Tuesday, October 8, 2013

திண்டுக்கல்-குமுளி நெடுஞ்சாலை சுங்கவரி கூடாது -மதிமுக

திண்டுக்கல்-குமுளி நெடுஞ்சாலையில் சுங்கவரி வசூல் செய்யக்கூடாது என்று #மதிமுகவினர் கோரிக்கைவிடுத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் (தெற்கு) ஒன்றிய ம.தி.மு.க. கூட்டம், செம் பட்டி அருகே ஆதிலட்சுமிபுரம் அகரத்தம்மன் கோவிலில் நடைபெற்றது. கூட் டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வராகவன் தலைமை தாங்கினார். 

கூட்டத்தில் ம.தி.மு.க ஆத்தூர் (தெற்கு) ஒன்றியத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர் வு செய்யப்பட்டனர். இதில் ஆத்தூர் (தெற்கு) ஒன்றிய ம.தி.மு.க. செயலா ளராக பாக்கியசெல்வம், அவைத்தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் கருப் பையா, துணை செயலாளர்கள் ராமமூர்த்தி, ஈஸ்வரன்,மோகன் ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர். மேலும் மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய இளைஞரணி அமைப்பா ளர், துணை அமைப்பாளர்கள், தொண்டரணி செயலாளர், அவைத் தலைவர், இளைஞரணி துணைச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் திண்டுக்கல்-குமுளி நான்கு வழிச்சாலை என்ற பெயரில், இரண்டு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலைகள் அகலம் இல்லாமல், வழக்கம் போல் இருந்த சாலையை சிறிதளவு மட்டும் அகலப்படுத்தியுள்ளனர். மேலும் சாலை நடுவே தடுப்புகள் அமைக்கப்படாததால், விபத்துகள் அதிகம் ஏற்படு கிறது. மற்ற மாநிலங்களில் நான்கு வழிச்சாலைகளுக்கு மட்டும் சுங்க வரி வசூல் செய்யப்படுகிறது. எனவே திண்டுக்கல்-குமுளி இரண்டு வழிச்சாலைக் கு சுங்க வரி வசூல் செய்யக்கூடாது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

No comments:

Post a Comment