Saturday, August 31, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 2

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

அவன் எழுதிய நூல் கையெழுத்துப் பிரதியாக சிறையில் இருந்து வெளியே கடத்தப்பட்டது. அப்படிக் கடத்தப்பட்ட நூல்கள் மொத்தம் ஆறு. மரண தண்ட னைக்குமுன்பு அவர் எழுதிய ஆறு நூல்கள் வெளியே கடத்தப்பட்டன. அதில் ஒன்று நான் ஏன் நாத்திகன். அடுத்தது ‘கனவுலகத்துக்கு ஒரு அறிமுகம்.’ இந்த இரண்டு நூல்கள்தான் கிடைத்தன. இன்றைக்கு இருக்கிறது. அவர் எழுதிய இன்னொரு நூல், ‘இந்தியாவில் புரட்சிகர இயக்கத்தின் வரலாறு.’ கிடைக்க வில்லை, எவரிடமும் இல்லை. ‘சோஷலிச கோட்பாடு’ எனும் நூல் பகத்சிங் எழுதியது கிடைக்கவில்லை. பகத்சிங் தன்னுடைய “சுயசரிதை” என்ற பெய ரில் எழுதிய நூல் கிடைக்கவில்லை. “At the door of Death” மரண வாசலில் என்ற தலைப்பில் எழுதிய புத்தகம். அதுவும் கிடைக்கவில்லை.

மன்னிப்பும் கோரிய இலங்கை

ஐ.நா. வின் மனித உரிமை ஆணையர் திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள், ஈழத்தமிழர் படுகொலை குறித்த உண்மைகளைக் கண்டு அறிய, தமிழர் பகுதி களில் சுற்றுப் பயணம் செய்து, கொடுந்துயருக்கு ஆளானவர்களைச் சந்தித்த தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், சிங்கள அமைச்சர் மெர்வின் சில்வா என்பவன், ‘நவநீதம் பிள்ளையை வேண்டுமானால் நான் திருமணம் செய்து கொள்கிறேன்; இலங்கையைச் சுற்றிக் காட்டுகிறேன்’ என்று கொச்சைப் படுத்தினான்.

இதனைக் கண்டித்து சில தினங்களுக்கு முன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அறிக்கை வெளியிட்டார் 

உ.பா.ச - போகாத ஊருக்கு

மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டம் போகாத ஊருக்கு வழி தேடுகிறது!

தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா குறித்து நாடாளுமன்றத்தில்,#மதிமுக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி அவர்கள் 26.08.2013 அன்று ஆற்றிய உரை:

நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக அடிமைப்பட்டு, அந்நியர்களால் சுரண்டப் பட்டு, உண்ணும் உணவிற்குக் கூட உத்தரவாதம் இல்லாத நிலையில் நம் நாட்டு மக்கள் இருந்தனர்.நாடு சுதந்திரம் அடைந்து 67 ஆவது ஆண்டை கொண் டாடிக் கொண்டு உள்ளோம். பல ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவு செய்துள் ளோம்.

தொழிற்சங்க தொடக்கவிழா

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் மதிமுக தொழிற்சங்க தொடக்கவிழா வரும் 2ம் தேதி நடக்கிறது. இவ்விழாவில் #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ பங்கேற்கிறார் என்று மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி தெர்மல் அனல்மின் நிலையம் மற்றும் புதியதாக அமைக்கப்பட்டு வரும் என்.எல்.சி அனல்மின் நிலையங்களில் மதிமுக சார்பில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னேற்ற சங்கங்கள் துவங்கப்படுகிறது.

Friday, August 30, 2013

விருதுநகர் மாநாடு விவரம்

பேரறிஞர் அண்ணா 105 ஆவது பிறந்தநாள் விழா

மறுமலர்ச்சி தி.மு.க. மாநாடு -விருதுநகர்

2013 செப்டெம்பர் 15 ஞாயிறு


சங்கரலிங்கனார் பந்தல் * பாலச்சந்திரன் அரங்கம்

நுழைவாயில்கள் 

அப்துல்லாஹ் பெரியார்தாசன் நுழைவாயில் * சேக் முகமது நுழைவாயில்
* சுப்புரத்தினம் நுழைவாயில் * அசன் இப்ராஹிம் நுழைவாயில்

ஆணவத் திமிர்ப் பேச்சு

சிங்கள வெறிநாய்களின் ஆணவத் திமிர்ப் பேச்சு!

#வைகோ கண்டனம்

ஐ.நா. வின் மனித உரிமை ஆணையர் திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள், ஈழத்தமிழர் படுகொலை குறித்த உண்மைகளைக் கண்டு அறிய, தமிழர் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து, கொடுந்துயருக்கு ஆளானவர்களைச் சந்தித்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், சிங்கள அமைச்சர் மெர்வின் சில்வா என்பவன், ‘நவநீதம் பிள்ளையை வேண்டுமானால் நான் திருமணம் செய்து கொள்கிறேன்; இலங்கையைச் சுற்றிக் காட்டுகிறேன்’ என்று கொச்சைப்படுத்தி இருக்கிறான்; விடத்தைக் கக்கி இருக்கின்றான். 

Thursday, August 29, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 1

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

கனவாகிப்போன கச்சத்தீவு நூலை நான் வெளியிட வேண்டும் என்று ஆரு யிர்ச் சகோதரர் கே.எஸ்.ஆர். கேட்டமாத்திரத்தில் அக்டோபர் 7 ஆம் தேதி ஏற் பாடு செய்யுங்கள் என்று சொன்னேன். எந்தப் பெயரை உச்சரித்தால் கோடிக் கணக்கான வாலிபர்களின் நாடி நரம்புகளில் மின்சாரத்தைப் பாய்ச்சுகின்ற மந்திரச் சொல்லாக அந்தப் பெயர் இருந்ததோ, அந்தப் பெயருக்கு உரியவனான பகத்சிங் நூற்றாண்டு நிறைவு விழாவை நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக, இந்த அக்டோபர் 7 ஆம் தேதியை நாங்கள் தேர்ந்து எடுத்தோம்.

இந்த அக்டோபர் 7 கடந்த ஆண்டில் நூற்றாண்டு விழா தொடக்கம் நடத்தப் படும் என்று தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு, நிகழ்ச்சி நடைபெறுகிற இடம், மண்டபம், நேரம், கலந்து கொள்பவர்களின் பட்டியல் என எல்லாம் அறி விக்கப்பட்டு, ஏடுகளில் செய்தி வந்து, மகானுபாவர் கலந்து கொள்கிற நிகழ்ச் சிக்கு ஏற்றவாறு மண்டபத்தில் கூட்டம் வரவில்லை என்று, அந்தக் கூட்டம் கடைசி நேரத்தில் இரத்து செய்யப்பட்டது.

செம்மொழி!

செம்மொழி பற்றி அறிந்து கொள்வதற்கு முன் செம்மை என்ற சொல்லிற்கான
சொற்பொருள் விளக்கத்தைத் தெரிந்து கொள்ளல் வேண்டும். சுல் என்னும்
சிவத்தற் கருத்து வேர்ச் சொல்லில் இருந்து பிறந்தது செம்மை என்னும் சொல். ஒரு வேர்ச் சொல் எவ்வளவு பொருள் குறித்த சொற்களை உருவாக்குகிறது என்பதை எண்ணிப் பார்த்தால் அறியுந்தொறும் வியப்பும், சுவையுந்தரும்.

சுல் - சுல்லம் - செம்பு - செம்பு ஒரு உலோகம். மலையாளத்தில் செம்பிற்கு சுல் லம் என்று பெயர். சுல் - சுல்லம் - செம்பு “சுல்லத்தா னமைந்த நெடுங்களத்தின்
(சேது புராணம்)” நெருப்பின் நிறம் சிவப்பாதலால், நெருப்புக் கருத்தினின்று
சிவத்தற் கருத்து தோன்றிற்று. ஒப்புநோக்கு : எரி - நெருப்பு - சிவப்பு - எரிமலர் - 1.சிவந்த முருக்க மலர், 2. செந்தாமரை.

ஜனநாயக இயக்கம் மதிமுக

அண்ணா விரும்பிய ஜனநாயக இயக்கம் நமது இயக்கம்...!

போர்க்களம் செல்லுகின்ற மன்னவனுக்கு எவருக்கும் அஞ்சாத தீரமும், திண வெடுத்த தோள்களும், விரிந்த மார்பை பாதுகாக்கும் கவசமும், வலக்கையில் எதிரிகளை விளாசும் வாள் வலிவும், இடக்கையில் கேடயமும், சிரசில் மகுடம் தரித்து, பொன்னாலான அணியும், மாணிக்கம், முத்தாலான மாலைகளும் அலங்கரிக்க, மன்னவன் செருக்களம் போவதற்குரிய அணிகலன்கள் சூடப் பெற்று களம் புகுவதுதான் மாவீரர்களுக்கு அழகு என்று நம் சங்கப் பாடல்கள் புகழ்ந்து உரைக்கின்றன. அந்த வகையில் நாடாளுமன்றத் தேர்தல் என்னும்
களத்துக்குச் செல்லும் நம் வைகோ என்னும் மன்னவனுக்கு ஈடற்ற இளைஞர் அணியும், மாண்புக்குரிய மாணவர் அணியும்,உறுதிமிக்க தொண்டர் அணியும், வாழ்த்துரைக்கும் மகளிர் அணியும், பாட்டுத் திறத்தாலே மன்னவன் புகழ் பாடும் இலக்கிய அணியுமென அனைத்து அணிகளும் நம் தலைவரை வரிசங் கம் ஊதி வரவேற்று தேர்தல் போருக்கு ஆயத்தப்படுத்து கின்ற பணிகள் நடந்து கொண்டே இருக்கின்றன.

Wednesday, August 28, 2013

தமிழ் தெரியாத நிர்வாகி ?

செம்மொழிக்கு நிறுவன இயக்குனராகத் தமிழ் தெரியாத 
ஒரு நிர்வாகியை நியமித்திருப்பது தமிழ் இனத்தையே 
அவமதிப்பதாகும் மத்திய மனித வள மேம்பாட்டு 
அமைச்சருக்கு #மதிமுக வை சேர்ந்த 

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி மடல் 

கடிதத்தின் விவரம் பின் வருமாறு ...

எனக்கு சிறை பிடிக்கும் -வைகோ

எனக்கு சிறை பிடிக்கும் - #வைகோ

சொந்தக் கிராமமான கலிங்கப்பட்டிக்குப் போவதைப்போலவே சிரித்துக் கொண்டே செல்லும் இன்னோர் இடம்... சிறைச்சாலைகள். இதுவரை 28 தடவைகள் -சுமார் நான்காண்டு காலம், மாநிலத்தில் இருக்கும் பெரும்பாலான
மத்தியச் சிறைகளில் அவரது மூச்சுக்காற்று சுற்றி வந்திருக்கிறது. நிகழ்காலத் தலைவர்களில் அதிக காலம் உள்ளே இருந்த சிறைப்பறவை!

திருப்புமுனையை உருவாக்கும்!

விருதுநகரும் திருப்புமுனையை உருவாக்கும்!

தொலைக்காட்சியில் நிகழ்வுகள் ஓடிக் கொண்டிருந்தன; டில்லியில் மாண்பு மிகு பாரதப் பிரதமர் அவர்களும், சென்னையில் மாண்புமிகு முதல்வர் அவர் களும் தேசியக் கொடியினை ஏற்றி வைத்த புனிதமான நிகழ்வுகள்!

அதையடுத்து, மக்களின் அங்கங்களாகஉள்ள பல்வேறு துறைகளைச் சார்ந்த வர்களுக்கு - பலவகை விருதுகளும் வழங்கப்பட்டன. ஆம், இது ஆகஸ்ட் 15-
2013 இந்திய விடுதலை நாள்!

காவு கொடுக்கிறதா இந்திய அரசு?

தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படைக்குக் 
காவு கொடுக்கிறதா இந்திய அரசு? 

#வைகோ கேள்வி

இந்தியாவில் ஒரு அரசு இருக்கிறதா? துணைக்கண்டத்தின் அனைத்து மக்க ளுக்குமான அரசு இருக்கிறதா? குறிப்பாக, தமிழ்நாட்டு மீனவர்கள், இந்தியக் குடிமக்கள் என்ற எண்ணமாவது, அரசுக்கு உள்ளதா? என்பதுதான் எழுகின்ற கேள்விகள் ஆகும். ஆதவன் கீழ்த்திசையில் தினமும் உதிப்பது போலத்தான், தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்குவதும், சுடுவதும், கொல்வதும், சிறைபிடிப்பதும், சித்திரவதை செய்வதும், இலங்கைச் சிறை களில் அடைப்பதும், நாள் தவறாமல் நடக்கிறது.

Tuesday, August 27, 2013

போராட்டம் நிச்சயம் வெல்லும்!

அணுமின் உலைக்கு எதிரான #வைகோ வின் போராட்டம் நிச்சயம் வெல்லும்!

கூடங்குளத்தில் தமிழக அரசின் இசைவுடன் மத்திய அரசு ரஷ்ய நாட்டு உதவி யுடன் நிறுவியுள்ள அணு உலையை அகற்றக்கோரி அணு உலைக் கெதிரான மக்கள் போராட்டம் 700 நாட்களையும் தாண்டி தொடர் போராட்டமாக தமிழகத் தில் நடைபெற்று வருவது சரித்திரத்தில் இடம்பெற விருக்கும் நிகழ்வாகும். அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கதினரும், பொதுமக்களும், மீனவ சமுதாயத் தினரும்,விவசாயப் பெருங்குடி மக்களும் ஒன்றிணைந்து இடிந்தகரையில் இந்த அறப்போராட்டத்தினை இடைவிடாமல் தொடர்ந்து நடத்திக் கொண்டு
உள்ளார்கள்.

