Thursday, October 17, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 25

நாள்:-18.03.2008

தமிழக மீனவர்களை இந்திய அரசு பாதுகாக்கவில்லை! #வைகோ குற்றச் சாட்டு!


அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இலங்கைத் தீவில் இலங்கைத் தமிழர்களை அடியோடு அழித்துவிட வேண்டும் என்று செயல்பட்டு வருகின்ற இலங்கை அரசின் கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டும், கொல்லப்பட்டும் வருவதைக் குறிப் பிட் டு, எனது வேதனையையும், கவலையையும் வெளிப்படுத்தி, நான் தங்களுக்கு 9.12.2007, 18.12.2007,25.01.2008 ஆகிய நாள்களில் எழுதிய கடிதங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், தாங்கள் 5.03.2008 தேதியிட்டு எனக்கு எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றேன்.

தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளபடி, இலங்கைக் கடற்படையினரால் மிரு கத்தனமாகக் கொல்லப்பட்டு வரும் தமிழக மீனவர்களின் உயிர்ப் பிரச்சனை யை, இந்திய அரசு மிகவும் மெத்தனப்போக்கோடு அணுகுவது எனக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்திய மீனவர்களைத் தாக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று,
இலங்கை அரசைக் கடுமையாக எச்சரிக்க வேண்டியது இந்திய அரசின் கடமை
அல்லவா?

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுட்டுத் தள்ளுவதும், கொல் லுவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

‘இலங்கைக் கடற்படையினர் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்று
இந்திய அரசு அவர்களிடம் வலியுறுத்தி இருப்பதாகத் தங்கள் கடிதத்தில் குறிப் பிட்டு உள்ளீர்கள்.

இந்தியக் கடற்படை, ஒரு நொண்டி வாத்தைப்போல, சோம்பேறித்தனமாக
இலங்கைக் கடற்படையின் கொலைவெறித் தாக்குதல்களை வேடிக்கைப்
பார்த்துக் கொண்டு இருக்கிறது என்ற வலுவான குற்றச்சாட்டுகளை எனது
முந்தைய கடிதங்களில் நான் கூறி உள்ளேன்.

எரிகின்ற நெருப்பில் எண்ணெய்  ஊற்றுவதைப்போல, இந்தியக் கடற்படை
அதிகாரிகள், இலங்கைக் கடற்படையின் தவறான தகவல்களையும், பொய் யான அறிக்கைகளையும் ஆமோதித்து அடிக்கடி கருத்துத் தெரிவிக்கிறார்கள், செய்தி வெளியிடுகிறார்கள்.

நமது மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடத்திய பெரும்பாலான துப்பாக் கிச்சூடு சம்பவங்கள், இலங்கைக் கடலோரத்தில், இலங்கை நீர்ப்பரப்பில் நடந் தவைகள் என்று தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பது எனக்குப் பெரும் மன வேதனையை அளிக்கிறது.

தாங்கள் அவ்வாறு உறுதிபடக் கூறி இருப்பது உண்மைக்கு மாறானது ஆகும்.
பெரும்பாலான தாக்குதல்கள் பன்னாட்டுக் கடல்பரப்பில் நடைபெற்றனவே
அன்றி, இலங்கை நீர்ப்பரப்புப்பகுதியில் அல்ல. அண்மையில், கச்சத்தீவு அரு கே ஒரு துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. கச்சத்தீவு ஒப்பந்தத்தின்படி, அந்த இடத் தில் மீன்பிடிப்பதற்கு நமது மீனவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு.

வாதத்திற்காக ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். இந்திய மீனவர்கள்
கவனக்குறைவால் இலங்கை நீர்ப்பரப்புக்கு உள்ளே சென்றுவிட்டாலும்கூட,
அவர்களைச் சுட்டுக் கொல்வதற்கு இலங்கைக் கடற்படையினருக்கு என்ன
உரிமை இருக்கிறது?

இலங்கைக் கடற்படை பன்னாட்டுக் கடல்நீர்ப்பரப்பில்,கடலுக்கு அடியில் தண் ணீருக்கு உள்ளே கண்ணிவெடிகளை வைத்து இருப்பதாகப் பகிரங்கமாக, துணிச்சலாக அறிவித்துவிட்டு, இந்திய மீனவர்களின் மீன்பிடி படகுகள் பன் னாட்டுக் கடல்நீர்ப்பரப்பு பகுதிக்குள் சென்றால் அவர்கள் பேராபத்தைச் சந் திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கிறது.

இறையாண்மை கொண்ட எந்த நாடும், அண்டை நாட்டின் இத்தகைய ஆபத் தான செயல்பாட்டை நிச்சயமாகப் பொறுத்துக் கொள்ளாது. ஆனால், இந்திய அரசு இந்த மிக முக்கியமான பிரச்சனையை கவனத்தில் கொள்வதை,கருத்துச் சொல்வதை, வேண்டும் என்றே தவிர்த்து வருகிறது.

நமது முப்படை அதிகாரிகளும்,இலங்கை இராணுவ அதிகாரிகளுடன் இணைந் து கூட்டாகச் செயல்பட்டு வருகிறார்கள். இதனால், நமது கடற்படை அதிகாரி கள் உண்மைச் செய் திகளைத் திட்டமிட்டு மறைத்துவிட்டு,பொய்யான தகவல் களை அரசுக்கு அறிக்கையாக அளிக்கிறார்கள் என்பது தங்கள் கடிதத்தின் மூலம் தெள்ளத் தெளிவாக வெளிப்படுகிறது. தமிழக மீனவர்களைப் பாதுகாக் கும் கடமையில் இருந்து வேண்டும் என்றே இந்திய அரசு தவறி இருப்பது தமி ழர்களுக்குச் செய் யும் பெரும் துரோகம் ஆகும்.

இலங்கை அரசியல் சட்டத்தின் 13 ஆவது சட்டத்திருத்தத்தை, இலங்கை அரசு நிறைவேற்றுவதை இந்திய அரசு வரவேற்பதாகத் தங்கள் கடிதத்தில் குறிப்பிட் டு உள்ளீர்கள். இந்திய அரசு, இலங்கை அரசால் மிக எளிதாக ஏமாற்றப் பட்டு உள்ளது என்பது மிகவும் பரிதாபத்துக்கு உரிய நிலைமை ஆகும்.

1987 ஆம் ஆண்டின் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி, பொதுமக்களால் வாக் கு அளிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டால், இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.ஆனால், வடக் கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கும் திட்டத்தை இலங்கை அரசு கொழும்பு உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து, தள்ளுபடி செய் யும் முயற்சியில் ஈடு பட்டது.

இந்தியா இதற்குக்கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டும்.ஆனால், வேண்டும் என்றே வெளிப்படையாகவே தவிர்த்து விட்டது.13 வது சட்டதிருத் தம் என்பது, நீண்டகாலத்துக்கு முன்பே தமிழ்  மக்களால் நிராகரிக்கப்பட்டது ஆகும்.

நார்வே நாடு மேற்கொண்ட அமைதிப்பேச்சுகளை, நாச வேலையில் ஈடுபட்டு இலங்கை அரசு முறியடித்தது. பல நாடுகளிடம் இருந்தும் ஆயுதங்களை வாங் கிக் குவித்து, தமிழர்கள் மீது இனவெறி, கொலைவெறித் தாக்குல் நடத்தி வரு கிறது.

இலங்கையில் வாழும் தமிழர்கள் பசியாலும், பட்டினியாலும், போதிய மருந் துப்பொருட்கள் இல்லாமல் நோய் வாய் ப்பட்டும் சாகிறார்கள். செஞ்சிலுவைச்
சங்கத்தின் மூலம் ஈழத்தமிழர்களுக்கு உதவுவதற்காக, மனிதாபிமான அடிப்ப டையில் தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட் களையும், மருந்துக ளை யும் அனுப்புவதற்கு, இந்திய அரசு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அனுமதி மறுத்தது.

