாரதத்தை எழுதிய வியாசர் யார்? பிற்படுத்தப்பட்ட மீனவர் குலத்தைச் சார்ந்தவர்தானே? பகவத் கீதையைத் தந்த கிருஷ்ணன் யார்? 
பிற்படுத்தப் பட்ட யாதவர் குலத்தில் பிறந்தவர் தானே.-வைகோ 

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படுத்துவிட்டு வரலாமே.


திராவிட இயக்கத்தின் இலட்சிய முழக்கம்

திராவிட இயக்கத்தின் இலட்சியக்கோட்பாடுகள் எவை என்பதை தந்தை பெரி யாரும், பேரறிஞர் அண்ணாவும் வகுத்தளித்து இருக்கிறார்கள்.

சமூக சீர்திருத்தம்; சாதி, மதமற்ற சமத்துவ சமுதாயம் காணல்; தமிழின உரி மை; தமிழ்ப் பண்பாடு காத்தல்; மொழி உரிமை; தமிழ்நாட்டின் வாழ்வுரிமை;
சமூக நீதி; மதச்சார்பின்மை; பெண் விடுதலை; மாநில சுயாட்சி; பொருளாதார
தற்சார்பு.

நாட்டு மக்களின் நல்லெண்ணத்தைப் பெற்று நாம் நிமிர்ந்து நிற்கிறோம்! பகுதி 4

மல்லிகையில் கொண்டுபோய் ஐந்து நாட்கள் விசாரித்துவிட்டு, திருபெரும்புதூர் படுகொலை சம்மந்தமாக என்னை சாட்சிக் கூண்டில் 250 ஆவது சாட்சியாக ஏற்றியபோது, எடுத்த எடுப்பிலேயே இது பொய் வழக்கு, ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று சொன்னேன்.-வைகோ 

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

மறுமலர்ச்சி திமுகவின் 20 ஆம் ஆண்டுத் தொடக்கவிழாவையொட்டி,06.05.2013 அன்று புதுக்கோட்டையில், மாபெரும் கழகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட இந்நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர்
வைகோ ஆற்றிய உரை:

பகுதி 3 தொடர்ச்சி ....

அந்தக் கூட்டத்தில்தான் இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுக்கக்கூடாது என்று
முடிவெடுத்தார்கள். பணம் கொடுத்தாலும் விற்கக்கூடாது என்று முடிவெடுத் தார்கள். அந்த முடிவை உடைத்தது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தானே. அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் எடுத்த முடிவை சிதறடிப்பது சோனியா காந்தி இயக்கு கின்ற மன்மோகன் சிங் அரசுதானே.

Sunday, May 19, 2013

தொழிலாளர்களுக்காக உரிமைப் போர்க்கொடியை உயர்த்திய திராவிட இயக்கம்!

நெல்லை மாநகர் மாவட்ட ம. தி.மு.க.மற்றும் மறுமலர்ச்சி தொழிலாளர் முன் னணி சார்பில், 1.5.2013 அன்று,நெல்லை - பாளையங்கோட்டையில் மே தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இக்கூட்டத்தில்,கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரை யில் இருந்து....

உலகத் தொழிலாளர்களே, ஒன்று படுங்கள்;
நீங்கள் இழக்கப்போவது எதுவும் இல்லை;
உங்களைப் பூட்டி இருக்கின்ற அடிமை விலங்குகளைத் தவிர!

Workers of the World, Unite;
You have to lose nothing but your chains

நாட்டு மக்களின் நல்லெண்ணத்தைப் பெற்று நாம் நிமிர்ந்து நிற்கிறோம்! பகுதி 3

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

மறுமலர்ச்சி திமுகவின் 20 ஆம் ஆண்டுத் தொடக்கவிழாவையொட்டி,06.05.2013 அன்று புதுக்கோட்டையில், மாபெரும் கழகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட இந்நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர்
வைகோ ஆற்றிய உரை:

பகுதி 2 தொடர்ச்சி ....


எதிர்காலம் ஒளிமயமாகக் காட்சி அளிக்கிறது...
தமிழக மக்கள் நமக்கு வெற்றியைத் தருவார்கள்!

2004 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டு காலத்தில் இந் தியத் தலைமை அமைச்சரிடத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முன் வைத்த கோரிக்கைகள் பல.

உலகத்தில் எந்த மூலையில் தமிழனுக்குத் துன்பம் என்றாலும், நாங்கள் துடிக் கிறோம்.அமெரிக்காவுக்குப் பக்கத்தில் இருக்கக்கூடிய கரபியன் கடலில் உள்ள
கிராண்ட் கேமன் தீவில் 530 தமிழர்கள் சிக்கிக்கொண்டார்கள். ஒரு புயல் வீசி
கடல் சூழ்ந்துகொண்ட நிலையில், மற்ற நாடுகளில் இருந்து எல்லோரும் மீட் டுக்கொண்டு போய்விட்டார்கள்.

அணு உலையை ஆதரிப்பவர்களே, படித்துப் பாருங்கள்!

“அணு உலை அறிவோம்” நூல் வழங்கும் ஆணித்தரமான சாட்சியங்கள்;
அணு உலையை ஆதரிப்பவர்களே, படித்துப் பாருங்கள்!

ஜெ.பிரபாகரன் எழுதிய “அணு உலை அறிவோம்” நூல் வெளியீட்டு விழா 9.5. 2013 அன்று மதுரையில் எழுத்தாளர் பா.ஜெயப்பிரகாசம் தலைமையில் நடை பெற்றது. இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் நூலை வெளி யிட, கழகப் பொதுச் செயலாளர் வைகோ, நூலின் முதல் படியைப் பெற்றுக் கொண்டு சிறப்பு உரையாற்றினார். அவரது உரையில் இருந்து.....

அணு உலை மனிதகுலத்தின் உயிருக்கு உலை என்று அணு உலை விபத்துகள் வழங்கிய எச்சரிக்கையை, ஒரு ஆவணமாக, நிழற்படங்களின் தொகுப்பு ஆவ ணமாக, அணு உலை அறிவோம் என்கின்ற, தமிழ்  இனத்தைக்காக்கின்ற ஆயு தமாக நூல் ஆசிரியர் ஆருயிர்த்தம்பி பிரபாகரன் அவர்கள் உருவாக்கித் தந்து இருக்கின்றார்கள். 

Saturday, May 18, 2013

விருதுநகரில் வியூகம் அமைக்கும் மதிமுக

விருதுநகரில் மதிமுக சார்பில் 20-வது ஆண்டு விழா மற்றும் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு சிறப்பாக நடைபெற இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்ட மதிமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் கழக வளர்ச்சி நிதி, தேர்தல் நிதி ஆகியவைகளுக்கு சீட்டுக்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலையில் நடைபெற்றது. இதில், வைகோ பங்கேற்று பேசியதாவது:

இதே நாளில் 4 ஆண்டுகளுக்கு முன்பு மே மாதம் 16-ம் தேதி மக்களவை தேர்த லில் வாக்குகள் எண்ணப்பட்டன. இதே தொகுதியில் தோற்க போகிறேன் என் ற கவலையிலும், ஈழத்தில் தமிழர்கள் படுகொலைச் சம்பவமும் நடந்து கண்டு ஆழ்ந்த துயரத்திலும் இருந்தேன். இதையடுத்து தேர்தல் தோல்விச் செய்தி

இது என்ன தமிழ்நாடா? ராஜபக்சே ஆளும் கண்டி அனுராதபுரமா?

முதல் அமைச்சர் மகனுக்குப் பிறந்தநாள் கொண்டாட்டம்... 
முத்துக்குமார் மலர்த்தூணுக்கு அனுமதி மறுப்பு! 
இது என்ன தமிழ்நாடா?
ராஜபக்சே ஆளும் கண்டி அனுராதபுரமா?
கருணாநிதிக்கு வைகோ கேள்வி

ஈழத் தமிழர்களுக்காக இன்னுயிர் ஈந்த முத்துக்குமார் உள்ளிட்ட 16 தியாகி க ளின் முதலாம் ஆண்டு புகழ் அஞ்சலிக் கூட்டம் ‘இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ சார்பில் சென்னையில் 29.01.2010 அன்று நடைபெற்றது. இக்கூட்டத் தில் வைகோ ஆற்றிய உரையில் இருந்து...

பன்னிரண்டு மாதங்களுக்கு முன்னால், உலகமெலாம் வாழுகின்ற தமிழர்கள்,
சூறைக்காற்றிலே சிக்கிய மரக்கலம் திசை தெரியாமல், கடலில் பொங்கி எழு கின்ற அலைகளுக்கு நடுவே தடுமாறித் தவிப்பதைப் போல, துன்பப் புயலில்
தவித்துக்கொண்டு இருந்தோம். சிங்களவர்களின் கொடூரத் தாக்குதலில் பல் லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டு இருந்த துயரமான நேரத்தில், இந்த இருளில் வெளிச்சமே தெரியாமல் போய்விடுமோ? என்று கவலை மூண்டு இருந்த வேளையில், இதற்கு ஏதாவது ஒரு தீர்வு அமை யாதா? தமிழர்களின் மரண ஓலம் நிற்காதா? சாக்காட்டில் தூக்கி எறியப்பட்ட 

முள்ளி வாய்க்கால் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுகூட்டம்

முள்ளி வாய்க்கால் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுகூட்டம். தானா தெரு, சென்னை

புகைப்பட தொகுப்பு 


சுதந்திரத்தமிழீழம் கானல்நீரல்ல வரலாற்றில் பதியும் உண்மை

மே 17-2013 அன்றைய பொதுக்கூட்டதின் காணொளி.....