மாணவர் படையே...

மாணவர் படையே.....
தமிழின மீட்புக்கு கடமையாற்ற வாரீர்!

கலந்துரையாடல் கூட்டத்தில் தி.மு.இராஜேந்திரன் வேண்டுகோள்!

#மதிமுக,மாநில, மாவட்ட மாணவர் அணியின் ஆலோசனைக் கூட்டம் 17.08.2013 அன்று தாயகத்தில் நடைபெற்றது.அக்கூட்டத்தில் மாணவர் அணிச் செயலாளர் தி.மு. இராசேந்தின் ஆற்றிய உரையில் இருந்து...

மாநில துணைச்செயலாளர்களிடத்தில்,மாவட்ட அமைப்பாளர்களிடத்தில் தீர் மானங்கள் தரப்பட்டுள்ளன.என்றைக்கு நமக்கு ஒரு பெயரும், மதிப்பும் வரும் என்றால், எந்தப் பொறுப்பில் இருந்தாலும், கட்சிக்காக கடமையாற்றினால் நமது பெயர் வெளியே வரும்.

நீதியை வழங்குமா?

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் 
திருமதி. நவநீதம் பிள்ளையின் பயணம், நீதியை வழங்குமா?
உலகத் தமிழர்கள் எதிர்பார்ப்பு!

#வைகோ அறிக்கை!

இலங்கையின் சிங்கள இனவெறி அரசு, ஈழத்தமிழர்கள் மீது நடத்திய இனப் படு கொலைத் தாக்குதல்கள், மனித உரிமைகள் அழிப்புக் குற்றங்கள் குறித்து, அனைத்து உலக மன்றத்தில் தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்து உள்ள சூழலில், இலங்கையில் நேரடி ஆய்வு விசாரணை நடத்துவதற் காகச் சென்று இருக்கின்ற, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் திருமதி நவநீதம் பிள்ளை அவர்களின் முயற்சியை வரவேற்கிறோம். 

மஞ்சள் விவசாயுடன் மதிமுக

மஞ்சள் வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த
விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

ஈரோடு தொகுதி #மதிமுக மக்களவை உறுப்பினர் ஏ. கணேசமூர்த்தி, தெலுங்குதேசம் எம்.பி.க்கள் நாம நாகேஸ்வர ராவ், ரமேஷ் ரத்தோடு ஆகியோருடன் மஞ்சள் விவசாயிகள் சங்க தேசிய தலைவர் பி.கே. தெய்வசிகாமணி, ஆந்திர பிரதேச மாநில தலைவர் நரசிம்ம நாயுடு ஆகியோர் நாடாளுமன்ற வளாகத் தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை திங்கள் கிழமை சந்தித்தனர்.

Monday, August 26, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 31

மாநில உரிமைகளைப் பறிக்கும் பஞ்சாயத்து ராஜ் சட்டம்!

உலகின் உயர்ந்த ஜனநாயக நாடு என்கிற பெருமை இந்தியாவுக்கு உண்டு.
ஆனால், இங்கே ஜனநாயகம் படும்பாடு இந்நாட்டிற்கு மதிப்பைப் பெற்றுத் தந் திருக்கின்றதா என்றால் இல்லை.

தேர்தல் முறை என்பது சாமான்ய மக்களின் இதயதாகத்தை வெளிப்படுத்துவ தாகவும், அவர்களது உரிமையை நிலை நாட் டுவதாகவும் இருக்க வேண்டும். அந்த நோக்கத்தில்தான் அரசியல் அமைப் புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் வாக்குரிமைக்கு முக்கியத்துவம் தந்தார்கள்.

மாணவர்களே நாற்றங்கால் !

மறுமலர்ச்சியின் நாற்றங்கால் மாணவர்களே!

மாணவர் அணி கலந்துரையாடலில் #வைகோ

கழகத்தின் மாநில, மாவட்ட மாணவர் அணி கலந்துரையாடல்கூட்டம் 17.08. 2013 அன்று தாயகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு
பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து.....

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணியின் கருத்துப் பட் ட றையில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாணவர் அணிச் செயலாளர் தம்பி இராஜேந்திரன் அவர்கள் ஒருங்கிணைத்தபடி, இந்த நிகழ்வு, இன்று காலையில் தொடங்கி,அந்தி சாயும் வரையிலும் தொடர்ந்து நடைபெற் றுக் கொண்டு இருக்கின்றது.கழக வளர்ச்சி குறித்து உங்களுடைய கருத்து களை எல்லாம் பகிர்ந்து கொண்டு இருக்கின்றீர்கள்.

குற்றவாளிக் கூண்டில் காங்கிரசு ஆட்சி!

பெருந்தலைவர் காமராசரை காங்கிரசு கட்சி மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட் டது. அந்தக் கட்சியின் நூற்றாண்டு விழா மலரிலேயே பட்டாபி சீத்தாராமய்யா படத்தை காமராசர் படமாக வெளியிடும் அளவுக்கு மறதி நோய் அவர்களுக்கு முற்றிப்போய்விட்டது.அகில இந்திய அரசியலையே ஆட்டிப் படைத்த அந்தத் தலைவரின் நூற்றாண்டு விழாவைக்கூட அவர்கள் நாடு முழுக்க சிறப்போடு கொண்டாட வில்லை. ஆனால், கடந்த மாதம் 15 ஆம் நாளில் அவரது பிறந்த நாளை நாடு முழுக்க அவரது உருவப்படங்கள் கொண்ட சுவரொட்டிகளை ஒட்டி தேசிய திலகங்கள் விழா எடுத்து நம்மை வியப்பில் ஆழ்த்தின!
வேறொன்று மில்லை, நாடாளுமன்றத் தேர்தல் வருகிறதல்லவா? வாக்கு வேட்டைக்கு “காமராசர் முகமூடி” தேவை அல்லவா? எனவேதான் இந்த திடீர் கூத்து!

Sunday, August 25, 2013

மாற்றம் வேண்டும் -ஈரோட்டில் வைகோ

இந்திய அரசியலில் மாற்றம் வேண்டும் , ஈரோட்டில் #வைகோ ஆவேசம் !

#மதிமுக பொதுச்செயலளர்  வைகோ பங்கு எடுத்த மாற்று அரசியலுக்கான இளையதலைமுறையின் கருத்துக்களம் இன்று காலை 10மணிக்கு சக்தி திருமண மண்டபத்தில் ஈரோட்டில் தொடங்கி மாலை 5 மணிக்கு தலைவர் வைகோ அரை  ஆற்றினார் 1000 இளைஞர்களின்கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் அ.கணேஷமூர்த்தி,குகன் மில் செந்தில், R.T.மாரியப்பன், N. செல்வராகவன், T.C.C சேரன், அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, கொள்கை விளக்கு அணி செயலாளர் அழகுசுந்தரம், மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன், மாநில மாணவர் அணி செயலாளர் தி.மு.ராஜேந்திரன், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி, முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணன், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் செந்தில் அதிபன், திருச்சி டாக்டர் ரொஹையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வைகோவின் உழைப்பும் வீண் போகாது

எவருடைய உழைப்பையும் இயற்கை விரயமாக்கியதில்லை...

#வைகோ வின் உழைப்பும் வீண் போகாது!


தீரர்கள் கோட்டமாம் திருச்சி மாநகரில் திருப்பத்தை ஏற்படுத்தும் விதமாக நிதி
வழங்கும் விழாவும், பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநிலத்தில் முதல் மூன்று
இடங்கள் என்னும் முத்திரை பதித்த மாணவர்களைப் பாராட்டுகின்ற அரிய தோர் விழாவும் மகிழ்ச்சியாகவும், எழுச்சியாகவும் நடந்து முடிந்தது.திருச்சி மாவட்ட மாணவர் அணி நடத்திய பாராட்டு விழா நிகழ்வானது கஜப்ரியா அரங்கத்திலும், நிதி வழங்கும் விழா அருண் தங்கும் விடுதி அரங்கத்திலும் நடந்தேறியது.

கடலுக்கு இறைத்த (காவிரி) நீர்!

சங்கொலி தலையங்கம் 

தமிழகம் எதிர்காலத்தில் சந்திக்கப்போகும் பேரபாயம், நீர் பற்றாக்குறையாக
இருக்கும் என்று பல ஆய்வுகள் எச்சரிக்கை மணி அடித்துள்ளன. தமிழ்நாட்டில்
மழையின் மூலம் கிடைக்கும் நீர் குறைந்து வருவது மட்டுமின்றி, நிலத்தடி நீரும் வெகுவாக குறைந்த வண்ணம் இருக்கின்றது. தமிழகத்தில் ஆண்டு தோறும் மழை சராசரியாக 925 மி.மீ. பொழிகிறது. தென்மேற்கு பருவ மழை 307.60 மி.மீ. வடகிழக்குப் பருவ மழை 438.70 மில்லி மீட்டர் பொழிகிறது.

குளிர்காலத்தில் பொழியும் மழை நீரின் அளவு 42.20 மில்லி மீட்டர்; கோடை
காலத்தில் 136. 50 மில்லி மீட்டராக மொத்தம் 925 மில்லி மீட்டர் மழைநீரை
தமிழகம் பெறுகிறது. இதில் மேற்குத் தொடர்ச்சி மலை தடுத்து விடுவதால்,
தமிழ்நாட்டிற்கு தென் மேற்கு பருவக் காற்றால் பொழியும் பருவ மழையின் பயன் கிடைப்பது இல்லை. வடகிழக்குப் பருவக் காற்று அக்டோபர் முதல் டிசம்பர் வரை வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களை உருவாக்கிப் பொழியும் மழை, கனமழையாக கொட்டிவிடுகிறது.

1000 இளைஞர்களுடன் வைகோ

#மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ பங்கு எடுத்த மாற்று அரசியலுக்கான இளையதலைமுறையின் கருத்துக்களம் இன்று காலை 10 மணிக்கு சக்தி திருமண மண்டபத்தில் ஈரோட்டில் தொடங்கி மாலை 5 மணிக்கு தலைவர் வைகோ உறை ஆற்றுகிறார் . 

1000 இளைஞர் களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் .

கட்டாய இலவச கல்வி சட்டம்

அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் (ஆர்.டி.இ.) நலிந்த பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் 81 தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் ஒரு மாணவரை கூட சேர்க்கவில்லை என்ற தகவல் தெரியவந் துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 390 தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள், அனைவருக் கும் கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கை பற்றி 128 பள்ளிகளே தகவல் தெரிவித்துள்ளது. மீதமுள்ள 262 பள்ளிகள் எந்தவித தகவலை அளிக்கவில்லை என்ற விவரம் தற்போது தெரியவந்துள்ளது.

Saturday, August 24, 2013

நேர்மையின் இமயம்! பகுதி 4

சட்டமன்ற உறுப்பினர்கள் வரிசையாகப் பேசுகிறபோது, அவர்கள் ஒவ்வொரு வரும் இன்றைக்கு எங்கள் தொகுதியில்,இப்பொழுது இருக்கிற நிலைமையில் 3 மருத்துவ மனைகள் திறக்க வேண்டும்; 15 நியாயவிலைக் கடைகள் திறக்க வேண்டும்;10 கஞ்சித் தொட்டிகள் திறக்க வேண்டும் என்கிறார்கள். இன்னொரு எம்.எல்.ஏ.வருகிறார். இல்லை எங்கள் தொகுதியில் 4 மருத்துவமனை கட்ட வேண்டும். 3 நியாய விலைக்கடைகள் வேண்டும் என்று வரிசையாகப் பேசு கிறார்கள்.

முதலமைச்சர் ராஜாஜி முகம்சுளிக்கிறார்.அவர் சொல்கிறார்: இன்று விவாதத் தில் பேசிய ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தங்கள் தொகுதிக்கு அது வேண்டும்,இது வேண்டும் என்றே பேசிக்கொண்டு இருந்தார்கள்.இது வருந்தத்தக்க நிலைமை. தொகுதி கண்ணோட்டம் மட்டுமே இவர்களுக்கு இருக்கிறது. எம்.எல்.ஏ.க்க ளுக்கு பரந்து விரிந்த இந்த மாகாணத்தைப் பற்றிய கண்ணோட்டம் இல்லா மல்போயிற்றே’ என்று குறைபட்டுக் கொள்கிறார்.எம்.எல்.ஏ.க்களுக்கு வருத் தம். அன்றைய சட்டசபைக்கூட்டம் முடிந்து விட்டது.

மது ஒழிப்பில் சி.சுப்பிரமணியம்

திருச்சி அருகே உள்ள காவிரிக் கரையோரம் திருப்பராயத்துறையில் தபோ வனம் அமைத்துக் கல்விப் பணியாற்றிய சித்பவானந்தர் அவர்களால் வார்ப் பிக்கப்பட்டவர் சி.எஸ்.என்று அழைக்கப்படும் பாரத ரத்னா சி.சுப்பிரமணியம் அவர்கள். சட்டப் படிப்பை முடித்த பிறகு, கோவை அருகே போத்தனூர் இரயில் நிலையத்தில் காந்தியடிகளை முதன் முதலாக நேரில் சந்தித்தார். அப்போதி ருந்து காங்கிரஸ் பேரியக்கத்தில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டார்.

1947 ஆகஸ்டு 15 அன்று பண்டித ஜவஹர்லால் நேரு சுதந்திர தின பிரகடனத் தை நிகழ்த்தும்போது உடன் இருந்தவர். இராஜாஜி அமைச்சரவையில் தமிழகத் தின் கல்வி, நிதி அமைச்சராக இருந்தவர். தொடர்ந்து பெருந்தலைவர் காம ராஜர் அமைச்சரவையிலும் மந்திரியாக நியமிக்கப்பட்டார். அதற்குப் பிறகு பொள்ளாச்சி அமைச் சரவையிலும் மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

வாராது வந்த மாமணியே

வாராது வந்த மாமணியை,
கருத்துக் கருவூலக் களஞ்சியத்தை,
இயற்கை பறித்துச் சென்றதே!