மக்களால் முறைப்படி தேர்ந்து எடுக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டணியின் நாடா ளுமன்ற உறுப்பினர் திரு. சிவநேசன் சென்ற வாரம் கொலை செய்யப்பட்டார். இதுவரை, தமிழர் ஆதரவு பெற்ற நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங் கை அரசின் படையினரால் கொலை செய் யப்பட்டு உள்ளார்கள். இந்திய அரசு இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொலைக்குக்கூட கண்டனம் தெரிவிக் கத் தவறியது என்பது மிகுந்த வருத்தத்துக்கும், அவமானத்துக்கும் உரிய செயல் ஆகும். 

ஆனால், இதற்கு மாறாக, இலங்கை அரசு தனது இராணுவத் தாக்குதல்களைத்
தொடர்வதற்கு உதவியாக, இந்திய அரசு அவர்களுக்கு ரேடார்களையும், இரா ணுவத் தளவாடங்களையும் தாராளமாக வழங்கியது.

இலங்கை இனவாத அரசின் இராணுவத் தளபதி, தமிழர்களின் குருதி தோய்ந்த கைகளுக்குச் சொந்தக்காரரான கொடியவன் சரத் பொன்சேகாவுக்கு, இந்திய அரசு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்த அந்த நாள், தமிழர்களின் இதயத்தில் ஒரு கருப்பு நாள் ஆகும்.

இந்திய அரசு அளித்த வரவேற்பாலும்,ஆதரவாலும் துணிச்சல் பெற்ற கொலை  வெறி பிடித்த இலங்கை இராணுவத் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா, ‘தமிழ் ப் போராளிகளை முற்றிலும் அழிப்பதற்கு இந்தியாவின் உறுதியான திட் டமிட்ட உதவியோடு எங்களது இராணுவத் தாக்குதலை தீவிரப்படுத்துவோம்’ என்று சவால்விட்டுப் பேசுகிறான்.

இவ்வாறு எக்காளமிட்டுப் பேசும் இலங்கை இராணுவத்தின் தலைமை தளபதி
சரத் பொன்சகோவின் பேச்சுக்கு, இந்நாள்வரை எந்தவித மறுப்போ, கண்டன மோ இந்திய அரசால் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் அதிர்ச்சி தரக்கூடிய செய் தி யாதெனில், இலங்கை இராணுவ அதிகாரி களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுகிறது, இந்திய விமானப்படை விமா னிகள் இலங்கை விமானப்படை விமானிகளுக்குப் பயிற்சி அளித்து வருகிறார் கள் என்பது ஆகும்.

புகழ் மிக்க, பாராட்டுதலுக்கு உரிய பண்டித ஜவஹர்லால் நேரு திருமதி இந்தி ராகாந்தி ஆகியோரால் தொலைநோக்குப் பார்வையோடு பின்பற்றப்பட்ட பாராட்டுதலுக்கு உரிய இந்திய வெளியுறவுக் கொள்கையானது, இன்றைக்கு ஆயிரமாயிரம் அடிகளுக்குக் கீழே குழி தோண்டிப் புதைக்கப்பட்டு இருப்பது வெட்கக்கேடு ஆகும்.

இந்திய அரசாங்கத்தின் செயல்பாடு, அணுகுமுறை, எண்ணம் அனைத்தும்
இலங்கை அரசின் இனவெறித் தாக்குதலுக்குப் பேருதவியாக இருக்கிறது என் ற எண்ணம், தமிழர்கள் மனதிலே துன்பத்தையும் ஏமாற்றத்தையும் நம்பிக்கை இன்மையையும் விதைத்து வருகிறது எனும் எனது கருத்தை இங்குப் பதிய வைக்க விரும்புகிறேன்.

எனவே, இந்திய அரசு இலங்கைக்கு அளித்த ரேடார்களைத் திரும்பப்பெற வேண்டும் என்றும், இலங்கை இனவாத அரசுக்கு செய் யும் எந்தவிதமான
இராணுவ உதவியையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தங்களை
உளமாற வேண்டுகிறேன்.

தங்கள் அன்புள்ள,

வைகோ

No comments:

Post a Comment