சிங்கள பயங்கரவாத அரசால் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதன் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சென்னை புரசைவாக்கம் டானா தெருவில் இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையேற்க மதிமுக பொதுச் செய லாளர் வைகோ, திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஓவியர் சந்தானம், திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராசு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் ஆகியோர் உரையாற்றினர்.

விடியலுக்குப் பெயர்தான் பிரபாகரன்! பகுதி 2

அருமைத் தோழர்களே! கட்சியை மறந்துவிடுங்கள். வைகோ பேசுவது மறு மலர்ச்சி தி.மு.கவின் மேடை என்பதை மறந்துவிடுங்கள். இந்த மண்ணில் பிறந்த வீரவாலிபர்களே! நம் வாழ்நாளில் நம் சொந்தச் சகோதரர்கள் அழிக் கப்பட்டார்களே, அந்த மண்ணில் அவர்கள் சுதந்திரம் உள்ள மக்களாக,மானம் உள்ள மக்களாக உரிமை உள்ள மக்களாக வாழ்வதற்கு கொலைகாரச்சிங்களக் கூட்டத்தின் கொட்டத்தை ஒடுக்குவதற்கு மாவீரர்கள் பெயரால் உறுதி எடுப் போம். மாவீரர்களின் தியாகத்தால் சூளுரை மேற்கொள்வோம்.-வைகோ (27.11.2009)

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே

அண்ணன் நெடுமாறன் வரிசைப்படுத்தினாரே! சிங்களப்படைகளைச் சின்னா பின்னம் செய்து, பின்னங்கால் பிடறியில் அடிபட ஓட வைத்து, அக்னி அலை களில், ஓயாத அலைகளில், பரந்தனிலே, மாங்குளத்திலே,கிளிநொச்சியிலே, யானை இறவிலே உலகம் திகைக்கின்ற பெரிய வெற்றிகளைப் பெற்ற விடுத லைப்புலிகளை, இனி யுத்தக் களத்திலே அழிக்கமுடியாது,வெளிநாடுகளின் ஆயுத பலம் வேண்டும் என்று அவன் எண்ணிய நேரத்தில், தேடிச்சென்று கை யெழுத்திடாத ஒப்பந்தத்தைப் போட்டு ஆயுதம் கொடுத்தாய், ரேடார் கொடுத் தாய். பலாலி விமானதளத்தைப் பழுது பார்த்துக் கொடுத்தாய்.அங்கிருந்து சீறிப் பாய்ந்த விமானங்கள் தான் எங்களது பச்சிளம் குழந்தைகளைக் கொன்று விட் டுப் போயின, செஞ்சோலையில்.

Thursday, May 16, 2013

விடியலுக்குப் பெயர்தான் பிரபாகரன்! பகுதி 1

இந்த மண்ணில் இருக்கின்ற ஆயிரமாயிரம் வீர வாலிபர்கள் ஈழத்துக்குச் செல்வார்கள். அப்படி ஒரு நாள்வரும்.சிங்களக் கொடி யோரை வீழ்த்தி, தமிழ் ஈழச் சகோதர, சகோதரிகளுக்குத் தோள் கொடுத்து, களமாடு கின்ற கட்டத்துக்கு வருவார்கள். -வைகோ (27.11.2009)

தென்சென்னை மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், 27.11.2009 அன்று 
சென்னை -தியாகராய நகரில் மாபெரும்பொதுக்கூட்டம் நடைபெற்றது.மாவீரர் களைப் போற்றி நடைபெற்ற இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், கழகப் பொருளாளர் டாக்டர் இரா.மாசிலாமணி, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா மற்றும் தலை மைக் கழக நிர்வாகிகளும் முன்னணியினரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி யில் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரையில் இருந்து....

காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது!

மாத்தையாவின் துரோகத்தைவிட, கருணாவின்துரோகத்தைவிட, ராஜபக்சே யின் கொலை பாதகத்தைவிட, அவர்களுக்காக வக்காலத்து வாங்குகின்ற கலைஞர் கருணாநிதி செய்கின்ற துரோகம் கொடுமையானது. தமிழ் இனம், ஒரு போதும், இவரை மன்னிக்காது. காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது.- வைகோ (20.11.2009)

தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழி வும்,இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன் னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித் ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான்.கரிகாலன் சிங்களவர் களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான்.

Wednesday, May 15, 2013

லண்டன் வாழ் தமிழ் மக்களுக்கு வைகோ வேண்டுகோள்

லண்டன் மாநகரில் நடைபெறவிருக்கும் முள்ளிவாய்க்கால் துயரத்தின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் லட்சக் கணக்கில் கலந்து, கல்லறையினில் உறங்கும் எங்கள் உறவுகளுக்கு மறுக்கப்பட்ட நீதி வேண்டி உரக்கக் குரல் கொடுக்குமாறு லண்டன் வாழ் தமிழ் மக்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறை கூவல் விடுத்துள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு இலங்கையில் நடைபெறு வதை தடை செய்ய வேண்டியும் புலம்பெயர் தமிழ் மக்கள் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என மேலும் வேண்டியுள்ளார்.

காணொளி வடிவில் .

தடை... சிறை... கால் தூசுக்குச் சமம்!!

இந்தக் கட்டத்தில் தமிழ் இளைஞர்களே! நீங்கள் முன்வாருங்கள்.கட்சி களைக் கடந்து நான் அழைக்கிறேன். இணையதளத்தில் பயில்கிற இளைஞர் கூட்டம் முன்வரட்டும். -வைகோ (29.10.2009)

தமிழ் இனத்துக்கு எதிரான மன்மோகன்சிங் அரசின் துரோகம் தொடர்ந்தால்
புலிகளுக்கு எல்லா உதவிகளும் செய்வோம்!

இலங்கையில் முள்வேலி முகாம்களில் வதைபடும் தமிழர்களை விடுவிக்கக்
கோரியும் - இனப்படுகொலை செய்யும் சிங்கள அரசைக் கண்டித்தும் -இலங் கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், அக்டோபர் 27, 28,29 ஆகிய தினங் களில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணத்தின் நிறைவாக, அக்டோபர் 29ஆம் நாள், திருச்சியில், மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற் றது, மருத்துவர் இராமதாசு, பழ.நெடுமாறன், ஆர்.நல்லக்கண்ணு, தா.பாண்டி யன் மற்றும் இயக்கத்தலைவர்கள் பங்கேற்ற இப்பொதுக் கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரையில் இருந்து...


தமிழ் இனத்துக்கு துரோகம் இழைத்த இந்திய அரசின் முகத்திரையைக் கிழிப்போம்!- பகுதி 2

வாலிபர் கூட்டத்தை அழைக்கிறேன், இளைஞர் கூட்டத்தை அழைக்கிறேன். முத்துக்குமார் போன்ற வீர இளைஞர்களின் தியாகத்தை எண்ணிப் பாருங்கள்
-வைகோ (27.10.2009)


முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே

இலங்கையில் முள்வேலி முகாம்களில் வதைபடும் தமிழர்களை விடுவிக்கக்
கோரியும்,இனப்படுகொலை செய்யும் சிங்கள அரசைக் கண்டித்தும்,  இலங்
கை த் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழகத்தின் நான்கு முனை களில் இருந்தும் திருச்சியை நோக்கி மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வுப் பிரச் சாரப் பயணத்தில்தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், கழகப் பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு, இந்தி யக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஆர்.நல்லகண்ணு ஆகியோர் பங்கேற் றனர்.இராமேஸ்வரத்திலிருந்து விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணத்தை மேற் கொண்ட கழகப் பொதுச் செயலாளர் வைகோ 27.10.2009 அன்று இராமநாத புரத் தில் திரண்டிருந்த மக்களிடையே ஆற்றிய உரையிலிருந்து...

தங்களுக்காக நான் போராடுவேன் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்பட்டு இருக்கிறது! -பகுதி 5

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே

முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், தொண்டர் அணி - இளைஞர் அணி - மாணவர் அணி
தோழர்கள் பங்கேற்ற, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப் பிரச்சார நடைப் பய ணம், பொள்ளாச்சியில் தொடங்கியது. ஈரோட்டில் 28.04.2013 அன்று நிறைவு
பெற்றது. இதனையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரை வருமாறு..

பகுதி 4 யின் தொடர்ச்சி ....

