Monday, March 26, 2012

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 4

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

இந்தியாவின் மனிதாபிமானக் கொடி அரைக்கம்பத்தில் பறப்பது ஏன் ?

இலங்கையில் சிங்கள இனவெறியன் ஜெயவர்த்தனே அரசு தமிழர்களை நர வேட்டையாடிய நேரத்தில் மாநிலங்களவையில் பதின்மூன்று கவன ஈர்ப்புத் தீர்மானங்களைக் கொண்டு வந்து தலைவர் வைகோ எடுத்துரைத்த நெகிழ்ச்சி மிக்க கருத்துகள் பிரதமர் இந்திராகாந்தி அம்மையாரின் இதயத்தில் ஈரம் கசியச் செய்தது .1984 ஆகஸ்டு மாதத் தொடக்கத்தில் வைகோ கொண்டு வந்த ஈழத் தமிழர் இனப்படுகொலை குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்து 1984 ஆகஸ்டு 16 ஆம் நாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் மாநிலங்கள் அவையில் உரை ஆற்றினார்.அப்பொழுது இந்திராகாந்தி தெரிவித்த கருத்து.அதுவரை இந்திய அரசு கடைபிடித்து வந்த ஈழத்தமிழர் பிரச்சனை குறித்த அணுகுமுறை யில் மாற்றம் உருவாகியிருப்பதை உலகத்திற்கு உணர்த்தியது .

Saturday, March 24, 2012

வன்னிஅரசு கைதுக்கு வைகோ கண்டனம்


வன்னிஅரசு கைதுக்கு வைகோ கண்டனம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து அறவழியில், காந்திய வழியில் தொடர்ந்து கடற்கரையோர மக்கள், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாகப் போராடி வருகிறார்கள். இடிந்தகரையில், உதயகுமார் உள்ளிட்ட 15 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு உள்ளனர். பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் தொடர்போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அணுஉலைக்கு எதிராக நேற்று (23.3.2012) பாளையங்கோட்டையில், மக்கள் கூட்டமைப்பின் சார்பில் ஏராளமானவர்கள் பங்கேற்ற போராட்டம், வன்முறைக்குத் துளியும் இடமின்றி நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப் பட்டபின், போராட்டத்தில் கலந்துகொண்ட சேலம் மாவட்டத்தைச் சார்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞரை, காவல்துறையினர் அடித்துத் துன்புறுத்தி கைது செய்துள்ளனர். அவர் மீது பொய்யான வழக்குகளைப் பதிவு செய்து, நள்ளிரவில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்து உள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு அவர்களை, நேற்று நள்ளிரவுக்கு மேல் இராசபாளையத்திற்கு அருகே கைது செய்துள்ளனர். அவர் மீதும் பொய்யான வழக்குப் போடப்பட்டுள்ளது.

Thursday, March 22, 2012

பாளையங்கோட்டை - ஜவஹர் திடலுக்கு அணிதிரண்டு வாரீர் வைகோ அழைப்பு

பகை நாட்டு இராணுவம் எல்லை தாண்டி ஆக்கிரமிக்க குவிதல் போல, பல்லாயிரக்கணக்கில் காவல்துறையினர் இடிந்தகரை வட்டாரத்தில் முற்றுகை யிட்டுள்ளனர். கூடங்குளம், கூட்டப்புளி, ஊத்தங்குளி, உவரி உள்ளிட்ட கடற்கரையோர கிராமங்களில் காவல்துறை எல்லாச் சாலை களிலும் எவரும் நடமாட முடியாத அளவுக்கு மிரட்டல் வேலையில் ஈடுபட்டுள்ளது. எனினும் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ மக்களும், அணுமின் நிலையத்தை எதிர்க்கும் மக்களும் எந்த அடக்கு முறைக்கும் அஞ்சாது தங்களை வருத்திக் கொண்டு அறப்போர் நடத்தி வருகின்றனர். சூறைக்காற்றிற்கும், சுறா மீனுக்கும், திமிங்கலத்திற்கும் அஞ்சாது கடல் மேல் படகுகள் செலுத்தும் உடலில் உரமும், நெஞ்சில் திறனும் கொண்ட மீனவ மக்கள், அணுமின் நிலையத்தை எதிர்த்துப் போராடு கிறார்கள் என்றால் அவர்களுக்காக அல்ல. தென் தமிழ்நாட்டை கூடங்குளம் அணுமின் நிலையத்தின் எதிர்கால அழிவிலிருந்து பாதுகாக்கவே போராடுகிறார்கள்.

