Tuesday, October 29, 2013

மதிமுக நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி , அயன்வடமலாபுரத்தில் #மதிமுக சார்பில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டப்பந்தயம், மியூசிக்கல் சேர், பாட்டு போட்டி நடந்தது. 

இப்போட்டியில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 167 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றோருக்கு முதல் பரிசாக ரூ.1000ம்,  2வது பரிசாக ரூ.701ம், 3வது பரிசாக ரூ.501ம் வழங்கப்பட்டது. இதனையடுத்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் இலவச வேஷ்டி, கைலி, சேலைகள், சட்டைகள் வழங்கப் பட்டது. 

இந்நிகழ்ச்சிக்கு மதிமுக மாநில விவசாய அணி துணை செயலாளர் வரதராஜன் தலைமை வகித் தார். 

அயன்வடமலாபுரம் பஞ்சாயத்து தலைவர் கோப்பம்மாள் முன்னிலை வகித் தார். விவிஎஸ் அறக்கட்டளை தலைவர் நாகமாரியம்மாள், வார்டு உறுப்பினர் சுப்புராஜ், கருப்பசாமி, ராஜேஷ், வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர். காளியம்மாள் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment