Thursday, October 31, 2013

பூலித்தேவன் விழா-வைகோ உரை-பகுதி 7

#வைகோ உரை ,பூலித்தேவன் பிறந்த நாள் விழா 18.10.2008

இந்தச் செய்தி அரண்மனைக்கு வருகிறது. அரசர் பூலித்தேவனின் காதுக்கு வருகிறது. கலகலவென்று சிரிக்கிறான், அப்பொழுது பக்கத்தில் நிற்கிறான் ஒண்டிவீரன். அரசனே, நான் போய் முடித்து வருகிறேன். இந்தச் சபதத்தை நிறைவேற்றி வருகிறேன் என்று இவன் கும்பினியாரிடம் போகிறான். தந்திர மாகப் போகிறான். நயமாகப் பேசுகிறான். அங்கு சிலவேலைகளைச் செய்கி றான். அந்த முகாமில் சேர்த்துக் கொள்கிறார்கள். தக்க நேரம் பார்த்தான். பட் டத்து குதிரை கட்டப்பட்டு இருக்கிற இடத்தில் இருந்து அந்தக் கயிற்றை அவிழ்த்தான். குதிரையைக்கொண்டு அமாவாசை இருட்டில் இரவோடு இர வாக கொண்டுவந்துவிடலாம் நெற்கட்டுஞ்செவலுக்கு என்று கொண்டுவரு கிற போது குதிரை மிரண்டுவிட்டது.

குதிரை மிரண்ட சத்தத்தைக்கேட்டு கும்பினிப் படையினர் ஓடிவந்துவிட்டார் கள். ஓடி வந்தவுடன் இவன் என்ன செய்தான் தெரியுமா? குதிரையை விட்டு விட்டு அங்கே இருக்கக்கூடிய புல்லை எடுத்து மேலேபோட்டு அந்தப் புல்லுக் குள் படுத்துக் கொண்டான். தேடிவந்த காவலர்கள் என்ன குதிரை கட்டுத் தறி யைவிட்டு ஓடிவந்து இருக்கிறதே என்று குதிரையின் கயிற்றைபிடித்து சரி இதைக் கொண்டுபோய் லாயத்தில் கட்டவேண்டாம். இங்கேயே கட்டிவிடு வோம் என்று அங்கே முளையை அடிக்கிறார்கள். முளை உள்ளே இறங்கு கிறது. முளை அடிக்கிற இடத்தில் படுத்துக்கிடக்கின்றான் ஒண்டிவீரன்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்-தமிழக மக்களே திரண்டு வாரீர்! வைகோ அறிக்கை

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எனும் தியாகக் காட்சியகத்திற்கு தமிழக மக்களே திரண்டு வாரீர்! #வைகோ அறிக்கை

அகிலத்தின் நெடிய வரலாற்றில், திகைத்துத் திடுக்கிடச் செய்யும் வீர சாகசங் களையும், தியாகக் களங்களையும் படைத்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் மெய்சிலிர்க்க வைக்கும் போர்க்களங்களையும், மரணத்துக்கு அஞ்சாது உயிர் களைத்தாரை வார்த்த உன்னதத்தையும்,கற்கள் பேசும் சிலைகளாக அண்ணன் பழ. நெடுமாறன் அவர்களின் விழுமிய ஏற்பாட்டால், நம் இருதயங்களின் அழி யாத காட்சிகளாகச் சித்தரிக்கும் முள்ளிவாய்க்கால் நினை வு முற்றம்,நவம்பர் 8 ஆம் தேதி, தஞ்சை திருநகர்-விளார் புறவழிச் சாலையில் திறக்கப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முத்துக்குமார் திடலில், பாலச்சந்திரன் அரங்கத்தில் திறப்பு நிகழ்ச்சி அரங்கே றுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் இராசராசேச்சுரம் என்னும் பெரு வுடையார் கோவிலை அருண்மொழிவர்மனாம் இராசராசசோழன் கட்டிய போது, அக்கோவிலில் சிலைகள், அழகிய கோபுரத்தில் பதித்த கற்கள், இவற் றில் பட்டுத் தெறித்த சிற்பிகளின் உளிகள் எழுப்பிய ஓசைகள் மீண்டும் முள்ளி வாய்க்கால் முற்றத்தில் ஒலித்தன.

காலம் வழங்கிய கற்பகத் தரு தமிழருவி என்னும் ஞான நதி...!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாசற்ற அமைப்பை இரு பது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,மக்கள் சமுத்திரமாய் அது உருவெடுத்து, மாநாடுகள், இடைத்தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்கள் என பல களங்கள் கண்டு, காயங்களையும் பெற்று, இன உணர்வு என்னும் தீ பந்தத்தைத் தாங்கிய அரசியல் தொடர் ஓட்டத்தில்,பல போராட்டக்களங்களில் முந்தி நிற்பதும், முத லில் இருப்பதும் நமது இயக்கம் என்ற பெருமையைப்பெற்றுத் தந்த பெருமகன் தலைவர் #வைகோ. அரசியல் கட்சித் தலைவராக உருவெடுத்த இவரால் ஆன் மிகத்தைப் பற்றி எப்படி பேச முடிகிறது? நித்தமும் சோர்வின்றிப் பயணிக்கும் இவரால் எப்படி இலக்கியத் தளங்களில் அச்சுப் பிசகாது உரையாற்ற முடிகின் றது? புள்ளி விபரங்களை அடுக்கடுக்காக வைத்து விவாதிக்கும் ஆற்றல், வி னைத் திட்பம், அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, இலட்சியத் தில் உறுதி என்ற மூன்றையும் கடைபிடிக்கும் அறவாழ்வு என தலைவர் வைகோ வின் அரசியல் பயணம் தியாகம் தோய்ந்த வரலாற்றுச் சுவடுகளாகும்.

பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தீர்மானம்-மதிமுக மாணவர் அணி

பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தீர்மானம்-#மதிமுக மாணவர் அணி 

திருச்சியில் நடந்த மாணவர் அணி  மாநில துணைச்செயலாளர்கள் கூட்டத் தில்  ம.தி.மு.க. பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருச்சியில் கரூர் பைபாஸ் சாலையில் உள்ள ம.தி.மு.க. அலுவலகத்தில் மாநில மாணவரணி மாநில துணைச் செயலாளர்கள் கூட்டம் 27.10.13 அன்று நடைபெற்றது.

பொதுவாழ்வில் புகழ் பூத்த சோழவந்தான் ஆவடையப்பன்!

திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவராய் இருந்த சோழவந்தான் தா.ஆவ டையப்பன், தாயாரின் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் ஒருபந்தூரில் 18.09.1913 இல் பிறந்தார்.இவரது குடும்பங்களைச் சார்ந்தவர்களை வளையப் பட்டி ஜமீன் குடும்பத்தினர் எனக் குறிப்பிடுவர்.

சோழவந்தானில் கல்வி பயின்ற பின், பள்ளி இறுதி வகுப்பை மதுரை ஐக்கிய
கிருஸ்தவ பள்ளியில் பயின்றார். தேர்வு பெறாத நிலையில் கல்வி முடிவுக்கு
வந்தது. எனினும் தங்கு தடையின்றி ஆங்கிலத்தில் உரையாடும் ஆற்றலைப்
பெற்றிருந்தார்.

1935 இல் அத்தைமகள் இரத்தினத்தை திருமணம் செய்து கொண்டார். குடும்ப
விளக்காய் வாழ்வதற்கு இல்லத்தில் இனிய துணையாய் விளங்கிய மனைவி
குறுகிய காலத்திலேயே அகால மரணமடைந்தார். இத்துயர நிகழ்ச்சி குடும்பத் தில் பெரும் அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியது.ஆவடையப்பன் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார். மூன்றாண்டுகள் மறுமணம் செய்து கொள்ளாது இருந்தார்.பின்னர் 1939ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் நடை பெற்றது.

Wednesday, October 30, 2013

அந்த ஒரு நாள்!

தொலைபேசி மணி ஒலித்தது, நம் தோழர் தமிழ்மணி பாலாவிடம் இருந்து
வந்த அந்தத் தகவல், “தலைவர் #வைகோ மார்ச் 6 ஆம் தேதி மும்பைக்கு வரு கிறார்.ஈழத் தமிழர் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள”, மிகவும் மகிழ்ந் தேன்.ஜனவரி 3,4,5 ஆகிய தேதிகளில் அவர்களை அருகில் இருந்து தரிசிக்கிற
வாய்ப்பைப் பெற்றதை எண்ணியும் விரைவில் அடுத்து தரிசிக்க காத்திருகி றேன் என்று எண்ணியும்.இதற்கு காரணம் உண்டு. எப்படி இருந்தாலும் தலை வர் மார்ச் 5 மும்பை வந்துவிடுவார். நான் என் பிறந்தநாள் அன்றே காண முடி யும் என்று மகிழ்ந்தேன்.3 நாட்கள் உருண்டோடின தலைவர் வருகிற தேதி அறி விக்கப் படாமல் ஒத்திப்போனது.

ஒருவாரம் கழித்து எனக்கு தகவல் கிடைத்தது. தலைவர் வருகிற மார்ச் 20 வரு கிறார் என்று. செம்பூரில் சர்வ தமிழ் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம்,
எப்படி இந்தப் போராட்டத்தை நடத்துவது. எந்தத் தீர்மானத்தை முன்வைப்பது என்று கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு,சுதந்திர தமிழ் ஈழம் அதற்கு பொதுவாக் கெடுப்பு தான் தீர்வு.

கீழப்பாவூர் ராமநதி திட்டம் ? என்ன ஆனது மதிமுக எழுப்பும் கேள்வி

ராமநதி மேல்மட்ட கால்வாய் குறித்த #மதிமுக வின் கேள்விக்கு பதில் தந்த தமிழக அரசு 

கீழப்பாவூர் ஒன்றியத்தின் தெற்கு பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக் கையான ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். 

இதனை தொடர்ந்து கடந்த 2005ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் இத்திட்டத்தை நிறைவேற்றுவதாக சட்டமன்றத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா அறி வித்தார். பின் திட்ட மதிப்பீடு தயார் செய்து வந்த நிலையில் 2006ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்தது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் 38ஆவது வருடமாக வைகோ மலர் அஞ்சலி

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் 38 ஆவது வருடமாக #வைகோ மலர் அஞ்சலி

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 106ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 38ஆவது வருடமாக மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர் கள் தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னார். மாவட்டச் செயலாளர்கள் மதுரை மாநகர்-புதூர் மு.பூமிநாதன், சிவகங் கை-புலவர் செவந்தியப்பன், மதுரை புறநகர் கிழக்கு-வீர தமிழ்ச்செல்வன், மதுரை புறநகர்மேற்கு-முனியாண்டி, தேனி சந்திரன், திண்டுக்கல் என்.செல்வ ராகவன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் எம்.டி.சின்னசெல்லம், கொள்கை விளக்க அணிச் செயலாளர் க.அழகுசுந்தரம், மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாஸ்கர சேதுபதி, மாநில மருத்தவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் பி.சரவணன் ஆகியோரும் கழக முன்னணியினரும் தோழர்களும் உடன் உள்ளனர்.

Tuesday, October 29, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 27

நாள்:-09.06.2008

இந்திய அரசு கைவிட்டது: தமிழக மீனவர்கள் அச்சம்!


அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மேற்கொள்ளும் தொடர் தாக்கு தல்களையும், அராஜகத்தையும் மிகுந்த கவலையோடும், வேதனையோடும் மீண்டும் தங்கள் மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

பூலித்தேவன் விழா-வைகோ உரை-பகுதி 6

#வைகோ உரை ,பூலித்தேவன் பிறந்த நாள் விழா 18.10.2008

அப்படிப்பட்ட வீரமும், தீரமும் நிறைந்த மன்னன் பூலித்தேவன் படையில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச்சேர்ந்த வெண்ணிக்காலாடி போராடிய வரலாற்றை இங்கே சொல்வது மிகவும் அவசியமாகும்.

அந்தப்போர் மிகஉக்கிரமானபோர்.வாசுதேவநல்லூர் போரில் கம்மந்தான் கான் சாகிப் வந்து போர்தொடுத்துத் தோற்றானே அந்தப்போரில்,இரண்டாம் போரில் வெண்ணிக்காலாடி பிரதான தளபதி. இன்று இம்மேடையில் சேதுராமனுக்குப் பக்கத்தில் என் அன்புச் சகோதரர் ஓ.பன்னீர் செல்வத்துக்குப் பக்கத்தில், தம்பி சரவணனுக்குப் பக்கத்தில்,செந்தூர் பாண்டியனுக்குப் பக்கத்தில்,என் அருமைத் தம்பி தேவேந்திரகுல சமூகத்துப் பிள்ளை டாக்டர் சதன் திருமலைக்குமார் உட் கார்ந்து இருக்கிறார்.

மதிமுக நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி , அயன்வடமலாபுரத்தில் #மதிமுக சார்பில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டப்பந்தயம், மியூசிக்கல் சேர், பாட்டு போட்டி நடந்தது. 

இப்போட்டியில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 167 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றோருக்கு முதல் பரிசாக ரூ.1000ம்,  2வது பரிசாக ரூ.701ம், 3வது பரிசாக ரூ.501ம் வழங்கப்பட்டது. இதனையடுத்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் இலவச வேஷ்டி, கைலி, சேலைகள், சட்டைகள் வழங்கப் பட்டது. 

கட்டபொம்மனின் 214 வது நினைவேந்தல்-வைகோ உரை-பாகம் 1

அனைத்துத் தரப்பு மக்களும் அண்ணன் தம்பிகளாக, ஒற்றுமையுடன் வாழும் கயத்தாறுக்கு ஏன் இத்தனைக் கட்டுப்பாடுகள்?


வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் விழாவில் #வைகோ கேள்வி

பாஞ்சைப் பெருவேந்தன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 214 வது நினைவேந் தல் நிகழ்ச்சி அவர் தூக்கிலிடப்பட்ட கயத்தாறில் 16.10.2013 அன்று நடைபெற் றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு #மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய வீர உரை வருமாறு:

ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு 
அஞ்ச வேண்டாமடா பாஞ்சையரே

என்று இந்த நாட்டின் அடிமை விலங்குகளை உடைப்பதற்காக பிரிட்டிஷ் கும் பினிப் படைகளின் துப்பாக்கிகளுக்கும் பீரங்கிகளுக்கும் அஞ்சாது வீரச்சமர் புரிந்த கட்டபொம்மனை இன்றைக்கே தூக்கில் இட்டு விட வேண்டும் என்று நடுப்பகல் ஒரு மணி அளவில் மேஜர் பானர்மேன் கட்டளை பிறப்பித்துவிட்டு, அவனும் வெள்ளை அதிகாரிகளும் சென்றதற்குப் பின்னர், அடிமைகளாகி விட் ட சில பாளையக்காரர்களும், பிரிட்டிஷ் கும்பினிப் பட்டாளத்து வீரர்களும் சூழ்ந்திருக்க, ஆதவன் மேற்கே சாய்ந்து கொண்டு இருந்தவேளையில், 

Monday, October 28, 2013

ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வைகோவின் மேல் முறையீடு !

ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் #வைகோ வின் மேல் முறையீடு !

தூத்துக்குடியில் உள்ள நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று, கடந்த 17 ஆண்டுகளாக,மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகப் பொதுசசெலயாளர் வைகோ மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத் திலும் பேராடி வருகிறார். 

வைகோ தொடுத்த ரிட் மனு மீது, 2010 செப்டெம்பர் 28 இல் சென்னை உயர்நீதி மன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தீர்ப்பு வழங்கியது. அதனை எதிர்த்து , ஸ்டெர்லைட் நிர்வாகம், உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடை ஆணை பெற்று, ஆலையை இயக்கியது. 

அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற 33 அமர்வுகளிலும், வைகோ கலந்து கொண்டு வாதங்களை எடுத்து வைத்தார். ஆனால் உச்நீதிமன்றம், இந்த ஆண்டு ஏப்ரல் 2 ஆம் நாள், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை ரத்துச் செய்து, ஆலையை இயக்கத் தீர்ப்பு அளித்தது. 

பாட்னா குண்டுவெடிப்பு பேரதிர்ச்சி தரும் உண்மைகள் - வைகோ அறிக்கை

பாட்னா குண்டுவெடிப்பு பேரதிர்ச்சி தரும் உண்மைகள் #வைகோ அறிக்கை

நேற்று அக்டோபர் 27 ஆம் தேதி நண்பகலில், பீகார் மாநிலத் தலைநகர் பாட்னா வின் காந்தி மைதானத்தில்,தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பா ளர் நரேந்திர மோடி பங்கேற்ற பேரணியில், அடுத்தடுத்து நடைபெற்ற குண்டு வெடிப்புகளில், ஐந்து பேர் கொல்லப்பட்டனர்; 90 பேர் படுகாயமுற்று மருத்துவ மனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர். 

பல இலட்சம் மக்கள் பங்கேற்ற இந்தப் பேரணி தொடங்குவதற்கு முன்பு, 9.30 மணிக்கு, பாட்னா தொடர்வண்டி நிலையத்தின் கழிப்பு அறையில் ஒரு குண்டு வெடித்து உள்ளது. அதைச் சோதித்துப் பார்க்க முயன்றபோது வெடித்து இருக்க லாம் என்ற கருத்தும் உள்ளது. இந்தக் குண்டு வெடிப்புக்குப் பின்னரும், காந்தி மைதானத்தில் எந்தவிதமான முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளோ, சோத னை நடவடிக்கைகளோ, பீகார் காவல்துறையினரால் மேற்கொள்ளப் படவில் லை என்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. 

வணிக வளாகங்களாகும் பள்ளி மைதானங்கள்-போராட்டகளத்தில் மதிமுக

கோவையில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மைதானங்களில் வணிக வளா கங்கள் கட்டவும், வேறு பிற தனியார் பயன்பாட்டுக்காகவும் பயன் படுத்தப்படு வதற்கும், #மதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எவ்வாறு அதிகரிப்பது எவ்வாறு என்பதை சிந்திப்பதை விடுத்து, பள்ளிகளையும், பள்ளி மைதானங்களும் கல்விசாரா நிகழ்ச்சிகளுக்கும், வணிக வளாகங்கள் கட்டுவதற்கும் பயன்படுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பிரதமரே! பதவியை உதறுங்கள்!

சங்கொலி தலையங்கம் .

பிரதமரே! பதவியை உதறுங்கள்!

காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி யின் ஒன்பது ஆண்டுகால சாதனைகளில்(?)சிகரம் தொட்ட ஊழல்கள் இரண்டு. ஒன்று அலைக்கற்றை ஊழல். மற்றொன்று நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல். நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடுகள், ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன் றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதற்கு முன்பே மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG)நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டின் மூலம் ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அம்பலப்படுத்தினார்.

உச்சநீதிமன்றம் 2013, மார்ச் 12 இல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு கள் நடந்துள்ளதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறி, மத்திய புலனாய் வுத்துறை இந்த வழக்கை விசாரிப்பதற்கு வழிகாட்டுதல்களை வழங்கியது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் பற்றிய விசாரணை குறித்த விபரங்களை மத்திய அரசுடன் பகிர்ந்து கொண்டதாக சிபிஐ இயக்குநர் உச்சநீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தந்தபோது, உச்சநீதிமன்றம் சிபிஐக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்தது.விசாரணை தொடர்பான எந்தத் தகவல்களையும் மத்திய அரசிற்கு அளிக்கக்கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.

Sunday, October 27, 2013

புகழேந்தி தங்கராஜ் நூல் வெளியீடு - வைகோ உரை -பாகம் 4

புகழேந்தி தங்கராஜின் “இது இல்லை எனில் எது இனப்படுகொலை?” நூல் வெளியீட்டு விழா #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ ஆற்றிய உரை பாகம் 3 யின் தொடர்ச்சி வருமாறு...

அங்கயற்கண்ணியின் தியாகம்

எவ்வளவு வீரத்தோடும் தீரத்தோடும் விடுதலைப்புலிகள் போராடினார்கள்?களத்தில் பலியான முதல் கரும்புலி கேப்டன் மில்லர். முதல் வீராங்கனை
அங்கயற்கண்ணி.

யாழ் குடா நாடு, ஏழு தீவுகளைக் கொண்டது. வேலனைத் தீவில் பிறந்தவள் அங்கயற்கண்ணி. ஒரு முக்கியமான தாக்குதலுக்காக அவள் தேர்ந்து எடுக்கப் படுகிறாள். வீட்டுக்கு வருகிறாள். அம்மாவைப் பார்க்கிறாள். தம்பிகளை நன்கு படிக்க வையுங்கள் என்கிறாள். புறப்படுகையில், அம்மா நான் காற்றோடு காற் றாக விரைந்து போய்விடுவேன் என்கிறாள். அப்போது அந்தத் தாய்க்கு அது புரியவில்லை.காங்கேசன் துறை துறைமுகத்தில்,இலங்கைக் கடற்படையின் ஒரு கட்டளைக் கப்பல் நிற்கிறது. 6300 டன் எடை. அதைத் தகர்ப்பதற்குத்தான் 50 கிலோ எடை கொண்ட அங்கயற்கண்ணி தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கின் றாள்.17 கடல் மைல், 35 கிலோமீட்டர் நீச்சல் அடித்துப் போனாள். சகதோழிகள் உடன் வந்து அனுப்பி வைக்கிறார்கள்.வெடிகுண்டுகளையும் சுமந்துகொண்டு
போகிறாள். அந்தக் கப்பலின் மீது மோதுகிறாள். வெடித்துச் சிதறுகிறது.பக்கத் தில் நின்று கொண்டு இருந்த இன்னொரு கப்பல் டோரா, அதுவும் வெடிக்கிறது. நெடுந்தொலைவுக்கு வெளிச்சம் தெரிகிறது. தொலைவில் கரையில் நின்று கொண்டு இருந்த தோழிகள் அதைப்பார்த்து ஆரவாரம் செய்கிறார்கள். அதே வேளையில் அங்கயற்கண்ணியை எண்ணி வேதனைப்படுகிறார்கள்.

பாதுகாப்பான இரயில் பயணத்தை உறுதி செய்க! -வைகோ

பாதுகாப்பான இரயில் பயணத்தை உறுதி செய்க!- #வைகோ கோரிக்கை 

மக்கள் பெரும்பாலும் தங்களின் பாதுகாப்பான பயணத்திற்கு விரும்பி பயணம் செய்வது இரயில் வண்டிகளைத்தான். தமிழ்நாட்டில் மட்டும் 50க்கும் மேற்பட்ட நெடுந்தூர விரைவு தொடர்வண்டிகளிலும்,100 க்கும் மேற்பட்ட மின்தொடர் வண்டிகள் மூலமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து, நாள் ஒன் றுக்கு பல இலட்சம் ரூபாய் இரயில்வே துறைக்கு இலாபம் ஈட்டித் தருகின்ற இரயில் போக்குவரத்தை பாதுகாப்புடன் இயக்குவதை மத்திய அரசு உறுதி செய்திட வேண்டுகிறேன். காரணம் 

தமிழ்நாட்டில் கடந்த 21.10.2013 அன்று திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனி அருகே கரூர் வழித்தடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதை, அப்பகுதி பாலகி ருஷ்ணாபுரம் ஊராட்சி கவுன்சிலர் கருப்பையா என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டு தகவல் சொன்னதால் மும்பை தாதரில் இருந்து புறப்பட்டு நெல்லை சென்று கொண்டிருந்த விரைவு தொடர்வண்டி பெரும் விபத்திலிருந்து தவிர்க் கப்பட்டுள்ளது.

இலங்கை மாநாட்டுக்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்து ஐநா விற்கு அனுப்பும் மதிமுகவும் திவிகவும்

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து மன் னார்குடி ஒன்றிய #மதிமுக,திராவிடர் விடுதலைக்கழகம்,தமிழன் சேவை மையம் சார்பில் டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று சனிக்கிழமை( 26.10.13) பதிவு தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.
தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையில்நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டை எதிர்த்தும், இந்திய அரசு காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ககூடாது என்பதை வலியுறுத்தியும்,இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்குமாறும் அதில் கோரப்பட்டுள்ளது.

மறுமலர்ச்சிப் பயணம்-விருதுநகர் மாவட்டம்-பாகம் 5

விருதுநகர் மாவட்ட மறுமலர்ச்சி பயணம் மேற்கொண்ட #மதிமுக பொது செய லாளர் #வைகோ மூன்றாம் நாளாக நேற்று முன் தினம் (25.10.13) வெம்பக் கோட்டை ஒன்றியத்தில் ஆலங்குளத்தில் நடைபெற்ற நிறைவு பொது கூட்டத் தில் பேசினார் .. பேச்சின் சுருக்கம் வருமாறு..

கிராமத்தில் பலசமூகத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்து வருவது குறித்து மகிழ்ச் சியடைகிறோன்.ஜாதி,மத பூசல்கள் இருந்தால் மக்கள் நிம்மதியாக வாழமுடி யாது.இளம் பெண்கள், படிக்கும் மாணவர்கள், புதியவாக்காளர்களாக பதிவு செய்து கொண்டவர்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள்.வாக்காளர்களின் இந்தமனநிலை வரவேற்க்கதக்கது.

தமிழக மீனவர்களை இலங் கை அரசு கைது செய்த போது மத்திய அரசு கண்டு கொள்வதில்லை. ஊழல் செய்வதிலும், மக்கள் விரோத நடவடிக்கையில் மட் டுமே மத்திய அரசு ஈடுபடுகிறது. காமராஜர், அண்ணா ஆட்சி காலத்தில் மது விற்பனை கிடையாது. அது போன்று மீண்டும் மது விலக்கு அமுல் படுத்த வேண்டும். இளைய சமுதாயம் காப்பாற்றப்பட வேண்டும்.

Saturday, October 26, 2013

புகழேந்தி தங்கராஜ் நூல் வெளியீடு - வைகோ உரை -பாகம் 3

புகழேந்தி தங்கராஜின் “இது இல்லை எனில் எது இனப்படுகொலை?” நூல் வெளியீட்டு விழா #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ ஆற்றிய உரை பாகம் 2 யின் தொடர்ச்சி வருமாறு...

கடமைகள் நிரம்ப இருக்கின்றன;ஆயத்தமாவோம்; செய்து முடிப்போம்!


ஜூலை  1987 இல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏன் வந்தது என்பதை,செம்பி யன் போன்ற தம்பிகள் தெரிந்து கொள்ள வேண்டும். வடமராச்சிப் போரில் பலத்த அடிவாங்கி, பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடினான் சிங்களவன்.
தென்னாப்பிரிக்காவில் இருந்து ஆயுதங்களை வாங்கிக் கொண்டு வந்தான். பஃபல்லோ என்ற பெயரில் ஆயுதக் கவச வண்டிகள் வாங்கிக்கொண்டு வந் தான். எதுவுமே புலிப் படைக்கு முன்னால் எடுபடவில்லை.

நான் ஈழத்தில் இருந்தபோது, திரும்பி இந்தியாவுக்குப் போக மாட்டேன் என்று
சொன்னேன். அப்போது இந்திய இராணுவத் தளபதி கல்கத்,சென்னையில் மு தல் அமைச்சர் கருணாநிதியைச் சந்திக்கிறார். அதற்குப் பிறகு, தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், கோபால்சாமி இலங்கைக்குப் போயிருக் கிறார்.கட் சிக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒரு அறிக்கை விடுகிறார். அந்த
அறிக்கை அங்கே வந்தது. அதை அவர்கள் தலைவர் பிரபாகரன் முன்னிலை யில் வாசித்துக் காண்பித்தார்கள்.

மறுமலர்ச்சிப் பயணம்-விருதுநகர் மாவட்டம்-பாகம் 4

விருதுநகர் மாவட்ட மறுமலர்ச்சி பயணம் மேற்கொண்ட #மதிமுக பொது செய லாளர் #வைகோ மூன்றாம்  நாளாக நேற்று (25.10.13) வெம்பக்கோட்டை ஒன் றியத்தில் அம்மாபேட்டையில் துவங்கி துரைசாமிபுரம் , இடையன்குளம் , மேட் டுப்பட்டி காக்கிவாடன்பட்டி, கான்சாபுரம் , மம்சாபுரம் ,நதிக்குடி , ஆத்தூர், திருவேங்கிடபுரம், கொங்கன்குளம் , புளிப்பாரைபட்டி, மாதாங்கோவில்பட்டி , கல்லம நாயக்கன்பட்டி வழியாக சென்று ஆலங்குளத்தில் நிறைவுபெற்றது. ஆலங்குளத்தில் நடைபெற்ற நிறைவு பொது கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.



வெம்பக்கோட்டை ஒன்றியம் காக்கிவாடான்பட்டியில் பொது மக்கள் மத்தி யில் தலைவர் வைகோ.