அப்பொழுது சொன்னேன், எங்களுடைய கோயில்கள்,எங்களுடைய தேவால யங்கள் என்று இன்றைக்கு நாங்கள் எதை நினைக்கமுடியும்.அதற்காக உங்கள் கதவைத்தட்டுகிறோம். எங்கள் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப்
பாருங்கள். யாழ்ப்பாணத்துக்குப் பக்கத்தில் எங்களுடைய பெண்கள், வயதான வர்கள் கொடூரமாகக் கொல்லப் பட்டு புதைக்கப்பட்டிருக்கிறார்கள். கைகளுக் கு விலங்கு போட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். ராஜபக்சே என் கிற கொடியவன் இராணுவத்தில் இருந்தவன். கிருசாஞ்சி படுகொலை  சம்ப வத்தில் கற்பழித்துக்கொல்லப்பட்ட வழக்கில் அவன் சொல்லி விட்டான் நிறை ய பேரை இப்படி புதைத்து இருக்கிறோம் என்று கோர்ட்டில் சொல்லிவிட்டான்.

அரசுத் தொடக்கப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் விபரீத முடிவை உடனே கைவிட வேண்டும்!

தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

தமிழகச் சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு, தமிழ்வழிக் கல்விக்கு வேட்டு வைத்து, அன்னைத் தமிழ் மொழிக்கு பேராபத்தை ஏற்படுத்துவது ஆகும். வளர் தலைமுறை குறிப்பாக, பள்ளி மாண வர் கள் தமிழ்மொழியில் பயில்வதைவிட்டு, ஆங்கில மொழியில் பயில்வ தற் கு ஊக்குவிப்புத் தந்து “மெல்லத் தமிழ் இனி சாகும்; மேலை மொழியே இங்கு ஓங்கும்” எனும் பெரும் விபரீதத்துக்கு தமிழக அரசின் முடிவு வழிவகுக்கும்.

“கடந்த கல்வியாண்டில், 320 அரசுப்பள்ளிகளில், முதல் மற்றும் ஆறாம் வகுப் புகளில் ஒவ்வொன்றிலும் இரண்டு ஆங்கில வகுப்புகள் தொடங்கப் பட்டன. மொத்தம் 640 பிரிவுகள் தொடங்கப்பட்டு 22,400 மாணவர்கள் படித்து வருகின் றார்கள். வரும் கல்வியாண்டு முதல் தேவைப்படும் அனைத்து அரசுத் தொடக் கப் பள்ளிகளிலும் நடுநிலைப் பள்ளிகளிலும் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஆங்கிலவழிப் பிரிவுகள் தொடங்கப்படும் என்ற கல்வி அமைச் சரின் அறிவிப்பு தமிழுக்கும், தமிழ் பயிற்சி மொழிக்கும் பெரும் கேடு செய்யும்.
அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிப் பிரிவுகளை ஆங்கிலவழிப் பிரிவுகளாக மாற் றும் அறிவிப்பை எதிர்க்கிற அனைவரும் ஆங்கில மொழிக்கோ ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்றுக் கொள்வதற்கோ எதிரானவர்கள் அல்ல என்பதை வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன்.

Tuesday, May 14, 2013

பொதுமக்கள் நலனுக்காக, சுற்றுச் சூழலைக் காக்க ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராடுகிறேன்-தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வைகோ

தூத்துக்குடி நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலை வழக்கு, டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை இந்த அமர்வில் விசாரிக்கக் கூடாது. தமிழ்நாடு அரசு அமைத்துள்ள மேல்முறையீட்டு ஆணையத்தில்தான் ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு செய்திருக்க வேண்டும் என்ற வாதத்தை வைகோ முன் வைத்தார்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் அந்தக் கருத்தை வலியுறுத்தியது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் வழக்கறிஞர் பசுமைத் தீர்ப்பா யத்தின் முதன்மை அமர்வில்தான் விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

தமிழ் இனத்துக்கு துரோகம் இழைத்த இந்திய அரசின் முகத்திரையைக் கிழிப்போம்!- பகுதி 1

இலங்கையில் முள்வேலி முகாம்களில் வதைபடும் தமிழர்களை விடுவிக்கக்
கோரியும்,இனப்படுகொலை செய்யும் சிங்கள அரசைக் கண்டித்தும்,  இலங்
கை த் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழகத்தின் நான்கு முனை களில் இருந்தும் திருச்சியை நோக்கி மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வுப் பிரச் சாரப் பயணத்தில்தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், கழகப் பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு, இந்தி யக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஆர்.நல்லகண்ணு ஆகியோர் பங்கேற் றனர்.இராமேஸ்வரத்திலிருந்து விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணத்தை மேற் கொண்ட கழகப் பொதுச் செயலாளர் வைகோ 27.10.2009 அன்று இராமநாத புரத் தில் திரண்டிருந்த மக்களிடையே ஆற்றிய உரையிலிருந்து...

நடுப்பகல் நேரம், நெருப்பாகக் கொதிக்கின்ற உச்சிவெயில் உச்சந்தலையைப் பிளக்கிறது. ஒருசிலர்தான் கூட்டத்துக்கு இந்த நேரத்தில் வருவதற்கு வாய்ப்பு இருக்கும் என்று கருதினாலும், நிகழ்ச்சியில் திரண்டு இருக்கிறவர்களைப் பார்க்கிறபோது, இது கொதிக்கும் வெயிலா? அல்லது பெளர்ணமி நாளில் வீசு கின்ற பால்நிலவின் ஒளியா? என்று திகைக்க வைக்கிற அளவுக்கு உணர்ச்சி உள்ள தமிழர் கூட்டம், இராமநாதபுரத்தில் திரண்டு இருப்பதைக் காண்கிறேன்.

திராவிட இயக்கத்தினைத் தூக்கி நிறுத்தும் ஆற்றல் மிக்கவராக வைகோவைப் பார்க்கிறேன்! -புலவர் புலமைப்பித்தன்

முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில்,தொண்டர் அணி - இளைஞர் அணி - மாணவர் அணி
தோழர்கள் பங்கேற்ற, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப்பிரச்சார நடைப்பயணம், ஈரோட்டில் 28.04.2013 அன்று நிறைவு பெற்றது. இதனையொட்டி நடைபெற்ற
பொதுக் கூட்டத்தில் புலவர் புலமைப்பித்தன் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் 
நீதிக்கு இது ஒரு போராட்டம் 
நிச்சயம் உலகம் பாராட்டும் 

என்று என்னை ஆளாக்கிவிட்ட அன்புத் தலைவர், என் உயிர் அணுக்களில் எல்லாம் நிறைந்திருக்கின்ற அண்ணன் புரட்சித் தலைவர் அவர்களுக்காக 1973 ஆம் ஆண்டு நான் இந்தப் பாட்டை எழுதினேன். ஆனால்,நாற்பதாண்டு காலம் கழித்து என் அருமை அண்ணன் புரட்சிப் புயலுக்கும் இந்தப் பாட்டு பொருந்தும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

தங்களுக்காக நான் போராடுவேன் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்பட்டு இருக்கிறது! -பகுதி 4

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே

முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், தொண்டர் அணி - இளைஞர் அணி - மாணவர் அணி
தோழர்கள் பங்கேற்ற, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப் பிரச்சார நடைப் பய ணம், பொள்ளாச்சியில் தொடங்கியது. ஈரோட்டில் 28.04.2013 அன்று நிறைவு
பெற்றது. இதனையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரை வருமாறு..

பகுதி 3 யின் தொடர்ச்சி ....

குடிநீர் இல்லை....

மணலை அள்ளிக்கொண்டுபோய் விற்றீர்களே, எங்கே இருக்கிறது நிலத்தடி நீர்.குடிக்கத் தண்ணீர் கிடையாது. வருகிற வழியெல்லாம் வேதனைக்குரல்
ஒ லிக்கிறது. இந்த நிலைமை இப்படியே நீடித்தால் எங்கே வாழப்போகிறோம். இதை எல்லாம் சிந்தித்தார்களா? மணலை கொள்ளை யடிப்பவர்கள். தங்கள் கஜானாக்களை நிரப்பிக் கொள்வதற்கு வருங்கால சமுதாயத்தையா
அழிப்ப து?

Monday, May 13, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 24

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

தமிழக மீனவர்கள் உயிரைக் காப்பாற்றாத ‘நொண்டி வாத்து’ 
இந்தியக் கடற்படை எதற்காக?

சிங்கள இனவெறி அரசு ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து வருவதை வேடிக்கை பார்த்து வரும் டில்லி காங்கிரஸ் அரசு, தமிழக மீனவர்கள் இலங் கைக் கடற்படையால் தாக்கப்படுவதையும், கொடூரமான முறையில் சித்ர வதை செய்து கோரமாகக் கொல்லப்படுவதையும் வேடிக்கை பார்த்து வரு கிறது.

தமிழக மீனவர்கள்,கடலில் மீன்பிடிக்கச்செல்லும் போது, நமது கடல் எல்லைக் கே வந்து அத்துமீறி மீனவர்களைக் கொல்வதும், படகுகளைத் தாக்கி அழிப்ப தும், மீன்பிடி வலைகளை அறுப்பதும் சிங்களக் கடற்படையினரின் அன்றாடத் தொழில் ஆகிவிட்டது.இந்திய மீனவர்களைக் காப்பாற்ற, நமது கடற்பிரதேசத் தில் உள்ள இந்தியக்கப்பற்படை ஒருமுறை கூட முயற்சித்தது இல்லை.கடந்த 25 ஆண்டுகாலமாக இதே அவலநிலை தான் தொடருகிறது.

தமிழருக்கு இருள் சூழ்ந்த நேரம்! இதுவே நேர்த்தியான நேரம்!