Tuesday, March 20, 2012

கூடங்குளம் -தமிழக அரசின் அராஜகம் - வைகோ கண்டனம்

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு இயக்கத்தினரை, அடக்குமுறையின் மூலம் ஒடுக்க முயலும் தமிழக அரசின் அராஜகம்! - வைகோ கண்டனம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் பேரழிவு ஏற்படும் என்ற நியாயமான அச்சத்தாலும், கவலையாலும், கூடங்குளம், இடிந்தகரை, கூட்டப்புளி வட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களிலும், கடற்கரை யோரங்களிலும் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்கள், அறவழியில், காந்திய வழியில், அணுமின் நிலையத்தைத் தொடங்கக் கூடாது எனப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த செப்டெம்பர் 11 இல் தொடங்கி, ஆறு மாத காலமாக, எந்த வன்முறைக்கும் இடம் அளிக்காமல், அமைதி வழியில், தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். 155 நாள்கள் தொடர் உண்ணாவிரதம் நடத்தி உள்ளனர்.
செப்டெம்பர் மாதம் 12 நாள்கள் இடைவிடாமல் உண்ணாவிரதம் இருந்த போது, தாய்மார்கள் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டனர்.

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 3

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

இந்திய ஒருமைப்பாட்டின் மீது நம்பிக்கை இழப்போம்!

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1983 ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மாபெரும் திருப்புமுனை ஆண்டாகும்.ஈழத்தமிழ் இளைஞர்களின் போர்க் குணத்தையும் புறநானூற்றுப் போர் மரபில் வந்த இளைஞர் கூட்டம் களச்சாவிற்கு அஞ்சாதவர்கள் என்பதையும் இன எதிரி களுக்கு உணர்த்திய ஆண்டு. 1983 ஜூலை 15 போர்க்களத்தில் சிங்களப்படை யால் சுற்றிவளைக்கப் பட்ட சார்லஸ் ஆண்டனி என்ற தளபதி,தான் எதிரி களால் கொல்லப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, தன்னைச் சுட்டுக் கொல்லுமாறு உடன் நின்ற போராளிக்கு கட்டளையிட்டுத் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இவர் நினைவாகவே மாவீரர் பிரபாகரன் தனது முதல் மகனுக்குச் சார்லஸ் ஆண்டனி எனப் பெயரிட்டார்.

Monday, March 19, 2012

இந்திய தேர்தல் ஆணையத்திடம் வைகோ புகார் !


தேர்தல் பார்வையாளர் ரமேஷ்குமார் சுதான்சு மீது நடவடிக்கை
எடுக்கக் கோரி, 

இந்திய தேர்தல் ஆணையத்திடம் வைகோ புகார்!

சங்கரன்கோயில் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு அண்ணா தி.மு.க. பணம் கொடுத்த அப்பட்டமான தேர்தல் குற்றத்தை மறுத்து, ஊழலுக்குத் துணைபோன தேர்தல் பார்வையாளர் ரமேஷ்குமார்
சுதான்சு மீது இந்திய தேர்தல் ஆணையத்திடம் நடவடிக்கை எடுக்கக் கோரி வைகோ புகார்:

இன்று 19.03.2012 இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி அவர்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையர் சம்பத் அவர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மின் அஞ்சல் மூலமும், தொலைநகல் மூலமும் பின்வருமாறு புகார் அனுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 2

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி  படித்துவிட்டு வரலாமே .

1983 கருப்பு ஜுலை : இந்திராவின் கவனத்தை ஈர்த்த வைகோ 

ஈழத்தமிழர்களின் வரலாற்றில் 1983 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் இரத்தம் தோய்ந்த “கறுப்பு ஜூலை” ஆகும். 1983 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே,
சிங்கள இனவெறியன் ஜெயவர்த்தனே, தமிழர்கள் மீது கட்ட விழ்த்து விட்டிருந்த வன்முறைகள் ஜூலை மாதம் கோர நர்த்தனம் ஆடின. ஜூலை 25 ஆம் நாள், சிங்கள இராணுவம்நடத்திய இனப்படுகொலையில் ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழர் பகுதிகளில் தீவைப்புகள்,கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. இந்த கொடூரங்களின்
உச்சகட்டமாக, ஜூலை 27 ஆம் நாள், வெலிக்கடைச் சிறையில் அடைக்கப் பட்டிருந்த விடுதலை இயக்கத் தலைவர்கள் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்ளிட்ட போராளிகள் 50 பேர் கண்ட கோடாலிகளால் வெட்டிக் கொல்லப்பட்டனர். வெலிக்கடைச் சிறையில் ரத்தம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. தமிழீழத்தில் 1983, ஜூலையில் நடத்தப்பட்ட இனப் படுகொலைகளை அறிந்து தமிழ்நாடு கொந்தளித்தது. உலகம் முழுவதிலிருந்தும் வரும் பத்திரிகைகள் இலங்கை இனப்படுகொலை பற்றிய நடுங்க வைக்கும் செய்திகளை வெளியிட்டன.

Sunday, March 18, 2012

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 1


திரு.மு.செந்திலதிபன்  
கழக ஏடான சங்கொலி யில் வார வாரம் , நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின்குரல்! என்ற தலைப்பில் பொதுச் செயலாளர் .வைகோ அவர்களின் நாடாளுமன்ற பணிகள் குறித்து கட்டுரையாக , மதிமுக அரசியல் ஆய்வு மய்யாச் செயலாளர் திரு.மு.செந்திலதிபன் எளிதி வருவதை இணையதள நண்பர்களுக்க இங்கே பதிவு செய்கிறோம் , படித்து விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். நன்றி :- சங்கொலி குழு , மற்றும் திரு.மு.செந்திலதிபன் அவர்களுக்கு .



Saturday, March 17, 2012

இடைத் தேர்தல் களத்தில் இணையதள நண்பர்கள்


சங்கரன்கோவில் இடைத்தேர்தல் களத்தில் கடந்த ஒரு மாதமாக 300க்கு மேற்பட்ட மதிமுக இணையதள நண்பர்களின் வாக்கு சேகரிப்பு பணிகள் 


இனிதே ஆரம்பித்த இணையதளம் 

ஏட்டுச் சுரைக்காய் மக்களுக்குப் பயன் தராது!

மத்திய பட்ஜெட் ஏட்டுச் சுரைக்காய்
மக்களுக்குப் பயன் தராது!
வைகோ கருத்து

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வு அறிக்கையில் உணவு உற்பத்தி 25 கோடி டன்னாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அந்த இலக்கை அடைய வேளாண்மைத் துறைக்கு மத்திய பட்ஜெட்டில் ஊக்குவிப்புத் திட்டங்கள் எதுவும் இல்லை.

உயர்ந்து வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்த உருப்படியான நடவடிக்கை இல்லை. 2010-ஆம் ஆண்டு தொடக்கத்தில் உணவு பணவீக்க விகிதம் 20.2 ஆக இருந்தது. ஆனால், தற்போது 1.6 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. எனினும், உணவுப் பொருள்களின் விலை குறையாமல் மக்கள் அவதிப்படும் நிலையே தொடர்கிறது. நிதி அமைச்சர் இதனைக் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. அத்தியாவசியப் பண்டங்களின் விலை உயர்வுக்கும் பதுக்கலுக்கும் காரணமான யூக வணிகம் (Future Trading), இணையதள வர்த்தகம் (Onine Trading) ஆகியவை தடை செய்யப்பட வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை ஏற்கப்படவில்லை.

Wednesday, March 14, 2012

இந்தியா இனக்கொலையின் பங்காளி

சங்கரன்கோயில் இடைதேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்திருக்கும் நிலையில் பல்வேறு கிராமங்களில் ம.தி.மு.க வின் பொது செயலளார் வைகோ பிரச்சாரம் செய்து வருகிறார்.
பிரசாரத்தின் இடையே ஹலோ எப் எம் வானொலிக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவிடில் தமிழகத்திலிருந்து காங்கிரஸ் துடைத்து எறியப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

Tuesday, March 13, 2012

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 13 & 14

தீர்மானம் எண் 13

மது ஒழிப்பு!

அறிஞர் அண்ணா ஆட்சிக்காலம் வரையிலும், மது அரக்கனுக்குத் தமிழகத்தில் அனுமதி இல்லை. ஆனால் இன்றைக்கு, மாணவப் பருவத்திலேயே குடிப்பழக்கத்துக்கு ஆளாகின்ற பெருங்கேடு தமிழகத்தைச் சூழ்ந்து உள்ளது. ஒரு தலைமுறையே பாழாகிக் கொண்டு இருக்கின்றது.


Sunday, March 11, 2012

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 11 & 12

தீர்மானம் எண் 11

பரமக்குடி துப்பாக்கிச் சூடு
நடவடிக்கை தேவை

2011 செப்டம்பர் 11 ஆம் நாளன்று, தமிழகக் காவல்துறையினர், பரமக்குடியிலும்,  மதுரை சிந்தாமணியிலும் அக்கிரமமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.


Saturday, March 10, 2012

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 9 & 10

தீர்மானம் எண் 9

ஆசிரியர் பணியிடங்களைப் பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்புக!

தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 25,000 பி.எட்., பட்டதாரிகள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து ஆசிரியர் பணிக்காகக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் கிராமப்புறத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

தங்களின் பட்டப் படிப்புக்காக மூதாதையர்களின் நிலங்களையும், உடமைகளையும் விற்றும், கடன் வாங்கியும் பல சிரமங்களுக்கு மத்தியில், ஆசிரியர் பயிற்சியை முடித்து உள்ளனர்.

Wednesday, March 7, 2012

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 7 & 8

தீர்மானம் எண் 7

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்!
கச்சத்தீவு மீட்பே தீர்வு

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி வந்து நடத்துகின்ற துப்பாக்கிச்சூடு தாக்குதலில், தமிழக மீனவர்கள் பலியாவதும், காயம் அடைந்து உயிருக்குப் போராடுவதும், கொடிய சித்திரவதைக்கு ஆளாவதும், உயிர் உடைமைகளை இழப்பதும் வாடிக்கையாகி விட்டன.

இந்தத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த, இந்திய அரசும், கடலோரக் காவல்படையும் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இலங்கை அரசிடம் இருந்து இழப்பு ஈட்டுத் தொகையும்
பெற்றுத் தரவும் இல்லை; உரிய முறையில் எச்சரிக்கவும் இல்லை.

Tuesday, March 6, 2012

சங்கரன்கோவில்: வைகோ முயற்சியால் வந்த குடிநீர்!

சங்கரன்கோவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் திரு. அ .பழனிசாமி பி.காம் அவர்களின் ௦௦கட்டுரை 02.03.2012 அன்று சங்கொலியில் வெளியானது , இதோ இணையதள நண்பர்களுக்க இங்கே பதிவு செய்கிறோம் .நன்றி :-சங்கொலி குழு 


வளர்ச்சித் திட்டங்களைப் பறித்த அ.தி.மு.க.!
வாக்காளர்கள் பாடம் புகட்டுவர்!


Monday, March 5, 2012

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 6

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3000

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ 2500

கடந்த ஆட்சியின்போது, ஒரு டன் கரும்புக்கு விலை ரூ 2000 வழங்கப்பட்டது. அது கட்டுப்படியாகாது; ரூ 3000 கொடுக்க வேண்டும் என்று கோரி, இன்றைய ஆளும் கட்சியின் சார்பில், சர்க்கரை ஆலைகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர், அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ.2500 வழங்குவோம் அறிவித்தார்கள். ஆனால், இப்போது, ரூ 2100 மட்டுமே அறிவித்து இருக்கின்றார்கள்.

Sunday, March 4, 2012

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 5

அமராவதி, பவானி ஆற்று நீரைத் தடுக்கும் விதத்தில் கேரளம் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துக!

அமராவதி ஆற்றின் உபநதியான பாம்பாற்றின் குறுக்கே ஒரு அணை கட்டுவதற்கும், பவானி ஆற்று நீரைத் தடுக்கும் விதத்தில், முக்காலியில் ஒரு புதிய அணை கட்டவும், கேரள அரசு திட்டமிட்டு உள்ளது.

பாம்பாற்றின் குறுக்கே, 170 மீட்டர் நீளம்; 30 மீட்டர் உயரம் கொண்ட அணை கட்டுவதற்கு, 230 கோடியில் திட்டம் தயாரித்து உள்ளதாகவும், அதற்காக 110 ஏக்கர் நிலத்தைக் கையப்படுத்தி விட்டதாகவும், 40 மெகாவாட் மின் உற்பத்தி செய்யத் திட்டமிட்டு உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Saturday, March 3, 2012

ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியாவின் துரோகம் -வைகோ குற்றச்சாட்டு

ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைக் கவுன்சிலில் இந்திய அரசு, தமிழினப் படுகொலை செய்த சிங்கள அரசைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு மார்ச் 1-ஆம் தேதி கருத்து தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியதாகும். தமிழினக் கொலை நடத்திய இலங்கை அரசுக்கு எதிராக மனித உரிமைக் கவுன்சில் உறுப்பினர் நாடுகளால் தீர்மானம் வரக் கூடும் என்று கருதி அதைத் தடுக்கும் நோக்கத்தில் இந்திய அரசு தன் கருத்தைப் பதிவு செய்துள்ளது.

எந்தவொரு தேசத்தையும் குறிப்பிட்டு தீர்மானம் கொண்டு வருவது மனித உரிமை ஆணையத்தின் செயல்பாட்டுக்கு - அணுகுமுறைக்கு குந்தகம் விளைவிக்கும் என்றும், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை இணக்கமான அணுகுமுறையைப் பலவீனப்படுத்தும் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது. இலங்கையின் இராஜ பக்சே அரசுக்கு முழுக்க உதவி செய்யும் நோக்கத்தில் இந்திய அரசு இவ்வாறு கருத்து தெரிவித்திருக்கின்றது.
இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்கும் இந்திய அரசு கூட்டுக் குற்றவாளியாகும். இலங்கைக்கு ஆயுதங்களும், ஆயிரக்கணக்கான கோடி பணமும் அள்ளிக் கொடுத்ததுடன் இந்தியாவின் முப்படைத் தளபதிகளை அனுப்பி இலங்கை அரசு நடத்திய யுத்தத்தை இயக்கியதும், நடத்தியதும் இந்தியாவின் காங்கிரஸ் தலைமை தாங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான்.

Thursday, March 1, 2012

மூன்று தமிழர்கள் மரண தண்டனை - உச்ச நீதிமன்றத்தில் வைகோ

பேரறிவாளன், சாந்தன், முருகன் மூன்று தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்டு 30 ஆம் தேதி அன்று தடை விதித்ததற்குப் பின்னர் அந்த வழக்கை சென்னை உயர்நீதி மன்றத்திலிருந்து மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சிங்வி, நீதிபதி முக்கோ பாத்தியாய அமர்வில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளும் பட்டியலில் இன்று இடம் பெற்றிருந்தது.

கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி அன்று பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்திரநாத் புல்லர் தூக்குதண்டனை குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்தியாவில் அனைத்து மாநிலங்களின் உள்துறை செயலாளர்களும் தூக்குத் தண்டனை வழக்குகள், கருணை மனுக்கள் குறித்த அனைத்து விபரங்களையும் மூன்று நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதியரசர் சிங்வி அறிவித்திருந்தார். ஆனால், ஒருசில மாநிலங்களில் இருந்து மட்டுமே தகவல்கள் தரப்பட்டுள்ளன.