Saturday, October 19, 2013

செம்பனார்கோவிலில் மதிமுக கூட்டம்

நாகை மாவட்டம் செம்பனார்கோவிலில் #மதிமுக உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய பொருளாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். 

மாவட்ட பிரதிநிதி ராஜமாணிக்கம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜ சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செம்பனார்கோவில் ஒன்றிய செய லாளர் கொளஞ்சி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட கழக செய லாளர் மோகன், தலைமை ஆலோசனை குழு உறுப்பினர் மகாலிங்கம், முன் னாள் ஒன்றியக்குழு தலைவர் தங்கையன் கலந்து கொண்டனர். 
கூட்டத்தில்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக தங்கதுரை,துணைஅமைப் பாளராக ராஜேஷ், மகேஷ் ஆகியோர் பதவியேற்றனர். செம்பனார்கோவிலில் உள்ள 57 ஊராட்சிகளிலும் புதிய வாக்காளர்களை சேர்த்தல், புதிய கிளை கழ கங்களை அமைத்தல், இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த கூடா து. கிளை கழகங்கள் வளாகத்தில் கல்வெட்டுடன் கூடிய கழக கொடி கம்பங் களை அமைக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலுக்கு மதிமுகவின் பெரும் பான்மையை காண்பிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் அழகிரி, நகர கழக செயலாளர் பன் னீர்செல்வம், குத்தாலம் ஒன்றிய செயலாளர் சுரேஷ், மாநில இளைஞரணி துணை செயலாளர் மார்கோனி ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment