Saturday, November 30, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 6

ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் மேலும்
விலை உயர்வா?

நிதி நிலை அறிக்கை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்றத்தில், #மதிமுக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி 11-03-2010 அன்று ஆற்றிய உரை:

மண்புமிகு அவைத் தலைவர் அவர்களே! நிதி நிலை அறிக்கை மானியக் கோரிக்கையின் மீதான இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேச வாய்ப்பளித் ததற்கு நான் சார்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வும் எனது சார்பாகவும் நன்றி.

உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு விளைச்சல் குறைந்துள்ளது ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.உணவு உற்பத்தியைப் பெருக்க வேளாண்மைக்கு வழங்கப்பட்டுள்ள சிறு சிறு சலுகைகள் வெறும் கண் துடைப்பே.விவசாயிகள் சுமையை முழுவதுமாக தீர்த்து உற்பத்தியை உயர்த்த இது பயன்படாது. இது வெறும் ஆறுதல் வார்த்தைகளே. விவசாயத்துக்கு பயிரிடும் நிலப்பரப்பை அதி கப்படுத்த எந்த ஒரு திட்டமும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.

கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைகளை வைகோ வரவேற்பது ஏன்?

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் இயற்கை பாதுகாப்பை உறுதிசெய்திட வும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் மத்திய அரசால் அமைக்கப்பட்ட கஸ்தூரி
ரங்கன் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ அவர்கள் தெரிவித்துள்ள கருத்து முற் றிலும் சரியானதாகும்.கஸ்தூரிரங்கன் குழு அறிக்கையை தலைவர் வைகோ வரவேற்றதின் அடிப்படை என்ன? என்பதை அறியும் முன், மேற்குத் தொடர்ச்சி
மலைப் பகுதி குறித்தும், உயர் பாதுகாப்புப் பகுதியாக இப்பகுதி அறிவிக்கப்பட வேண்டியதின் அவசியம் குறித்தும்மத்திய அரசு அமைத்த குழுவின் விபரங்
களையும் காண்போம்.

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் குஜராத் மாநிலத்தில் தொடங்கி, மகாரா ஷ்டிரா, கோவா,கர்நாடகா, கேரளா, தமிழகம் வரை ஆறு மாநிலங்களில் சுமார் 1,500 கி.மீ. தூரம் நீண்டு கிடக்கிறது.அடர்ந்த வனப்பகுதியாகவும்,தாவரங்கள் நிறைந்த பகுதி யாகவும் பறவைகள் மற்றும் புலி,யானை போன்ற விலங்கு களின் புகலிடமாகவும் இப்பகுதி விளங்குகிறது. இயற்கை பாதுகாப்புக்கும்,சுற் றுச் சூழலுக்கும் மிகவும் இன்றியமையாத பகுதியாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி இருக்கிறது.

தமிழர்களின் இதயங்களை வெற்றிகண்ட அண்ணா!

தமிழர் இதயங்களை வெற்றிகண்ட அண்ணா என்று விருதுநகர் மாநாட்டில் எழுத்தாளர் மதுரா உரை ஆற்றினார். அவரது உரை வருமாறு:

தெள்ளமுதாய், தெள்ளமுதின் மேலான முத்துக் கனியே என் முத்தமிழே வணக்கம். குஞ்சரமில்லை,குடையில்லை, படையில்லை, பதாகையில்லை
ஆயினும் கோடிக்கணக்கான தமிழர்களின் இதயங்களில் கோலோச்சிக் கொண்டிருக்கும் கோ வைகோ.

இனமான தலைவர் வைகோ வின் கண் அசைவில் நடைபெறுகின்ற அண்ணா வின் பிறந்தநாள் விழா மாநாட்டிற்கு தலைமை தாங்குகின்ற என் இதயத்திற்கு
இனிய இமயம் ஜெபராஜ் அவர்களே, நெஞ்சிலே பாசம் வைத்து விழிவழி நேசம் காட்டுகிற என் அண்ணன் தாமிரபரணி மைந்தன் வைகோ அவர்களே, என்
இதயத்திற்கு இனியவர்களே வணக்கம்.

Friday, November 29, 2013

விவசாயிகளுக்கு, பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும்! -வைகோ

காவிரி பாசனப் பகுதி விவசாயிகளுக்கு,பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும்! விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு!

#வைகோ அறிக்கை

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக மாநிலம் முரண்டு பிடித்ததாலும், காவிரி பாசனப் பகுதிகளில் உரிய நேரத்தில் குறுவை, சம்பா பயிர் சாகுபடி தொடங்க முடியவில்லை. 

6 இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பயிர்களும், 14 இலட்சம் ஏக்கம் சம்பா சாகு படி பயிர்களும் 90 சதவீதம் காப்பாற்ற முடியாமல் கருகிப் போயின. விவசாயி களுக்கு இழப்பு ஈடு வழங்குவதற்காக, தமிழக அரசு அமைச்சர்கள், அதிகாரி களை கொண்ட குழு ஒன்றை அமைத்தது. அக்குழு காவிரி பாசனப் பகுதிகளில் ஆய்வு நடத்தியது. மத்திய அரசின் சார்பில் அனுப்பப்பட்ட குழுவினரும், பாதிக் கப்பட்ட பயிர்களை நேரில் பார்த்து சேதத்தை மதிப்பிட்டுச் சென்றனர். 

Thursday, November 28, 2013

வழக்கறிஞர்கள் மாநாட்டில் வைகோ உரை -பாகம் 1

காமன்வெல்த் அமைப்போடு உலகம் நின்றுவிடவில்லை. ஈழத்தமிழர் களுக்கு நீதி கிடைக்கும் என்று சென்னையில் நடந்த #மதிமுக வழக்கறிஞர்கள் மாநாட் டில் #வைகோ உரை ஆற்றினார். அவரது உரை வருமாறு:

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர்களின், இரண்டாவது மாநில மாநாட்டில், உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகி றேன். கழகத்தின் சட்டத்துறைச் செயலாளர், ஆருயிர்ச் சகோதரர், வழக்கறிஞர் தேவதாஸ் அவர்கள் தலைமை ஏற்று இருக்கின்றார்கள்.

2002 ஆம் ஆண்டு,அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில் நடைபெற்ற தேவநேயப்
பாவாணர் நூற்றாண்டு விழாவில் உரை ஆற்றி விட்டுத் தமிழகம் திரும்பிய போது,சென்னை விமான நிலையத்தில்,பொடா அடக்குமுறைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டேன். அந்த இரவில், அங்கிருந்தே நேரடியாக மதுரைக்குக்
கொண்டு சென்று, நடுநிசியில் நீதிபதியின் இல்லத்துக்கு அழைத்துச் சென்று
ஆஜர்படுத்தவும், அவர் நீதிமன்றக் காவலுக்கு ஆணை பிறப்பித்தார்.

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 5

தமிழ் œ இன அழிப்பிšல்,சிங்கள இனவெறி அரசுக்கு துணைபோன இந்தியா!

குடியரசுத் தலைவர் உரைக்கு ந‹ன்றி தெரிவிக்கும்  தீர்மானத்தி‹ன் மீது, நாடாளு ம‹ன்றத்திšல் #மதிமுக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி(ஈரோடு தொகுதி) 4.3.2010 அ‹ன்று ஆ‰ற்றிய உரை:

“குடியரசுத் தலைவரி‹ன் உரைக்கு ந‹ன்றி தெரிவிக்கும் இந்தத் தீர்மானத்தி‹ன் மீது பேசும் வாŒப்பளித்தத‰ற்கு நன்‹றி. இந்தத் தீர்மானத்தின் ‹மீது உரையா‰றிய மாண்பு
மிகு அத்வானி அவர்கŸள் குறிப்பிட்டது போல இது ஒரு சம்பிரதாயமாக கடைப் பிடிக்கப்படும் நடவடிக்கையாக இருப்பினும், குடியரசுத் தலைவரி‹ உரைக்கு எனது ந‹றியைத் தெரிவித்துக் கொŸள்கிற அதேநேரத்தில்š,அதில் š உள்Ÿள குறை களையும் சுட்டிக்காட்டும் வாŒய்ப்பாகக் கிடைத்திருக்கும் குறுகியகாலத்தைப் பயன்‹படுத் திக் கொŸள்ள விரும்புகிறே‹ன்.

சென்னையில் மாவீரர் நாள் நினை வேந்தல் கூட்டம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மாவீரர் நாள் நினை வேந்தல் கூட்டம்

#மதிமுக சார்பில், மாவீரர் நாள் நினைவேந்தல் கூட்டம், வடசென்னை மாவட் டம் , தண்டையார்பேட்டை டிப்கோ அருகில் நேற்று (27.11.2013) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் #வைகோ அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். உடன் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் நிர் வாகிகளும், கழக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் வட சென்னை மாவட்டடச் செயலாளர் சு.ஜீவன் நன்றி கூறினார்.

கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டியில் ரயில்வே கேட்டை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உதவி கலெக்டர் அலுவலகத்தை , #மதிமுக வினர் முற்றுகையிட்டனர்.

30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் எதிர்பார்ப்பாக இருந்த கோவில்பட்டி ரயில்வே மேம்பாலம் , வைகோ சிவகாசி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த பொது பெற்று தந்தார் .கோவில்பட்டி லட்சுமி மில் ரயில்வே கேட்டில் கடந்த 2009–ம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. இதையடுத்து அந்த ரயில்வே கேட்டை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.இதனால் இனாம் மணி யாச்சி பஞ்சாயத்து, இந்திரா நகர், அத்தைகொண்டான், சீனிவாச நகர் உள்ளிட் ட பகுதி மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது. என வே ரயில்வே கேட்டை மூடுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 2–2–2009 அன்று சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ரயில்வே கேட் டுக்கு பதிலாக அப்பகுதியில் ரூ.80 லட்சம் செலவில், வாகனங்கள் செல்லும் வகையில் சுரங்க வழிப்பாதை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதை யடுத்து தற்போது வரை ரயில்வே கேட் மூடப்படாமல் பொதுமக்களின் பயன் பாட்டுக்கு திறந்து விடப்பட்டு உள்ளது.

Wednesday, November 27, 2013

தமிழரின் மான உணர்வின் மரகதப் பேழை!-பாகம் 2

முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்க முயற்சிப்பதா? 

‘நானே அரசு’என்றான் ஒருவன் பிரெஞ்சு நாட்டிலே; ஜெயலலிதாவுக்கும் அந்த எண்ணம் வந்துவிட்டது! 

என்று தஞ்சையில் நடைபெற்ற முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத் திறப்பு
விழாவில் #மதிமுக  பொதுச் செயலாளர் #வைகோ அவர்கள் பேருரை ஆற்றி னார். அவரது உரையின் சென்ற பாகத்தின் தொடர்ச்சி வருமாறு:

இந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சிலைகளை வடித்ததன் நோக்கம் என்ன? இவையெல்லாம் இங்கே ஏன் எழுப்பப்பட்டன? அமெரிக்காக்காரர்கள் தங்கள் பெருமைகளைப் பேசுவதற்காக தெற்கு டகோடா ரஸ்மோரில் சிலைகளை வடித்தார்கள்.இங்கே ஏன் வடித்தோம்? 1989 ஆம் ஆண்டு, மார்ச் திங்கள் 3 ஆம் நாள், வல்வெட்டித்துறைக்குச் சென்ற போது,மாவீரர் துயிலகங்களைப் பார்க்க நான் ஆசைப்பட்டேன். அப்போது அந்த ஊர்த்தலைவர், ‘அங்கே இந்திய இரா ணுவம் குவிக்கப்பட்டு இருக்கின்றது. நீங்கள் அங்கே போக முடியாது’ என்று சொன்னார்.அப்போது, குமரப்பாவின் தாயாரும், கிட்டுவின் தாயாரும் படகில் என்னை வழியனுப்பி இங்கே அனுப்பி வைத்தார்கள்.

ஈழத்தில் இங்கிலாந்து பிரதமரின் நம்பிக்கைப் பயணம்

சங்கொலி தலையங்கம் 

உலகத் தமிழர்களின் எதிர்ப்பை துச்சமாகக் கருதிய இந்திய அரசு, கொழும்பில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளது. இந்தியாவின் சார்பில்,வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் மாநாட்டில்
கலந்துகொண்டார்.

மாநாட்டிற்கு தாம் செல்ல முடியாதது குறித்து ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதிய பிரதமர் மன்மோகன்சிங்,காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு தனது வருத்தத்தைத் தெரிவித்து இருந்தார். மன்மோகன்சிங் பிரதமர் பதவி ஏற்ற ஒன்பதரை ஆண்டு காலத்தில் நடைபெற் ற ஐந்து மாநாடுகளில் இரண்டில் அவர் கலந்துகொள்ளவில்லை.தமிழ்நாட்டில்
எழுந்த எதிர்ப்புதான் பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ளாததற்குக் காரணம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருப்பது அப்பட் டமான பொய் என்பது உலகத்திற்குத் தெரியும். இந்தியாவின் சார்பில், வெளியு றவு அமைச்சர் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ராஜபக்சே கூறி இருப் பதில் இருந்தே இந்தியாவும்-இலங்கையும் பேசி வைத்துக்கொண்ட நாடகம் தான் ‘காமன்வெல்த் உச்சி மாநாடு’ என்பது விளங்கும். 53 நாடுகளைக்கொண்ட காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாட்டில் 23 நாடுகளின் தலைவர்கள் மட்டுமே நவம்பர் 15 தொடங்கி, 17 வரை நடைபெற்ற கொழும்பு மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். மற்ற நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் மட்டுமே வந்திருந்தனர்.

நடிகர் திலகம் சிவாஜி சிலையை அகற்ற முயல்வது அக்கிரமச் செயல்! வைகோ கண்டனம்

நடிகர் திலகம் சிவாஜி சிலையை அகற்ற முயல்வது அக்கிரமச் செயல்!