அப்துல்லாஹ் பெரியார்தாசன் மறைவு; #வைகோ இரங்கல் உரை

திராவிட இயக்கம் ஈடு இணையற்ற கருத்துக்கருவூலக் களஞ்சியத்தை இழந்து விட்டது; 

தமிழ் இனம் எழுத்தாலும், பேச்சாலும், தனக்கு அரண் அமைத்துத் தருகின்ற வலிய  படைக்கருவியை இழந்து விட்டது;

நட்புச் சுற்றம் நெஞ்சால் உயர்வாக நேசித்த ஒரு நண்பனை இழந்து விட்டது;

தமிழனத்திற்காக மதிமுக

நேற்று (23.08.13 ) கடலூர் மாவட்ட தேர்தல் நிதி அளிப்பு கூட்டம் ,  நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் ம.தி.மு.க.தேர்தல் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் கூட்டம் மாவட்ட செயலாளர் ராம லிங்கம் தலை மையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட #வைகோ, தமிழனத்திற்காக போரா டும் ஒரே இயக்கம் ம.தி.மு.க. என்று கூறினார்.

மாநில பொருளாளர் மாசிலாமணி, ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் குணசேகரன், வெளியீட்டு அணி செயலாளர் வந்தியதேவன், மாவட்ட அவை தலைவர் பெருமாள், பொருளாளர் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பிச்சை வரவேற்றார்.

Friday, August 23, 2013

திரையரங்கு நன்றி -வைகோ

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
“மெட்ராஸ் கஃபே” திரைப்படத்தை திரையிடாததற்கு நன்றி!
#வைகோ அறிக்கை

தமிழ் இனப்படுகொலை செய்த கூட்டுக்குற்றவாளிகள் தங்கள் தரப்பை நியா யப்படுத்திக் கொள்ள சிங்கள பேரினவாத அரசின் பேருதவியுடன் தமிழர் களை பயங்கரவாதிகளாக சித்தரித்து எடுக்கப்பட்ட “மெட்ராஸ் கஃபே” திரைப்படம் வெளியிடக்கூடாது என கொந்தளிக்கும் உணர்வுடன் விடுத்த வேண்டு கோளை ஏற்று இன்று (23.08.2013) வெளியிடுவதாக இருந்த திரைப் படம் திரை யிடப்படவில்லை.

Thursday, August 22, 2013

இருமொழியில் ஓர் இடிமுழக்கம்!

இளையராஜா இசையமைத்த திருவாசகத்தின் ஒலிப்பேழை வெளியீட்டு விழா. ‘திருவாசகம்’ பற்றி #வைகோ பேசுகிறார். பெருங்கூட்டம் தன்னை மறந்து கேட்டுக்கொண்டு இருக்கிறது. அன்று மேடையில் அமர்ந்திருந்த ரஜினிகாந்த் விசிலடித்து மகிழ்கிறார். அதன் பின்னர் பேசிய இளையராஜா, நீங்கள் ஏன் அரசியலில் இருக்கிறீர்கள். இவ்வளவு ஞானத்துடன் பேசும் நீங்கள் இலக்கியத் தின் பக்கம் வந்துவிடக்கூடாதா? என்று கேட்கிறார்.வைகோ அரசியலைத் தாண்டி எல்லா தரப்பையும் கவர்ந்த பேச்சாற்றல் படைத்தவர்.

திராவிட இயக்கத்தின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் முக்கியக் காரணம் மேடை தான் என்பதை தமிழக வரலாறு சொல்லிக்கொண்டே இருக்கிறது. பேரறிஞர் அண்ணா தொடங்கிய தி.மு.க., தமிழகத்தின் பட்டிதொட்டி பட்டினக்கரை யெல்லாம் கிளைபரப்பி வளர்ந்ததற்கு அண்ணாவின் பேச்சாற்றல்தான் காரணம்.

ஈழத்தமிழரின் இதயம் வைகோ

ஈழ தமிழனின் துயரத்தை சொல்ல வைகோ ஏறிய மேடைகள் 2009

ஜனவரி 18 தஞ்சை யில் உலகத்தமிழர் பேரமைப்புடன் இணைந்து இந்திய இலங்கை தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு தொடக்க விழாவில் #வைகோ முழக்கம்.

ஜனவரி 28 தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் வைகோ நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.

பிப்ரவரி 4 தமிழ் மக்களை அழிக்கும் சிங்கள இனவெறி அரசுக்கு இராணுவ உதவி செய்யும் இந்திய அரசின் துரோகத்தைக் கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் பொது வேலை நிறுத்தம். வைகோ பங்கேற்ப்பு

நாடாளுமன்றமா? உச்சநீதிமன்றமா?

நாடாளுமன்றத்தின் மாண்பை உச்சநீதிமன்றமா சீர்குலைத்தது?

உச்சநீதிமன்றம் ஜூலை 10 ஆம் தேதி வழங்கிய ஒரு தீர்ப்பு இந்திய அரசியல்
அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் தலைவர்கள் சிலர் இந்தத் தீர்ப்பை,நாடாளுமன்றத்துடன் உச்சநீதிமன்றம் மோதுவதாக இருக்கின்றது என விமர்சனம் செய்துள்ளனர். நீதித் துறையின் வரலாற்றில் மிக முக்கிய மான தீர்ப்பாகக் கருதப்படும் இந்த வழக்கை கேரளாவைச் சேர்ந்த லில்லி தாமஸ் என்ற 85 வயது மூத்த பெண் வழக்கறிஞரும், லோக் பிரகாரி என்ற அமைப்பும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

“இந்திய அரசியல் குற்றமயமாகி வருவது மட்டுமின்றி நாடாளு மன்றத்திலும் சட்டமன்றங்களிலும் குற்றப்பின்னணி உள்ளவர்களின் எண்ணிக்கை அதிக ரித்துக் கொண்டே வருகிறது. இதைத் தடுப்பதற்காக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8 இன் உட்பிரிவு 4 ஐ ரத்து செய்ய வேண்டும்” இதுதான் 2005
ஆம் ஆண்டில் வழக்கறிஞர் லில்லிதாமஸ், லோக் பிரகாரி என்ற அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.என்.சுக்லா இருவரும் தொடுத்த பொதுநல வழக்கின் சாரம்சமாகும்.

மெட்ராஸ் கபே -கோவை

கோவையில் "மெட்ராஸ் கபே' திரைப்படத்தை வெளியிடும் திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என #மதிமுக அறிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநகர மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன் குமார் வெளியிட்ட அறிக்கை:

Wednesday, August 21, 2013

வெற்றிக்குக் கட்டியம் கூறும்

வெற்றிக்குக் கட்டியம் கூறும் விருதுநகர் மாநாடு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற நமது மாபெரும் இயக்கத் தின் மகத்தான மாநாடு. சரித்திரத்தின் பக்கங்களில் சாதனை களை நிகழ்த்திக் காட்டிய தலைவர்களும், வரலாற்றின் பக்கங்களில் நிலைத்த புகழோடு
அழிக்கமுடியாத அத்தியாயங்களாய் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்ற தலைவர் களும் உலவிய விருதுநகர் மாவட்டத்தில், கையிலே கழகக் கொடிகள் - கருத் தில் தமிழ்மானம் - விண்ணை முட்டுகின்ற வீர முழக்கங்களோடு கழகத்தின் காளையர் சங்கமிக்கின்ற மாநாடு.

பத்து தமிழர்கள் பட்டினிப் போராட்டம்

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 10 ஈழத் தமிழர்கள். மீண்டும் பட்டினிப் போராட்டம் தொடங்கினர்.

காந்தி மோகன், காண்டீபன், பரமேஸ்வரன், ஜான்சன், சுமன், ரமேஷ், சசிதரன், ஈஸ்வரன், பாலகுமார் , காளிதாஸ் ஆகியோர்கள் இன்று காலை முதல் பட்டினிப் போராட்டத்தை தொடங்கினர்.

நேர்மையின் இமயம்! பகுதி 3

புலிகளைப் போன்றவர்களை நண்பனாகக் கொள்ளவேண்டும் என்றவர் ஜீவா!

யாரை நண்பனாகக் கொள்ளவேண்டும் என்று சொல்கிறார் தெரியுமா ஜீவா? புலிகளை மட்டுமே நீ நண்பனாகக் கொள்ளவேண்டும் என்கிறார்.

இங்கே சுருக்கு எழுத்தாளர்கள் வந்து இருக்கிறார்கள். அரசாங்கத்தின் ஒற்றர் கள் வந்து இருக்கிறார்கள். அவர்கள் பேச்சைக் கேட்டுவிட்டுப் போகிறபோது ஜீவாவின் பெருமைகளில் மனமெல்லாம் பூரித்துத்தான் போவார்கள்.அவர்கள் நமது நண்பர்கள் தான். ஆனாலும் கடமை இருக்கிறது அல்லவா? வைகோ அல்லவா பேசுகிறான் பூதப்பாண்டியில்.

காங்கிரசை மக்கள் தூக்கி எறிவார்கள்

#வைகோ ஆவோசம்

மறுமலர்ச்சி தி.மு.கநடத்தும்,செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாள் விழா -விருது நகர் மாநாட்டிற்காக பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று (21.08.13 ) காலை 9 மணி அளவில் தலைவர் வைகோ பார்வையிட்டார். அவருடன் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்டச் செயலாளர் கள் ஆர்.எம்.சண்முகசுந்தரம், புதூர் பூமிநாதன், டி.டி.சி.சேரன் மற்றும் எம்.டி. சின்ன செல்லம், மாநில மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இராசேந்திரன்,
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிப்பிப்பாறை இரவிச்சந்திரன், சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஆர்.வரதராஜன், ஆர்.ஞானதாஸ், மாநில தொண்டர் அணிச் செயலாளர் பாஸ்கரசேதுபதி, மின்னல் முகமது அலி, மாநில மீனவர் அணிச்செயலாளர் நக்கீரன், பேராசிரியர் பாத்திமா பாபு, பெல்.ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மெட்ராஸ் கபே ஈரோடில் எதிர்ப்பு

மெட்ராஸ் கபே திரைப்படத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தி தமிழீழ ஆதரவு கூட்டியகத்தினர் சார்பாக மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி ஆகியோரிடம் நேற்று (20.08.13) காலை மனு அளித்தனர்.இந்த கூட்டியகத்தில் உள்ள 14 அமைப்புகள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவித்தது...

மெட்ராஸ் கபே என்ற திரைப்படத்தில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை தீவிரவாத இயக்கமாக சித்தரித்தும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கொச்சைப்படுத்தியும் காட்சிகளை வடிவமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tuesday, August 20, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 12

நாள் :- 06.11.2006

யாழ்ப்பாணம் நெடுஞ்சாலையைத் (A9 நெடுஞ்சாலை) திறக்கவும், ஈழத் தமிழர் களுக்கு உணவு, மருந்துகள் கிடைத்திடவும் நடவடிக்கை மேற் கொள்க!

பிரதமருக்கு #வைகோ கோரிக்கை

இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கு, ம.தி.மு.க. பொதுச்
செயலாளர் வைகோ அவர்கள், இன்று (6.11.2006) ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதன் விவரம் வருமாறு:

அஞ்சலட்டை அனுப்புவோம்..

கூடங்குளம் அணு உலை குறித்த விவரங்களை கூடங்குளம் அணுமின்
 நிலையம் இயக்குனரிடம் தமிழக மக்கள் அனைவரும் கேட்க வேண்டும் என்று அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தை நடத்தி , இடந்தகரையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் போரட்டத்தை முன் எடுக்கும் திரு.உதயகுமார் கோரிக்கை வைத்துள்ளார் அவர் வைத்த கோரிக்கை விவரம் ...


தமிழ்ச் சொந்தங்களே! அஞ்சலட்டை ஒன்றை  கீழ்க்காணுமாறு எழுதி அனுப்புவீர்களா, தயவு செய்து!?

நாடு கடத்தக் கூடாது -வைகோ கடிதம்

மூன்று ஈழத்தமிழர்களை நாடு கடத்த உத்தரவு! 
தடுக்கக் கோரி, பிரதமர், உள்துறை அமைச்சருக்கு #வைகோ கடிதம்!

தமிழகத்தில் தஞ்சம் அடைந்து, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகள் முகாம்களில் வசித்து வருகின்ற, ஈழ நேரு, செந்தூரன், இத்தாலிய ராஜன் (எ) சுந்தர்ராஜன் ஆகிய மூன்று ஈழத்தமிழர்களை, இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டு உள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளாக, இத்தகைய நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டது இல்லை.

உ.பா.ச மக்களுக்கா? நிறுவனங்களுக்கா?

உணவுப் பாதுகாப்பு அவசர சட்டம்;

மக்களுக்கா? வர்த்தக கார்பரேட் நிறுவனங்களுக்கா?

என் பெயரே “சைக்கிள்” சித்தார்த்தன்.நான் சைக்கிளிலேயே சென்னையை வலம் வந்ததால் எனது தோழர்கள், நண்பர்கள் எனக்கு சூட்டிய பட்டம் இந்த
“சைக்கிள்”. சமீபத்தில்தான் 25 ஆண்டு பழசான எனது பிரியமான ஹெர்குலிஸ்
சைக்கிளை எவரோ “தள்ளிக்” கொண்டு போய்விட்டார்கள். அன்றைய நாளில்
நான் அடைந்த துக்கம் எனக்குத்தான் தெரியும்.

நல்லவேளை. நான் 25 ஆண்டுகளாக சைக்கிள் வைத்திருந்தது திட்டக்கமிஷ னுக்குத் தெரியாது. தெரிந்து இருந்தால் எனது குடும்பத்தை வறுமைக் கோட் டிற்கு கீழானவர் என்கிற தகுதியிலிருந்து “பொதுவானவர்” பட்டியலில் சேர்த்து எமது குடும்ப பொதுவிநியோக அட்டையைப் பறித்து இருப்பார்கள்.

முன்னோர் மொழியில் மதுவிலக்கு!

“மதுவை ஒரு தட்டிலும் மற்ற பாவங்களை எல்லாம் ஒரு தட்டிலும்  வைத் தால் சரிசமானமாய் இருக்கும்.குடிவெறியைவிடக் கொடிதான பாவம் எதுவும் இதற்கு முன்னும் இருந்த தில்லை; இனிமேலும் இருக்கப் போவது இல்லை” என்று சாணக்கியர் கூறுவார்.

“மக்களிடையே நன்னடத்தையும், கற்பும் நிலவ வேண்டுமாயின் மதுவை
விலக்கியே ஆக வேண்டும்.இல்லாவிடில் உலகம் முழுவதிலும் சத்திய தர்மங் கள் இல்லாமல் போகும்;பொறுப்பு உணர்ச்சியும் போய்விடும்” என்பார் பீஷ்மர்.

Monday, August 19, 2013

நாமக்கல் மாவட்ட நிதி அளிப்புக் கூட்டம்

மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் குரல், நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்!

திருச்செங்கோட்டில் கழக வளர்ச்சி நிதி - தேர்தல் நிதி அளிப்புக் கூட்டத்தில் #வைகோ

நாமக்கல் மாவட்டக் கழகம் சார்பில், 12.8.2013 அன்று திருச்செங்கோட்டில், நிதி அளிப்புக் கூட்டம் நடைபெற்றது.நிதியினைப்பெற்றுக் கொண்டு கழகப் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரையில் இருந்து....

சிலப்பதிகாரத்தைத் தந்த இளங்கோ அடிகளால் போற்றப்பட்ட, காவிரிப்பூம்
பட்டினத்துக் கண்ணகிப் பெருந்தேவி,குன்றக் குரவர்கள் சந்திக்க, விண்ணுக் குச் செல்வதற்கு விடை கொடுத்து அனுப்பிய இடம் என்று, தமிழகத்தின் வர லாறும், இலக்கியங்களும் போற்றுகின்ற, ‘திருச்செங்குன்றம்’ என அழைக்கப் படும்,திருச்செங்கோடு திருநகரில், நாமக்கல் மாவட்டக் கழகத்தின் சார்பில் தேர்தல் நிதி, கழக வளர்ச்சி நிதி வழங்குகின்ற இனிய நிகழ்வில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வு அடைகிறேன்.

இதயத்தில் விழுந்த இடி

இதயத்தில் விழுந்த இடி அப்துல்லாஹ் பெரியார்தாசன் மறைவு

#வைகோ இரங்கல்

திராவிட இயக்கத்தின் கருத்துக் களஞ்சியக் கருவூலமான, என் ஆருயிர்ச் சகோதரர் அப்துல்லாஹ் பெரியார்தாசன், என்னையும், இயக்கத்தோழர் களை யும் கண்ணீரில் துடிக்க வைத்து மறைந்து விட்டார்.

தந்தை பெரியார் அவர்களை, மாணவப் பருவத்தில் தலைவராக ஏற்றுக் கொண்டு, சுயமரியாதை வீரராக, பகுத்தறிவு நெறியை மக்களிடம் பரப்ப, எழுத்தாலும், பேச்சாலும், அவர் ஆற்றிய பணிகள், ஈடு இணையற்றவை ஆகும்.

மெட்ராஸ் கஃபே தடை செய்க

மெட்ராஸ் கஃபே திரைப்படத்தைத் தடை செய்க;
திரை அரங்குகளில் முற்றுகை!

#வைகோ அறிக்கை!

தமிழ் இனத்துக்கு மிகவும் துன்பமான காலம் நம்மைக் கடந்து செல்லும் நாள் கள். ஒன்றன்பின் ஒன்றாக, தமிழர் நெஞ்சில் சூட்டுக்கோலைத் திணிக்கும் நிகழ்வுகள் தொடர்கின்றன. நினைத்தாலே மனதை நடுங்கச் செய்யும் படு கொலை களை, குறிப்பாக இலட்சக்கணக்கான யூதர்களை,கொடூரமாகஅழித்த மாபாதகச் செயலை, ஜெர்மானிய ஹிட்லர் நாஜிப்படைகளைக் கொண்டு நடத்தியதற்குப் பின்னர், மனிதப் பேரழிவுகளுள் ஒன்றாக, ஈழத்தமிழர் படு கொலை யை, சிங்களக் கொடியவன் ராஜபக்சே அரசு செய்தது.

Sunday, August 18, 2013

புலித்தடம் தேடி விழா பகுதி -2

ஒருவனைக் கொன்ற நைஜீரியா நீக்கம்;

ஒரு இலட்சம் பேரைக் கொன்றவனுக்குத் தலைமைப்பதவி

இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல; எத்தனையெத்தனை கொடுமைகள்?

களத்தில் இருந்த ஒரு விடுதலைப் போராளி சொல்லுகிறார்: மே 18. கடைசிக் கட்டம். அப்பொழுது இசைப் பிரியாவைப் பார்த்தேன். என்னுடைய மணிப் பொறி பழுது அடைந்து விட்டது. இசைப்பிரியாவிடம் கேட்டேன். ‘நான் தேடி எடுத்துக் கொடுக்கிறேன் அண்ணா’ என்று சொன்னாள். மறுநாள் போய்க் கேட் டேன். ‘கிடைக்கல அண்ணா’ என்று சொன்னாள். அவலைப் பிரட்டி எனக்குக் கொடுத்தாள். ‘நிலைமை ரொம்ப மோசமாயிட்டிருக்கே; சனம் செத்துக்கிட்டே இருக்கே; நாம இங்கேயிருந்து போயிரலாமே?’ என்கிற போது, ‘அவர் வரட்டும் நான் அதைப் பற்றி யோசிக்கிறேன்’ என்று சொன்னாள்.

திருவாசகம் சிம்ஃபொனி விழா-வைகோ-பகுதி 6

அவன்தான் தமிழன்

இந்த நிகழ்ச்சிகள் நடக்கின்றபோது ஒரு நடனக் காட்சியை அமைத்து இருந் தார்கள். இந்த நடனக் காட்சி என்பது பாரதியார் சொல்லுவார். ‘எங்களிடமா இசை இல்லை? எங்கள் சுண்ணம் இடிக்கிற பெண்களின் இசைக்கு நிகர் உல கில் எங்கே இருக்கிறது? என்று சொன்னார் பாரதியார். அதுதான் திருப்பொற் சுண்ணம். அங்கே சுண்ணம் இடிக்கிறார்கள். சுண்ணம் இடிக்கிறபோது, உலக் கையை எடுத்து இங்கே நங்கைகள் இடித்துப் பாடினார்கள். பொற்சுண்ணம் என்பது அதுதான். உலக்கையைக் குத்துகிறபோது, சத்தத்தோடு அந்தப் பாடல் வெளி வரும்.

“முத்தணி கொங்கைகள் ஆட ஆட
மொய்குழல் வண்டினம் ஆட ஆடச்
சித்தஞ் சிவனெடும் ஆட ஆடச்
செங்கயற் கண்பனி ஆட ஆடப்
பித்தெம் பிரானொடும் ஆட ஆடப்
பிறவி பிறரொடும் ஆட ஆட
அத்தன் கருணை யொடு டாட ஆட
ஆடப் பொற் சுண்ணம் இடித்துநாமே”

திருச்சியில் திரண்ட உணர்வாளர்கள்!

தமிழ் இனப்படுகொலையாளன் ராஜபக்சேவுக்குத் துணைநின்ற
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திருச்சியில் கருப்புக்கொடி!
#வைகோ தலைமையில் திரண்ட இன உணர்வாளர்கள்!

மலைக்கோட்டை மாநகராம் திருச்சியில் பாய்ந்தோடும் காவிரி ஆற்றின் பெருமையைப் பாடாத கவிஞர்கள் இல்லை.சோழநாடு சோறுடைத்து என்னும் பெருமைக்கு தாயாக நின்று சோழ வளநாட்டைக் காத்து வருகின்றவள், வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவிரி அன்னை.

இந்தக் காவிரி ஆற்றில் ஒரு துளி நீரும் இல்லாது வறண்டு பாலையாய் காட்சி
தந்ததைக் கண்ணால் பார்க்க இயலாமல் தவித்து வந்தோம். பெருக்கெடுத்து
வரும் காவிரியை வழிமறித்து இரண்டாம் நூற்றாண்டுகளிலேயே கல்லணை யை எழுப்பி, வேளாண் பெருங்குடி மக்களைக் காத்தவன் கரிகாலன்.

ஜனநாயகம் வென்றது!

சங்கொலி தலையங்கம் 

நீலத்திரைகடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி எல்லையிலி ருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத் தில் வெற்றிக் கணக்கை தொடங்கி இருக்கின்றது. ஆம்! ஆளும் கட்சியினரின் அதிகார பலம், பண பலம், படை பலம் அனைத்தையும் புறங்கண்டு கன்னியா குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிக் கனியைப் பறித்துள்ளது. கழகத்தின் சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினரும், குருந்தன்கோடு ஒன்றியக் கழகச் செயலாளருமான வழக்கறிஞர் சம்பத் சந்திரா அவர்கள் ஆகஸ்டு 8 ஆம் தேதி, குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராக பதவி ஏற்றார்.

Saturday, August 17, 2013

புலித்தடம் தேடி விழா பகுதி -1

கொழும்பில் காமன்வெல்த் மாநாடா?
கொலைகளுக்கெல்லாம் முத்தாய்ப்பா?
கொலைகாரனுக்கு மகுடம் சூட்டுவதைத் தடுத்து நிறுத்துவோம்! #வைகோ 

புலித்தடம் தேடி..... எனும் மகா.தமிழ்ப் பிரபாகரனின் நூல் அறிமுக நிகழ்வு, 10.08.2013 அன்று, தாயகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கழகப் பொதுச் செய லாளர் வைகோ அவர்கள் பங்கேற்று ஆற்றிய உரையில்இருந்து....

மகா. தமிழ்ப் பிரபாகரனை மனதாரப் பாராட்டுகிறேன்

காலப் புயலால் சாய்க்க முடியாத,ஊழிப் பெருவெள்ளத்தாலும் அழிக்க முடி யாத, காலக் கடைத்தீயே எழுந்தாலும் கருக்கிட முடியாத, மனித குல வரலாற் றில் பதிந்து போன புலித்தடத்தைத் தேடி, உயிரைத் துச்சமாக மதித்து, தமிழர்
களின் மரண பூமியாக்கப்பட்ட இலங்கைத் தீவுக்குச் சென்று ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் கொடி உயர்த்திக் கொற்றம் அமைத்து,மகோன்னதமாக வாழ்ந் து வந்த ஈழத்தமிழர் தாயகத்தின் இரத்தம் உறைந்து போன பூமியில், உடைந்த
நெஞ்சோடு உலவி,தன் இருதயத்தின் இரணத்தை எழுத்தாக ஜூனியர் விகடன் இதழில் தொடரும் கட்டுரைகளாக ஆக்கித் தந்து, அதை விகடன் பிரசுரத்தார் புலித்தடம் தேடி என்ற நூலாகப் பதிப்பித்துக் கொடுத்த பின்னர், அகிலமெங் கும் அணு உலையை எதிர்க்கின்றவர்களுக்கு ஊக்க உந்துதல் களமாக இருக் கின்ற இடிந்தகரையில் அந்த நூலை வெளியிட்டு, அதுகுறித்த கருத்துகளைப் பதிவு செய்கின்ற நிகழ்வாக நடைபெற்றுக் கொண்டு இருக்கக் கூடிய இந்த மன்றத்தில், இந்த நூலை வழங்கிய, அன்புக்குரிய இளவல் மகா.தமிழ்ப் பிரபா கரன் அவர்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

பேரறிஞரும் பெருந்தலைவரும்

பேரறிஞர் அண்ணாவும், பெருந்தலைவர் காமராசரும்!

“பொன்னில்லான் பொருளில்லான்
புகழின்றி வசையில்லான்
இல்லாளும் இல்லான்
இல்லையென்னும் ஏக்கமில்லான்

என்று பண்ணரசன் கண்ணதாசனால் பாடப் பெற்றவர் பெருந்தலைவர் காமராசர்.

சாத்தூர் சட்டமன்ற உறுப்பினராக,விருதுநகர் நகர சபை உறுப்பினராக, நகர் மன்றத் தலைவராக, இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக, ஸ்ரீவில் லிப்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினராக, தமிழக முதலமைச்சராக,குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினராக,திரும்பவும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினராக,இரண் டாவதாக,மூன்றாவதாக தமிழகத்தின் முதலமைச் சராகவும், நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் பார்லிமெண்டரி போர்டு உறுப்பினராகவும், அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்தவர்
பெருந்தலைவர் காமராசர்.

மதிமுக மாணவர் அணி தீர்மானங்கள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்  
மாநில, மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில, மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்17.08.2013 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது.
கழக மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இராசேந்திரன் அவர்கள் தலைமை வகித்தார். இதில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

Friday, August 16, 2013

காதலும் வீரமும் அகமும் புறமும்!