மதிமுக பேச்சு போட்டி -மாவட்ட வரியாக வென்றவர்கள்

20.10.13 அன்று  தமிழகம் முழுவதும் #மதிமுக மாணவர் அணி சார்பாக மாவட்ட அளவில் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது இதில் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள் மாணவிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் மாவட்ட வாரியாக

கன்னியாகுமரி மாவடடம்

முதல் இடம் -லயோலா பொறியியல் கல்லூரி மாணவி ஆனி

இரண்டாம் இடம் -மார்த்தாண்டம் நேசமணி கிறிஸ்தவ கல்லூரி மாணவர் டேவிட் ஜெபசிங்

மூன்றாம் இடம் -அன்னை வேளாங்கண்ணி கல்லூரி மாணவர் முருகேசன்

Friday, October 25, 2013

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது-சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம்

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது எனக் கோரி #மதிமுக மே 17 இயக்கம் மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில், சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம் நடந்தது.

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது; 

காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும்;

தனி ஈழம் கோரிக்கை குறித்து இலங்கை தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; 

போர்க்குற்றம் குறித்து இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்
என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் இன்று (25.10.13)நடந்தது.

மறுமலர்ச்சிப் பயணம்-விருதுநகர் மாவட்டம்-பாகம் 3

விருதுநகர் மாவட்ட மறுமலர்ச்சி பயணம் மேற்கொண்ட #மதிமுக பொது செய லாளர் #வைகோ இரண்டாம் நாளாக நேற்று (24.10.13) சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொண்ட சுற்றுபயணத்தின் படங்கள் ..

சாத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட நத்தத்துபட்டியில் மக்கள் தலைவர் வைகோ பொது மக்களுடன் .

செம்மொழி தமிழாய்வு மையத்துக்கு மூடுவிழாவா? வைகோ அறிக்கை

செம்மொழி தமிழாய்வு மையத்துக்கு மூடுவிழாவா?

#வைகோ அறிக்கை

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் செம் மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், உலக அளவில் செம்மொழித் தமிழுக் கென்று நிறுவப்பெற்ற உயர் ஆய்வு நிறுவனம். இது ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும். 

தமிழ்மொழி மேம்பாட்டு வாரியம், தமிழ்மொழி ஆய்வு, செம்மொழித் தமிழ் உயர் ஆய்வு மையம் என உட்பிரிவுகளை உருவாக்கி, பன்னிரெண்டு புலங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Thursday, October 24, 2013

பூலித்தேவன் விழா-வைகோ உரை-பகுதி 5

#வைகோ உரை ,பூலித்தேவன் பிறந்த நாள் விழா 18.10.2008

இரண்டாம் முறையாக கான்சாகிப் 1760 டிசம்பர் 12 இல் திருநெல்வேலியில் இருந்து பெரும்படையுடன் வந்து நெல்கட்டும் செவலில் இருந்து மூன்று கல் தொலைவில் உள்ள மலையடிவாரத்தில் முகாம் போட்டான் 1760 டிசம்பர் 20 இல் போர் தொடங்கியது. வீரமறவர்கள் நூறுபேர் மடிந்தார்கள். பூலித்தேவரே இம்முறையும் வென்றார். கான்சாகிப் தோற்றான்.

மூன்றாம் முறையாக கான்சாகிப் 1761 மேமாதத்தில் மீண்டும் பெருமளவில் கும்பினிப் படைகளுடன், பீரங்கிகளுடன் போர் தொடுத்தான். மே 3 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி முடிந்தது போர். இப் போரில்தான் பூலித்தேவர் தோற் றார். வாசுதேவநல்லூர் கோட்டை, பனையூர் கோட்டை, நெற்கட்டும் செவல் கோட்டைகள் வீழ்ந்தன. கான்சாகிப்பும் பின்னர் வெள்ளையரை எதிர்த்து மதுரையில் தளம் அமைத்தான். வீரத்தில் சிம்மமான பூலித்தேவர் ஆலய வழி பாட்டில் சிறந்து கோவில் திருப்பணிகள் பலவற்றை செய்தார்.

காமன்வெல்த் மாநாடு குறித்த சட்டசபைத் தீர்மானம்-வைகோ அறிக்கை

காமன்வெல்த் மாநாடு குறித்த சட்டசபைத் தீர்மானம், முழு மனநிறைவு தர வில்லை! #வைகோ அறிக்கை

காமன்வெல்த் நாடுகளின் அரசுத் தலைமைகளின் கூட்டம், இரண்டு ஆண்டு களுக்கு ஒருமுறை நடத்தப்படுவதால், இந்திய அரசு காமன்வெல்த் செயலா ளர் நாயகம் கமலேஷ் சர்மா எனும் இந்தியரைக் கொண்டு, மிகத் தீவிரமான வேலைகளில் ஈடுபட்டதால், கொடூரமான தமிழ் இனப்படுகொலை நடத்திய சிங்கள அரசு நிர்வகிக்கும் இலங்கை நாட்டில் அம்மாநாடு, வருகின்ற நவம்பர் 17,18 தேதிகளில் நடைபெற உள்ளது.