தமிழக அரசுக்கு #வைகோ கண்டனம்

தமிழ் கலை உலகம் தரணிக்குத் தந்த தவப்புதல்வனாம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலகத்திலேயே ஈடு இணையற்ற நடிகராவார். அதனால்தான் பேர றிஞர் அண்ணா அவர்கள், “ஹாலிவுட் புகழ் நடிகரான மார்லன் பிராண்டோ சிவாஜி கணேசனைப் போல நடிக்க முயற்சி செய்யலாம்” என்றார். அறிவா சான் பெரியார் அவர்களால் “சிவாஜி” என்ற பட்டத்தைப் பெற்ற நடிகர் திலகத் தை எங்கிருந்தாலும் வாழ்க! என வாழ்த்தினார் பேரறிஞர் அண்ணா. கலைஞ ரின் கனல் தெரிக்கும் வசனங்களுக்கு தன் சிம்மக்குரலால் உயிர் தந்தவர் செவாலியே சிவாஜி ஆவார்.

வீரபாண்டிய கட்டபொம்மனில் அவரது நடிப்புக்கு ஆசிய-ஆப்பிரிக்க படவிழா வில் சிறந்த நடிகர் என்ற விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் ஒரு நாள் மேயராக கௌரவிக்கப்பட்டார். மனித உணர்ச்சியின் அத்தனை கோணங்களையும் தன் கண்களிலும், முக அசைவிலும் காட்டக் கூடிய திறன் அவருக்கு நிகராக உலகில் எந்த நடிகரிடமும் நான் கண்டது இல்லை.

Tuesday, November 26, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 4

அறிவிப்பு நிலையிலேயே உள்ள ஈரோடு - செங்கோட்டை புதிய இரயிலை இயக்கிடுக!

இரயில்வே கூடுதல் நிதிநிலை அறிக்கையின்போது நாடாளுமன்றத்தில் #மதிமுக அ.கணேசமூர்த்தி கோரிக்கை

நாடாளுமன்றத்தில் இரயில்வே கூடுதல் நிதி நிலை அறிக்கை 10.12.2009 அன்று
தாக்கல் செய்யப்பட்டபோது நடந்த விவாதத்தில் ஈரோடு தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஆற்றிய உரை:

இரயில்வே கூடுதல் நிதி நிலை அறிக்கையில் பேச வாய்ப்பு அளித்தமைக்கு எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்ற இரயில்வே நிதிநிலை அறிக்கைக்கு முந்திய இரயில்வே நிதிநிலை அறிக்கையில், ஈரோட்டிலிருந்து செங்கோட்டை வரை புதிய இரயில் வண்டி இயக்கப் போவதாக அறிவிக்கப் பட்ட அறிவிப்பு இன்னும் நடைமுறைப் படுத் தப்படாமல் வெறும் அறிவிப்பாகவே உள்ளது.பொதுமக்களுக்கு பெரிதும் பயன் படும் இந்த இரயில் வண்டியினை விரைவில் இயக்குவதற்கு ஆவன செய்ய அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

வாய்மையின் மறுபெயர் வைகோ!

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக தியாகச் சுடர் திலீபன் நினைவு நாள் பொதுக்கூட்டம் சென்னை ராயபேட்டையில் நடந்தது. அக்கூட்டத்திற்கு சென் றிருந்தேன். தலைவர் #வைகோ அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்ட மேடையின் முன்பகுதியில் வைகோ, பிரபாகரன், திலீபன் ஆகியோர் வன்னி காடுகளில் நின்றுகொண்டு இருக்கும் புகைப்பட பேனர்கள் வைத்திருந்தார் கள்.

பேனரில் இந்த படத்தில் ஒரு சிறிய மாற்றம் காணப்பட்டது. அது என்ன மாற் றம் என்றால் தலைவரின் இடது பக்கத்தில் பிரபாகரன் இருக்கிறார் வலது பக் கத்தில் புலிகளின் உளவுத்துறை தலைவர் பொட்டு அம்மன் அவர்களுக்கு பதில், திலீபன் அவர்கள் படத்தை மாற்றி அங்கு வைத்திருந்தார்கள். இதை தலைவர் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே நான் பார்த்தேன். இது தவறான செயல் ஆயிற்றே! தலைவர் அவர்கள் வன்னி காடுகளுக்கு சென்ற போது திலீபன் மறைந்து விட்டாரே என்று எண்ணினேன்.

பொன்னமராவதியில் அரசு கல்லூரி வேண்டும்-மதிமுக கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் #மதிமுக நிர்வாகிகள் கூட் டம் நடந்தது. 
 
கூட்டத்திற்கு ஒன்றியச்செயலாளர் பழனியாண்டி தலைமை வகித்தார். மாநில மருத்துவர் அணி துணைச்செய லாளர் டாக்டர் சின்னப்பா முன்னிலை வகித் தார். 

பொதுக்குழுஉறுப்பினர் சதாசிவம் வரவேற்றார். 

கூட்டத்தில் 

நீதி தூக்கிலிடப்பட்டுவிட்டது -வைகோ அறிக்கை

நீதி தூக்கிலிடப்பட்டுவிட்டது, மேலும் அநீதி நிகழாமல் மூவரின் தூக்குத் தண்டனை இரத்தாக வேண்டும் #வைகோ அறிக்கை

“குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால், நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது” என்பதுதான் உலகமெல்லாம் ஜனநாயகத்தில் நீதித்துறையின் அடிப்படை தத் துவமாகும். ஆனால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், அச்சம்பவத்தில் எள்ளள வும் தொடர்பில்லாத நிரபராதிகள் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். நீதிக்கு முற்றி லும் முரணான விதத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சித்ரவதை செய்து, காவல்துறையினர் பெற்ற ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில் தடா நீதிமன்றம், தடா எனும் கொடிய அடக்குமுறைச் சட்டத்தின் மூலம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது.

தடா வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு கிடையாது. அதனால் உச் சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் 19 பேர் விடுதலை செய்யப் பட்டனர். 4 பேருக்கு தூக்குத் தண்டனையும், 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மரணக் கொட்டடியில் இருந்த நளினிக்கு தூக்குத் தண்டனை குறைக்கப்பட்டாலும் 22 ஆண்டுகளாகியும் விடுதலை செய்யப்படவில்லை.

Monday, November 25, 2013

முள்ளிவாய்க்கால் முற்றத்தில்... வைகோவின் போர் முகம்!

ஈழத்தில் நடந்த இனக்கொலையும், இதயத்தில் வடிந்த ரத்தத்தையும், அதனால் ஏற்பட்ட ரணத்தையும் தாங்க இயலாதவர்களாய் நம் தாய்த் தமிழகத்து மக்கள் வடிந்த கண்ணீரை மட்டுமே காணிக்கையாகத் தரமுடிந்தது.

2009-ல் முள்ளிவாய்க்கால் துயரச் சம்பவத்தோடு அனைத்தும் முடிந்தது. அது வரை அங்கீகாரம் இல்லாத தமிழீழ அரசை நமது மாவீரர் திலகம் பிரபாகரன்
அவர்கள் கட்டி எழுப்பிய தமிழீழ வைப்பகம், மாவீரர் துயிலகம், செஞ்சோலைக் காப்பகம், பள்ளிகள்,பணிமனை, வீடுகள் என அனைத்தையும் இடித்து மகிழ்ந்த சிங்கள அரசு, முடிவாக முள்ளிவாய்க்கால் பகுதியில் முடக்கப்பட்ட லட்சக் கணக்கான தமிழர்களை கொன்றொழித்து பேய் பெற்ற பிசாசு மகிந்த ராஜபக்சே தன் கோரப் பசிக்கு தமிழர் இரத்தம் குடித்துக் கோரத்தாண்டவம் ஆடியபோது கை கட்டி, வாய் பொத்தி மெளனியாய் ஆட்சியில் இருந்தார் தமிழகத்தில் கருணாநிதி.

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 3

ஆலை அதிபர்களுக்கு ஆதரவாக கரும்பு விவசாயிகளின் உரிமைகளைப் பறிப்பதா? 

கரும்பு விலையை நிர்ணயம் செய்ய மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்திற்கு கண்டனம் தெரிவித்து, நாடாளுமன்றத்தில் ஈரோடு தொகுதி #மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி 10.12.2009அன்று ஆற்றிய உரை: 

கரும்பு விவசாயிகளின் உரிமையைப் பறிக்கிறவகையில் 22.10.2009 அன்று
இந்திய அரசு வெளியிட்ட அவசரச் சட்டத்தை சட்டவடிவமாக்க இந்தச் சட்ட
வரைவு கொண்டுவரப்பட்டுள்ளது.

22.10.2009 அன்று வெளியிடப்பட்ட அவசரச் சட்டத்தில்,மாநில அரசுகளுக்கு இந் தக் கூடுதல் விலை (SAP) அறிவிக்கும் அதிகாரம் பறிக்கப்பட்டு இருந்தது. இந் தச் சட்ட வரைவில் மீண்டும் கூடுதல் விலை அறிவிக்க மாநில அரசுகளுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளமைக்கு கரும்பு விவசாயிகளின் சார்பில் இந்திய அர சுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

காங்கிரஸ் அரசு தமிழர்களை வஞ்சிக்கிறது களத்தில் நிற்க ஆயத்தமாவோம்!

காங்கிரசு அரசு தமிழர்களை வஞ்சிக்கிறது களத்தில் நிற்க ஆயத்தமாவோம் என்று விருதுநகர் #மதிமுக மாநாட்டில் கொள்கை விளக்க அணிச் செயலா ளர் க.அழகுசுந்தரம் எழுச்சி உரை ஆற்றினார். அவரது உரை வருமாறு:

சிவகாசியிடம் இருந்து பிரிக்க முடியாதது தீபாவளியும், பட்டாசும் மட்டுமல்ல
வைகோவும்,நாடாளுமன்றமும்தான் என்று திசைகள் திரும்பிப் பார்க்கிற இந்த
மாநாட்டில் “முன்னேறிச் செல் அதிகாரத்தைக் கைப்பற்று” என்று கரூர் பிரக டனத்திற்கு விருதுநகரில் வெள்ளோட்டமோ என்கிற அளவுக்கு எப்போதும் இல்லாத எழுச்சியோடும்,எதிர்பார்ப்போடும் நடைபெறுகின்ற பேரறிஞர் அண் ணா பிறந்தநாள் விழா மாநாட்டுத் தலைவர் உயர்நிலைக்குழு உறுப்பினர், கழக நிகழ்ச்சிகளை உலகத் தமிழர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு தொலைக்காட்சி இல்லையே என்று நாம் கவலைப்பட்டபோது, இதோ!நான் இருக்கிறேன் என்று தக்க சமயத்தில் தோள்கொடுத்த அண்ணன் இமயம் ஜெபராஜ் அவர்களே,

பெங்களூர் தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் வைகோ

பொங்கு தமிழ் இயக்கம் சார்பில் இனமான தமிழர் நினைவேந்தல் நிகழ்ச்சி பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் நேற்று (24.11.13 ) மாலையில் நடைபெற்றது. இதில், கலந் து கொண்ட #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ, குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் பேசியதாவது:–

பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசு வ தை பெருமையாக நினைக்கிறேன். அரசியலுக்கு அப்பாற்பட்டது தான் தமிழ்ச் சங்கங்கள்.தமிழ்நாட்டில் கூட செய்யாத சில நல்ல காரியங்களை பெங்களூர் தமிழ்ச் சங்கம் செய்துள்ளது. 

ஈழத் தமிழர்களுக்காகவும், தமிழுக்காகவும் ஏராளமான போராட்டங்களை நடத் தி உள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றுபடுத்தி இருக்கிறது. இதுபோல உலக நாடுகள் முழுவதும் தமிழ்ச் சங்கங்களை நிறுவ வேண்டும். உலக தமிழர்கள் ஒன்றுபட வேண்டும்.

Sunday, November 24, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 31

நாள்:-12.01.2009

ஈழத் தமிழர்கள் உயிர் காக்க நடவடிக்கை எடுங்கள்!

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

தாங்கமுடியாத மனவேதனையுடன் இந்தக் கடிதத்தை உங்கள் உடனடிக் கவ னத்துக்கும், நடவடிக்கைக்கும் எழுதி உள்ளேன். இலங்கைத் தீவில்,இரத்த வெறி பிடித்த இனவாத சிங்கள அரசு, தமிழ்  இனத்தையே படுகொலைசெய்து பூண்டோடு அழிக்க, முப்படைகளையும் ஏவி ‘இன அழிப்பு’யுத்தம் நடத்துகிறது. விடுதலைப்புலிகளுடன் போர் என்ற பெயரில், இந்த இனக்கொலையை நடத் துகிறது.

இன்றைக்கு 6 இலட்சம் ஈழத் தமிழர்கள் முல்லைத் தீவில் மரணப் பள்ளத்தாக் கில் தவிக்கின்றனர். இலங்கை இராணுவம் இடைவிடாமல் பீரங்கித் தாக்கு தலும், விமானக் குண்டு வீச்சும் நடத்துகிறது.பசுமை நிறைந்த ஈழத்து வயல் வெளிகளில், தமிழர்களின் குருதி வெள்ளமாகப் பாய்கிறது.

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 2

இலங்கையில் தமிழர்கள் வாழமுடியாது! தனிஈழம் அமைவதுதான் ஒரே தீர்வு!

2009 - 2010ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பொது விவாதத்தின் போது #மதிமுக நாடாளுமன்றக் கழக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி அவர்கள் மக்க ள வையில் 13.07.2009 அன்று ஆற்றிய உரையின் விவரம்...

அவைத்தலைவர் அவர்களே, 2009-2010 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை யின்போது எனக்குப் பேச வாய்ப்பளித்ததற்கு எனது நன்றி. உலகப் பொருளா தார வீழ்ச்சியால் இந்தியப் பொருளாதாரம் மந்தம் தட்டியுள்ள நிலையில் சமர்ப் பிக்கப்பட்டு உள்ள இந்த நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றத் தை அளிக் கிறது.

மாதச் சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தினருக்கு - தினக்கூலி பெறும் ஏழை மக்களுக்கு ஒரு சிறிய வரி விலக்கு மட்டுமே அளித்து இருப்பது மிகுந்த ஏமாற் றத்தைத் தருகிறது. ஆகவே,இவர்களுக்கு அரசு முழு உதவி செய்ய வேண்டும்.

