Monday, March 3, 2014

தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஜோயல் தந்தையார் மறைவு! -வைகோ அஞ்சலி

தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஜோயல் தந்தையார் மறைவு!

#மதிமுக் பொதுச்செயலாளர் #வைகோ மலர் வளையம் வைத்து அஞ்சலி

தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் எஸ் .ஜோயல் அவர்களின் தந்தையார் டி.சாமுவேல் அவர்கள் இன்று (03.03.2014) காலை 5 மணி அளவில் இயற்கை எய்தினார்.

Sunday, March 2, 2014

2016ல் மறுமலர்ச்சி தி.மு.க தலைமையேற்கும் அரசு -வைகோ பேட்டி

மார்ச் மாத ரௌத்திரம் இதழுக்கு #மதிமுக பொது செயலாளர் #வைகோ அளித்த சிறப்பு பேட்டி யில் மதிமுக அரசு அமையும் போது செய்யப்போகும் செயல்கள் குறித்து விளக்கி உள்ளார் ..

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ரௌத்திரம் இதழுக்கு மதிமுக இணையதள நண்பர்கள் சார்பாக வாழ்த்துகளை சொல்லுவோம் ... 

அந்த பேட்டியிலிருந்து குறிப்பிட்ட ஒரு கேள்வியை மட்டும் இங்கே பதிவு செய்கிறோம் ... 

முழு பேட்டியை படிக்க ரௌத்திரம் இதழ் வாங்கி படிக்கவும் ...

Saturday, March 1, 2014

கடற்கரையில் மக்கள் பெருந்திரள்-வைகோ அறிக்கை

மார்ச் 2-ஆம் தேதி மாலையில் மெரினா கடற்கரையில் மக்கள் பெருந்திரள்
#வைகோ அறிக்கை

1991 மே 21-இல் திருப்பெரும்புதூரில் நடைபெற்ற கொலைச் சம்பவத்தில் துளி யளவும் தொடர்பில்லாத குற்றமற்ற நிரபராதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் 16 ஆண்டுக்காலம் மரணக் கொட்டடியில் தூக்குமரத்தின் நிழலில் விவரிக்க இயலாத மனத்துன்பத்தால் வாடினர். மொத் தத்தில் 23 ஆண்டுகள் வெஞ்சிறையில் அவதியுற்றனர். 2014 பிப்ரவரி 18-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை ரத்து செய்தது. நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்  , ரவிச்சந்திரன் ஆகிய நால்வரும் 23 ஆண்டுகள் சிறைச்சாலையில் வாடிவதங்கினர்.

7 பேர் விடுதலை குறித்து ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பபு

விகடன் குழுமத்தின் ஜூனியர் விகடன் இதழ் இந்த வாரம் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள் ..

ஜூனியர் விகடன் இதழில் இருந்து ....