கர்நாடகத் தமிழ் மக்கள் இயக்கத்தின் சார்பில், பெங்களூரில் 18.10.2009 அன்று நடைபெற்ற, ‘தமிழ் ஈழ விடுதலை ஆதரவு’ மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்புரை
ஆற்றினார், கழகப் பொதுச் செயலாளர் வைகோ. அவரது உரையில் இருந்து...

கர்நாடகத் தமிழ் மக்கள் இயக்கம் முன்னெடுத்து நடத்துகின்ற இந்த மாநாட் டில், இந்தப் பரந்த மைதானத்தில், எரிமலையின் சீற்றத்தை நெஞ்சிலே தேக்கி யவாறு நீங்கள் அமர்ந்து இருக்கிறீர்கள். உணர்ச்சி ததும்புகிற இந்த மாநாட் டில், பல்லாயிரக்கணக்கிலே திரண்டு இருக்கின்றீர்கள். உங்களுக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

ஈழத்திலே நமது சொந்த உறவுகள், குற்றுயிரும் குலையுயிருமாக வதைபடு கின்ற நேரத்தில், மனித நேயத்தோடு, அந்தக் கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று உங்களோடு சேர்ந்து குரல் கொடுத்த கன்னட சகோதரர் களுக் கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களுக்காக நான் போராடுவேன் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்பட்டு இருக்கிறது! -பகுதி 3

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே

முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், தொண்டர் அணி - இளைஞர் அணி - மாணவர் அணி
தோழர்கள் பங்கேற்ற, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப் பிரச்சார நடைப் பய ணம், பொள்ளாச்சியில் தொடங்கியது. ஈரோட்டில் 28.04.2013 அன்று நிறைவு
பெற்றது. இதனையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரை வருமாறு..

பகுதி 2 யின் தொடர்ச்சி ....

எங்கள் அறப்போராட்டத்தில் வெல்வோம்; நிரந்தரமாக
மதுக்கடைகள் அகற்றப்படும் காட்சிகளைத் தமிழகம் காணும்!

நாட்டு மக்களின் நல்லெண்ணத்தைப் பெற்று நாம் நிமிர்ந்து நிற்கிறோம்! பகுதி 2

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.


மறுமலர்ச்சி திமுகவின் 20 ஆம் ஆண்டுத் தொடக்கவிழாவையொட்டி,06.05.2013 அன்று புதுக்கோட்டையில், மாபெரும் கழகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட இந்நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர்
வைகோ ஆற்றிய உரை:

பகுதி 1 தொடர்ச்சி ....

நான் குழந்தைகளைப் பற்றிக்கவலைப்படுகிறேன். மது எனும் கொடிய அரக் கனின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிப்பதற்கு ஏறத்தாழ 1130 கிலோ மீட் டர் தொலைவு இந்த மூன்று கட்ட நடைப்பயணத்தில் கோடிக்கணக்கான மக் களைச் சந்தித்திருக்கிறேன். அதில் பெரும் பாலும் தாய்மார்கள். கைக் குழந் தையோடு நெருப்பு வெயிலில் கால்களில் செருப்பு இல்லாமல் கால் கடுக்கக் காத்திருந்ததைக் கண்டு பதறிப்போனவனாக, தாயே நீங்கள் ஏன் இங்கு நிற் கிறீர்கள்? என்று கேட்ட போது, உங்களைப் பார்ப்பதற்காகத் தான் நிற்கிறோம். எங்கள் பிள்ளைகள், குழந்தைகள், எங்கள் குடும்பம் பத்திரமாக இருக்க வேண் டும். இந்த மதுவின் பிடியிலிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்ற மதுக்கடைகளை
மூட வேண்டும் என்பதற்காக நீங்கள் நடந்து வருவதைப் பார்ப்பதற்கு காத்துக் கொண்டு இருக்கிறோம் என்று அந்தத் தாய்மார்கள் சொன்னார்கள்.அந்த மதிய வேளை வெயிலில் களைப்பும் சோர்வும் என்னை ஆட்கொள்ள முயன்றாலும், அந்தப் பச்சிளங்குழந்தைகளுடன் அந்த தாய்மார்கள் வழிநெடுக நிற்பதைப் பார்க் கிறபோது, என் களைப்பெல்லாம் பறந்துபோய்விடும்.

Saturday, May 11, 2013

மே-12 : உலக செவிலியர் தினம்- வைகோ வாழ்த்து

செவிலியர் பணி என்பது தொழில் அல்ல; தொண்டு. ஊதியத்திற்கு அப்பாற் பட்டு சாதாரண மருத்துவ சேவைகளிலிருந்து போர்க்கால மருத்துவ சேவை கள் வரை சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு தாய்க்கு நிகரான பரிவையும் சகிப்புத் தன்மையும் கொண்டு மனித அசிங்கங்களைக் கூடப் பொருட்படுத்தாமல் ஆற் றும் மகத்தான சேவை செவிலியர் பணி. இராணுவம், காவல்துறை போன்று இவர்களும் சீருடைப் பணியாளர்கள். இதை நினைவுகூர வேண்டியது நமது சமூகக் கடமை.

இங்கிலாந்தில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் 12.05.1820-ஆம் ஆண்டு
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார். இறையருளால் தனக்கு இடப்பட்ட பணி யாகவே செவிலியர் சேவையைத் தன் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக அப்பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நவீன தாதியியல் முறையை உருவாக்கி செவிலியர் பயிற்சிப் பள்ளியை பிளாரன்ஸ் நைட்டிங் கேல் தொடங்கினார். அவர் பிறந்த மே 12-ஆம் நாளே உலக செவிலியர் தினமாகும்.

Friday, May 10, 2013

பாகப்பிரிவினை - அறிஞர் அண்ணா

தமிழர் தமிழ்நாடு, தமிழ்நாடு தமிழருக்கே என்று நாம் கூறிவந்தபோது தமிழர் என்றால், தனி இனம், ஆரியத்தின் கலப்புக்கு முன்பு உயர்ந்த பண்புகளுடன் வாழ்ந்த இனம், என்பதை வலியுறுத்தி வந்தோம்.

வெறும் பொழி மட்டுமல்ல தனியான வாழ்க்கை முறை கொண்டவர்கள், என்ப தை விளக்கி வந்தோம். தமிநாடு தமிழருக்கே என்றபோது, தமிழ்நாடு இன்று மதம், அரசியல், பொருளாதாரம் எனும் துறைகளிலே முறையே, ஆரியர்,வெள் ளையர், வட நாட்டார், என்பவைகளால் பாழாக்கப்படுகிறார்கள் என்பதை எடுத் துக்காட்டி இந்தநிலை மாறினால் மட்டுமே தமிழ்நாடு வளமாக வாழ முடியும், இதற்குத் தமிழ்நாடு தனி அரசுரிமை பெறவேண்டும் என்பதை விளக்கினோம்.

Thursday, May 9, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 23

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.


‘வரலாறு சரியான தீர்ப்பை எழுதும்’

தேசிய முன்னணி சார்பில் வி.பி.சிங் பிரதமர் ஆனவுடன், ஈழப்பிரச்சினையில்
முந்தைய ராஜீவ் அரசின் கொள்கைகள் தூக்கி வீசப்பட்டு, இந்திய அமைதிப் படை யும் படிப்படியாக இந்தியா திரும்பியது. ஆட்சியை இழந்த முன்னாள்
பிரதமர் ராஜீவ்காந்தி, தொடர்ந்து விடுதலைப்புலிகளைக் கொச்சைப்படுத்தி பிரச்சாரம் செய்து வந்தது மட்டுமின்றி, இந்தியாவில் பஞ்சாப், அசாம் தீவிர வாத இயக்கங்களுக்கும் விடுதலைப்புலிகள் தமிழ்நாடு வழியாக ஆயுதங்கள்
கொடுத்து வருவதாக பயங்கரமான குற்றச்சாட்டுகளைக் கூறினார். அப்போது
தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த தி.மு.க. அரசு மீது கடும்பழி சுமத்து வதன் மூலம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அந்நியப்படுத்தும் இச்செயலில் ஈடுபட்டார்.

அடிமை வாழ்வை ஒருபோதும் ஈழத்தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்! தமிழ் ஈழம் மலரும்...பகுதி 2

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே

பகுதி 1 யின் தொடர்ச்சி ....

போர்க்களத்தில் இந்தியா கொடுத்த ஆயுத பலத்தோடும் - சீனா கொடுத்த ஆயு தபலத்தோடும் - உலகநாடுகள் தந்த ஆயுத பலத்தோடும் - உலகில் இதுவரை இவர்களுக்கு நிகரான வீரர்கள் போர்க்களத் துக்கு வந்ததில்லை என்று சொல் லப்பட்ட சாகசம் புரிந்த விடுதலைப்புலிகளை, வான்படை தரைப்படை கடற் படை அமைத்து தரணியை திகைக்கவைத்த விடுதலைப் புலிகளை, உலகத் தில் எந்தப் புரட்சி இயக்கமும் பிறநாட்டு உதவி இல்லாமல் தாங்களாகவே
ஆயுதங்களைத் தயாரித்து பல வல்லரசு நாடுகளின் ஆயுதத்தையும் எதிர்த்து
அலைஅலையாக வந்த ஆயுதபலத்தை எதிர்த்து நின்று போராடிய அந்த வீரர் களை - உலகம் தடை செய்து இருக்கின்ற குண்டுகளை வீசி அழித்தார்கள்.