வரலாற்று உண்மைகளை மறைப்பது ஏன் ?

“அறிவு பூர்வமான வெறுப்பு மிகவும் மோசமானது”

திராவிடர் கழகம்-தி.மு.கழகம் இரண்டு மட்டுமே திராவிட இயக்கக் கட்சிகளா கும் என்கிற அரிய கண்டுபிடிப்பை அண்ணன் எல்.ஜி. அவர்கள் வெளியிட் டிருக்கிறார்கள்.

“இன்று எத்தனையோ கட்சிகள் திராவிட என்ற சொல்லை தங்கள் கட்சிகளோ டு இணைத்துக் கொண்டிருக்கின்றன.என்னைப் பொறுத்தவரை இரண்டே இரண்டு கட்சிகள் தான் திராவிட இயக்கக் கட்சிகள் என்று ஏற்றுக் கொள்வேன். ஒன்று திராவிடர் கழகம்,மற்றொன்று திராவிட முன்னேற்றக் கழகம்.குறிப்பாக அ.தி.மு.க. திராவிட இயக்கக் கட்சி என்று ஏற்றுக்கொள்ள வில்லை.” - குடும்ப நாளேடு முரசொலி (7.11.2013)

தி.க.; தி.மு.க.வை ஏற்றுக்கொள்வது, சரி.அ.தி.மு.க. திராவிட இயக்கக் கட்சி என்று ஏற்றுக் கொள்ள வில்லை என்பதும் மிகச் சரியானதே.

Saturday, November 23, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 1

பட்ஜெட் இங்கே! ஈரோடு - செங்கோட்டை புதிய இரயில் எங்கே?

#மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி மக்களவையில் 07.07.
2009 அன்று இரயில்வே பட்ஜெட் குறித்த விவாதத்தில் பங்கேற்று ஆற்றிய உரை...

இரயில்வே பட்ஜெட் குறித்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்று வதற்கு வாய்ப்பளித்த அவைத் தலைவர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து,உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் வைகோ அவர்களின் தலைமையில் இயங்கு கின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக என்னுடைய உரையை நிகழ்த்துகிறேன்.

மத்திய அமைச்சர் 57 புதிய இரயில்களையும், ரூ. 2921 கோடி மதிப்பில் புதிய வழித்தடங்களை உருவாக்கவும், ரூ. 1750 கோடி மதிப்பில் அகலப்பாதை வழித் தடங் களாக மாற்றுவதற்கான திட்டத்தினையும், ஒரு நகரத்திலிருந்து அடுத்த நகரத்திற்குச் செல்லும் பாதையில் எங்கும் நின்று செல்லாத சிறப்பு இரயில் களை அறிமுகப்படுத்து வதற்கும், குறிப்பாக சென்னையிலிருந்து எங்கும் நில் லாமல் நேரடியாக டெல்லி செல்வதற்கு சிறப்பு இரயிலை இயக்கவும் திட்ட மிட்டு உள்ளதாக இரயில்வே நிதிநிலை அறிக்கை தெரிவிக்கிறது.

புரட்சிக்கான தீப்பொறியை அடைகாக்கும்

புரட்சிக்கான தீப்பொறியை அடைகாக்கும்

தஞ்சை விளாரில் எழுந்து நிற்கும்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்!

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்புவிழா நிகழ்ச்சி 9.11.2013 அன்று நடைபெற்றது. #மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர் களின் உரை 

அடடா தமிழா எடடா படை நீ
அடிமை விலங்கை உடைத்தெறி
இடடா ஆணை கொடடா செந்நீழ
இனத்தைக் காப்போம் நாள் குறி
நடடா களத்தே எடடா கைவாள் நடடா
உன் பகைவன் தலைபறி
தொடடா போரை விடடா கணைகள்
சுடடா எழட்டும் தீப்பொறி
சுடடா எழட்டும் தீப்பொறி

கால்நடைகளுக்குப் பரவும் கோமாரி நோயைத் தடுக்கக் கோரி- மதிமுக ஆர்ப்பாட்டம்!

கால்நடைகளுக்குப் பரவும் கோமாரி நோயைத் தடுக்கக் கோரியும், போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரியும், #மதிமுக ஆர்ப்பாட்டம்! #வைகோ அறிவிப்பு

பட்ட காலிலேயே படும்; கெட்ட குடியே கெடும் என்ற மொழி, தமிழ்நாட்டு விவ சாயிகளின் வாழ்வில் உண்மை ஆகி வருகிறது. பருவ மழை பொய்த்ததால், கடந்த சில ஆண்டுகளாக வேளாண்மைத் தொழிலில் நட்டம் ஏற்பட்டு, வேத னையின் விளிம்பில் இருக்கும் விவசாயிகளைக் காப்பாற்றி வந்தது கால் நடைகள்தாம். தமிழ்நாட்டு விவசாயக் குடும்பங்களில், கால்நடை வளர்ப்பு என்பது, வாழ்வோடு இரண்டறக் கலந்தது ஆகும். விவசாயிகளை வாழ வைத்த கால்நடைகள் இன்று, அவர்களின் கண்ணீருக்கும், ஆற்ற முடியாத பெருந் துய ரத்திற்கும் ஆளாக்கி விட்டன. 

Friday, November 22, 2013

மதுரை விமான நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துக;

மதுரை விமான நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துக; முழுமையான அளவில் பன்னாட்டு விமான நிலையமாக இயங்கிட ஆவன செய்திடுக! பிரதமருக்கு #வைகோ வேண்டுகோள்!

தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும், தென் தமிழ்நாட்டின் மையமா கவும் திகழ்கின்ற மதுரை மாநகரில் அமைந்து உள்ள விமான நிலையத்தில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, பன்னாட்டு விமான நிலையமாக முழு அளவில் தரம் உயர்த்திடக் கோரி தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தினர் தங் களுக்கு விடுத்து உள்ள கோரிக்கை விண்ணப்பத்தினை, இத்துடன் இணைத்து உள்ளேன். 

தென் தமிழ்நாட்டில், மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங் களின் மையமாகத் திகழ்கின்ற மதுரை மாநகரம், வரலாற்றுச் சிறப்பு மிக்க தாகும்.

Thursday, November 21, 2013

வெற்றிக் கனியைப் பறிப்பதற்கு களத்தில் பம்பரமாய்ச் சுழலுவோம்!

வெற்றிக் கனியைப் பறிப்பதற்கு தேர்தல் களத்தில் பம்பரமாய்ச் சுழலுவோம் என்று விருதுநகர் #மதிமுக் மாநாட்டில் கொள்கை விளக்க அணித் துணைச் செயலாளர் ஈட்டிமுனை இளமாறன் உரை ஆற்றினார். அவரது உரை வரு மாறு:

வெற்றிக்கு கட்டியம் கூறும் விருதுநகர் மாநாட்டில் தலைமைப்பொறுப்பேற்று
இருக்கின்ற தகுதிவாய்ந்த தலைவர்,எட்டுத் திக்கிலேயும் இயக்கத்தின் செய்தி களை கொண்டு சேர்க்கின்ற இமயம் தொலைக்காட்சியின் நிறுவனர் மாநாட் டினுடைய தலைவர் அண்ணன் ஜெபராஜ் அவர்களே, கற்றவர் சபையில் நிறை குடமாய், கன்னித் தமிழ்நாட்டின் வரைபடமாய் நற்றமிழர் நாட்டின் நன்னம்பிக் கை முனையாய், திராவிடர் சமுதாயத்தின் மிச்சமாகவும், எச்சமாகவும்,நாளை ய தமிழ் சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், எங்கள் இதயக் கோவி லில் எந்நாளும் குடியிருக்கிற எங்கள் கழகத்தினுடைய பொதுச் செயலாளர், இந்திய நாடாளுமன்றம் மீண்டும் புதிய மாற்றத்தை காணப் போகிற அரசியல் அத்தியாயத்தை மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்ற வகையில் களப்பணி ஆற்ற இருக்கின்ற கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணாச்சி அவர்களே, வெள்ளம்
போல் தமிழர் கூட்டம் அவர் வீரம்கொள் கூட்டமென மாற்றாரும் போற்றத் தக்க வகையில் நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிற
கழகத்தினுடைய தோழர்களே, உங்கள் அத்துனைபேருக்கும் பணிவு கலந்த
வணக்கத்தை முன்வைக்கின்றேன்.

மாதிரிப் பள்ளிகள் எனும் மாயை

சங்கொலி தலையங்கம்

உலக மயம், தனியார் மயம், தாராளமயம் நாட்டின் அனைத்து சமூக, அரசியல்
மற்றும் பொருளாதாரத் துறைகளில் சீரழிவை கொண்டுவந்தது போலவே, கல் வித்துறையிலும் புகுந்து சிதைத்து வருகின்றனர். மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் போல கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு இவையும் இன்றியமையாதன ஆகும். ஆனால், இவை இன்று அரசின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கப்பட்டு பெரும்பாலும் தனியார் கைகளுக்கு போய் விட்டன. அரசியல் சட்டத்தின் பிரிவு 21 அடிப்படை உரிமைகள் குறித்து பேசு கிறது. இதில் சட்டப் பிரிவு 21ஏ என்பது அரசியல் சட்டத்தின் 86 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டு, 2002 ஆம் ஆண்டில், கல்வியும் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்கப்பட்டது.

இதன்படி,நாட்டிலுள்ள 6வயது முதல் 14வயது வரை உள்ள குழந்தைகள் அனை வருக்கும் அடிப்படைக் கல்வி புகட்டுவது என்பது சட்டப்பூர்வமாக்கப் பட்டது. பின்னர் 2009 ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டு, 2010 ஏப்ரல் 1 ஆம் நாள் நடை முறைக்கு வந்த கல்வி உரிமைச் சட்டம், (Right to Education Act-RTE)  குழந்தை களின் கல்வி உரிமையை நடைமுறைப்படுத்துவதற்கு சில வழிகாட்டுதல் களை அளித்தது. இதன் மூலம் தனியார் மய கல்விக்கு ஊக்கம் அளிக்கப்பட்ட துடன், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஏழை, எளிய குடும்பங் களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று இச்சட்டம் தெரிவிக்கிறது.

சுங்கச் சாவடி வழக்கு நிலுவையில் உள்ளது , வசூல் செய்வதை நிறுத்துக

தூத்துக்குடி- திருநெல்வேலி சாலையில் புதுக்கோட்டையில் உள்ள சுங்கச் சாவடி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், பணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என #மதிமுக வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மதிமுக மாவட்டச் செயலர் எஸ். ஜோயல் மாவட்ட ஆட்சிய ருக்கு அனுப்பியுள்ள கோரிக்க மனு விவரம்:

தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை அரு கே  தட்டப்பாறை விலக்கு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி யில் விதிமுறைகளை மீறி வாகனங்களுக்கு பணம் வசூல் செய்யப்பட்டு வந்த து தொடர்பாக மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப் பட்டுள்ளது. 

Wednesday, November 20, 2013

ஓயாத அலையாய் வைகோ இயக்கத்தை இயக்கி வருகிறார்!

ஓயாத அலையாய் #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ இயக்கத்தை இயக்கி வருகிறார் என்று மாநில இளைஞர் அணிச்செயலாளர் வே.ஈஸ்வரன் “மாறும் தமிழகம்” என்ற தலைப்பில் விருதுநகர் மாநாட்டில் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

மழை சொன்னது நான் பலமானவன் என்னோடு மோதாதே, அலை சொன்னது
நான் பலவீனமானவன்தான், ஆனால் மோதிக்கொண்டே இருப்பேன். ஆயிரம்
ஆண்டுகள் கழிந்தது. மழை அங்கே இல்லை. அலை அங்கே இருந்தது.ஓயாத அலையாய் இந்த இயக்கத்தை இயக்கி வருகின்ற கழகத்தின் பொதுச் செய லாளர் வைகோ அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம்.


மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பை வலியுறுத்தி கம்பத்தில் போராட்டம்

மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பை வலியுறுத்தி பொதுமக்களை திரட்டி கம்பத்தில் வருகிற 4–ந்தேதி போராட்டம் நடைபெறும் என்று #வைகோ அறிவிப்பு 

மதுரை புதூரில் #மதிமுக  பிரமுகர் திருமண விழா இன்று (20.11.13 ) நடைபெற் றது. இதில் மாநில பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசிய தாவது:–

ம.தி.மு.க.வில் மிக பற்றுள்ள இந்த குடும்பத்தின் திருமண விழாவில் வரலாற் று சிறப்புமிக்க ஒரு கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழகத்தின் முது கெலும்பாக திகழும் மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க மத்திய அரசு நிபுணர் குழு கஸ்தூரி ரங்கன் தலைமையில் ஆய்வு செய்து ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

பள்ளி விளையாட்டு மைதானம் சமூக சீர்கேடுகளின் களமா ?

கிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் சமூக சீர்கேடுகள் நடைபெறுவதாகவும், அவற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும்

கிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் சமூக சீர்கேடுகள் நடைபெறுவதாகவும், அவற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி மதிமுக நகர செயலாளர் ஆர். அசோக்குமார் ஆட்சியர் டி.பி.ராஜேஷிடம் மனு அளித்தார்.