காதல் ஒழிக

ரோமை தலைநகராகக் கொண்ட இத்தாலி நாட்டிற்கு சிந்து நதியும் கங்கை நதி யும் பாய்ந்தோடும் ஒரு கலாச்சார நாட்டில் இருபதாம் நூற்றாண்டின் அதிகார பீடத்தை அலங்கரித்த செல்வச்செருக்குள்ள வீட்டுப் பிள்ளை மேல்படிப்பிற் காக இத்தாலி செல்கிறான்.ஆகாயத்தில் எல்லையில்லாமல்பறந்திட வேண் டும் என்று விமானியாக பயிற்சி எடுத்தவர் இத்தாலி நாட்டின்ஓட்டலில் அங் கிருந்த பணிப் பெண்ணிடம் இதயத்தைப் பறிகொடுக் கிறான். காதல் கனிந்து திருமணம் கை கூடியது.

இத்தாலி பணிப்பெண் அவன் நாட்டிற்கு மணப் பெண்ணாக வந்த அதிர்ஷ்டம்
ஆட்சி பீடத்திலிருந்த அவனது அன்னைக்கு தொலைநோக்கு சமூக பார்வை ஆளுமை சர்வதேச நாடுகளின் மதிக்கத்தக்க தலைவராக உயர்ந்து இருந்தார். தீவு நாட்டில் உரிமை மறுக்கப்படும் தொன்மையான இனமக்களுக்கு உதவு வதற்கு அரசியல் நடவடிக்கை பயனற்றுப் போனதால் அவ்வின இளைஞர் களைத் தேர்வு செய்து போர் யுக்திகளும் ஆயுதப் பயிற்சியும் தந்து இராணுவ
உதவிகளையும் செய்து அவர்களின் இழந்த உரிமைகளைப் பெறுகின்ற சூழலை உருவாக்கித் தந்தார்.

நாட்டின் வளர்ச்சியை நாடாத காங்கிரஸ்

நாட்டின் வளர்ச்சியை நாடாத காங்கிரஸ் ஆட்சி!

இந்திய வரலாற்றில் அதிகமான ஊழலைச் செய்து சாதனை படைத்த அரசு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாகும். 2ஜி,
ஆதர்ஷ், காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகள், நிலக்கரி ஒதுக்கீடு,
ஹெலிகாப்டர் பேரம் என பல ஊழல்களைப் புரிந்து, மக்கள் பணம் கொள்ளை போவதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசே காரணமாகும்.

ஊழலில் வளர்ச்சியைக் கண்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, நாட்டின்
பொருளாதார வளர்ச்சியில் அக்கறை காட்டவே இல்லை. நாட்டின் நிதிப்பற் றாக்குறை 4.89 இலட்சம் கோடி ரூபாயாக உள்ளது. பணவீக்கமோ ஏழு சதத் தைத் தொடுகின்றது. உணவுப் பொருட்களின் விலை உயர்வோ ஆறு சதம். ரூபாயின் டாலருக்கு நிகரான மதிப்பு 60 ரூபாயைத் தொடும் நிலையில் மதிப்பு இழந்துள்ளது என்கின்றது ஒரு செய்தி.

பட்டினிப்போர் நடத்தியவர்களைக் கைது செய்வதா?

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, 
பட்டினிப்போர் நடத்தியவர்களைக் கைது செய்வதா?

#வைகோ கண்டனம்

கோவை அருகே வெள்ளலூர் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள கோவை மாநகராட்சி குப்பைக் கிடங்கினால் அப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.

தினமும் 800 டன் குப்பைகள் இந்தக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றது. மக் கள் அதிகமாக (சுமார் 70,000 மக்கள்) வசிக்கின்ற பகுதிகளை ஒட்டி இந்த குப் பைக் கிடங்கு அமைக்கப்பட்டபோதே அங்குள்ள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த னர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமலும், நகர்ப்புற வளர்ச் சித்துறையின் கருத்துகளைக் கேட்காமலும், சுற்றுசூழல் விதிகளுக்குப் புறம் பாக வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டது.

Thursday, August 15, 2013

திருவாசகம் சிம்ஃபொனி விழா-வைகோ-பகுதி 5

பிட்டுக்கு மண் சுமந்த இறைவன்

இரவு நேரத்தில் அந்தக் குதிரைகள் மீண்டும் நரிகளாக மாறித் தளைகளை அறுத்துக் கொண்டு அனைத்தையும் கடித்துப் போட்டுவிட்டு ஓடுகின்றன. ஆத்திரம் அடைந்த மன்னன் வாதவூரரைச் சிறையில் பூட்டுகிறான். சிறையில் கொடுமைகள் நடக்கின்றன. இறைவன் மேலும் திருவிளையாடல் செய் கிறான். வைகையில் தண்ணீர் பெருக்கு எடுக்கிறது. காலங்கெட்ட காலத்தில் வைகையில் தண்ணீரா? கரை உடைத்துப் பாய்கிறதே வெள்ளம் என்று கவலைப்பட்ட மன்னன் கரையை அடைப்பதற்கு வீட்டுக்கு ஒவ்வொருவராக வந்து பணியாற்றக் கட்டளை இடுகின்றான்.

நேர்மையின் இமயம்! பகுதி 2

சிறாவயலில் குருகுலத்தில் பணி ஆற்றுகிறார். அங்கிருந்து நாச்சியார் கோவி லுக்கும், கோட்டையூருக்கும் செல்கிறார்.

1927 ஆம் ஆண்டு. ஏறத்தாழ 21 ஆவது வயது. அங்கேதான் காந்தியாரைச் சந்திக்
கிறார். காந்தியார் ஜீவானந்தத்திடம் பேசுகிறபோது, ‘என்ன சொத்து? என்று
கேட்கிறார். ‘இந்தத் தாய் நாடு தான் என்னுடைய சொத்து’ என்றார் ஜீவா.அதற் குக் காந்தி, ‘இல்லை யில்லை; உன்னைப் போன்றவர்கள்தான் இந்த நாட்டுக் குச் சொத்து’ என்றார்.

அப்படிப்பட்ட தலைவன் பிறந்த மண்ணிலே, அவரது பிறந்த நாள் விழாவில் பேசுவதைக் கடமையாகக் கருதிப் பேசுகிறேன். ‘பூதப்பாண்டி’ என்கிற இந்த ஊருக்குப் பெருமையும்,புகழும் தேடித்தந்த மாமனிதன் ஜீவா. தன் வாழ்நாள் முழுமையும் தன்னலம் அற்று, இலட்சியத்துக்காகவே வாழ்ந்து மனிதநேயத் தின் சிகரமாக வாழ்ந்து,மண்ணின் விடுதலைக்கு, மொழியின் விடுதலைக்கு, இனத்தின் விடுதலைக்கு,ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கு, சமூக நீதிக்குப் பாடுபட்ட உணர்வு காரணமாகத்தான் தந்தை பெரியாரை இவர் கவர்ந்தார். தந்தை பெரியார் இவரைக் கவர்ந்தார்.

மணல் கொள்ளை போவதைத் தடுப்பீர்!

கடற்கரை மணல் செல்வம் கொள்ளை போவதைத் தடுப்பீர்! 

#வைகோ கோரிக்கை

தென்தமிழகத்தின் கடலோரங்களில் இருக்கின்ற, கனிம வளம் பொருந்திய கடற்கரை மணல், அதன் கெட்டித் தன்மையால், கடலோரப் பகுதிகளில் ஒரு தடுப்பு அணையாக, கடல் நீர் உட்புகாத வண்ணம் அப்பகுதி மக்களைக் காத்து வந்தது.

அந்த மணலை அள்ளுவதற்கு அரசு அனுமதி அளித்தது. ஆனால், அனுமதிக் கப்பட்ட அளவைவிட முறைகேடாக, தங்கு தடையின்றி மணல் அள்ளியதைத் தொடர்ந்து, தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பதற்காக அந்தப் பகுதி மக்கள் போராடி வருகிறார்கள்.

விடுதலை நாள் சிந்தனைகள்

நாட்டு விடுதலைக்கு முன்பே விடுதலை பெற்ற இந்தியா பற்றி கனவு கண்டு, “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று” கூத்தாடி மகிழ்ச்சிக் கடலில் மிதந்தார் பாரதியார்!

ஆனால், இந்த நிலையில் இருந்து ராஜாஜி முற்றிலும் மாறுபட்டவராக இருந் தார். அப்போது வேலூர் சிறையில் விடுதலைப்போரில் ஈடுபட்டதற்காக தண் டனை அனுபவித்துக் கொண்டு இருந்தார். “சுயராஜ்யம் கிடைத்ததும், அது சிறந்த அரசையும், நிறைந்த மகிழ்ச்சியையும் உடனே மக்களுக்குத் தந்து விடாது. தேர்தல் ஒழுங்கீனம், ஊழல், அநீதி, பணபலத்தின் கொடுங் கோன்மை, நிர்வாகத் திறமையின்மை ஆகியவை மூலம் மக்கள் வாழ்க்கை நரகமாகும். முன்பு இருந்த வெள்ளையர் ஆட்சியே மேலானது என்று மக்கள் நினைக்கும் நிலை வரும்.

Wednesday, August 14, 2013

நேர்மையின் இமயம்! பகுதி 1

தோழர் ஜீவா நேர்மையின் இமயம்!



ஜீவா பிறந்த நாள் விழாவில் #வைகோ
பொது உடைமை இயக்கத் தலைவர் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் 103ஆம் பிறந்த நாள் விழா 21.8.2009 அன்று நாகர்கோவில் பூதப்பாண்டியில் நடை பெற் றது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பூதப்பாண்டிக் கிளை ஆகியவற்றின் சார் பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு எழுத்தாளர் பொன்னீலன் தலைமை வகித்தார். கழகப் பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார். அவரது உரை...

‘ஜீவாவின் பிறந்த நாள் விழா பூதப்பாண்டியில் நடைபெற இருக்கிறது; அதில் உரையாற்றுவதற்கு அழைக்கிறார்கள் கலை இலக்கியப் பெருமன்றத்தார்’ என்று என்னுடைய அருமைத்தம்பி பொறியாளர் இலக்குமணன் அவர்கள் தொலைபேசியில் தெரிவித்த மறுநிமிடத்தில், ‘கட்டாயம் நான் வருகிறேன்,

வெற்றிக்கு நுழைவாயில்

வெற்றிக்கு நுழைவாயில் அமைக்கும் விருதுநகர் மாநாட்டில் இலட்சக் கணக்கில் திரளுவீர்!

தூத்துக்குடி நிதி அளிப்பு விழாவில் #வைகோ அழைப்பு

தூத்துக்குடி மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், கழக வளர்ச்சி நிதி-தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி 1.8.2013 அன்று தூத்துக்குடியில், துணைப் பொதுச்செய லாளர் நசரேத்துரை தலைமையில் நடைபெற்றது. நிதியினைப் பெற்றுக் கொண்டு கழகப் பொதுச்செயலாளர் வைகோ உரை ஆற்றினார்.அவரது உரை யில் இருந்து....

தூத்துக்குடி மாவட்டம், பெரும் நிதியை வழங்கி இருக்கின்றது. எத்தனையோ சோதனைகளுக்கு நடுவிலும், நமது மாவட்டச் செயலாளர், செயல் மாமணி, ஆருயிர் இளவல் ஜோயல் அவர்கள் சாதித்துக் காட்டி இருக்கின்றார். உவரி யில் தொடங்கி, நான்மாடக் கூடல் வரையிலும், மதுவின் கோரப்பிடியில்
இருந்து தமிழகத்தை விடுவிப்பதற்கு நாம் மேற்கொண்ட நடைபயணப் பிரச்சா ரத்தை, ஆறு நாள்கள் வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.

விதிகளை மீறி சுங்கச்சாவடி

திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை அருகே விதிமுறை களை மீறி, வாகனங்களுக்கு சுங்கவரி வசூல் செய்வதற்கு தடைவிதிக்க கோரிய மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட பொதுநலவழக்கு   இறுதி விசாரணைக்கு வருகிறது. இதுதொடர்பாக மதிமுக மாவட்ட செயலா ளர் வழக்கறிஞர் ஜோயல் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 

தூத்துக்குடியையும், நெல்லையையும் இணைக்கும் வகையில் இரு நகரங் களுக்கு இடையே நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு வழிச்சாலைப் பணிகள் தொடர்பான தேசிய நெடுஞ்சாலைத் துறையின் நிர்வா கக்குழு கூட்டம் கடந்த 20-09-2012ல் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில், தூத்துக்குடி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் குமாரகிரி, கூட்டுடன் பகுதியில் சுங்கச்சாவடி மையம் அமைத்து வரிவசூல் செய்துகொள்ள அனுமதி அளித்து அதற்கான முடிவு எடுக்கப்பட்டது. 

Tuesday, August 13, 2013

என் உயிர் உள்ள மட்டும்...!

ஈழத்தமிழர்களுக்காகப் பொங்கிய ராம் ஜெத்மலானி!

ஈழப்பிரச்சனை டெல்லி மற்றும் வடமாநிலங்களிலும் இப்போது எதிரொலிக் கிறது. ஈழப்போரின்போது தமிழர்கள் பட்ட அவலம் மற்றும் சேனல்4 தொலைக் காட்சி வெளியிட்ட காட்சிகள் அனைத்தையும் வைத்து #வைகோ தொகுத்த சி.டி.இப்போது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெளி வந்துள்ளன.

அனைத்து மாநிலத் தலைநகரங் களிலும் இவற்றை வெளியிடும் காரியத்தை வைகோ தொடங்கி உள்ளார். இதற்கான விழா கடந்த 26 ஆம் தேதி டெல்லியில் நடந்தது.அன்றுதான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் என்பதால், உணர்ச்சி மயமாக இருந்தது அரங்கம்.

தொடக்க கால காங்கிரசும், மது ஒழிப்பும்!

தொடக்க கால காங்கிரசும், மது ஒழிப்பும்!

(பாரதியின் மொழிபெயர்ப்பு)

ஆங்கிலேயர்களுக்கு எதிராக உருவான இயக்கத்தில் தொடக்க காலத்தில்
ஏ.ஓ.ஹ்யூம், வெட்டர் பர்ன், ஜார்ஜ் யூல்,ஷெர்லி நார்ட்டன் போன்ற ஆங்கிலே யர்களும் முக்கிய பங்கு வைத்தனர்.

தொடக்க காலத்தில் “பாரத ஜாதீய ஐக்ய சங்கம்” என்று பெயர் இருந்தது. இந்த
சங்கத்தின் கூட்டத்திற்கு வரும் பிரதிநிதி களுக்கு ஆங்கிலம் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும். இந்த சங்கம் முதன் முதலாக 1885 இல் பூனா நகரத் தில் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டது. ஆனால், அந்த நேரத்தில்
வாந்தி, பேதியுடன் பிளேக் நோய் தீவிரமாக இருந்ததால் பம்பாயில் நடத்துவ தாக தீர்மானம் செய்யப்பட்டது.

அணு உலையில் உற்பத்தியை தொடங்க கூடாது

#மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அணுக்கதிர் வீச்சு என்ற அபாய வளையத்திற்குள் உலகமே சிக்கி இருக்கிறது. உலகில் பல நாடுகள் அணு உலைகளை மூட முடியாமல் அதன் ஆயுள் காலம் 40 ஆண்டுகள் தான் என நிர்ணயித்து இருந்தாலும் பத்து, பத்து ஆண்டுகளாக நீட்டித்துக்கொண்டே செல்கின்றன. தற்போது உலகம் முழுவதும் 440 அணு உலைகள் உள்ளன.

திருச்செங்கோட்டில் வைகோ

திருச்செங்கோட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியது:

சில நேரங்களில் எதிர்பார்ப்பது நடப்பதில்லை. சில சமயங்களில் எதிர்பாரா தது நடந்து விடுகிறது. இவ்வளவு நிதி நான் எதிர்பாராதது. பொதுமக்களிடம் இருந்து திரட்டப்பட்ட இந்த நிதியை நேர்மைக்கும், பொது வாழ்வில் தூய்மைக் கும் நமக்குக் கிடைத்த அங்கீகாரம் என்றே கருதலாம். 

Monday, August 12, 2013

தமிழக அரசுக்குப் புதிய வருவாய் ?

தமிழக அரசுக்குப் புதிய வருவாய் வழி;

சென்னை எழும்பூர் அரசு ஆவணக் காப்பக இயக்குநரின் அரிய யோசனை!

அனைத்து அரசு அலுவலகங்களிலும் பின்பற்றப்படுமா?

சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்துக்கு எதிரே அமைந்து உள்ள சிவப்புக் கட்டடம், தமிழ்நாடு அரசின் ஆவணக் காப்பகம் ஆகும்.

ஆங்கிலேயர்கள் காலத்தில், அரசு ஆவணங்களைப் பாதுகாப்பதற்காகக் கட் டப்பட்டது. இராபர்ட் கிளைவ் காலத்திய அரசு நடவடிக்கைகள் தொடங்கி, இன்று வரையிலான மிக முக்கியமான கடிதங்கள், ஆவணங்கள் அனைத்தும் இங்கு சேகரித்து வைக்கப்பட்டு உள்ளன.

காதல்: புரியாதவர்களுக்கு பொழுதுபோக்கு!

தாஜ்மகால்

முகலாய மன்னர் ஷாஜகானின் அந்தப்புரத்தை அலங்கரித்த மூன்றாவது மனைவி தான் மும்தாஜ்.இவர் 14 பிள்ளைகளுக்கு தாய். 14-ஆவதாக பெண் பிள் ளையின் பிரசவத்தின் போது நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்தார். மும் தாஜ் மீது வைத்திருந்த அன்பின் காரணமாக ஷாஜகானின் கறுத்த தலைமுடி முழு
வெள்ளை நிறத்திற்கு மாறியதாக கூறுவார்கள்.

ஷாஜகானின் மனம் கவர்ந்த மும்தாஜின் மரணத்திற்குப் பின் அவர் நினை வாக தாஜ்மகால் கட்ட முயற்சிகள் மேற்கொண்டு, புகழ்பெற்ற பொறியாளரை அழைத்து, தாஜ் மகாலுக்கான வரைபடம் தயாரிக்கச் சொல்கின்றார். தன் திறமைகள் அனைத்தையும் பயன்படுத்தி எவ்வளவோ சிறப்பான வரைபடங் கள் வரைந்தும் மன்னர் ஷாஜகான் திருப்தி பெறாமல் கோபமடைகிறார். இதை
ஒவ்வொரு நாளும் பொறியாளர் தன் காதல் மனைவியிடம் சொல்லி வருத்தப் படுகின்றார். பொறியாளரின் மனைவி ஆறுதல் கூறுகிறாள்.

சிறுபான்மை மக்களுக்கு அரண்

எந்த நிலையிலும், சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருப்போம்!  #வைகோ

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், புனித ரமலான்( இஃப்தார் ) நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, 3.8.2013 அன்று சென்னையில், கழக அமைப்புச் செய லாளர் சீமா பஷீர் தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.அவரது உரை யில் இருந்து....

தமிழர் பிரச்னைகளில் மதிமுக

தமிழர் பிரச்னைகள் தொடர்பாக மதிமுக போராடுகிறது என்றார் பொதுச் செயலாளர்  #வைகோ.

பெரம்பலூரில் பெரம்பலூர் -அரியலூர் மாவட்ட மதிமுக சார்பில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

திமுகவை எதிர்த்து தொண்டர்களால் உருவாக்கப்பட்ட மதிமுக அண்ணாவின் கொள்கை வழியில் நடத்தப்படுகிறது. அரசியலில் நேர்மை, நாணயம்,ஒழுக்கம் உள்ள ஒரே கட்சி மதிமுகதான். நேர்மையாக உழைத்து கறைபடாத கரத்திற் குச் சொந்தக்காரர்களாக விளங்கி வருகிறோம். மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்டு கட்சி நடத்தி வந்தவர்கள் எல்லாம், காணாமல் போகும் நிலை உருவாகி வருகிறது. ஆனால் யாராலும் எங்கள் கட்சியை அழிக்க முடியாது. தற்போது மக்களிடையே மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Sunday, August 11, 2013

முல்லைப் பெரியாறு வழக்கில்

முல்லைப் பெரியாறு வழக்கில் உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்வி!

சங்கொலி தலையங்கம் 
‘தினத்தந்தி’ நாளிதழில் வெளிவரும் கன்னித்தீவு-சிந்துபாத் கதைகூட முடிந்து விடும். ஆனால், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் முடியாது போல் தெரிகிறது. உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மீண் டும் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகளாலும், கேரள மாநில அரசு
எடுத்து வைக்கும் புதிய புதிய ஏற்க முடியாத காரணங்களாலும் தமிழ்நாட்டின்
உரிமையை நிலைநாட்ட முடியாமல், காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது.

‘புலித்தடம் தேடி‘

‘புலித்தடம் தேடி‘ ரத்த ஈழத்தில் 25 நாட்கள் என்று மகா.தமிழ்ப் பிரபாகரன் எழுதிய இலங்கைப் பயணத்தை பற்றிய புத்தகத்தின் அறிமுக கூட்டம் கடந்த சனிக்கிழமை(ஆகஸ்ட் 10) மாலை 6 மணிக்கு மதிமுக தலைமை அலுவலக மான தாயகத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் வைகோ, ஓவியர்.புகழேந்தி, இயக்குநர்.வ.கௌதமன்,திருமுருகன் காந்தி ஆகியோர் பங்கேற்று புத்தகத்தை பற்றி கருத்துரையாற்றினர்.

இஸ்லாம் மார்க்கத்தில் மது ஒழிப்பு!

“திராட்சை மதுவின் ஒவ்வொரு துளியிலும் பிசாசு குடி இருக்கின்றது”
-குர் ஆன்

நபிகள் நாயகம் அவர்கள் மது விசயத்தில்,

மதுவைப் பிழிபவன்; மதுவைத் தயாரிப்பவன்; மதுவைக் குடிப்பவன்;மதுவைக் குடிக்கக் கொடுப்பவன்; மதுவை எடுத்துச் செல்பவன்; மது யாருக்கு எடுத்துச் செல்லப்படுகிறதோ அவன்;மதுவை விற்பவன்;மதுவை வாங்குபவன்;மதுவை அன்பளிப்பு செய்பவன்; மதுவின் மூலம் வருவாயை சாப்பிடுபவன் ஆகிய பத்து நபர்களையும் சபித்தார். - நூல் : திர்மிதீ

Saturday, August 10, 2013

காதல் மரணிப்பதில்லை!

காதலர்கள் மரணித்தாலும் காதல் மரணிப்பதில்லை!

முன்னயிட்ட தீ முப்புறத்திலே
பின்னயிட்ட தீ தென்னிலங்கையிலே
அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே
நானும் இட்ட தீ மூள்க மூள்கவே

என்று நாட்டுரிமை காக்கும் போர்க் களத்தில், இந்திய விடுதலை வேள்வியில் நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க தன்சுவாசத்தை தந்து வெள்ளை ஏகாதிபத்தி யத்தை திகிலுறச் செய்த உலகத்தின் முதல் மனித வெடி குண்டு சுந்தரலிங்கம் (வீரபாண்டிய கட்டபொம்மன்), குயிலி (வேலு நாச்சியார்) தாழ்த்தப்பட்ட பட்டிய லினத்தவர்கள்.

மாற்று சக்தி மறுமலர்ச்சி தி.மு.க.

திருவள்ளூர் மாவட்டக் கழகத்தின் நிதி அளிப்பு நிகழ்ச்சி 19.07.2013 அன்று
சென்னை தாயகத்திலும் நடைபெற்றது.நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலா ளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து....

தமிழகம் முழுவதும் கழகக் கண்மணிகள் நிதி திரட்டுவதற்கான பெரும் ஊக்கத் தையும்,உந்துதலையும் வழங்கியது காஞ்சி மாவட்டம்.மிகக் குறைந்த கால அவகாசமே இருந்தபோதிலும்,நீங்கள் ஜூன் மாதத்திலேயே தொடங்கி வைத் தால், அதை மற்றவர்களும் பின்பற்ற வாய்ப்பாக இருக்குமே என்று மாவட்டச் செயலாளர் ஆருயிர் இளவல் பாலவாக்கம் சோமு அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். சுடர்விடும் இரு விழிகளான, எனது ஆருயிர் இளவல், கழகத்தின்
துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா அவர்களும், காஞ்சி மாவட்டக் கழகச் செயலாளர்,ஆருயிர் இளவல் பாலவாக்கம் சோமு அவர்களும், தலை மைக் கழகம் எண்ணுவதைச் செயல் முடித்துக் காட்டும் ஆற்றலோடு, 1 கோடி யே 5 இலட்சம் ரூபாய் நிதியை வழங்கி, இன்ப அதிர்ச்சியை வழங்கினார்கள். வானத்து மழைத்துளிகளுக்கு நடுவில், தாம்பரம் பொதுக்கூட்டத்தில், அமுதத்
துளிகளாக அந்தத் தொகையை வழங்கினார்கள்.

அணு உலை எதிர்ப்பில் சென்னை

இன்றைய மக்கள் திரள் போராட்ட காட்சி



Friday, August 9, 2013

அறநெறி அண்ணல் பழநியப்பனார்!

தமிழுக்கு, தமிழ் இனத்துக்கு அருந்தொண்டு ஆற்றியவர்

அறநெறி அண்ணல் பழநியப்பனார்!
நூற்றாண்டு விழாவில் #வைகோ புகழாரம்


பழ.நெடுமாறன் அவர்களின் தந்தை அறிநெறியண்ணல் கி.பழநியப்பனார் நூற் றாண்டு விழா 07.07.2013 அன்று மதுரையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் பங் கேற்று, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில்
இருந்து....

உலகப் பொதுமறைத் தொண்டர்,சைவ சமய சேவாமணி, தமிழுக்குச் செய்த தொண்டால், காலத்தால் அழியாது, மானத் தமிழர் நெஞ்சில் வாழுகின்ற, அற நெறி அண்ணல் பழநியப்பனார் அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்வில்,
உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.மாநகர் மதுரை யில், 1924 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த வணிகர் அரங்கத்தில், அறநெறி அண்ணல் புகழ்க்காவியம் படைக்கின்ற விழா என்பதால், இரவு பத்து மணிக்கு
மேலும் அரங்கம் நிரம்பி இருக்கின்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள
வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.

ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவில் வைகோ

பசுமைத் தீர்ப்பு ஆயம் அறிவித்து உள்ளபடி, 
ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவில் பங்கு ஏற்பேன்!

ஆலையை அகற்றுவதற்கான போராட்டம் தொடரும்!

#வைகோ அறிக்கை

தூத்துக்குடியில் சுற்றுச் சூழலை நச்சுமயமாக்கி நாசமாக்கி வருகின்ற, ஸ்டெர் லைட் தாமிர உருக்கு ஆலை தொடர்ந்து செயல்படலாம் என்று, டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயம் இறுதி ஆணையைப் பிறப்பித்து இருக்கின் றது.

சிலம்புச் செல்வரும் - மது ஒழிப்பும்!