Wednesday, May 8, 2013

அடிமை வாழ்வை ஒருபோதும் ஈழத்தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்! தமிழ் ஈழம் மலரும்...பகுதி 1

‘இலங்கையில் தமிழின அழிப்பு’ குறித்த கருத்தரங்கம், சென்னை - மயிலை
மாங்கொல்லையில் 10.10.2009 அன்று நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் மருத் துவர் இராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், தமிழர் தேசி யப் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், கழகப் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தமிழ் இன உணர்வாளர்கள் பங்கேற்றுச் சிறப்புரை யாற்றி னர். இந்நிகழ்வில் வைகோ ஆற்றிய உரை...

இருதயத்தை ஆழப்பிளக்கின்ற துக்கத்தின் நிழலில் இங்கே கூடி இருக்கிறோம். ஆறாத் துயரத்தோடும் ஆற்றுப்படுத்த முடியாத வேதனையோடும் அழுது புலம்புகிற ஓலமிடுகின்ற ஈழத்தமிழர்களின் அபயக்குரல் கடல் அலை ஓசை கடந்து வரும் அவலத்தைப் போக்கக் கருதி திரண்டு உள்ளோம். தமிழர்கள் எங் கெல்லாம் வாழுகிறார்களோ, அங்கெல்லாம் வேதனைத் தீ நெஞ்சிலே பற்றி எரிந்து கொண்டு இருக்கிற நேரத்தில், மயிலையில் நாம் கூடி இருக்கிறோம்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வைகோ வாதம்

ஸ்டெர்லைட் வழக்கு:
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வைகோ வாதம்

தூத்துக்குடியில் உள்ள நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த ஆணையை எதிர்த்து, ஸ் டெ ர்லைட் ஆலை நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு சென்னையில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசார ணை டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வுக்கு மாற்றப்பட்டு, இன்று (08.05.2013) விசாரணைக்கு வந்தது. இந்த மேல்முறை யீட் டு மனுவை தீர்ப்பாயம் விசாரிக்கும் அதிகாரம் இல்லை என்றும், தமிழ்நாடு அரசு அமைத்துள்ள மேல்முறையீட்டு ஆணையத்தில்தான் முறையீடு செய்ய வேண்டும் என்றும் சட்ட விதிகள் திட்டவட்டமாகக் கூறுவதால், இதை விசா ரிக்கக்கூடாது என்று சென்னை அமர்விலேயே வைகோ ஆட்சேபணை தெரி வித்திருந்தார். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் தீர்ப்பாயத்துக்கு விசாரிக்க அதிகாரம் இல்லை என்று வாதிட்டது.

இனி, மத்தியில் ஒரு கட்சி ஆட்சி வரவே வராது.

ம.தி.மு.க.வின் இருபதாம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் புதுக்கோட் டை சின்னப்பா பூங்காவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்த இயக்கம் கடந்த 19 ஆண்டுகளாக கடந்து வந்துள்ள பாதையை நினைத்து பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. நமக்கு உரிய இடத்தை தமிழக மக்கள் தந்துள்ளனர்.

தமிழக மக்கள் நம்மை அக்னி பரீட்சை கொண்டு பார்த்துள்ளனர். இந்த இயக் கம் ஆரம்பிக்கப்பட்டு பல துயர சம்பவங்கள், இழப்புகள் மற்றும் அடிகளை சந்தித்து வந்துள்ளது.

Tuesday, May 7, 2013

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகளுக்கு ஆதரவாக மதிமுகவினர் முற்றுகை

முழுமையான கணக்கெடுப்பு நடத்தி, வறட்சி நிவாரணத் தொகையை வழங்கக் கோரி கிராம மக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை திங்கள் கிழமை முற்றுகையிட்டனர்.


கோவில்பட்டி வட்டத்துக்குள்பட்ட காளாம்பட்டி, குமரெட்டையபுரம், சரவணாபுரம் ஆகிய பகுதிகளில் மானாவாரியில் பூமியில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம் ஆகியவற்றை அப்பகுதியினர் பயிரிட்டிருந்தனர். போதிய மழையின்றி வறட்சி ஏற்பட்டு, விளைச்சலின்றி போய்விட்டது.

பரசலூரில் நிழற்குடை அமைக்க வேண்டும் - மதிமுக

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே பரசலூரில் பயணிகள் நிழற்குடை அமைக்க மதிமுக வலியுறுத்தியுள்ளது.

மதிமுக ஒன்றிய செயலாளர் கொளஞ்சி கூறியதாவது:

நாகை மாவட்டத்தில் செம்பனார்கோவில் ஒன்றியம் 57 ஊராட்சிகளை கொண்ட பெரிய ஒன்றியமாகும். 57 ஊராட்சிகளில் அருகாமையில் உள்ள கிராமங்களான மேமாத்தூர், கீழ்மாத்தூர், சாத்தனூர், மேலப்பாதி, செம்பனார் கோவில், மேலக்கட்டளை ஆகிய கிராம மக்கள் அரசு அலுவ லர்கள், மாணவ, மாணவிகள், அருகில் உள்ள மயிலாடுதுறை நாகப் பட் டினம், பொறையார், பூம்புகார் ஆகிய ஊர்களுக்கு செல்ல வேண்டு மென்றால் பரசலூரிலிருந்து தான் செல்ல வேண்டும்.

சூழும் இருள் அகலும்! தமிழ் ஈழம் மலரும்!

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், 20.8.2009 அன்று சென்னை புல்லா அவென்யூவில் மாபெரும் மக்கள் திரள் பொதுக் கூட்டம், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு, கழகப் பொதுச் செய லாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப் பினர் ஸ்டாலின் குணசேகரன், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபேன், சூர் யதீபன், இராஜேந்திர சோழன், மெல்கியோர், மு.தெய்வநாயகம், ம.நடராசன்
ஆகியோர் பங்கேற்றுச் சிறப்புரையாற்றிய இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொதுக் கூட்டத்தில், ஈழத்தமிழர்கள் வாழ்வு உரிமைக்கான உலகத் தமிழர் பிரகடனம் வெளியிடப்பட்டது.இந்தப் பிரகடனத்தை வைகோ உணர்ச் சிப் பொங்க வாசிக்கையில், திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்க ளும் , தமிழ் உணர்வாளர்களும், தீப்பந்தங்களை ஏந்தி முழங்கினர். இந்த உணர்ச்சிமிகு நிகழ்வில் வைகோ ஆற்றிய உரை...

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 22

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.


ஈழத்தமிழர் படுகொலையைத் தடுக்க
பிரதமர் வி.பி.சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இந்தியாவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, தேசிய முன்னணி சார்பில் வி.பி.சிங் பிரதமர் பதவி ஏற்றதும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அரசின் அணுகு முறை யில் மாற்றம் ஏற்பட்டது.

பிரதமர் வி.பி.சிங் 1990, மார்ச்சு 31க்குள் ‘இந்திய அமைதிப்படையின் கடைசி சிப்பாய் இந்தியா திரும்புவார்’என்று தேதி நிர்ணயம் செய்தார்.அதன்படி இந் திய அமைதிப்படை இந்தியா திரும்பத் தொடங்கியது.ராஜீவ்காந்தியின் அரசி யல் முதிர்ச்சியற்ற நடவடிக்கையால், இலங்கைப் பிரச்சினையில் சிங்கள
அரசோடு ஒப்பந்தம் போட்டு, இந்திய இராணுவத்தையும் அனுப்பி, தமிழ் மக் களைக் கொன்று குவித்து அவமானகரமான தோல்வியைச் சந்தித்து, இந்தியா சர்வதேச அரங்கில் தலைகுனிந்து நின்றது.

அணுஉலையை மூடும் வரை எங்களது போராட்டம் தொடரும்

புதுக்கோட்டையில் ம.தி. மு.க. 20-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டைக்கு வருகை தந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் முழு விபரம் இதுவரை தெரியவில்லை. ஆனால் கூடங்குளம் அணுஉலையை அகற்ற வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நாட்டில் எந்த பகுதியிலும் இந்த அளவிற்கு தொடர் போராட்டங்கள் நடந்தது கிடையாது. ரஷ்ய நாட்டுடன் அணு உலை அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போதே அணுஉலை அமைக்ககூடாது என்று நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து முதல் குரல் கொடுத்தவன் நான் தான்.

திருச்சியில் மதிமுகவினர் மதுவிலக்கு பிரச்சாரம்

இன்று (06.05.2013 ),ம.தி.மு.க. சார்பில் மண்ணச்சநல்லூர் பகுதியில் மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி பிரச்சார பயணம் நடந்தது. பிரச்சார பயணத்துக்கு ம.தி.மு.க. மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் அன்புசெல்வம் தலைமை தாங்கினார்.

பூனாம்பாளையம், காளவாய்பட்டி, திருவெள்ளறை, சாலைப்பட்டி, எஸ்.
மேட்டூர், வீராணி, சிறுப்பத்தூர், ஓமாந்தூர், ராசாம்பாளையம், அய்யம் பாளையம், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, தளுதாளப்பட்டி, தத்தமங்கலம் ஆகிய ஊர்களில் இந்த பிரச்சாரம் நடைபெற்றது.