தமிழரின் மான உணர்வின் மரகதப் பேழை!-பாகம் 1

முள்ளிவாய்க்கால் முற்றம்,ஈழத்திற்கு கலங்கரை விளக்கம் தமிழரின் மான உணர்வின் மரகதப் பேழை என்று தஞ்சையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால்
நினைவு முற்றத் திறப்பு விழாவில் #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ அவர்கள் பேருரை ஆற்றினார். அவரது உரை வருமாறு:

தாயகக் கனவினில் சாவினைத் தழுவிய சந்தனைப் பேழைகளை, பேயிருள்
சூழ்ந்திடும் கானக மீதினில் பகைவர்களைப் புதைகுழிக்கு அனுப்பிய தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை,இதுவரை உலகம் கண்டும் கேட்டுமிராத வீரச்சமர்களை நடத்தி, யானை இறவில் சிங்களவனைப் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓட வைத்து, போர்க்களங்களின் வரலாற்றில் வியத்தகு சாதனைகளை நிகழ்த்திக் காட்டி, ஓயாத அலைகளில்,அக்னி அலைகளில், சிங்களர் படைகளைச் சின் னாபின்னம் செய்து சிதறடித்து, ஆர்வில் ரைட், வில்பர் ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டு பிடித்தார்கள் என்றால், விமான ஓடுதளத்தையே ஒரு பாயைப் போலச் சுருட்டி எடுத்துக் கொண்டு அவர்கள் அடர்ந்த காட்டுக்கு உள் ளே இருந்துகொண்டு ஏவிய விமானங்கள்,கொழும்பு வரை சென்று தாக்குதல்
நடத்தியதால், மண்ணுக்குள் இருந்து ரைட் சகோதரர்கள் வீரவணக்கம் செலுத் தக்கூடிய வரலாறைப் படைத்த பிரபாகரன் அவர்களின் வீரப்படைகளை, ஏழு அணு ஆயுத வல்லரசுகளின் உதவியோடு, இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு,வஞ்சகத்தோடு தந்த பேருதவியால்,ஆயுதங்களால், அள்ளிக் கொடுத்த ஆயிரக்கணக்கான கோடிப் பணத்தால், எவராலும் வீழ்த்த முடியாத சதியால் வீழ்த்தி விட்டது.

நவம்பர் 21: உலக மீனவர் தினம்! - வைகோ அறிக்கை

நவம்பர் 21: உலக மீனவர் தினம்!

கடலில் இரத்தமும் கண்ணீரும் சிந்தாத நாளே,அவர்களுக்குப் பொன்னாள்!

#வைகோ அறிக்கை

மீனவர்கள் கடலில் தங்களுக்கு ஏற்படும் தொழில் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, 40 நாட்டு மீனவப் பிரதிநிதிகள் 21.11.1997 டில்லியில் கூடி விவாதித்து, உலக அளவில் இணைந்து மீனவர் உரிமைக்குக் குரல் கொடுத்துப் போராட, மீன் பிடித் தொழிலாளர்கள் பேரவை’ என்ற அமைப்பை உருவாக்கி னார்கள். அதன் மூலம் மீனவர்களுக்கு எதிராக அரசுகள் கொண்டு வரும் திட் டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்தல் மற்றும் பாரம்பரிய மீன வர்கள், கடல் மாசு அடைந்து சுற்றுச்சூழல் பாதிப்பால் மீன் வளம் குன்றி மீன் பிடித் தொழில் அழிவுப்பாதையில் செல்வது உள்ளிட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடிவு எடுக்கப்பட்ட நாளே, நவம்பர் 21 ‘உலக மீனவர்கள் தினமாக’ அறிவிக்கப்பட்டது.

Tuesday, November 19, 2013

ஈரோடு மாவட்ட மறுமலர்ச்சி பயணம் -2ம் கட்டம் - பாகம் 2

ஈரோடு மாவட்டம், கொடுமுடியில், "மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சி பய ணம்' இரண்டாம் கட்ட நிகழ்ச்சியில், நேற்று (18.11.13), #மதிமுக பொதுச்செய லாளர் #வைகோ பங்கேற்றார். ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி தலைமை வகித்தார். மழைக்கு இடையே வைகோ பேசியதாவது:

நாடு முழுவதுமாக கரும்பு விவசாயிகள் நலன் கருதி, கரும்பு டன்னுக்கு, 3,500 ரூபாய், வயல் விலையாக நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளின் கரும் புக்கான பணத்தை, 15 நாளில் ஆலைகள் வழங்க வேண்டும்.

உள்நாட்டு கரும்பு விவசாயிகள் நலன் கருதி, வெளிநாடுகளின் இருந்து கச்சா சர்க்கரை இறக்குமதிக்கு அரசு தடை விதிக்க வேண்டும். இறக்குமதி வரியை, 100 சதவீதம் உயர்த்த வேண்டும்.

வைகோ மீண்டும் பிறந்திருக்கிற மீட்பர் அவர் வழி மீனவ சமுதாயம் நடக்கும்!

பேரறிஞர் அண்ணா அவர்களின் 105 ஆவது பிறந்தநாளையொட்டி, செப்டம்பர் 15 அன்று விருதுநகரில் நடைபெற்ற #மதிமுக  மாநாட்டில்,“மீனவர் கொடுந்து யர்” என்ற கண்காட்சியைத் திறந்து வைத்து அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்
பேராசிரியை ஃபாத்திமா பாபு ஆற்றிய உரை...

மாநாட்டுக்கு தலைமை ஏற்றிருக்கிற அருமைச் சகோதரர் இமயம் ஜெபராஜ்,
கழகத்தின் ஒப்பற்றத் தலைவர் பெருமரியாதைக்குரிய அண்ணன் வைகோ உள்ளிட்ட அனைவருக்கும் எனது வணக்கங்கள்.மாநாட்டு வாழ்த்துகளும் கூட.

இன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு சாதாரண அரசியல் கட்சி என்பதைத் தாண்டி, ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாகவே, மக்கள் பார்க் கின்றார்கள். பாராட்டுகின்றார்கள் என்றால், அதற்கு காரணம், எங்கெல்லாம் ஏழை மக்களின் அழுகுரல் கேட்கின்றதோ, எங்கெல்லாம் உழைக்கும் வர்க்கத் தின் உரிமைப் போராட்டங்கள் நடக்கின்றதோ,அங்கெல்லாம் முதல் ஆளாகக்
களமிறங்கி,அவர்களுக்காக உரிமை கேட்கும் குரலாய்,வலிமை சேர்க்கும் சக் தியாய் அருமைத் தலைவர் வைகோ அவர்கள் செயல்பட்டு வருகின்றார் கள்.

ஈரோடு மாவட்ட மறுமலர்ச்சி பயணம் -2ம் கட்டம் - பாகம் 1

#மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒன் றிய பகுதியில் ‘‘மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சி பயணம்’’ நேற்று (18.11.13 ) மேற்கொண்டார்.

கொடுமுடி அருகே உள்ள நடுப்பாளையத்தில் இருந்து வைகோ தனது பயணத் தை தொடங்கினார். இந்த பயணத்துக்கு ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி தலைமை தாங்கினார்.

இந்த பயணத்தின்போது வைகோ வெள்ளோட்டம் பரப்பு, சாணார்பாளையம், பழனிகவுண்டன்பாளையம், பாசூர், கொம்பனை, ஊஞ்சலூர், கொடுமுடி உள் பட பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து பேசினார். பயணத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள்

தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம் - வைகோ பங்கேற்பு

தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம் #வைகோ பங்கேற்பு

அகில இந்திய அளவிலான கரும்பு விவசாயிகள் சங்கப் போராட்டம், மறு மலர்ச்சி தி.மு.க.வின் ஆட்சிமன்றக் குழுச் செயலாளரும் ஈரோடு நாடாளும ன்ற உறுப்பினருமான அ.கணேசமூர்த்தி தலைமையில் வரும் 12.12.2013 வியாழக்கிழமை அன்று டெல்லியில் மிகப் மிகப்பெரும் அளவில் நடைபெற இருக்கிறது.

Monday, November 18, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 30

நாள்:-09.12.2008

தமிழக அரசியல் தலைவர்களை, ‘கோமாளிகள்’ என்ற இலங்கைத் தளபதி யைக் கண்டியுங்கள்!

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இலங்கை இராணுவத்தின் தலைமைத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன் சே கா, மிகுந்த ஆணவத்தோடும், திமிரோடும் தெரிவித்து இருக்கின்ற கருத்துகள், இலங்கை அரசின் அதிகாரபூர்வ இதழான ‘சண்டே அப்சர்வர்’, 2008 டிசம்பர் ஏழாம் நாளிட்ட இதழில் வெளியாகி இருப்பதை, மிகுந்த வேதனையோடு தங் களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

‘‘தமிழ் நாட்டு அரசியல் கோமாளிகள் சொல்லுகின்ற கருத்துகளை, காங்கிரஸ்
தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செவிமடுக்காது; என வே, போர்நிறுத்தம் செய் யுமாறு இலங்கை அரசை இந்திய அரசு ஒருபோதும் கேட்டுக்கொள்ளாது’ என்று அவர் கொக்கரித்து உள்ளார்.

விழும்புரம் மாவட்டத்தில் ரூபாய் 40 இலட்சம் தேர்தல் நிதி வழங்கப்பட்டது-படங்கள்

விழுப்புரம் வடக்கு-தெற்கு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநில #மதிமுக வளர்ச்சி நிதி-தேர்தல் நிதி பொதுக்கூட்டம், விழும்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சியில் நேற்று (17.11.2013) நடைபெற்றது. இதில் விழுப்புரம் வடக்கு-தெற் கு மாவட்டங்களின் சார்பாக ரூபாய் 40 இலட்சம் தேர்தல் நிதியாக பொதுச்செய லாளர் #வைகோ அவர்களிடம் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கழகப் பொருளாளர் டாக்டர் இரா.மாசிலாமணி, அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர் மு.செந்திலதிபன், வெளியீட்டுச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், தொழிலாளர் முன்னணித் தலைவர் புதுவை செ.முத்து, மாவட்டச் செயலாளர்கள் விழுப்புரம் வடக்கு-க.நடராசன், தெற்கு-செஞ்சி ஏ.கே.மணி, புதுச்சேரி ஹேமா பாண்டுரங்கன், கடலூர் என்.இராமலிங்கம், உளுந்தூர்பேட்டை பேரூராட்சித் தலைவர் ஜெய்சங்கர் மற்றும் முன்னணி யினர் கலந்துகொண்டடினர்.

ஈரோடு ,திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக மறுமலர்ச்சிப் பயணம்

#மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ அவர்கள் ஈரோடு ,திருப்பூர் மாவட் டத்தில் இரண்டா வது கட்டமாக மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணத் தை இன்று 18.11.2013 மற்றும் நாளை 19.11.2013 நாட்களில் மேற்கொள்கிறார்.

விழுப்புரம் மாவட்ட தேர்தல் நிதியளிப்புக் கூட்டம்

விழுப்புரம் தெற்கு மாவட்ட மதிமுக சார்பில் தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நேற்று (17.11.13) நடைபெற்றது. இதில் #வைகோ பேசியது:

நவம்பர் 12-ல் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. ஒரு சிலர் மட்டுமே பங்கேற்றனர். ஒரு சில இடங்களில் மட்டுமே கடையடைப்பு செய்தனர். முழு கடையடைப்புக்கு அதிமுக, திமுக ஆதரவு தரவில்லை.

இங்கிலாந்து நாட்டு பிரதமர் டேவிட் கேரூன் ஈழத்தின் வடபகுதியில் உள்ள யாழ்பாணத்துக்குச் சென்று பார்வையிட்டார். தமிழர்கள் தங்கள் கணவர், மகன் கள் 5,7 ஆண்டுகளாக காணவில்லை. நிலம், வீடுகளை இழந்து விட்டோம் என்று கதறி அழுதனர்.

Sunday, November 17, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 34

நாடாளுமன்றத்தில் தலைவர் வைகோ அவர்கள் 1978 ஆவது ஆண்டிலிருந்து
2002 ஆம் ஆண்டு வரையில் ஆற்றிய பணிகளையும், தமிழ்நாட்டிற்காக எழுப் பிய உரிமைக் குரல்களையும் ஆவணப்படுத்தும் இந்தக்கட்டுரைத் தொடர் நிறைவு கட்டத்தை எட்டி இருக்கின்ற பொழுது, தலைவர் வைகோவின் மிகமிக முக்கியமான நாடாளுமன்றக்கோரிக்கை குறித்து பதிவு செய்வது இன்றியமை யாததாகும்.

ஆம்! சேதுக்கால்வாய்த் திட்டம் பற்றிதான் குறிப்பிடுகிறோம்.தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் சேதுக்கால்வாய்த் திட்டம், பேசப்பட்டது மறுமலர்ச்சி தி.மு .க. உருவானதற்கு பின்பு தான் அதிகம்.

தமிழ்நாடு முழுவதும் சேதுக்கால்வாய்த் திட்டம் என்றால் என்ன? அது எவ் வா று தமிழகத்திற்கு வளம் சேர்க்கும் என்று 1994 ஏப்ரல் 16 எழுச்சிப் பேரணியில்
வரலாற்றுச் சிறப்புமிக்க பிரமாண்ட பொதுக்கூட்டம் மெரினா கடற்கரையில்
நடந்தபோது, தலைவர் வைகோ எடுத்துக்காட்டினார். நான்கே ஆண்டுகளில் அதே கடற்கரையில் 1998 செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, மறுமலர்ச்சிப் பேரணி பொதுக்கூட்டத்தில் இந்தியாவின் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பேயி அவர்களை சேதுக்கால்வாய்த் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற் றும் என்று பிரகடனம் வெளியிடச் செய்தார்.

ஈழம் என்றால் வைகோ வைகோ என்றால் ஈழம்!

ஈழம் என்றால் #வைகோ , வைகோ என்றால் ஈழம்!

விருதுநகர் மாநாட்டில் கவிஞர் மணிவேந்தன் உரை

கருணை சமுத்திரம், காஞ்சி சரித்திரம்,
உலகை வியக்க வைத்த விசித்திரம்
அறிஞர் பெருந்தகை அண்ணா
அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
கர்மவீரர், ஏழைப் பங்காளர் காமராசர்
கருத்தரித்த பூமியில் நடைபெறுகிற
மாநாட்டின் நாயகன்,

வைகோ ஈழத்தில் பிறந்திருந்தால்
அவர்தான் பிரபாகரன்.
பிரபாகரன் தமிழகத்தில் பிறந்திருந்தால்
அவர்தான் வைகோ என்று

நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவர் இடிப்பு -தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் நேற்று (16.11.13) மாவட்ட தலைநகரங்களில் #மதிமுக வினர் ஆர்பாட்டம் செய்தனர்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் 

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மதிமுக சார்பில், கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செய லர்கள் டி.ஜி.மாதையன் (கிருஷ்ணகிரி), சம்பத் (தருமபுரி) ஆகியோர் தலைமை வகித்தார்.

கொட்டும் மழையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதிமுகவினருடன் தமிழ் ஆர்வலர்களும் பங்கேற்றனர்.

Saturday, November 16, 2013

அணு உலைகள் நாட்டுக்கு வரமல்ல... சாபம்!

பேரறிஞர் அண்ணா அவர்களின் 105 ஆவது பிறந்தநாளையொட்டி, செப்டம்பர் 15 அன்று விருதுநகரில் நடைபெற்ற #மதிமுக மாநாட்டில், “அணு உலை பேர ழிவு” என்ற கண்காட்சியைத் திறந்து வைத்து அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் டாக்டர் ரொஹையா ஆற்றிய உரை...

தலைவர் அவர்களுக்கும், மேடையில் அமர்ந்திருக்கும் கழக முன்னோடிகளுக் கும், மாநாட்டில் கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் என் அன்பு காலை வணக்கம்.

அணு உலை விபத்தால் மனிதர் களுக்கும், இயற்கைக்கும் ஏற்பட்ட பாதிப்பு களை பேரழிவுகளை புகைப்படக்கண்காட்சியாக நாம் மாநாட்டில் வைத்தி ருக் கிறோம். அணு உலை விபத்தால் மனிதர்களுக்கு உடல் ரீதியாக மனரீதியாக ஏற்படும் பிரச்சினை களை உடனே பார்ப்பவர்கள் மருத்துவர்கள்தான். உடனி ருந்து பார்ப்பவர்களும் மருத்துவர்கள்தான்.ஒரு மருத்துவராக நீ பார்த்த உண் மைக் காட்சிகளை, ஒரு மருத்துவராக உண்மை செய்திகளை உலகத்திற்கு
சொல் என்று விருதுநகருக்கு என்னை அழைத்திருக்கிறார் நமது தலைவர்
வைகோ அவர்கள்.

காவிரி நீர் எங்கே ?-மத்திய, மாநில, அரசுகளைக் கண்டித்து டிசம்பர் 3-ம் தேதி ஆர்ப்பாட்டம்!

காவிரி நீர் பெற்றுத்தர வலியுறுத்தி,மத்திய, மாநில, அரசுகளைக் கண்டித்து டிசம்பர் 3-ம் தேதி ஆர்ப்பாட்டம்! காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு!!

தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் பொதுக் குழுக் கூட்டம் நடை பெற்றது. குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நிறுவனருமான மணியரசன் , ம.தி.மு.க. துணை பொதுச் செயலர் துரை பால கிருஷணன், தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் சங்கங்க ளின் கூட்டமைப்புத் தலைவர் சேரன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மணிமொழியான், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் தனபாலன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில துணை பொதுச் செயலர் தமிழ் நேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மதிமுக வழக்கறிஞர் மாநாட்டு தீர்மானங்கள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர் மாநாடு இன்று (16.11. 2013 சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் சென்னை, எழும்பூர், வேனல்ஸ் சாலை, இம்ப்பீரியல் வளாகத்தில் உள்ள சிராஜ் மஹாலில் கழகச் சட்டத் துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி. தேவதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இம்மாநாட்டில் கழகப் பொதுச் செயலாளர் #வைகோ அவர்களும், மூத்த வழக்கறிஞர் திரு. கே.எஸ் . தினகரன் அவர்களும் இன்று மாலை சிறப்புரை ஆற்றவுள்ளார்கள். 

இந்த மாநாட்டின் காலை அமர்வில் பின்குறிப்பிட்டுள்ள தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
தீர்மானம் எண். 1


சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்குக!


உரிமையியல் வழக்குகளில் தமிழில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று தமி ழக அரசு 19.01.1982-இல் அரசாணை வெளியிட்டது. ஆனால், 05.01.1994 அன்று கீழமை நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழி யில் இருக்கலாம் என்று R.O.C. No. 3649/92 F  1 என்ற சுற்றறிக்கையை அப் போதைய சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகிய கே.ஏ. சுவாமி வெளியிட்டார். அந்தச் சுற்றறிக்கை காரணமாக கீழமை நீதிமன்றங்கள் தீர்ப்பு களைத் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ வழங்கி வருகின்றன. இந்நிலை மாற்றப்பட்டு அனைத்துத் தீர்ப்புகளும் தமிழில் மட்டும்தான் வழங்கப்பட உயர் நீதிமன்றமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்ட மாணவ– மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி



கோவில்பட்டியில் வருகிற 17–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) #மதிமுக சார்பில் மாணவ–மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஜோயல் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ம.தி.மு.க.மாணவர் அணி சார்பில் கல்லூரி மாணவ–மாணவிகளுக்கான பேச்சு போட்டி மாநிலம் முழுவதும் நடத்தப்படுகிறது.‘‘நாடாளுமன்றத்தில் வைகோ’’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது.

இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட மாணவர் அணி சார்பில் வருகிற 17–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கோவில்பட்டி பஸ் நிலையம் அரு கில் உள்ள சவுபாக்கியா டவர்சில் உள்ள கூட்ட அரங்கில் போட்டி நடைபெற உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ–மாணவிகள், கல்லூரி முதல்வரின் அனுமதி கடிதத்துடனோ அல்லது கல் லூரியில் படிப்பதற்கான அடையாள அட்டையுடனோ பங்கேற்கலாம்.

Friday, November 15, 2013

பொன்னியின் செல்வன் வைகோ திறனாய்வு -பாகம் 8

பொன்னியின் செல்வன் #வைகோ திறனாய்வு

நந்தினிக்கும், கரிகாலனுக்கும் வாதம் நடக்கிறது.

‘என்னைக் கொலை செய்யவேண்டும் என்று தானே இங்கு வரவழைத்தாய்? உன் கையில் இருக்கும் மீன் சின்னம் பொறித்த வாள், என்னைக் கொல்வதற் குத்தானே? என்னைக் கொன்று விடு’ என்று சொல்கிறான்.

நந்தினி கூறுகிறாள்: கொலை செய்ய வேண்டும் என்றுதான் வந்தேன்.ஆனால், எனக்குக் கடைசியாகக் கிடைத்த தகவல், ஊமைராணி மந்தாகினியின் மகள் நான் என்றும், என் தந்தை யார் என்றும் ஒரு தகவல் சொல்லப்பட்டது. அதை நினைக்கிறபோது, அந்த எண்ணம் எல்லாம் விட்டுவிட்டேன் என்கிறாள்.

கரிகாலனும், ‘நீ காலில் விழுந்து மன்றாடியும், அதைப் புறக்கணித்துவிட்டு நான் வீரபாண்டியன் தலையை வெட்டினேன். அன்றுமுதல் என் மனதில், வாழ் வில், அமைதி இல்லை. எனவே எனக்கு என் உயிரைப் போக்கிக் கொள்வது ஒன்றுதான் பிராயச்சித்தம்’ என்று கரிகாலன் சொல்கிறான்.


கொடுங்கோலன் ராஜபக்சே குற்றக்கூண்டில் நிறுத்தப்படுவான்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாழும் பெரியார், வரலாற்று
அண்ணா, எங்களின் வழிகாட்டி உலகத் தமிழர்களின் ஒப்பற்றத் தலைவர் #வைகோ அவர்களே,மேடையிலே வீற்றிருக்கின்ற கழகத்தின் முன்னோடி களே,கழகத்தின் கண்மணிகளாம் வைகோவின் வரிப்புலிகளே, உங்கள் அனை வருக்கும் என் பணிவான வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஈழ விடுதலைக்காக தீக்குளித்த தியாகிகளின் திரு உருவப் படங்களை திறந்து வைக்கின்ற அரிய வாய்ப்பினை வழங்கிய கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு மீண்டும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு, ஈழத்தில் நான்காம் ஈழப்போர் உச்சத்தில் இருந்தபொழுது குழந்தைகள், சிறுவர் கள், பெண்கள்,வயதானவர்கள், ஆதரவற்றவர்கள், நிராயுதபாணிகள் என்று எந்தவித பாகுபாடுமின்றி உலகத்திலே தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டு களை வீசி குற்றுயிரும் கொலைஉயிருமாக கொன்று குவிக்கப்பட்ட பொழுது,
தமிழகத்திலே தாய் தமிழகத்து மக்கள் அமைதியாக இருக்கின்றார்களே,ஆர்த் தெழ வில்லையே, அரசாங்கங்களும் கேளா காதினராக இருக்கின்றார் களே, உணர்ச்சி வேகத்தில் 2009 ஆம் ஆண்டு முத்துக்குமார் தனது மேனிக்கு தீயிட் டுக் கொண்டார்.அவரைத் தொடர்ந்து பள்ளப்பட்டி ரவி, சீர்காழி இரவிச்சந்திரன், சென்னை அமரேசன், சிவானந்தம், கடலூர் தமிழ்வேந்தன்,அரியலூர் இராஜ சேகரன், சிவகாசி கோகுலகிருஷ்ணன், மாரிமுத்து,பெரம்பலூர் எழில் வள வன்,புதுக்கோட்டை பாலசுந்தரம்,பண்ருட்டி சுப்பிரமணி, சுவிட்ஸர் லாந்து ஜெனிவாவில் முருகதாஸ்,மலேசியாவில் நஞ்சுண்டு இறந்த இராஜா முகமது, காஞ்சியிலே செங்கொடி, சேலத்தில் விஜயராஜ்,கடலூர் மணி போன்ற எண் ணற்ற தமிழ் உள்ளங்கள் தங்களது மேனியை தீக்கு இறையாக்கினர்.

அண்ணாவும் வைகோவும் இனியவை நாற்பது

நெல்லை மாவட்டம் கடையம் என்ற ஊரில் பாரதியார் சில காலம் தங்கி இருந் தார். அப்போது அங்கே ஒரு கோயில் திருவிழாவின்போது ஊர்மக்கள் திரளா கக் கூடியிருந்தார்கள். வழக்கம் போல் ஒரு பாகவதர் (வள்ளிதிருமணம்) கதை யைச் சுவைபடச் சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது ஒருவர் மீது சாமி வந்து ஆவேசமாக ஆடிக் கொண்டே உரத்தகுர லில்...

“அடே... பாக்கு வச்சான், வெத்தலை வச்சான், போயிலை வச்சான், பழமும்
வச்சான் ஒண்ணு வைக்க மறந்துட்டான்...சுண்ணாம்பில்லே... சுண்ணாம் பில்லே...சுண்ணாம்பில்லே... என்று கூவினார்.

இதைக் கேட்ட மக்கள் எல்லாம் ஒரே சிரிப்பாய்ச் சிரித்தார்கள். இந்தப் பாட் டைக் கேட்டுக் கொண்டிருந்த பாரதியார் எழுந்து சிரித்துக் கொண்டே ஒரு எதிர்ப்பாட்டு பாடினார்.

Thursday, November 14, 2013

பொன்னியின் செல்வன் வைகோ திறனாய்வு -பாகம் 7

பொன்னியின் செல்வன் #வைகோ திறனாய்வு

வாள் பறந்தது-நட்பு பிறந்தது

வந்தியத்தேவன் சொல்கிறான். அருள்மொழிவர்மனை எப்படிச் சந்திக்கிறான் தெரியுமா? இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் மல்யுத்தம் செய் கிறார்கள். அருள்மொழித்தேவனும் - வந்தியத்தேவனும் மல்யுத்தம் செய்கி றார்கள். இரண்டு பேரும் சமநிலையில் யுத்தம் புரிகிறார்கள். அருள்மொழித் தேவர் போர்க் கலையில் வல்லவர். வந்தியத்தேவனும் அசகாய சூரன்தான். இருந்தாலும் கொஞ்சம் அசந்து விட்டான். இரண்டு பேரும் வாள் யுத்தம் செய் கிறார்கள். அதில்கூட அருள்மொழிவர்மர் எப்படி வெற்றி பெறுகிறார் என்று கல்கி கூறுகிறார் என்றால், ‘வந்தியத்தேவன் கவனம் சிதறியது, வாள் பறந் தது’ என்று எழுதுகிறார்.

இலங்கையில் இருந்து திரும்பி வருகிறபோது, கடலில் கப்பல் மூழ்குகிறது. அந்தக் கப்பலில் வந்தியத்தேவன் இருக்கிறான். முரட்டு அராபியர்கள் அவ னைக் கைது செய்து கொண்டுபோய் விட்டார்கள். அங்கே பாண்டிய நாட்டு ஆபத்து உதவிகள் இருக்கிறார்கள். வந்தியத்தேவன் உயிருக்கு ஆபத்து. அவனை மரத்தில் கட்டி வைத்து இருக்கிறார்கள். கப்பல் தீப்பிடித்து எரிகிறது.

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் தலைவர் வைகோ மின்னல் வேகச் சுற்றுப்பயணம்

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் தலைவர் #வைகோ மின்னல் வேகச் சுற்றுப்பயணம் என்றும் இல்லா எழுச்சி... எங்கும் மக்கள் பெருவெள்ளம் மகிழ்ச்சி!

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரக்கூடிய காலம் நெருங்கிக் கொண்டு
இருக்கிறது. யார் யாரோடு கூட்டணி;இவர் அவரோடு சேருவாரா? அவர் என்ன
முடிவெடுப்பாரோ! என்று அரசியல் கூட்டணியை ஆளுக்கு ஒரு விதமாக அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிற காலகட்டத்தில், தமிழகத்திலேயே, ஏன்
இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு தலைவர்தான் தம் கட்சிச் சின்னத் திற்கு வாக்குக் கேட்டு பிரச்சாரப் பயணத்தை 2013 செப்டம்பர் 30 அன்று தூத்துக் குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் தொடங்கினார். அவர்தான் எதற்கும்,
எதிரிக்கும் எப்போதும் அஞ்சாத நம் தலைவர் வைகோ.

தூத்துக்குடி, ஈரோடு மாவட்டப் பிரச்சாரச் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து,
ஆரூயிர் தலைவர் வைகோ அவர்களை மக்கள் பிரதிநிதியாகக் கொண்டிருந்த
வரலாற்றுப் பெருமைக்குரிய விருதுநகர் தொகுதியில், அக்டோபர் 23 மாலை 4
மணிக்கு அருப்புக்கோட்டை ஒன்றியம் செட்டிகுறிச்சி கிராமத்தில் பிரச்சாரப்
பயணத்தைத் தொடங்கினார்.

நவம்பர் 16 இல் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முகப்பினை இடித்த அ.தி.மு.க. அரசை எதிர்த்து, நவம்பர் 16 இல் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் #வைகோ அறிக்கை 

அண்மைக் காலத்தில் உலகில் எங்கும் நடைபெறாத இனப்படுகொலை இலங் கைத் தீவில் சிங்களப் பேரினவாத இராஜபக்சே அரசால், தமிழர்கள் மீது நடத் தப்பட்டது. இலட்சக்ணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். பச்சிளம் குழந்தை கள், பாலகர்கள், வயது முதிர்ந்தோர், ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள், தாய்மார் கள் கொலை செய்யப்பட்டனர். எண்ணற்ற தமிழ் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் வதைக்கப் பட்டு அழிக்கப்பட்டனர். 

தமிழ் ஈழத் தாயகத்தின் சுதந்திரத்தை மீட்பதற்காக உலகம் இதுவரை கண்டும் கேட்டுமிராத வீரம் செறிந்த சமர்களை, தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் விடுதலைப்புலிகள் நிகழ்த்தினர். சிங்களப் படைகளைச் சிதறடித் து வெற்றி கண்டனர். ஆனால், சோனியா காந்தி இயக்குகிற இந்தியாவின் காங் கிரஸ்  தலைமை தாங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஈழத்தமி ழர் களின் உயிர்க்கவசமான, புலிப்படையை அழிக்கும் குறிக்கோளோடு, சிங்கள அரசுக்கு, முப்படைகளுக்குத் தேவையான ஆயுதங்களைத் தந்து, இந்தியாவின் தளபதிகளை அனுப்பி, யுத்தத்தை பல வழிகளிலும் உதவி இயக்கியது. 

Wednesday, November 13, 2013

முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் சுவர் இடிப்பு:தஞ்சையில் வைகோ ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதை பார்க்க வந்த #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ,அங்குள்ள மாவீரர் மண்ட பத்தின் முன் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். 

தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் சுவர் இன்று அதிகாலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் இடிக்கப்பட்டது.

இந்த தகவல் கிடைத்ததும் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ இன்று மதியம் 12.20 மணிக்கு தஞ்சை வந்தார். அவர் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் உள்ளே சென்றார். அப்போது போலீசார் தடுத்தனர். மதிமுக.,வினருக் கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

உலகத் தமிழர்களே, ஒருசேர எழுவோம்; நீதி கிடைக்கும் வரை போராடுவோம்!

உலகத் தமிழர்களே, ஒருசேர எழுவோம்;நீதி கிடைக்கும் வரை போராடுவோம்! என்று புன்னக்காயல் புது நன்மை விழாவில் பேசிய #மதிமுக பொதுச் செயலா ளர் #வைகோ அவர்கள் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

தட்டுங்கள்; திறக்கப்படும்!
கேளுங்கள்; தரப்படும்!
தேடுங்கள்; கண்டு அடைவீர்கள்! 

வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கின்ற வர்களே, என்னிடத்தில் வாருங்கள்; நான்
உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன். இரக்கப்படுகின்றவர்கள் பாக்கிய வான்கள்; சாந்த குணம் உடையவர்கள் பாக்கியவான்கள்.பசியோடு நீதிக்காகப் போராடு கின்றவர்கள் பாக்கியவான்கள். என்ற,விவிலியத்தின் இனிமையான மறை மொழிகளை மனதில் நிறுத்தி, மகிழ்ச்சி அலைமோதுகின்ற புன்னக் காயல் வளனார் மண்டபத்தில், உங்களையெல்லாம் சந்திக்கின்ற பேறு பெற்ற மைக்காக மகிழ்ச்சி அடைகின்றேன்.

காமன்வெல்த்துக்கு எதிரான போராட்டம்:வணிகப் பெருமக்களுக்கு நன்றி! வைகோ அறிக்கை

காமன்வெல்த்துக்கு எதிரான போராட்டம்: தமிழகத்தில் மகத்தான வெற்றி! வணிகப் பெருமக்களுக்கு நன்றி! #வைகோ அறிக்கை

மனிதகுல வரலாற்றில் அடால்ப் ஹிட்லரின் நாஜிகள் யூதர்களைக் கொன்று குவித்ததைப் போல, இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த மகிந்த ராஜபக்சேவின் சிங்களப் பேரினவாத அரசின் அநீதி யான அக்கிரமங்கள் நிறைந்த கோரக்கொடுமைகளை எதிர்த்து, தமிழக மக்கள் நேற்று (12.11.2013) நடத்திய முழு அடைப்புப் போராட்டமும், குறிப்பாக கடை அடைப்புப் போராட்டமும், இரயில் மறியல் போராட்டமும் மகத்தான வெற்றி யைப் பெற்றது.

வீரத் தியாகி முத்துக்குமார் உள்ளிட்ட இருபது தன்மானத் தமிழர்கள் தங்கள் உடம்பில் பெட்ரோலை ஊற்றி அணைத்துக்கொண்ட மரணத் தீ, தமிழர்களின் நெஞ்சில் அணையாத நெருப்பாகவே கொழுந்துவிட்டு எரிகிறது என்பதை தமிழக மக்கள் நேற்று நிரூபித்துவிட்டனர்.

Tuesday, November 12, 2013

சென்னை சென்ட்ரல் நடந்த ரயில் மறியல் போராட்டம் ஒரு தொகுப்பு

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் மதி.மு.க.பொதுச்செயலாளர் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெபராஜ், தேர்தல் பணிச் செயலாளர் கே.கழகுமார், மாவட்டச் செய லாளர் வடசென்னை-சு.ஜீவன், தென்சென்னை பி.மணிமாறன், திருவள்ளூர்-டி.ஆர்.ஆர்.மாநில மகளிர் அணிச் செயலாளர் குமரி விஜயகுமார், சீமா பஷீர், கவிஞர் கோட்டைச்சாமி, ஆவடி அந்திரிதாஸ், டி.சி.இராஜேந்திரன், பூவை, மு.பாபு, கவிஞர் மணிவேந்தன், பூவை து.கந்தன், பகுதிச் செயலாளர்கள்: எழும் பூர்-தென்றல் நிசார், வேளச்சேரி-சு.செல்வபாண்டியன் ஆயிரம்விளக்கு-ரெட் சன் சி.அம்பிகாபதி, பெரம்பூர்-நா.பாஸ்கர், சேப்பாக்கம்-மார்க்கெட் சேகர், ஆர்.கே.நகர்-எஸ்.ஆர்.விசு, அண்ணாநகர்-டேவிட், திரு.வி.க.நகர்-எம்.டி.மனோ கரன, வில்லிவாக்கம்-சு.நவநீதகிருஷ்ணன் மற்றும் முராத் புகாரி, பூங்கா இராமதாஸ், வி.ஜார்ஜ், கௌசல்யா, லட்சுமி ஜீவா, சகாயஅரசி, ஜெயகுமாரி விசு, முத்துக்குமார், ஆரி, மின்னல் பிரேம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ம.தி.மு.க.வினர் இரயில் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.

மதுரை மறியல் ...குமுறிய வைகோ

மதுரையில் #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ, வைகை எஸ்பிரஸ் ரயில் முன் நின்று கட்சியினர் உடன் ஆர்பாட்டம் நடந்த்தினார்.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

வைகோ ரயில் மறியலை ஆரம்பிக்கும் முன்னதாக, மாநில உளவுத்துறை இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணி, மறியலை கைவிடுமாறு கேட்டுக் கொண்ட தோடு, வைகோவிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும் தெரிகிறது. இத னால் கோபம் கொண்ட வைகோ பதிலுக்கு, உன் உடம்பில் ஓடுவது சிங்கள ரத்தமா?, உளவுத்துறைக்கு இங்கு என்ன வேலை, உங்க வேலையை இங்கு காட்டாதீர்கள். நீ தமிழன் இல்லையா?, இறந்த தமிழர்கள் உங்கள் உறவுகளாக இருந்தால் இப்படி நடந்துகொள்வாயா? என்று கடுமையாக பேசினார்.

சென்னை சென்ட்ரல் -மதிமுக இரயில் மறியல்

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் #மதிமுக துணைப் பொதுச்செய லாளர் மல்லை சத்யா,உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெபராஜ், தேர்தல் பணிச் செயலாளர் கே.கழகுமார்,மாவட்டச் செயலாளர் வடசென்னை சு.ஜீவன், தென்சென்னை பி.மணிமாறன், திருவள்ளூர்-டி.ஆர்.ஆர்.மாநில மகளிர் அணிச் செயலாளர் குமரி விஜயகுமார், சீமா பஷீர், கவிஞர் கோட்டைச்சாமி, ஆவடி அந்திரிதாஸ், டி.சி.இராஜேந்திரன், பூவை, மு.பாபு, கவிஞர் மணிவேந்தன், பூவை து.கந்தன், பகுதிச் செயலாளர்கள்: எழும்பூர்-தென்றல் நிசார், வேளச்சேரி - சு.செல்வபாண்டியன் ஆயிரம்விளக்கு-ரெட்சன் சி.அம்பிகாபதி, பெரம்பூர்-நா.பாஸ்கர், சேப்பாக்கம்-மார்க்கெட் சேகர், ஆர்.கே.நகர்-எஸ்.ஆர்.விசு, அண் ணாநகர்-டேவிட், திரு.வி.க.நகர்-எம்.டி.மனோகரன, வில்லிவாக்கம்-சு.நவநீத கிருஷ்ணன் மற்றும் முராத் புகாரி, பூங்கா இராமதாஸ், வி.ஜார்ஜ், கௌசல்யா, லட்சுமி ஜீவா, சகாயஅரசி, ஜெயகுமாரி விசு, முத்துக்குமார், ஆரி, மின்னல் பிரேம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ம.தி.மு.க.வினர் இரயில் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.

மதுரையில் வைகை விரைவு இரயிலை மறித்த வைகோ

மதுரையில் வைகை விரைவு இரயிலை மறித்த #வைகோ

இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்பதை வலி யுறுத்தியும், இலங்கையில் காமன்வெல்த் நடைபெற துணைபோன இந்திய அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு மற்றும் இர யில் மறியல் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மதுரையில் மறுமலர்ச்சி தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் ஆயிரக்கணக் கான தோழர்கள் மதுரையில் இரயில் நிலையம் சென்று, இன்று (12.11.2012) காலை மதுரையிலிருந்து சென்னை புறப்பட்ட வைகை விரைவு இரயிலை மறித்து கைது செய்யப்பட்டனர்.

மாவட்டக் கழகச் செயலார்கள்: மதுரை மாநகர் - புதூர் மு.பூமிநாதன், தேனி-சந்திரன், மதுரை புறநகர் கிழக்கு -வீர.தமிழ்செல்வன், மதுரை புறநகர் மேற்கு-த.முனியாண்டி, அரசியல் ஆலோசைனக்குழு உறுப்பினர் எம்.டி.சின்னசெல் லம், கொள்கை விளக்க அணிச் செயலாளர் க.அழகுசுந்தரம், மாநில தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாஸ்கரசேதுபதி,மாநில மருத்துவர் அணித் துணைச் செய லாளர் டாக்டகர் சரவணன், மாநில தொழிலாளர் அணிச் செயலாளர் மக பூப்ஜான் ,மின்னல் முகம்மது அலி, உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கழகத்தினர் மறியலில் பங்கேற்று கைதாயினர்.

Monday, November 11, 2013

ஸ்டெர்லைட் வழக்கு; வைகோ மேல்முறையீடு ஏற்பு !

ஸ்டெர்லைட் வழக்கு; #வைகோ மேல்முறையீடு ஏற்பு !

தூத்துக்குடி நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்றுவதற்காக, கடந்த 17 ஆண்டுகளாக, நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் போராடி வருகின்ற மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், ஆகஸ் ட் 8 ஆம் தேதியன்று, டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைமை அமர்வில்,ஸ்டெர்லைட் ஆலையை இயக்கலாம் என்று வழங்கிய ஆணையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிவில் மேல்முறையீடு, விசார ணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக உச்சநீதிமன்றத்தின் நீதிபதி பட்நாயக், நீதிபதி நிஜார், நீதிபதி இப்றாஹிம் கலிஃபுல்லா ஆகிய மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற பசுமை அமர்வு, இன்று அறிவித்தது.

கோவை மெட்ரோ ரயில் ,தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும் -மதிமுக இளைஞர் அணி

மத்திய அரசால் கோவைக்கு அறிவிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக தொடங்க தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும் -#மதிமுக இளைஞர் அணி கோரிக்கை 

கோவை மாநகர் மாவட்ட மதிமுக இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட் டம் நேற்று நடந்தது. மாவட்ட இளைஞர் அணி அமைப் பாளர் அருள் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் ரத்தினசாமி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் செந்தில்குமார், கிருஷ்ண மூர்த்தி முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பா ளர் ஆனந்தகுமார் வரவேற்றார்.

நவ 12 -முழு அடைப்பு போராட்டம் தமிழகமும் முழுவதும் தயார் நிலையில்

கரூர் மாவட்டம் 

கரூரில் நவ.12-ல் #மதிமுக சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாவட்டச் செயலர் பரணி கே. மணி விடுத்துள்ள அறிக்கை:

இலங்கை அதிபர் ராஜபக்சேவை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கக் கோரி யும், இந்தியா சார்பில் ஒருவர்கூட காமன்வெல்த் மாநாட்டுக்குச் செல் லக்கூடாது என வலியுறுத்தியும் வணிகர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்திற்கு மதிமுக ஆதரவைத் தெரிவிக்கிறது.