தமிழக சுதந்திரப் போராட்ட காலத்தில், வரலாற்றில் முக்கிய பங்கு வகித்தவர் சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்பட்ட ம.பொ.சிவஞானம் அவர்கள். இராஜா ஜி, காமராசர் மற்றும் பல அரசியல் தலைவர்களோடு நெருக்கமான தொடர் பில் இருந்தவர்.நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கிய நூல்களை இயற்றியுள்ளார். வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூல் எழுதியதற்காக 1966 ஆம் ஆண்டு
சாகித்ய அகாடமி விருதுபெற்றவர்.

மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் பெற்றவர். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப் பட்டபோது வடக்கு எல்லைப் போராட்டம், தெற்கு எல்லைப் போராட்டம், தட்சணப் பிரதேச எதிர்ப்பு போன்ற போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்த வர். மேலும் சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வ தற்கான போராட்டம்,இலங்கையில் தமிழ் மொழி உரிமைப் போராட்டம் போன்ற போராட்டங்களிலும் முக்கிய பங்கு இவருக்கு உண்டு.

Thursday, August 8, 2013

கூட்டுறவு வங்கித் தேர்தலில் மதிமுக. வெற்றி

கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தேர்தலில் #மதிமுக வெற்றி

கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராக மறுமலர்ச்சி
தி.மு.க. சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினர் சம்பத் சந்திரா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி இன்று நாகர்கோவிலில், கன்னியகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜேஷை விட 9 வாக்குகள் கூடுதலாகப் பெற்று, மறுமலர்ச்சி தி.மு.க.வைச் சேர்ந்த சம்பத் சந்திரா வெற்றி பெற்றார்.

சம்பத் சந்திரா செய்தியாளர்களிம் கூறியதாவது:

"கன்னியாகுமரியில் தொடங்கிய மறுமலர்ச்சி தி.மு.க.வின் இந்த வெற்றி, கும்மிடிபூண்டி வரை தொடரும்" என்று கூறினார். 

நாம் உறுதியாக வெல்வோம்!

திருப்பூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் கழக வளர்ச்சி நிதி - தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி 22.07.2013 அன்று பல்லடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து....

எங்கெங்கு காணினும் சக்தியடா
தம்பி, ஏழு கடல் அவள் வண்ணமடா
அண்டவெளியினில் கோடி அண்டம்
அத்தாயின் கைப்பந்தென ஓடுதடா
ஒரு கங்குலில் ஏழு முகில் இனமும் வந்து
கர்ஜனை செய்வது கண்டதுண்டோ?

துணை நிற்போம்! தோள்கொடுப்போம்! -பகுதி 3

கூடங்குளம் அணுஉலை இயங்கவிடாமல் தடுத்தால் மட்டுமே

தமிழ் இனம் தப்பிக்க முடியும்!
வைகோவின் போர் முழக்கம்

ஓர் அணுஉலை அது இயங்கும் காலத்திலேயே அணுசக்தித் துறை, அதில் இருந்து ட்ரீட்டியம், அர்கான் 41,அயோடின் 131, சீசியம் 137,ஸ்ட்ரோண்டியம் 90 என 200க்கு மேற்பட்ட கதிர் இயக்கத் துகள்கள் மற்றும் வாயுக்களை ஒரு புகை போக்கி வழியாக வெளியேற்றுகிறது.

இதுதவிர, சில மிதமான கதிர் இயக்கக் கழிவுகள் கடலில் கலக்கப்படுகின்றன.
இதன் மூலம் ஓர் அணுஉலையைச் சுற்றியுள்ள பகுதியில் வசிப்பவர்களுக்கு
ஏராளமான பாதிப்புகள் உண்டாகிறது என்பதனை உலக அளவில் உடல் நல
ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

வாக்குகளை உறுதி செய்யுங்கள்!

நமக்கு ஆதரவான வாக்குகளை உறுதி செய்யுங்கள்!
மருத்துவர் ரொகையா

மாற்று அரசியல் குறித்த கருத்துக்களம் நிகழ்ச்சிக்கு வருகை தந்து இருக்கின்ற
உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.மாற்று அரசியல் என்று பேசுவது எளிது.ஆனால், நேரடியாக நாம் களத்தில் இறங்கிப் பார்த்தால்தான், எவ்வளவு
கடினம் என்பது புரியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட் சித் தேர்தலில், திருச்சி மாநகராட்சி மேயர் பொறுப்புக்கு, கழகத்தின் சார்பில் நான் வேட்பாளராகப் போட்டியிட்டேன். மிகவும் நம்பிக்கையோடு இருந்தேன்.

வைகோவின் ரமலான் ஈது பெருநாள் வாழ்த்து

அகிலத்தின் அருட்கொடையாம் அண்ணல் நபி (ஸல்) காட்டிய வழியில் மனித வாழ்வில் நல்லறிவையும், சகிப்புத் தன்மையையும், ஆத்மா அமைதியையும், எதையும் தாங்கும் இதய வலிமையையும், மன நிம்மதியையும், இறை எண்ணத்தையும் அளித்திடும் ரமலான் மாத உண்ணா நோன்பு இருத்தலை இஸ்லாமியர்கள் நிறைவு செய்துள்ள திருநாள்தான் ஈது பெருநாள் ஆகும்.

Wednesday, August 7, 2013

துணை நிற்போம்! தோள்கொடுப்போம்! -பகுதி 2

கூடங்குளம் அணுமின் நிலையம்  முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வில்லை!

நிலஇயல் நீரியல் விஞ்ஞானிகளின் அறிக்கைகள் புறந்தள்ளப்பட்டன!


அணு ஆய்வுத் திட்டங்களில் இந்தியாவை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று இந்திராகாந்தி அவர்களுக்கு உள்ளூர ஒரு ஆசை இருந்தது. 1980 ஆம் ஆண்டு அணு ஆய்வு விஞ்ஞானிகளை அழைத்து, ஓர் அணு நீர்மூழ்கியை உரு வாக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்.ஐந்து ஆண்டுகளாகியும் அவரது திட்டம் நிறைவேறவில்லை.

உடனே இந்திராகாந்தி ருசியாவின் உதவியை நாடினார். ருசிய அரசு அணு நீர் மூழ்கிக்கான தொழில் நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்கிடச் சம்மதித்தது.
அதே நேரத்தில் ஒரு நிபந்தனையும் முன் வைத்தது.

விசாரணைக் கமிசன் அமைக்க வேண்டும்

இந்திய அரசு மீது விசாரணைக் கமிசன் அமைக்க வேண்டும்-#வைகோ

2008 ஆம் ஆண்டு, நோர்வே நாட்டில் கூடிய மாநாட்டின்போது, ஐரோப்பிய ஒன் றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னிடம் சொன்னார்கள்; ஏன், நோர்வே
அமைச்சர்களும் சொன்னார்கள்.

உலகத்தின் எந்த நாடும்,இந்தியாவைக் கடந்து வந்து, ஈழத்துக்கு விடுதலை பெற்றுத் தந்து விடாது. ஏனெனில், இன்றைக்கு இந்தியா 100 கோடி மக்களைக் கொண்டு இருக்கின்ற ஒரு வல்லரசு ஆகி விட்டது.எனவே, இந்தியாவைக் கடந்து வந்து, ஐரோப்பிய நாடுகளோ, அமெரிக்காவோ தலையிடும் என்று
எதிர்பார்க்காதீர்கள். எதிர்காலத்தில், இந்தியப் பெருங்கடலில்,இந்தியாவுக்கும், சீனாவுக்கும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடல் ஆதிக்கப் போட்டி வரக்கூடும்.

சமூக நீதிப்போர் இன்னும் முடியவில்லை!

சங்கொலி தலையங்கம்

உச்ச நீதிமன்றம் ஜூலை 18 ஆம் தேதி அளித்துள்ள மிக முக்கியமான தீர்ப்பு, சமூக நீதிக்காகப் போராடி சரித்திரம் படைத்த தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ள வெற்றி ஆகும்.மருத்துவப் படிப்புகளுக்கு பொதுநுழைவுத்தேர்வு நடத்திட வேண்டும் என்ற மத்திய அரசின் விடாப்பிடியான உத்தரவை உச்ச நீதிமன்றம் தகர்த்து இருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற மாண் பமை நீதிபதி அல்டமாஸ் கபீர் அவர்கள் ஓய்வு பெறும் நாளில் அளித்த வர லாற்றுச்சிறப்புமிக்க தீர்ப்பு இது. அவர் தலைமையில் நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், ஏ.ஆர்.தவே ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, மருத்துவக் கல்விக்கான பொதுநுழைவுத் தேர்வு தொடர்பான வழக்குகளை விசாரணை செய்து வந்தது.

புத்தரும் மதுவிலக்கும்!

தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகட்கும் மேலாகப் பெளத்த சமயம் நிலைத்து வளர்ந்து செழித்திருந்தது.

தமிழர் புத்தரைத் ‘தயாவீரன்; தர்மராஜன், அருளறம் பூண்டோன், அறத்தகை முதல்வன், புத்த ஞாயிறு, போதிமாதவன், மன்னுயிர் முதல்வன், பிறவிப் பிணி மருத்துவன் என்று பல படப் புகழ்ந்து போற்றி வந்திருக் கின்றனர். தமிழ்
நாடெங்கும் பெளத்தப் பள்ளிகள் நிறைந்திருந்தன.

சித்தார்த்தர்

புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர் குடும்பப் பெயர் கெளதமர். அவர் ஞான மடைந்த பிறகு ஏற்பட்ட பெயரே புத்தர். பிற்காலத்தில் புத்தர் (பூர்ண ஞானம் பெற்றவர்) ததாகதர் முன்னோர் வழியில் செல்பவர்) என்று அழைக்கப்பட்டார்.

Tuesday, August 6, 2013

துணை நிற்போம்! தோள்கொடுப்போம்! -பகுதி 1

கூடங்குளம் அணுமின் உலையால் இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்திட இந்திய அரசு துணிந்துவிட்டது!

கூடங்குளம் அணுமின் உற்பத்தி தொடங்கிவிட்டது. எந்த விதத்திலும் அடக்க முடியாத பேராபத்து மக்களின்உயிரைக் குடித்திடத் தயாராகிவிட்டது.உலகமே கண்டு அஞ்சிடும் அணுக்கதிர் வீச்சுக்கு அப்பாவித் தமிழர்களை அழித்து நாச மாக்கிடும் அநீதியை ஒருக்காலும் அனுமதிக்க முடியாது.

தென்தமிழக மக்கள் இந்தப் பேரழிவில் இருந்து தப்பிக்க முடியாது. மக்களைக்
காத்தருள வேண்டிய தமிழக அரசு பயங்கர மரணத்திற்குப் பச்சைக் கொடி
காட்டிவிட்டது. ஆலகால விசத்தை அள்ளிப்பருகி, மக்களைக் காப்பாற்றினான் சிவபெருமான் என்பது புராணக் கதை. அந்த சிவனே இப்போது வந்தாலும்கூட இந்த அணுக்கதிர் இயக்கத்தை-அதன் பேரழிவைத் தடுத்து நிறுத்தவே முடி யாது. இந்த நிலையில் தான் மக்களைக் காத்திடப் பொங்கி எழுந்து போர்ப் பிரகடனம் செய்து களத்தில் இறங்கியுள்ளார் இரண்டாம் அண்ணா வைகோ.

மாவீரர்களை நினைவு கூர்கின்றோம்;

மாவீரர் நாள் பொதுக்கூட்டம், 27.11.2012 அன்று, சென்னை தியாகராயர் நகரில்
பேரெழுச்சியுடன் நடைபெற்றது.கழகப் பொதுச் செயலாளர்வைகோ சிறப்புரை ஆற்றினார்.அவரது உரையில் இருந்து...

தீபங்களின் திருநாளாகிய இன்று,தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் எல்லாம், குன்றுதோறாடும் குமரனை வழிபடுகின்ற மக்கள் எல்லாம் கொண்டாடித் திளைக்கின்றார்கள்.

இது கார்த்திகை தீபத் திருநாள்.

தமிழ் ஈழ விடியலை நெஞ்சில் தாங்கி இருப்பவர்களுக்கு, இது மாவீரர் நாள்.
இதில் ஒரு ஒற்றுமை இருக்கின்றது. தமிழ் ஈழ மக்கள், கார்த்திகைப்பூக்களைக் கைகளில் ஏந்தித்தான், மடிந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகின்றார்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், இதே நவம்பர் 27 ஆம் நாள், ஒரு மக்கள்
கடலுக்கு முன்னால், மாவீரர் நாள் உரை ஆற்றக்கூடிய பேற்றினை நான்
பெற்றேன்.

விருதுநகர் மாநாடு கால்கோள் விழா

செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் விழா- விருதுநகர் மாநாடு கால்கோள விழா -மதிமுக  பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

விருதுநகரில் மறுமலர்ச்சி தி.மு.க. நடத்த இருக்கும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டின் கால்கோள் விழா இன்று கலை 10.30 மணிக்கு நடைபெற்றது.

சூழ்ச்சியும் சூதும் கேடும்

சூழ்ச்சியும் சூதும் கேடும் நிறைந்த உணவுப் பாதுகாப்புத் திட்டம்!

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு, ரயில்வே அமைச்சரின் உறவினர் செய்த ஊழல், நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகளை கூறுபோட்டு விற் பனை செய்யும் முயற்சி போன்ற மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கை களுக்கு எதிராக, நாடு தழுவிய அளவில் கண்டனமும், வெறுப்பும் காட்டுத் தீயாய்ப் பரவி வருகிறது.

இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளவும்,எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலின்
வாக்குகளைக் குறிவைத்தும், உணவுப் பாதுகாப்பு மசோதா என்ற நீண்ட நெடுங்கால வாக்குறுதியை தூசிதட்டி எடுத்து வைத்துக்கொண்டு, மக்களை
ஏமாற்றும் முயற்சியில் காங்கிரசு அரசு காரியமாற்றி வருகிறது!

நான் ஏன் மதிமுக.வில் சேர்ந்தேன்?

மருத்துவர் சரவணன்

இன்று இங்கே நாம் ஒரு ஆயிரம் பேர் திரண்டு இருக்கின்றோம். மாற்று அரசி யல் குறித்துச் சிந்திக்கின்ற புதிய இளைஞர்கள் நிறைய வந்து இருக்கின்றார் கள். எல்லோருமே ம.தி.மு.க.வில் முழுமையான ஈடுபாடு கொண்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது. அவர்களைப் போன்று ஒருவனாகத்தான் நானும் இருந்தேன். 

நான் ஒரு மருத்துவர். மதுரை நரிமேடு மருதுபாண்டியன் நகரில், 200 படுக்கை கள் கொண்ட சரவணன் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை நடத்திக் கொண்டு இருக்கின்றேன்.எல்லா மருத்துவர்களையும் போலவே சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் உண்டு. ஆனால், நான் ஈட்டுகின்ற பணத் துக்கு உரிய வரியை அரசாங்கத்துக்குச் செலுத்தி விட வேண்டும் என்ற கொள்கை கொண்டவன்.

Monday, August 5, 2013

தண்ணீர், தனியார் வசமா?

தண்ணீர், 21 ஆம் நூற்றாண்டின் நீலத் தங்கம் (Blue Gold) என்று அழைக்கப் படு கிறது. ‘தண்ணீர் தங்கத்திற்கு நிகரானது. அது ஒரு திரவத் தங்கம்.’(Water is liquid gold) என்றார் சர்.ஆர்தர் காட்டன். இவர் சென்னை இராஜ தானியின் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றியவர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், கல்ல ணைத் தொழில் நுட்பத்தைப் பின்பற்றி ஆந்திர மாநிலத்தின் தவனேஸ்வரம் என்ற இடத்தில் கோதாவரி நதியின் குறுக்கே ஓர் அணையைக் காட்டன் கட்டி னார்.அணை கட்டி முடியும் வரை, தன் மனைவி மகளுடன் ஒரு குடிசையில்
அணை கட்டும் பகுதியிலேயே வசித்தவர். இவரும் நம் மக்கள் தலைவர்
வைகோவைப் போன்று நதிகள் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி னார்.

காதலுக்கு தீண்டாமை வைத்த தீ !

தர்மபுரி மாவட்டம், நத்தம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த இளங்கோவன் - அம்சவேணி இவர்களின் மகன் கல்லூரி மாணவன் இளவரசன். செல்லங் கொட்டாய் கிராமம் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த நாகராஜ் - தேன்மொழி இவர்களின் மகள் திவ்யா, செவிலியர் கல்லூரியில் பயிலும் மாணவி. இரு வரும் கல்லூரிக்கு செல்லும் வழியில் ஒருவரை ஒருவர் சந்தித்து பழகி வந்த னர், சந்திப்பு நட்பாக,நட்பு காதலாக மாறியது. இதன் விளைவு இருவரும் வெவ் வேறு சாதிகளை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம் பியது. இதனால் காதல் ஜோடிகள் இருவரும் சாதிய சமுதாய கட்டமைப் பை உடைத்து சுதந்திர பறவைகளாக பறக்க எண்ணி 9.10.2012 அன்று வீட்டை
விட்டு வெளியேறி 10.10.2012 அன்று கோவிலில் தாலிகட்டி திருமணம் செய்து
கொள்கிறார்கள்.

ஓமந்தூர் இராமசாமியாரும், மதுவிலக்கும்!

காந்தியடிகளின் கொள்கைகளை முழுக்க முழுக்க பின்பற்றி வாழ்ந்த சிறந்த உத்தமர், விவசாய முதலமைச்சர் ஓ.பி.ஆர். என்று அழைக்கப்பட்ட ஓமந்தூர்
பி.ராமசாமி ரெட்டியார். இவரைப் போன்ற ஒழுக்க சீலர்கள் அபூர்வமாகவே தோன்றுவார்கள்.

இவர் முதலமைச்சராக இருந்தபோதுதான் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக சென்னை அமைந்தகரையில் மேற்குக் கோடியில் 10 ஏக்கர் நிலம் வழங்கினார்.
அதுதான் சித்த மருத்துவத்தலைமையகம்,ஆராய்ச்சி நிலையமாகவும் அறிஞர் அண்ணா பெயரால் திகழ்ந்து வருகின்றது.

கோவை நிதி அளிப்புக் கூட்டத்தில் வைகோ

தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளைக் காக்க,
நாடாளுமன்றத்தில் கழகத்தின் குரலை வலுப்பெறச் செய்யுங்கள்;
மக்களை அணுகுவோம்; மாற்றத்தை ஏற்படுத்துவோம் !

கோவை மாநகர் மற்றும் கோவை புறநகர் மாவட்டக்கழகத்தின் சார்பில், 22.07. 13 அன்று கோவையில், கழக வளர்ச்சி நிதி - தேர்தல் நிதி அளிப்புக்கூட்டம் நடைபெற்றது.நிதியினைப் பெற்றுக் கொண்டு,கழகப் பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரையில்  இருந்து....

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இந்தக் கொங்கு மண்டலம் ஒரு ஜிப்ரால்டர் கோட்டை என்று நான் கடந்த காலங்களில் கூறி வந்ததை
நிலைநாட்டுகின்ற விதத்தில், ‘கொடையால் சிறந்தது கொங்குச் சீமை’ என மாநாடுகளில் உரை ஆற்றியதை உறுதி செய்கின்ற விதத்தில், கழக வளர்ச்சி நிதி-தேர்தல் நிதியாக, 91 இலட்சம் ரூபாயை அள்ளித் தந்து இருக்கின்றீர்கள்.

Sunday, August 4, 2013

‘தந்தி’ பறந்தது!

சங்கொலி தலையங்கம்

ஆங்கிலேயர் ஆட்சியில் 1850 நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப் பட்ட “தந்தி”, 2013, ஜூலை 15 அன்று தனது சேவையை நிறுத்திக் கொண்டு விட்டது. நாட்டு மக்களின் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் கலந்த தகவல் களை 163 ஆண்டுகளாக கொண்டு சேர்த்த ‘தந்தி’யின் மறைவு  உண்மையிலே யே சோகத்தைத்தான் ஏற்படுத்தி இருக்கின்றது. தந்தி சேவை முடிவுக்கு வந்த ஜூலை 14 ஆம் தேதி, தந்தி அலுவலகங்களில் ஏராளமான மக்கள் வரிசையில் காத்திருந்து தமது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ‘தந்தி’ அனுப்பி மகிழ்ந்துள்ளனர். இதில் வாழ்க்கையில் முதல் முறையாகவும் கடைசி முறை யாகவும் தந்தி கொடுத்தோரும் உண்டு.

பாரதியும் பாவேந்தரும் -பகுதி 2

மனித நேயம் மிக்கவன். தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில், ஜெகத் தினை  அழித்திடுவோம் என்றான். அனைத்து இயற்கையையும் நேசித்தான்.
சாதி என்ற உணர்வுக்கு அப்பாற்பட்டவன். அவன் பிறந்தது பார்ப்பனர் குலம். ஆனால், இவன் பிராமண சாதியில் பிறந்து, பிராமண குலத்துக்கே கேடு செய்து விட்டான் என்று அவனைப் புறக்கணித்தார்கள். வாழ்நாளெல்லாம் இரு தரப்பிலும் தீண்டாமைக்கு ஆளானவன் முண்டாசுக் கவிஞன்.அந்தக் குறை யைப் போக்குவதற்குத்தான், எங்கள் திராவிடத்தின் தேசியக் கவிஞன் கனக
சுப்புரத்தினம், பாரதி மறைந்ததற்குப் பிறகுதான், தன் பெயரை ‘கே.எஸ். பாரதி தாசன்’ என்று முதன்முதலாகக் குறிப்பிட்டு, பத்திரிகைக்கு எழுதி அனுப்பி னார். பாரதியின் உணர்வோடு தன்னுடைய கவிதைகளைப் படைத்தார். ‘ஒரு
மனிதன் தேவைக்கே இத்தேசம் உண்டென்றால்,அத்தேசம் ஒழிதல் நன்றாம்’ என்றார்.

திருப்பரங்குன்றத்தில் வாலிப முறுக்கு!

இணையதள இளைஞர்கள் சந்திப்பு 
திருப்பரங்குன்றத்தில் வாலிப முறுக்கு!

“மாற்று அரசியல்: இளந்தலைமுறையின் கருத்துக் களம்” என்ற தலைப்பில்
திருப்பரங்குன்றத்தில் இணையதள இளைஞர் சந்திப்புக்கூட்டம், 28.07.2013 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்றோர் ஆற்றிய உரையில் இருந்து.

திருப்பரங்குன்றம்;தமிழக அரசியலில் ஒரு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத் திய இடம்; ஆம்; அங்கேதான், இந்திய விடுதலைக்கு முன்பு, சென்னை மாகா ணத்தில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத் தலைமை, காமராசரின் கைகளுக்கு வருவதற்கான அடித்தளம் அமைந்த மாநாடு நடைபெற்றது.

புனித ரமலான் நோன்பு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் #வைகோ பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு உரை ஆற்றினார். சீமா பஷீர் அவர்கள் தலைமை தாங்கினார். உடன் எஸ்.ஹதர் அலி, எம்.பஷீர் அஹமது, மல்லை சத்யா, இமயம் ஜெபராஜ், டாக்டர் அப்துல்லாஹ் பெரியார்தாசன், ஜி.தேவதாஸ், சு.ஜீவன், வேளச்சேரி பி.மணிமாறன், பாலவாக்கம் க.சோமு, டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் மற்றும் மாநில மாணவர் அணிச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகம்மது அலி மற்றும் கழக நிர்வாகிகள், முன்னணியினரும், தோழர்களும் கலந்து கொண்டனர்.

Saturday, August 3, 2013

பாரதியும் பாவேந்தரும் -பகுதி 1

பாரதியும் பாவேந்தரும் ஊட்டியா வீரத்தை; 
மானத்தை இளைய தலைமுறை போற்றிட வேண்டும் !- #வைகோ 

சென்னை மணவழகர் மன்றம் முத்தமிழ் விழா அறக்கட்டளை மற்றும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை சார்பில், மணவழகர் மன்றத்தின் 57 ஆம் ஆண்டு முத்தமிழ் விழாவும், டாக்டர் பா.சிவந்தி ஆதித்த னார் அவர்களின் உருவப் படத்திறப்பு விழாவும் ராஜா அண்ணாமலை மன்றத் தில் 12.7.2013 அன்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் “பாட்டுக்கு ஒரு புலவ னும் பாவேந்தரும்” என்ற தலைப்பில் கழகப்பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சிறப்பு வைகோ உரை ஆற்றினார்.

சாஞ்சி அறப்போர்-பகுதி 3

நான் உரை ஆற்றத் தொடங்கினேன்.காரணங்களைச் சொன்னேன்.எதனால், கொலைகாரன் இராஜபக்சே இங்கே வரக்கூடாது என நாங்கள் எதிர்க்கின் றோம்? என்பதைச் சொன்னேன். என் இருதயத்தைத் திறந்து பேசினேன்.அங்கே கொல்லப் பட்டது உங்கள் குழந்தைகளாக இருந்தால், உங்கள் மனம் என்ன
பாடுபடும்? என்று கேட்டேன்.

இந்திய அரசைக் குற்றம் சாட்டினேன். கொலைகாரன் ராஜபக்சே, காலையில்
குடியரசுத் தலைவர் மாளிகையில், பிரணாப் முகர்ஜியைச் சந்தித்தான். இன் றைக்கு அவர் குடியரசுத் தலைவராக இருக்கலாம். நான்,அந்நாள் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியைக் குற்றம் சாட்டுகிறேன். சிங்களவனுக்கு ஆயு தங்களும், பணமும் கொடுத்து, எங்கள் மக்களைக் கொன்று குவித்ததை நியா யப்படுத்த முயன்ற அந்தக் கொடிய காரியத்தைச் செய்த அந்நாள் பிரணாப் முகர்ஜியைக் குற்றம் சாட்டுகிறேன்.

ஏழை படும் பாடு!

சங்கொலி தலையங்கம்

இந்திய அரசின் திட்டக்குழு ஜூலை 23 ஆம் தேதி நாட்டில் உள்ள ஏழைகள் குறித்த தனது மேதாவித்தனமான அறிக்கையை வெளியிட்டிருக்கின்றது. திட் டக்குழுவினால், நியமிக்கப்பட்ட டெண்டுல்கர் குழுவின் அறிக்கைதான் இது என்றாலும், இதுவே திட்டக்குழுவின் அசல் அறிக்கையாக பின்னர் ஏற்கப் படும் அபாயம் இருக்கின்றது.

ஏனெனில், 2011 இல் உச்ச நீதிமன்றத்தில், ஏழை மக்கள், வறுமைக் கோட்டிற்கு
கீழே இருப்பவர்கள் எப்படி தீர்மானிக்கப் படுகிறார்கள் என்று திட்டக்குழு
அறிக்கை தாக்கல் செய்தது. அதில் இந்தியாவின் கிராமப்புறத்தில் வயது வந்த
ஒருவரின் வருமானம் தினசரி ரூ.26 என்றால், அவர் வறுமைக் கோட்டில் வாழ் கிறார் என்றும், நகர்புறத்தில் உள்ள ஒருவரின் வருமானம் தினசரி ரூ.32 ஆக
இருப்பின், அவர் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்கிறார் என்றும் தெரிவித்து
இருந்தது.