Monday, May 6, 2013

இளைஞர்கள் இன்னும் ஆயிரக்கணக்கில் இலட்சக்கணக்கில் திரண்டு எழட்டும்

பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ‘பிரபாகரன்’ என்றே தமிழகம் பெயர் சூட்டும்! பெரியார் திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் வைகோ

அடக்குமுறை சட்டங்களைத் தகர்த்து, சிறைமீண்ட போராளிகளுக்கு வரவேற் பு அளிக்கும் பொதுக்கூட்டம், பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 18. 8. 2009 அன்று, சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங் கேற்ற கழகப் பொதுச் செயலாளர் வைகோ,சிறைசென்ற தோழர்களுக்குப் பொன்னா டை அணிவித்து பாராட்டுத் தெரிவித் தார்.அவரது உரையில் இருந்து...

மே திங்கள் இரண்டாம் நாள் கொங்கு மண்டலத்தில் மாநகர் கோவையை அடுத்து உள்ள நீலம்பூர் சாலையில், ‘ஈழத்தமிழர்களை அழிப்பதற்கு இந்திய அரசால் அனுப்பப்படவிருந்த இந்திய ஆயுதங்களை ஏந்திவந்த இராணுவ வாக னங்களைத் தடுக்க வாரீர்’ என்று முழங்கி, உயிருக்கு ஆபத்து நேரும் என் ற போதும் அஞ்சாமல், மரணத்தைப்பற்றிக் கவலைப்படாமல், தமிழ் நாட் டின் தன்மான உணர்வை நிலைநாட்டிய வீரர்களான கோவை இராமகிருஷ்ணன், அருமைத் தோழர் மானமிகு இலட்சுமணன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற் றக் கழகத்தின் கோவை மாநகர் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தம்பி
சந்திரசேகரன், கழகத்தின் கண்மணி வேலுசாமி, அந்தப் போர்க்களத்துக்குத் துணிந்துசென்ற குட்டிமணி என்கின்ற வீரமணி ஆகிய தோழர்கள் தேசப் பாது காப்புச் சட்டத்தின்கீழ் சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்ட அக்கிரமத்தைக்
கண்டித்து, கோவை மாநகரில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்களோடு இணைந்து ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தினோம்.

தங்களுக்காக நான் போராடுவேன் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்பட்டு இருக்கிறது! -பகுதி 2

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே


முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், தொண்டர் அணி - இளைஞர் அணி - மாணவர் அணி
தோழர்கள் பங்கேற்ற, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப் பிரச்சார நடைப் பய ணம், பொள்ளாச்சியில் தொடங்கியது. ஈரோட்டில் 28.04.2013 அன்று நிறைவு
பெற்றது. இதனையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரை வருமாறு..

பகுதி 1 யின் தொடர்ச்சி ....

காலை பத்திரிகையை படிக்கிறபோது சில நிமிடங்கள் வேறு செய்தியைப்
படிக்க முடியவில்லை. அந்த ஏழைத்தாயையும் தகப்பனையும் தான் நினைத் தேன். நிலத்தை குத்தகைக்கு எடுத்து, வேளாண்மை தொழில் செய்யலாம் என் று இரத்தத்தை வியர்வையாகக் கொண்டு மேனியை வருத்தி உழைக்கிற போ து, ஆயிரம் அடி குழிதோண்டினாலும் தண்ணீர் கிடைக்காது என்கிற அள வுக்கு நிலத்தடி நீர் அபரிக்கப்பட்டுவிட்டதே! இந்தச் சூழலில் ஒரு ஆழ்குழாய் கிணறு
அமைத்து, அதில் கிடைக்கின்ற தண்ணீரைக்கொண்டு, குத்தகை நிலத்தில் விவசாயம் செய்து, தானும் தன் குடும்பமும் பிழைக்கலாம் என்று சின்ன பூசாரி நினைத்தார்.

மதிமுக 20 ஆம் ஆண்டு தொடக்கவிழா காட்சிகள்

மே 6 கழகத்தின் 20 ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தாயகத்தில் கழகக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கி, சிறப்புரை ஆற்றினார். கழக முன்னோடிகளும், தோழர்களும், முன்னணியினரும் கலந்து கொண்டனர் (06.05.2013)



Sunday, May 5, 2013

தங்களுக்காக நான் போராடுவேன் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்பட்டு இருக்கிறது! -பகுதி 1

முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், தொண்டர் அணி - இளைஞர் அணி - மாணவர் அணி
தோழர்கள் பங்கேற்ற, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப் பிரச்சார நடைப் பய ணம், பொள்ளாச்சியில் தொடங்கியது. ஈரோட்டில் 28.04.2013 அன்று நிறைவு
பெற்றது. இதனையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரை வருமாறு..

பல்லாயிரக்கணக்காகத் திரண்டு இருக்கின்ற மக்களுக்கு, நாளை தமிழகத்தில் நாங்கள் ஆற்ற வேண்டிய கடமை என்ன? என சூளுரைக்கின்ற நிகழ்ச்சியாக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மதுவிலக்குப் பிரச்சார நடைப் பயண நிறைவு நாள் கூட்டமாக நடைபெறும் இந்த மக்கள் சங்கமத்துக்குத் தலை மை தாங்குகின்ற கழகத்தின் ஆட்சிமன்றக்குழுச் செயலாளர், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர், கழகத்தின் மாவட்டச் செயலாளர், அடக்குமுறைக் கு அஞ்சாத வேங்கை என் ஆருயிர்ச் சகோதரர் கணேசமூர்த்தி அவர்களே, இன் னும் பல்லாயிரம் பிறைகண்டு வாழ்க! நூறாண்டு வாழ்க! மறுமலர்ச்சி திரா விட முன்னேற்றக் கழகத்திற்கு வலிமையான அரண்களை வார்ப்பித்து வாழ்க! என்று இலட்சோப இலட்சம் தொண்டர் களினுடைய வாழ்த்துகளை, எந்நாளும் பிறந்தநாளை கொண்டாடாத அப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறுமா னால்,அதற்கு அனுமதிக்காத, பண்புடைய வரான, இந்நாளில் எங்கள் வாழ்த்துகளைப் பெற் றுக்கொண்டு இருக்கின்ற கழக அவைத்தலைவர் ஆருயிர் அண் ணன் திருப்பூர் துரைசாமிஅவர்களே, கழகப் பொருளாளர் ஆருயிர்ச் சகோதரர் டாக்டர் மாசி லாமணி அவர்களே, துணைப் பொதுச்செயலாளர் மூன்று போர்ப் படை நடைப் பயணத்திலும் நம் கண்மணி களை விழியை இமை காப்பதுபோல் காத்து உடன் வந்துள்ள என் ஆருயிர் இளவல் மல்லை சத்யா அவர்களே, இந்த மூன்றுஅணி களையும் வார்ப்பித்து தன்னை முன்னிறுத்திக்கொள்ளாமல் பணியாற்றி வரு கிற வடசென்னை மாவட்டச் செயலாளர் ஆருயிர் தம்பி ஜீவன் அவர்களே,

இலட்சியச் சிகரம் நோக்கி இருபது ஆண்டுகள்- வைகோ கடிதம்

இமைப்பொழுதும் நீங்காது என் இதயத்துடிப்போடும் இரத்தச் சுழற்சி யோடும் கலந்துவிட்ட கண்ணின்மணிகளே!

இருபதாவது வருடம் நம்மைக் கட்டியம் கூறி வெற்றிக்கரம் கோர்க்க வீறு கொண்டு அழைக்கிறது.மலைகளையும் நகர்த்தி இருக்கிறோம் மனவலிமை யால். அப்பப்பா... ஒன்றா இரண்டா...எத்தனை தடைகள்? எத்தனை சோதனை கள்? எத்தனை வேதனை பாய்ந்த துயரங்கள்? எத்தனை தோல்விகள்? எத்தனை இருட்டடிப்புகள்? எத்தனை ஏகடியப் பேச்சுகள்? எத்தனை ஏளனச் சொற்கள்?ஏன் எத்தனை எதிர்பாராத துரோகங்கள்? அனைத்துக்கும் முகம் கொடுத்து,எதிர் கொண்டு முன்னேறி இருக்கிறோம்!

இத்தனை இடர்ப்பாடுகளுக்கும், துன்பச் சூழல்களுக்கும் இடையில் நாம் சாதித் தவை இமயம் நிகர்த்தவை. கடந்து வந்த பாதையை மனதில் படியவிடும் போது, நானே திகைக்கிறேன்.பிரமிக்கிறேன். நாம் தானா? நமது இயக்கம் தா னா? எப்படி முடிந்தது? அனைத்துமே உங்களின் வைரம் பாய்ந்த நெஞ்சுறுதி யால். தன்னலமற்ற களப்பணியால். கடைபிடித்த கட்டுப்பாட்டால்.கண்ணியம் நிறைந்த கடமையால். பேரறிஞர் அண்ணாவின் வார்ப்புகள் நாம் என்ற வரலா று படைத்துள்ளோம்.

Saturday, May 4, 2013

இந்திய அரசே, துரோகத்தைத் தொடராதே!