மேலும் மதிமுக சார்பில் அன்று (நவ.12) ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. எனவே மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இதில் பங்கேற்க வேண்டும்.

செம்மொழி தமிழாய்வு பணியாளர்கள் உண்ணாவிரதம்! தலைவர் வைகோ கோரிக்கை வெற்றி!

செம்மொழி தமிழாய்வு பணியாளர்கள் உண்ணாவிரதம்!

தலைவர் #வைகோ கோரிக்கை வெற்றி!

செம்மொழி தமிழாய்வு மைய பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கடந்த 21.10.2013 முதல் எட்டு நாட்களாக உண்ணாநிலை அறப்போராட் டம் நடத்தி வந்தனர்.அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவாக தலை வர் வைகோ அவர்கள் 25.10.2013 அன்று, மத்திய செம்மொழி தமிழாய்வு மையத் தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

(செம்மொழி தமிழாய்வு மையத்துக்கு மூடுவிழாவா? வைகோ அறிக்கை )

அதன் பயனாக செம்மொழி தமிழாய்வு மைய இயக்குநர் வி.கோ.பூமா, பதிவா ளர் மு.முத்துவேலு ஆகியோர் முன்னிலையில் முத்தரப்புப் பேச்சு வார்த்தை (28.10.2013) திங்கள் காலை 11.30க்கு தொடங்கி 2.30 முடிவுற்றது.இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட பணியாளர்களின் கோரிக்கைகளைஏற்று விரைவில் நடைமுறைப் படுத்துவதற்கு உத்தரவாதம் வழங்கி கையெழுத்திட்ட கடிதத்தை வழங்கினர். அதன்பின் பணியாளர்களின் உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டது.

நாளை முழு அடைப்புப் போராட்டம்; மாணவர்களுக்கு வைகோ அழைப்பு

நவம்பர் 12 முழு அடைப்புப் போராட்டம்; மாணவச் செல்வங்களே! வெற்றி பெறச் செய்வீர்! #வைகோ அறிக்கை

இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து, அவர்களின் இரத்தம் கொட்டப்பட்ட பூமியில் கோலாகலமாக கொண்டாட்டம் நடத்தப் போகிறது மகிந்த ராஜபக்சேயின் சிங்கள அரசு. 53 காமன்வெல்த் நாடுகளின் அதிபர்கள் கூட்டம் நவம்பர் 15, கொழும்பில் தொடங்குகிறது.
அதற்கு முன்னோட்டமாக நேற்றைய தினம், காமன்வெல்த் இளைஞர் மய்யத் தையும், மக்கள் மய்யத்தையும் ராஜபக்சே தொடங்கி வைத்துள்ளார்.

பிரிவினைவாதிகளால் 30 ஆண்டுகள் அழிவையும், இரத்தக் களறியையும் தன்னுடைய நாடு சந்திக்க நேர்ந்தது என்று விடுதலைப்புலிகள் மீது பழியைச் சுமத்தி உள்ளார்.

Sunday, November 10, 2013

பொன்னியின் செல்வன் வைகோ திறனாய்வு -பாகம் 6

பொன்னியின் செல்வன் #வைகோ திறனாய்வு

விஜயாலயச் சோழனின் வீரம்


இந்தச் சூழலில், சோழ மன்னர் குடும்பத்தினரைக் கொலை செய்யத் திட்ட மிடு கிற பாண்டிய நாட்டு ஆபத்து உதவிகள் , ஒரு இடத்தில் கூடுகிறார்கள், அந்த இடம்தான் திருப்புறம்பியம் பள்ளிப்படைக் கோவில். இப்பவும் இருக்கிறது திருப்புறம்பியம். அங்குதான் சதி நடக்கிறது. இந்தத் திரும்புறம்பியத்திற்கு, ஒரு வரலாறு இருக்கிறது. இந்தத் திருப்புறம்பியம் போர்க்களம் தான் விஜயா லயச் சோழனின் வீரத்தைப் பறை சாற்றியது. விஜயாலயச் சோழனுக்கு 96 விழுப்புண்கள். ‘90 ம் சுமந்தோன்’ என விஜயாலயச் சோழனுக்கு ஒரு பெயர் உண்டு.

“எண்கொண்ட தொண்ணூற்றின்
மேலுமிரு மூன்று
புண்கொண்ட வெற்றிப் புரவலன்”

என்பது பாடல்!

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என நான் சொல்லவே இல்லை-வைகோ

மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளோடும் கூட்டணி சேரப் போவதில்லை என ராமநாதபுரத்தில் சனிக்கிழமை (09.11.13 ) நடந்த #மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் #வைகோ தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் புதிய மாவட்ட செயலராக நியமிக்கப்பட்ட ராஜாவை அறி முகம் செய்து வைத்து கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

மதிமுக எப்போதும் கொள்கையில் உறுதியாக இருக்கிற இயக்கம். வரப்போ கும் மக்களவைத் தேர்தலில் திமுக,அதிமுகவுடன் கூட்டணி வைக்கப் போவ தில்லை. எங்கள் இயக்கத்தின் கொள்கைகள், லட்சியங்கள் உள்ளவர்களோடு தான் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். இரு பெரிய கட்சிகளிடமும் பணம் இருப்பதால் அவர்கள் தான் வெற்றி பெறுவர் என்ற எண்ணத்தை வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மதிமுக உடைத்துக் காட்டும்.

தந்தைக்கூட வாக்கு கேட்காத இராமச்சந்திர ஆதித்தனார், வைகோ விற்காக மேடை அமைத்து வாக்கு சேகரித்தார்

தந்தைக்கூட வாக்கு கேட்காத இராமச்சந்திர ஆதித்தனார், #வைகோ விற்காக மேடை அமைத்து வாக்கு சேகரித்தார் 

கடந்த 16.10.2013 அன்று கயத்தாரில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 214 ஆவது நினைவேந்தல் விழாவில் வைகோ ஆற்றிய உரையில் இருந்து....

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களுடைய மூத்த மகன் இராமச்சந்திர
ஆதித்தனார் இன்று காலையில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு உடனே சென் னைக்கு விரைந்தேன். அவரது இல்லத்துக்குச் சென்றேன். நான் அந்தக் குடும் பத்தை மதிப்பவன். அவரது தந்தையை மதிப்பவன். அவரது சகோதரர், கல்வித் துறைக்கும், விளையாட்டுத்துறைக்கும் ஊக்கம் அளித்தார். கைப்பந்து ஆட்டத் தில் இந்தியாவின் புகழை உலக அரங்குக்குக் கொண்டு சென்று நிலை நிறுத்தி னாரே மறைந்த சிவந்தி ஆதித்தனார், அவர்களை நேசிப்பவன்.

வஞ்சினம் உரைப்போம்!

சங்கொலி தலையங்கம் 

இங்கிலாந்து நாட்டின் லண்டன் சேனல்-4 தொலைக்காட்சி இன்னும் என்னென் ன காணொளி காட்சிப் படங்களை ஒளிபரப்பி தமிழர் இதயத்தில் எரியீட்டியை
பாய்ச்சுமோ என்று கண்ணீர் விடுகிறது தமிழ் இனம். சேனல்-4 தொலைக் காட் சி நவம்பர் 1 ஆம் நாள் ஒளிபரப்பிய காணொளி காட்சியைப் பார்த்தவர்கள் எல் லாம் கண்ணீர்க் கடலில் மூழ்கினார்கள். தமிழ்ச் சமுதாயத்திற்கு இத்தகைய துயரம் இனி நேரக்கூடாது. நாகரிகத்தின் தொட்டிலாகத் திகழ்ந்த தொன்மை மிக்க தமிழ்க்குலத்தின் தாரகை ‘ஷோபா’ எனும் இசைப்பிரியா, சிங்கள காடை யர்களால் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சித்ர வதை செய்யப்பட்டு, படுகொலையாகிக் கிடக்கும் காட்சிகள் தமிழர் நெஞ்சில்
மட்டுமல்ல, அதைப் பார்க்கும் மனித சமூகத்தைச் சேர்ந்த அனைவர் நெஞ்சி லும் எரிமலை வெடிக்கும்.

Saturday, November 9, 2013

திராவிடர் கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை மறைவு வைகோ இரங்கல்

திராவிடர் கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை மறைவு #வைகோ இரங்கல்

திராவிடர் கழகப் பொருளாளரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் துணைத் தலைவரும், பெரியார் மணியம்மை அறிவியல்-தொழில்நுட்ப அறக் கட்டளை நிறுவன உறுப்பினருமான வழக்கறிஞர் கோ. சாமிதுரை அவர்கள், இன்று காலை சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மறை வுற்றார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் ஆறாத் துயரமும் கொண்டேன்.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகில் உள்ள முடியனூர் என்ற குக்கி ராமத்தில் பிறந்த சாமிதுரை அவர்கள், தமிழகம் முழுவதும் அறியும் வகையில் திராவிடர் கழகப் பணியின் மூலம் உயர்ந்தார். படிக்கட்டும் தமிழ் பேசும் பச்சை யப்பன் கல்லூரியிலும், சென்னை சட்டக் கல்லூரியிலும் மாணவராகக் கல்வி கற்ற காலம் முதலே திராவிடர் கழகப் பணியில் அவர் முனைந்து செயல் பட்டார்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் விழாவில் வைகோ

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் விழாவில் #வைகோ முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று 08.11.2013 வெள்ளிக்கிழமை அன்று தஞ்சையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றினார்.

புகைப்பட தொகுப்பு


பொன்னியின் செல்வன் வைகோ திறனாய்வு -பாகம் 5

பொன்னியின் செல்வன் #வைகோ திறனாய்வு

இயற்றியது யார்?

சோழ சாம்ராஜ்யத்தின் ஒளிவிளக்காகத் திகழ்ந்தவர் குந்தவை நாச்சியார். சோழ மன்னர்களின் வரலாற்றில் பெருமைக்கு உரியவர். குந்தவை பிராட்டி சிறிய வயதில் இருக்கிறபோது புலவர்கள் வந்து பாடி விட்டுப் போன உடனே, குந்தவை சொல்கிறார். ‘அப்பா, புலவர்கள் உங்களை பற்றிப் பாடிய பாடல்கள் ரொம்ப நல்லா இருந்ததே?’ என்கிறாள்.

உடன் மன்னர், ‘அப்படியா நானே என்னைப் புகழ்ந்து ஒரு பாட்டு பாடட்டுமா?’ என்று கேட்க, ‘பாடு’ என்றவுடன், இந்தப் பாட்டைப் பாடிவிட்டு ‘எப்படி இருக்கி றது?’ என்று கேட்டேன். என் முதுகில் ஏறி உட்கார்ந்து, என் கன்னத்தில் ஒரு அறை கொடுத்தாள்’ என்று சொல்லிவிட்டு, ‘இந்தப் பாட்டை யாரிடமோ குந் தவை சொல்லி இருக்கிறாள், அந்தப்புலவன் எழுதிக் கொண்டுவந்து இங்கே பாடி இருக்கிறான்’ என்கிறார்.


எதனாலே இந்த இழிநிலை! கருணாநிதிக்கு ஒரு பகிரங்க மடல்

தி.மு.க. தலைவர் மதிப்புக்குரிய கலைஞர் அவர்களுக்கு, வணக்கம்.மிகுந்த வருத்தத்துடன் இந்த பகிரங்க மடலை வரைகிறேன்.

தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஐந்துமுறை முதலமைச் சர் பதவியை அலங்கரித்தவர்; திராவிட இயக்கத்தில் தந்தை பெரியார் கரம் பற்றி, பேரறிஞர் அண்ணாவின் வழியில் நடைபோட்டு 90 வயதிலும் துடிப்பாக
இயங்குகிற தலைவர் நீங்கள் மட்டுமே.இனமானப் பேராசிரியர் உங்களைவிட
வயதில் மூத்தவர். அவரும் நீங்களும் மட்டுமே பழைய தலைவர்கள் வரிசை யில் பாக்கி இருக்கிறீர்கள். நீங்கள் குடியிருக்கும் கோபாலபுரம் இல்லம் உங் கள் வசிப்பிடம் மட்டுமல்ல, இந்திய அரசியலில் டெல்லி அதிகார பீடத்தையும் அசைத்துப் பார்க்கும் வகையில் ‘ரிமோட் கண்ட்ரோல்’ செயலகமாகவும் கோ பாலபுரம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.பழம் தின்று கொட்டை போட்ட தலை வரான தங்களின் இல்லம் எத்தனையோ சதி ஆலோசனை சபையான முற்ற மாகவும் திகழ்ந்து இருக்கிறது.

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நிகழ்ச்சி

தஞ்சையில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவில் பழ.நெடுமாறன், #வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த 2009–ம் ஆண்டு இலங்கையில் நடந்த போரில் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதன் இறுதிகட்ட போரில் உயிரிழந்தவர் களின் நினைவாக தஞ்சையை அடுத்த விளார் கிராமம் பைபாஸ் ரோடு அருகே உலக தமிழர் பேரமைப்பு சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் 2½ ஏக்கர் பரப் பளவில் கட்டப்பட்டு உள்ளது.

அதன் திறப்பு விழா கடந்த 6–ந் தேதி நடந்தது. விழாவை முன்னிட்டு அதன் தொடர் நிகழ்ச்சிகள் நேற்று (08.11.13) மாலை நடந்தது. விழாவிற்கு புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் தலைமை தாங்கினார். திறப்பு நிகழ்ச்சிக்குழு தலைவர் அய்யனாபுரம் முருகேசன் வரவேற்றார். விழாவை காசிஆனந்தன் தொடங்கி வைத்தார்.

