Monday, February 18, 2013

மழை தாண்டி மதுவிலக்கு நடைபயணம்

தமிழ்நாட்டில் பூரணமதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி இரண்டாம் கட்ட நடைபயணத்தை வைகோ இன்று தொடங்கியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் கோவளம் கடற்கரை கிராமத்தில் நடைபயணம் தொடங்கியது. தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்கினார். மனித நேய மக்கள் கட்சி முன்னணி தலைவர்களுள் ஒருவரான பேராசிரியர் ஹைதர் அலி, திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் நடைபயணத்தை வாழ்த்திப் பேசினார்கள்..

உலகத்தமிழ் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நடைபயண பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். தமீம் அன்சாரி தர்கா-வில் இஸ்லாமிய பெரியவர்கள் வாழ்த்துகளோடு கொட்டும் மழையில் தனது நடைபயணத்தை தொடங்கினார் வைகோ.

Saturday, February 16, 2013

வீரப்பனையே பார்க்காத அப்பாவிகளுக்கு மரணதண்ட னை - வைகோ

வீரப்பனையே பார்க்காத அப்பாவிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியினால் கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ளவர்களின் குடும்பத்தினர் நேற்று திருப்பூர் அருகே சென்னிமலையில் வைகோ, கொளத்தூர் மணி ஆகியோரை சந்தித்தனர்.

வைகோ ஆறுதல்

ஞானபிரகாஷ் ஜோஸப்பின் மனைவி செல்வமேரி, அண்ணன் இன்னாசிமுத்து, பிலேந்திரா மரிகவுடா மனைவி கமலாமேரி மகள் ஜோஸ்வின் பாஸ்கா மேரி, சைமன் அந்தோனியப்பா அண்ணன் ஜெயராஜ் மற்றும் மணி ஆகியோர் நேரில் வந்து சந்தித்த போது அவர்களுக்கு ஆறுதல் கூறிய வைகோ, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

"இந்த சம்பவத்தில் எள்ளளவும் தொடர்பு இல்லாத இவர்கள் குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளது வேதனை தருகிறது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரும் வீரப்பனை பார்த்தது கூட கிடையாது என கூறியும் கர்நாடகா மாநில சிறையில் சித்ரவதை செய்துள்ளனர். அவர்களை நிர்வாணம் ஆக்கி மின்சாரம் பாய்சியும் கொடுமைப்படுத்தி உள்ளனர். 

நான்குபேருக்கும் இந்த சம்பவத்தில் நேரடி தொடர்பு இல்லை என கூறி தடா நீதி மன்றம் மரணதண்டனை விதிக்காமல் ஆயுள் தண்டனை விதித்தது. இவர்கள் ஆயுள் தண்டனையை ரத்து செய்யதான் உச்ச நீதிமன்றம் சென்றனர் ஆனால் அங்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இவர்களின் கருணை மனுவும் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் யாரும் இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லாதவர்கள் பல கொடுமையான சம்பவத்திற்கு கூட கருணை மனு ஏற்கபட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லாத இவர்களை விடுவிக்க வேண்டும் தூக்கு தண்டனை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 

அப்பாவியான 4 தமிழர்களின் உயிர்கள் காப்பாற்றபட வேண்டும். கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு நான் மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கிறேன். இவர்களின் வழக்கறிஞர்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெற வேண்டும்" என்று வைகோ கூறினார்.

வீரப்பனை பார்த்தது இல்லை 

இதனிடையே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு பேரும் வீரப்பனை பார்த்தது கூட கிடையாது என்று கூறும் உறவினர்கள், 4 பேரையும் காப்பாற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். 

வேறொரு வழக்கில் கைது 

பிலவேந்திரன் வீரப்பனை பார்த்தது கூட கிடையாது என்று கூறும் அவரது உறவினர்கள், வேறொரு வழக்கில் அவரை கைது செய்த காவல்துறையினர், பின்னர் பாலாறு குண்டுவெடிப்பு வழக்கில் அவரை சிக்க வைத்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். 

பிலவேந்திரனை தூக்குமேடையில் இருந்து காப்பாற்ற, மரண தண்டனைக்கு எதிரான அமைப்புகளையும், இயக்கங்களையும் அவரது உறவினர்கள் நாடியுள்ளனர். இதேபோல் சைமன், ஞானப்பிரகாசம் ஆகியோரின் குடும்பத்தினரும் மரணதண்டனையை தண்டனையை எதிர்த்து போராட தயாராகிவருகின்றனர். ஈரோட்டில் நடைபெற உள்ள அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டோர் கூட்டமைப்பு மாநாட்டிலும் இந்த நால்வரின் குடும்பத்தினரும் பங்கேற்க உள்ளனர். 

சர்வதேச பொது மன்னிப்பு சபை 

இந்த நிலையில் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ள வீரப்பன் கூட்டாளிகளின் மரண தண்டனையை நிறுத்தி வைக்குமாறு சர்வதேச பொது மன்னிப்பு சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அதன் தலைமைச் செயல் அதிகாரி ஆனந்த பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த நவம்பர் மாதம் முதல், இந்தியாவில் தொடர்ந்து தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ளார். இதே போக்கு நீடிப்பது வேதனையான ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே 4 பேரின் தூக்குதண்டனையை குறைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆனந்தபத்மநாபன் தமது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.


பெட்ரோல், டீசல் விலை உயர்வு-வைகோ கண்டனம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்!

வைகோ அறிக்கை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாகக் காரணம் காட்டி, பெட்ரோல் விலை ரூ 1.90, டீசல் விலை 56 காசு என மத்திய அரசு விலை உயர்த்தியுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004 இல் பதவி ஏற்றபோது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 37.84 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ 26.28 ஆகவும் இருந்தது.

கடந்த எட்டு ஆண்டுகளில் இவை 120 சதவிகிதம் அதிகரித்து இருக்கின்றது. ஒவ்வொரு முறையும் பெட்ரோல் டீசல் விலைஉயர்வுக்குக் கச்சா எண்ணெய் விலை ஏற்றம்தான் காரணம் என்பதை ஏற்க முடியாது. ஏனெனில், இந்தியாவைவிட மற்ற நாடுகளில் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது. பெட்ரோல் விலையை பொருத்தமட்டில் இந்தியாவை விட சீனாவில் 50 சதவிகிதமும், பாகிஸ்தானில் 48 சதவிகிதமும், வங்கதேசத்தில் 58 சதவிகிதமும், மலேசியாவில் 68 சதவிகிதமும், அமெரிக்காவில் 47 சதவிகிதமும், வியட்நாமில் 49 சதவிகிதமும், நியூசிலாந்தில் 29 சதவிகிதமும் இந்திய விலையைக் காட்டிலும் குறைவாக உள்ளது.

பன்னாட்டு விசாரணை தேவை-வைகோ

ஈழத்தமிழர் படுகொலை : பன்னாட்டு விசாரணை தேவை
ஐ.நா. மனித உரிமை ஆணையர் அறிக்கையை நிறைவேற்ற வேண்டும்

வைகோ கோரிக்கை

இலங்கைத் தீவில், சிங்கள இனவாத அரசால், இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதும், தமிழ் இன அழிப்பு தொடர்வதும் குறித்து, அனைத்து உலக நாடுகளின் மனசாட்சியின் கதவுகள் தட்டப்படும் சூழலில், ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் கூட்டம், வரும் மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற இருக்கின்றது.

Thursday, February 14, 2013

பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்க- வைகோ

விவசாயிகளின் நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க காவல்துறை அடக்குமுறையைக் கைவிட்டு, பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்க!

வைகோ கோரிக்கை

கொடிய வறட்சியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு விடிவே இல்லையா? என்று ஏங்கி பரிதவிக்கும் நிலையில், கெயில் இந்தியா நிறுவனம் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களை (கொச்சி முதல் பெங்களூரூ வரை) உள்ளடக்கிய 136 கிராமங்கள் வழியாக 310 கி.மீ. தூரம் கியாஸ் குழாய்களை அமைக்கும் பணியினைத் தொடங்கி உளள்ளது.

முருகதாசன் 4 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - மெரினா கடற்கரை


Monday, February 11, 2013

தமிழக மக்களாகிய நீங்கள் எங்களை வாழ்த்துங்கள்- வைகோ

திருச்சி புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் மறைந்த மண்ணச்சநல்லூர் நடராஜனின் உருவ சிலை திறப்பு விழா மற்றும் திருச்சி மாவட்ட ம.தி.மு.க. அலுவலகத்திற்கு அவரது பெயர் சூட்டும் விழா திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள ம.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

விழாவில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு மண்ணச்சநல்லூர் நடராஜனின் உருவ சிலையை திறந்து வைத்தும், கட்சி அலுவலகத்துக்கு நடராஜன் பெயர் பொறித்த கல்வெட்டையும் திறந்து வைத்தார். அதன் பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

Sunday, February 10, 2013

முழு மதுவிலக்கு ! நமது இலக்கு !!


ஐ.நா. மன்ற அலுவலகத்தை முற்றுகை போராட்டம் -வைகோ

நாகை மாவட்டம் மயிலாடுதுறை வந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ் இன படுகொலையை செய்த இலங்கை அதிபர் ராஜபச்சேவை காங்கிரஸ் அரசு அவரை சந்தோஷபடுத்தி அழைத்து இருக்கிறது. இது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தமிழர்களுக்கு செய்யும் பச்சை துரோகம்.

இதனை எதிர்த்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திருப்பதியில் எதிர்ப்பு தெரிவித்தனர் அவர்களை கைது செய்தது. இலங்கையில் இந்துக்கோவில்களை இடித்துவிட்டு பவுத்த நாடாக இலங்கை மாற்றிவருகிறது. இந்தியாவிற்கு ராஜபக்சேவை வரவழைத்து ராஜ மரியாதை செய்வது 7 கோடி தமிழர்களின் நெற்றியில் எட்டி உதைப்பது போன்று உள்ளது. இந்திய அரசு வினையை விதைத்துள்ளது. அதனுடைய பலன் இந்திய ஒருமைபாட்டுக்கு கேடு விளைவிக்கப்போகிறது.