சிங்களவனுக்கு அடிமையாக தமிழன் வாழமுடியாது!

ஈழத்தமிழர்கள் முள்வேலி முகாம்களில் சித்ரவதை செய்யப்படுவதைக் கண்டித்தும், தமிழர்களின் துயர் துடைக்கக் கோரியும் இலங்கைத் தமிழர் பாது காப்பு இயக்கத்தின் சார்பில், சென்னையில் 24.7.2009 அன்று பழ.நெடுமாறன்
தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று கழகப் பொதுச்
செயலாளர் வைகோ ஆற்றிய உரை...

மனிதகுல வரலாற்றில் பல அவலங்கள் பேரழிவுகள் உலகில் நடைபெற்று இருக்கின்றன.ஆனால், தமிழர்களின் வரலாற்றில் இப்படிப்பட்ட பேரழிவு,தமிழ் இனம் கொடியோரால் படுகொலை செய்யப்படுகின்ற அவலம்,இதுவரை நடந் தது இல்லை.இயற்கையின் சீற்றத்தால், கடல் கோளால் ஆயிரக்கணக்கான
ஆண்டுகளுக்கு முன்னால் தமிழனின் நிலம் கடலில் அமிழ்ந்து போனதால், பெருந்துயர் நேர்ந்து இருக்கிறது.

ஐ.நா. மன்றத்திலும் அவரது குரல் ஒலித்திட வாழ்த்துகிறேன்!

வைகோ, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில்

தமிழ் ஈழ மக்களின் குரலாக ஒலித்திருக்கிறார்!

ஐ.நா. மன்றத்திலும் அவரது குரல் ஒலித்திட வாழ்த்துகிறேன்!


“சுதந்திரத் தமிழ் ஈழம்; பொது வாக்கெடுப்பு” நூல் மற்றும் ஒளிப்படக் குறுந் தட் டு வெளியீட்டு நிகழ்ச்சி, 13.04.2013 அன்று சென்னையில் நடைபெற்றது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பழ.நெடுமாறன் அவர்கள் நிகழ்ச்சி யில் ஆற்றிய உரை வருமாறு:

சகோதரர் வைகோ அவர்கள் சுதந்திரத்தமிழ் ஈழம் குறித்த பொது வாக்கெடுப் பை ஐ.நா.சபையில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை இங்கிருந்து பெல் ஜியத்திற்குச் சென்று, அதனுடைய தலைநகரான பிரஸ்ஸ்ல்சில் ஐரோப் பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய கூட்டத்தில், இந்தக் குரலை ஓங்கி ஒலித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்.அதற்காக தமிழர்கள் அவருக்கு நன்றிக் கடன் செலுத்தக் கடமைப்பட்டு இருக்கிறார்கள்.

தமிழ் இனத்துக்காகத் தன்னை அர்ப்பணிக்கின்றவராகத் திகழ்கிறார் வைகோ!-தமிழருவி மணியன்

நேர்மையாளராக, நெறி சார்ந்தவராக, தமிழ் இனத்துக்காகத்

தன்னை அர்ப்பணிக்கின்றவராகத் திகழ்கிறார் வைகோ!


தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி, கழகப் பொதுச்செயலா ளர் வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற்ற மூன்றாம் கட்ட விழிப்புணர் வுப்பிரச்சாரத்தையொட்டி, 18.04.2013 அன்று உடுமலைப்பேட்டைப் பொதுக்கூட் டத் தில் தமிழருவி மணியன் அவர்கள் உரை மணியன் ஆற்றினார்.

விவரம் வருமாறு:

அவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் 2016 இல் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிகிறபொழுது, தமிழகத்தின் கோட்டையில் முதல்வராகஅமர இருக் கின்ற என் நெஞ்சு நெகிழ்ந்த நிலையில், மிகுந்த பாசத்தோடு,ஒரு தலைவனை, காமராஜருக்குப் பிறகு நான் நேசித்துக்கொண்டிருக்கிறேன் என்றால், அந்தத் தலைவனாக இருக்கிற வைகோ அவர்கள் உள்ளிட்ட இந்த மகத்தான அவை
யை நான் வணங்கி மகிழ்கிறேன்.

Friday, May 3, 2013

நிலத்தடி நீரை உறிஞ்சும் குளிர்பான நிறுவனத்தை மூட வேண்டும்!-வைகோ

நிலத்தடி நீரை உறிஞ்சும் குளிர்பான நிறுவனத்தை மூட வேண்டும்!

வைகோ அறிக்கை

திருச்சி மாவட்டம் - திருவெறும்பூர் வட்டம் - சூரியூர், காந்தலூர், கும்பகுடி ஊராட்சிப் பகுதிகள் மானாவரி மற்றும் கிணறு இறவை பாசனப்பகுதிகளாகும். இதில் சூரியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய சூரியூர் கிராமத்து அருகில் எல்.ஏ. பாட்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் (L.A.Bottlers pvt.ltd)நிறுவனமும், டி.பி.எஸ். மின ரல் குடிநீர் தயாரிக்கும் நிறுவனமும் அமைந்துள்ளன. 

இந்த இரண்டு நிறுவனங்களும் ஆறு இராட்சச ஆழ்குழாய்களை அமைத்து நாள் ஒன்றுக்கு ஒரு கோடி லிட்டர் வரை தண்ணீரை உறிஞ்சி எடுக்கின்றன. இத்தண்ணீர் சர்வதேச அளவிலான பிரபல நிறுவனத்தின் குளிர்பானத் தயாரிப் பிற்காகப் பயன்படுத்தப்பட்டு ஐம்பது லட்சம் லிட்டர் குளிர்பான உற்பத்தி நடை பெற்று வருகின்றது. 

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 21

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே


இந்தியாவின் ‘மைலாய்’ வல்வெட்டித்துறை - வைகோ

மைலாய்’! வியட்நாமின் அழகியஅமைதியான ஒரு சிறிய கிராமம். வியட் நா மை ஆக்கிரமித்து அடாவடி யுத்தம் செய்து கொண்டிருந்த அமெரிக்க இராணு வம் திடீரென ஒரு நாள் இந்த கிராமத்தினுள் நுழைந்தது.ஏதுமறியாத அப்பாவி மக்கள் நூற்றுக்கணக்கானோரை அமெரிக்கப் படைகள் சுட்டுக் கொன்றது. மைலாய் கிராமம் முழுமையாகவே எரித்து அழிக்கப்பட்டது. ‘மைலாய் துயரம்’ என்று அழைக்கப்படும் இத்தகைய கொடூரத்தை அரங்கேற்றியவன் அமெரிக்க இராணுவத்தளபதி ‘காலி’ என்பவன்.

மைலாய் படுகொலை உலகத்தின் கவனத்திற்கு வந்தபோது வியட் நாமியர் களை விட, அமெரிக்க மக்களே கொதித்து எழுந்தனர். அமெரிக்கப் பத்திரிக்கை கள், அமெரிக்க இராணுவத்தின் படுகொலைகளைக் கண்டித்து எழுதின.

Thursday, May 2, 2013

ஈழத் தமிழினம் தனித் தமிழ்த் தேசம் அமைக்க உதவுவோம்...!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின், ‘குற்றம் சாட்டுகிறேன்!, ‘I Accuse’ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா 15.07.2009 அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள இராணி சீதை மன்றத்தில் நடைபெற்றது. இரு நூல்களை யும் பழ.நெடுமாறன் வெளியிட, கவிஞர் இன்குலாப் பெற்றுக் கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன், விடுதலை இராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இவ்விழா நிறை வில் ஏற்புரை ஆற்றிய வைகோவின் உரையில் இருந்து...

இந்த நூல், ‘I Accuse’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு, ஏற்க னவே வெளியில் உலவிய போதிலும், அதில் புதிதாக சில அத்தியாயங்கள்
இணைக்கப்பட்டு, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நிலையில், ‘குற்றம் சாட்டு கிறேன்’ எனும் தலைப்போடு இந்த நூல் வெளியிடப்பட வேண்டும் என்று நான்
விரும்பியபோது, எங்கள் வேண்டுகோளை அன்போடு ஏற்றுக்கொண்டு, இங்கே வந்து சிறப்பித்து இருக்கிற அண்ணன் நெடுமாறன் அவர்களுக்கும், இந்த மேடையில் வீற்றிருக்கின்ற, தமிழ் ஈழ விடுதலைக்குப்போராடிக் கொண்டு இருக்கின்ற என் இனிய சகோதரர் களுக்கும் என் உளம் நிறைந்து இருக்கின்ற நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தூக்கு தண்டனை அளிப்பதன் மூலம் குற்றங்கள் குறைந்து விடாது -செய்தியாளர் சந்திப்பில் வைகோ

இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தூத்துக்குடிக்கு வந்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி நடைபயணம் மேற்கொண்டு
வருகிறோம். இது வெற்றிகரமாக முடியும். காமராஜர், அண்ணா ஆட்சி காலத்தில் மது மூலம் கிடைக்கும் வருமானம் தேவையில்லை என்று மதுக்கடைகளை திறக்கவில்லை. ஆனால் இப்போது வருமானத்திற்காக மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் மதிமுகவின் மே தின கூட்டம்

நேற்று மாலை 7 மணியளவில் பாளை ஜவகர் மைதானத்தில் (திருநெல்வேலி)
ம.தி.மு.க.மாநகர் மாவட்டம்  சார்பாகமே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது .

மக்கள்தலைவர் வைகோ முழங்குகினார்

அவர் மேலும் பேசியதாவது:

இன்று தமிழகத்தை நாலாபுறமும் ஆபத்து சூழந்துள்ளது. அண்டை மாநிலங் கள் மட்டுமின்றி மத்திய அரசும் தமிழகத்திற்கு எதிராக துரோகம் செய்து வரு கிறது. மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள அணைகள் பாதுகாப்பு மசோதாவால் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். அந்த மசோதா வால் இந்திய ஒருமைப்பாடு பாதிக்கப்படும். மத்திய அரசின் நிலைப்பாடு இப்படியே நீடித்தால் இந்தியாவின் ஒருமைப்பாடு நீடிக்காது. 

போட்டியிட்ட அனைத்து இடத்திலும் மதிமுக வெற்றி

கோவில்பட்டி கூட்டுறவு வங்கி தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடத்திலும் ம.தி.மு.க. வெற்றி

கோவில்பட்டி புதுரோட்டில் உள்ள நகர கூட்டுறவு வங்கி நிர்வாக்குழு உறுப் பினர்களுக்கான தேர்தல் புதுரோடு நகராட்சி பள்ளியில் வைத்து நடைபெற் றது. இந்த வங்கியில் மொத்தம் 18,734 பேர் வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 11 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தலில் அதிமுக, மதிமுக என மொத்தம் 32 பேர் இந்ததேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டனர்.

நகராட்சி பள்ளியில் 4 வாக்கு பதிவு சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குபதிவு நடைபெற்றது. மொத்தம் 2004 வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த வாக்குகள் எண்ணும் பணி நேற்று நகராட்சி பள்ளியில் வைத்து நடைபெற்றது. மதிமுக நகர செயலாளர் ஆர்.எஸ்.ரமேஸ் தலைமையிலான அணியினர் முன்னனி யில் இருந்தனர், இறுதியில் ஆர்.எஸ். ரமேஸ் தலைமையிலான அணியினர் அனைவரும் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர்.

Wednesday, May 1, 2013

மூன்று தமிழர் உயிர் காப்பு இயக்கம் பொதுக்கூட்டம் படங்கள்

மூன்று தமிழர் உயிர் காப்பு இயக்கம் சார்பில் மரணதண்டனையை எதிர்த்து சென்னை தியாகராயநகர் முத்துரங்கன் சாலையில் நேற்று (30.04.13 )மாலை மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழின கட்சித் தலை வர்களும், இயக்கத்தலைவர்களும் ஒரே மேடையில் ஒன்றிணைந்தனர்.

நேற்று நடந்த பொதுக்கூட்டதின் புகைப்படங்கள்



எங்கள் நெஞ்சின் நெருப்பு அணையாது!

ஈழத்தமிழர் பிரச்சனை முடிந்துவிடவில்லை!

இராணுவ வாகனத்தின் மீது தாக்குதல் தொடுத்ததாக கருணாநிதியின் பாசிச அரசாங்கத்தால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, மறுமலர்ச்சி தி.மு.க., பெரியார்
திராவிடர் கழகத் தோழர்கள் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில், கைது செய்யப் பட்டதைக் கண்டித்து, கோவையில் 8.6.2009 அன்று நடைபெற்ற பிரம்மாண்ட மான பொதுக் கூட்டத்தில் கழகப்பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்று உரையாற்றினார். அவரது உரையில் இருந்து...

இனி என்று விடியல்? இருள் எப்பொழுது விலகும்? என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிற உலகத் தமிழர்களின் பார்வை கவனம் எல்லாம் ஆறரைக் கோடி தமிழ் மக்கள் வாழுகிற தமிழகத்தின் பக்கம் திரும்பி இருக்கிற நேரத்தில், இனி அடுத்து செய்ய வேண்டியது என்ன என்பதை வளரும் இளம் தலைமுறை யினரிடம் எடுத்துச் சொல்கின்ற வகையில், அருமைச் சகோதரர் கொளத்தூர் மணி அவர்கள், அரியபல கருத்துகளை காலத்தின் அருமை கருதி இரத்தினச் சுருக்கமாகக் கூறி அமர்ந்து இருக்கின்றார்.

மூன்று தமிழர் தூக்கை உடனே அரசு ரத்து செய்ய வேண்டும்: வைகோ, கொளத்தூர் மணி, பழ.நெடுமாறன், தமிழருவி மணியன் உரை

மூன்று தமிழர் உயிர் காப்பு இயக்கம் சார்பில் மரணதண்டனையை எதிர்த்து சென்னை தியாகராயநகர் முத்துரங்கன் சாலையில் நேற்று (30.04.13 )மாலை மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழின கட்சித் தலை வர்களும், இயக்கத்தலைவர்களும் ஒரே மேடையில் ஒன்றிணைந்தனர்.

இந்நிகழ்வுக்கு பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையேற்க கொளத்தூர் மணி அவர்கள் தொகுத்துவழங்கினார். நிகழ்வில் சிறையில் வாடும் பேரறிவாள னின் தாயார் அற்புதம் அம்மாள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் வாழ்வுரிமைக்கட்சித்தோழர் பண்ருட்டி வேல்முருகன், காந்திய மக்கள் இயக் கத்தோழர் தமிழருவி மணியன், தபெதிக தோழர் கு.இராமகிருட்டிணன், தமிழ்ப் புலிகள் தோழர் நாகை.திருவள்ளுவன, தோழர் தியாகு, மக்கள் நல்வாழ்வு இயக்க தோழர் கண.குறிஞ்சி, இயக்குநர் புகழேந்தி தங்கராசு, வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன், த.தே.பொ.க தோழர் பெ.மணியரசன், இரா.அதிய மான், மே பதினேழு இயக்கப்பொறுப்பாளர் மற்றும் பலர் உரையாற்றினார்கள்.

தமிழ் ஈழம் ,பொது வாக்கெடுப்பு -முதலில் உலகுக்கு சொன்ன வைகோ

பெல்ஜியம் ஆய்வரங்கத்தில் வைகோ பேசிய உரையின் சுருக்கம் .

“ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த இந்த ஆய்வு அரங்கத்தை ஏற்பாடு செய்த நிர்வாகிகளே, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் களே, அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, வணக்கம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஈழத்தமிழர்களுடன் தொப்புள் கொடி உறவு கொண்ட, 7 கோடித் தமிழ் மக்கள் வாழுகின்ற, இந்தியாவின் தென்கோடி மாநில மான தமிழகத்தில் இருந்து நான் வந்து இருக்கின்றேன்.

என் உரையைத் தொடங்குவதற்கு முன்பு, ஈவு இரக்கம் இன்றிச் சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்டு உயிர் நீத்த தமிழ் மக்களுக்கும், குறிப்பாக, வயது முதிர்ந்தோர், தாய்மார்கள், குழந்தைகளுக்கும்,ஆயுதம் ஏந்திப் போராடி இரத்தம் சிந்தியும், மகத்தான உயிர்த்தியாகம் செய்தும் தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், வீராங் கனைகளுக்கும் என் வீர வணக்கத்தை, அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

''என் பையனைப் பத்திரமாக் கூட்டிட்டுப் போங்கய்யா!''

''என் வீட்டுக்காரர் தினமும் குடிச்சிட்டுத்தான் வீட்டுக்கு வருவார். ஒருநாள் குடிபோதையில் வீட்டுல இருந்த சிம்னி விளக்கைத் தட்டிவிட்டுட்டார். கூரை வீடுங்கிறதால் தீ பிடிச்சிருச்சு. என் பையனை ஒரு கையிலும், புருஷனை ஒரு கையிலும் இழுத்துட்டு வெளியில ஓடி வந்துட்டேன். என் புருஷன், சாராய பாட்டில் இருக்கிறதா சொல்லி, அதை எடுக்க வீட்டுக்குள்ள ஓடினார். நான் தடுத்தும் நிற்கலை. உள்ளே போனவர் நெருப்புல மாட்டி செத்துட்டார். எதுவும் செய்ய முடியாம நானும் என் பையனும் பார்த்துட்டு நின்னோம்.

இன்னைக்கு காலையில என் பையன் என்கிட்ட, 'அப்பா சாவுக்குக் காரணமா இருந்த சாராயத்தை ஒழிக்க வைகோ நம்ம ஊருக்கு நடைபயணம் வர்றாராம். நானும் அவருகூட போறேம்மா’னு கேட்டான். நானும் அவனைக் கூட்டிட்டு நேரா, வைகோ வரும்போது போனேன். 'என் பையனைப் பத்திரமாக் கூட்டிட் டுப் போங்க...’னு சொல்லி அவர்கிட்ட ஒப்படைச்சிட்டு வந்துட்டேன்'' என்று பெருமிதத்தோடு சொல்கிறார் அமராவதி. கல்வராயன் என்ற அந்தச் சிறுவ னுக்கு ஷூ வாங்கிக் கொடுத்து தன்னுடன் சேர்த்துக்கொண்டு நடக்கிறார் வைகோ.