Friday, November 8, 2013

இலங்கை காமன்வெல்த்திலிருந்து நீக்கப்பட வேண்டும் ,நவம்பர் 12 தமிழகத்தில் முழு அடைப்புக்கும் தமிழக மக்கள் தோள்கொடுக்க வேண்டும்

ஈழத் தமிழர்களை மயான பூமியாக்கிய இலங்கை காமன்வெல்த்திலிருந்து நீக்கப்பட வேண்டும்

நவம்பர் 12 ஆம் தேதி, தமிழகத்தில் கடை அடைப்புக்கும் முழு அடைப்புக்கும்
தமிழக மக்கள் தோள்கொடுக்க வேண்டும் #வைகோ அறிக்கை

இலங்கைத் தீவில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று ஒரு கருத்து உண்மையான உணர்வாளர்களாலும், 2008-2009 இல் ஈழத் தமிழ் இனப்படுகொலைக்கு உடந்தையாக செயல்பட்ட ஐக் கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அப்போது அங்கம் வகித்த தமிழகத்தைச் சேர்ந்த சில கட்சிகளாலும் தற்போது வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

Thursday, November 7, 2013

பொன்னியின் செல்வன் வைகோ திறனாய்வு -பாகம் 4

பொன்னியின் செல்வன் #வைகோ திறனாய்வு

இசையும், கலையும்

இசை வளர்த்த இடம் இந்த தஞ்சை மண்டலம். இங்கேதான், மாரிமுத்தா பிள் ளையும் அருணாசல கவிராயரும் - முத்துத் தாண்டவரும் வாழ்ந்தார்கள். இந் தத் தஞ்சை மண்ணைச் சேர்ந்தவர்கள்தான். இங்கே வாழ்ந்த ஆபிரகாம் பண் டி தர், ‘கருணாமிர்த சாகரம்’ என்கிற அற்புதமான ஒரு இசைக்காவியத்தைத் தந்து இருக்கிறார். இந்த நூலிலும் கூட, கல்கி ஆசிரியர் பழைய செய்திகளை எல்லாம் சொல்கிறார்.

காவிரி வளத்தைச் சொல்கிறார். இசையின் சிறப்பைச் சொல்கிறபோது

‘கொன்றைன் தீங்குழல் கேளாமோ தோழி
ஆம்பலென் தீங்குழல் கேளாமோ தோழி’

என்கின்ற சிலப்பதிகாரப் பாடல் வரிகளைப் பாட வைக்கிறார்.

கட்டபொம்மனின் 214 வது நினைவேந்தல்-வைகோ உரை-பாகம் 2

அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டோம்!

பாஞ்சைப் பெருவேந்தன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 214 ஆவது நினை வேந்தல் நிகழ்ச்சி அவர் தூக்கிலிடப்பட்ட கயத்தாறில் 16.10.2013 அன்று நடை பெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ ஆற்றிய வீர உரையின் சென்ற பாகத்தின் தொடர்ச்சி வருமாறு:

அக்டோபர் 16 ஆம் தேதி விசாரணை என்ற பெயரில், ஒரு போலி நாடகம்
தொடங்கியது. வீரபாண்டிய கட்ட பொம்மன் மீது ஐந்து குற்றச்சாட்டு களைச் சுமத்துகிறார்கள். ஆங்கிலத்தில் சொல்லப்பட்டதைத் தமிழில் மொழி பெயர்த் துச் சொன்னார் துபாஷி இராமலிங்க முதலியார். அதற்குக் கட்டபொம்மன் சொன்ன பதில்களை,ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப்பானர்மேனுக்குச் சொல் லுகிறார்.சுற்றிலும் வெள்ளையருக்கு ஆதரவான பாளையக்காரர்கள் உட்கார்ந் து இருக் கிறார்கள். மக்கள் கூடியிருக்கிறார்கள்.
முதல் குற்றச்சாட்டு: கிஸ்தி கொடுக்க வில்லை.

அதற்குக் கட்டபொம்மன் பதில்: கிஸ்தி கொடுப்பது எங்கள் வழக்கம் இல்லை.

இரண்டாவது குற்றச்சாட்டு: கலெக்டர் லூசிங்டன் அழைத்தும்கூட நீங்கள் போய்ப் பார்க்கவில்லை. அவரை மதிக்க வில்லை.

கோவை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மதிமுக வாகனப் பிரசாரம்:கைது

கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் வணிக வளாகங்கள் கட்டப்படுவதைக் கண்டித்து வாகனப் பிரசாரத்தில் ஈடுபட்ட #மதிமுக - வினரை போலீஸார் நேற்று (06.10.13) கைது செய்தனர்.

கோவை, குறிச்சி நகர மதிமுக சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் வே.ஈஸ்வரன் தலைமையில் ஈச்சனாரியில் புதன்கிழமை நடைபெற்ற வாகனப் பிரசாரத்தை மாவட்டச் செயலாளர் குகன்மில் செந்தில் தொடங்கி வைத்தார்.

திருப்போரூர் பகுதியில், புதிய மின் இணைப்புகள் பெற உத்தரவு வழங்கிடுக! வைகோ அறிக்கை

திருப்போரூர் பகுதியில், புதிய மின் இணைப்புகள் பெற உத்தரவு வழங்கிடுக! #வைகோ அறிக்கை

மத்திய தொல்லியல் துறையின் 2010 ஆம் ஆண்டு மக்கள் விரோதச் சட்டத் தால், திருப்போரூர், மாமல்லபுரம், உத்திரமேரூர், காஞ்சிபுரம், பல்லாவரம் பகுதியில் வாழும் மக்கள் புதிய மின் இணைப்புகள் பெற முடியாமல், தங்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதனால் மக்கள் வாழ்வுரிமை மீட்புக்குழுவை உருவாக்கி, மத்திய தொல்லியல் துறை யை எதிர்த்து பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தனர். மறுமலர்ச் சி திராவிட முன்னேற்றக் கழகமும், இப்போராட்டங்களில் பங்கு ஏற்றது. 

மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில், திருப்போரூர் பேரூராட்சி மன்றத் தலை வர் திருமதி சக்தீஷ்வரி சிவராமன், துணைத்தலைவர் திருமதி சசிகலா லோகு ஆகியோர் போராட்டக் குழுவினருடன் தலைநகர் டில்லி சென்று, தொல்லியல் துறை அமைச்சர் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளைச் சந்தித்து, பாதிப்புகளை விளக்கி கோரிக்கை மனுவை வழங்கினார்கள்.

Wednesday, November 6, 2013

கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் என 200 பேர் வைகோ முன்னிலையில் மதிமுக வில் இணைந்தனர்

கல்லூரி மாணவர்கள்  இளைஞர்கள் என 200 பேர் #மதிமுக வில் இணைந்தனர் மதிமுக தலைமைக் கழகம் தாயகத்தில் பொதுச்செயலாளர் #வைகோ முன்னிலையில், சென்னையை சார்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கழகத்தில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியின் பொது இமயம் ஜெபராஜ், வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், பேராசிரியர் முனுசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


பொன்னியின் செல்வன் வைகோ திறனாய்வு -பாகம் 3

பொன்னியின் செல்வன் #வைகோ திறனாய்வு

தக்கோலப் போர்

இந்த வீர நாராயணம் ஏரி, கடல்போல் இருக்கிறது. இந்த ஏரியை அமைத்த பராந்தகச் சக்கரவர்த்தியின் வீர மைந்தன் இளவரசர் இராஜதித்தயர் என்று, முதல் அத்யாத்திலேயே இராஜதித்தயரின் தக்கோலப் போரைப் பற்றிச் சொல் கிறார்.

வீரநாராயணம் என்று இந்த ஏரிக்கு எப்படி பெயர் வந்தது. பராந்தகச் சோழனின் பல பெயர்களில் ஒன்றான வீரநாராயணன் என்ற பெயரை சூட்டுகிறார். ‘தக் கோலப் போர்’ சோழர்கள் வரலாற்றிலேயே மிகப் பிரசித்திப் பெற்ற யுத்தம். அப்போது சோழர் குலம் கொஞ்சம் புகழ் மங்கி இருந்த காலம். பல்லவ மன்ன னுக்குத் துணையாகச் செல்கிறபோது, அரக்கோணத்துக்கு அருகில் தக்கோ லம் என்ற இடத்தில், சோழப் படைகளுக்கும், இரட்டை மண்டலத்து படைக ளுக் கும் பயங்கர யுத்தம் நடந்தது. இரட்டை மண்டலத்துக் கன்னரதேவன் பெரும் படையுடன் மோதினான்.

தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்!

தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்! விருதுநகர் மாநாட்டில் குமரி விஜயகுமார்

பேரறிஞர் அண்ணா அவர்களின் 105 ஆவது பிறந்தநாளையொட்டி, செப்டம்பர் 15 அன்று விருதுநகரில் நடைபெற்ற #மதிமுக மாநாட்டில்,“ஈழத்தில் இனப்படு கொலை” என்ற கண்காட்சியைத் திறந்து வைத்து மகளிர் அணிச் செயலாளர் குமரி விஜயகுமார் ஆற்றிய உரை...

பேரறிஞர் அண்ணாவின் 105 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடை பெற்றுக் கொண்டிருக்கிற மாநாட்டிற்கு தலைமை வகிக்கும் இமயம் ஜெபராஜ் அவர்களே, உலகெங்கும் வாழும் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம் வைகோ
அவர்களே, மேடையில் வீற்றிருக்கும் கழக முன்னோடிகளே, வருகை தந்தி ருக்கும் சகோதர சகோதரிகளே,உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக் கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தென்காசியில் ரெயில்வே மேம்பாலத்தை திறக்க கோரி கடையடைப்பு– சாலை மறியல்-மதிமுக ஆதரவு

தென்காசியில் ரெயில்வே மேம்பாலத்தை திறக்க கோரி கடையடைப்பு– சாலை மறியல்-#மதிமுக ஆதரவு 

தென்காசியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக 27 கோடி ரூபாய் செலவில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. சர்வீஸ் சாலை அமைக்கப்படாமல் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவ திப்பட்டனர்.

சுமார் 2 ஆண்டுகள் கழித்து சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது. கனரக வாக னங் கள் இலஞ்சி, குத்துக்கல்வலசை வழியாக மாற்றிவிடப்பட்டன. இலகுரக வாக னங்கள் சர்வீஸ் ரோட்டில் சென்று வருகின்றன. ஆமை வேகத்தில் நடை பெற் ற மேம்பாலப் பணி கடந்த செப்டம்பர் மாதம் நிறைவு பெற்றது.மேம்பாலப்பணி நிறைவு பெற்றதால் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்காகத்திறக்கப் படும் என எதிர்பார்த்த பொதுமக்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது.

Tuesday, November 5, 2013

கொளத்தூர் மணி மீது தேச பாதுகாப்புச் சட்டத்தை ஏவிய ஜெயலலிதா அரசின் பாசிச அடக்குமுறை

கொளத்தூர் மணி மீது தேச பாதுகாப்புச் சட்டத்தை ஏவிய ஜெயலலிதா அரசின் பாசிச அடக்குமுறை - #வைகோ  கண்டனம்

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்று ஒரு பழமொழி உண்டு. அண்ணா தி.மு.க. அரசின் பாசிச முகத்திரை கிழிந்தது. ஈழத்தமிழர்களுக்கு எதிராக, குறிப் பாக விடுதலைப்புலிகளுக்கு எதிராக கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக கடந்த காலத்தில் சர்வாதிகார பொடா அடக்குமுறையை ஏவிய முதலமைச்சர் ஜெய லலிதா, தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு என்று ஒரு கபட நாடகத்தை நடத்தினார்.

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 29

நாள்:-11.09.2008

இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் கேடு செய்யும் இந்திய அரசு!

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இலங்கைத் தமிழர்கள் மீது மிருகத்தனமாகத் தாக்குதல் மேற்கொள்ளும் இலங் கை இராணுவத்தினருக்கு அக்கிரமமாக உதவி புரிந்து வரும் இந்திய இராணுவ அதிகாரிகள், தொழில்நுட்பப் பொறியாளர்கள் ஆகியோரது ஈடுபாட் டை, தாங் கொணாத் துயரத்தோடும், மனவேதனையோடும் நான் கண்டனம் செய்கி றேன். இராஜபக்சேயின் இனவாத அரசு, இலங்கைத் தமிழர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் தொடுத்து தமிடிந இனத்தையே அழித்து ஒழிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

திண்ணைப் பேச்சிலிருந்து தெருமுனை வரையிலும்

திண்ணைப் பேச்சிலிருந்து தெருமுனை வரையிலும் #வைகோ - வைகோ - வைகோ 

மாற்றம் என்பது காலத்தின் கட்டாயமாகும். நாம் விரும்பினாலும், விரும்பா
விட்டாலும் காலத்தின் ஒவ்வொரு அசைவிலும் மாற்றத்தையும் மறுமலர்ச்சி யையும் கொண்டு வருகிறது.அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?வாய்ப் பைக் கண்டு கொள்வது - அதைக் கைப்பற்றுவது - சரியாகப் பயன் படுத்துவது

என்கிற இந்த மூன்று நிலைகளையும் மக்களிடமிருந்து கண்டு கொள்வதற்கா கவே வைகோ அவர்களின் மறுமலர்ச்சிப் பயணம் பெரிதும் பயன்பட்டது.

“வாய்ப்பு வரும்போது காலத்தைக் கருத்தில் கொண்டு, நாம் அதை அழுத்தமா கப் பற்றிக் கொள்வதற்குத் தயாராக இருக்க வேண்டும்” என்று முன்னாள் பிரத மர் பெஞ்சமின் டிஷ்ரேலி கூறுவார்.

மதுக்கரை- வாளையாறு சாலைப் பணியை நிறைவேற்ற வேண்டும்: மதிமுக வலியுறுத்தல்

மதுக்கரை-வாளையாறு இடையே கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப் பணி யை நிறைவேற்ற மாநில அரசின் ஆதரவு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என #மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் வே.ஈஸ்வரன் வலியுறுத்தியுள் ளார்.

இது குறித்து ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: செங்கப்பள்ளி-வாளை யாறு வரையிலான தேசிய நெடுஞ்சாலை-47-ஐ அகலப்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது. இதில் மதுக்கரை - வாளையாறு வரையிலான 15 கி.மீ. தொலைவிற்கு சாலையை அகலப்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டுள் ளது.