ஈழத் தமிழர் இனப்படுகொலையின் கூட்டுக்குற்றவாளியான,காங்கிரஸ் தலை மை தாங்கும் இந்திய அரசு, இனக்கொலை குறித்த நீதி விசாரணை வரவிடா மல் தடுப்பதற்காக, இந்த வஞ்சகமான சதிச்செயலில் ஈடுபட்டது. ஏனெனில், எந்த நாட்டில் காமன்வெல்த் மாநாடு நடக்கிறதோ, அந்தநாட்டின் அதிபரே, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அந்த அமைப்புக்குத் தலைவராக இருப்பார். எனவே, தமிழ் இனக்கொலை புரிந்த மாபாதகன் மகிந்த ராஜபக்சேவை, காமன் வெல்த் அமைப்புக்குத் தலைவராக்கி, தமிழ் இனக்கொலைக் கொடுமையை, விசாரணைக்கு வரவிடாமல் குழிதோண்டிப் புதைப்பதுதான், இந்திய இலங்கை அரசுகளின், கூட்டுச் சதி நோக்கம் ஆகும்.

வைகோ வின் கடின உழைப்பால்

#வைகோ வின் (கழகப் பொதுச்செயலாளரின் ) கடின உழைப்பால் துரோகங் களைத் தூளாக்கி நிமிர்ந்து நிற்கிறது இயக்கம்! விருதுநகர் மாநாட்டில் சதன் திருமலைக்குமார்

பேரறிஞர் அண்ணா அவர்களின் 105 ஆவது பிறந்தநாளையொட்டி, செப்டம்பர் 15 அன்று விருதுநகரில் நடைபெற்ற #மதிமுக மாநாட்டில், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார் ஆற்றிய சதன் திருமலைக்குமார்
உரை...

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டின் தலைவர், நம் பிரியத்திற் கும், பாசத்திற்கும் உரிய உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெபராஜ் அவர் களே,தமிழகத்தின் விடிவெள்ளியாகத் திகழ்கின்ற என் அன்புக்குரிய பொதுச்
செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் என் வணக்கத்தைத்தெரிவித்துக்கொள் கிறேன்.

மறுமலர்ச்சிப் பயணம்-விருதுநகர் மாவட்டம்-பாகம் 2

#வைகோ அவர்களின் மூன்றாம் கட்ட மறுமலர்ச்சிப் பயணம்

#மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், மறுமலர்ச்சிப் பயணத்தின் மூன்றாம் கட்டமாக விருதுநகர் மாவட்டம்- அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் தனது பயணத்தைத் தொடங்கினார். செட்டிகுறிச்சியில் தொடங்கிய பயணம் 19 கிராமங்கள் வழியாகச் சென்று பந்தல்குடி நிறைவடைந்தது. பந்தல்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டப் படங்கள்.


மருதுபாண்டியர்களுக்கு வைகோ அஞ்சலி

மருதுபாண்டியர்களுக்கு வைகோ அஞ்சலி

மருதுபாண்யர்களின் 202 ஆவது நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத் தில் #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

உடன் சிவகங்கை மாவட்ட மதிமுக செயலாளர் புலவர் செவந்தியப்பன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர்-புதூர் பூமிநாதன், அரசியல் ஆலோச னைக் குழு உறுப்பினர்-எம்.டி.சி.சின்னசெல்லம், கொள்கை விளக்க அணிச் செயலாளர் க.அழகுசுந்தரம், மாநில மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இரா சேந்திரன், மாநில தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாஸ்கரசேதுபதி, மாநில மருத்துவர் அணித் துணைச் செயலாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் உடன் உள்ளனர்

மறுமலர்ச்சி பயணம் ,விருதுநகர் மாவட்டம் -பாகம் 1

தமிழகம் முழுவதும் #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ தலைமையில் கட்சியினர் மறுமலர்ச்சி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 

தூத்துக்குடியில் 5 நாள் சுற்றுப்பயணமும்,ஈரோட்டில் 2 நாள் சுற்றுப்பயணமும் மேற்கொண்டனர்.அதற்கடுத்தபடியாக விருதுநகர் மாவட்டத்தில் 4 நாள் சுற் றுப் பயணமாக மொத்தம் 100 இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின் றனர்.

அதன் முதல் நாளான நேற்று (23.10.13) அருப்புக்கோட்டை ஒன்றியம் செட்டி குறிச்சியில் தொடங்கிய பயணம் சின்னசெட்டிக் குறிச்சி, வாழ்வாங்கி, பெரிய நாயகிபுரம், ராமலிங்காபுரம், போடம்பட்டி, தும்மக்குண்டு, சின்னதும்மக் குண் டு உள்ளிட்ட கிராமங்களில் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் மேற்கொண் டார்.

Wednesday, October 23, 2013

பூலித்தேவன் விழா-வைகோ உரை-பகுதி 4

#வைகோ உரை ,பூலித்தேவன் பிறந்த நாள் விழா 18.10.2008

அப்படிப்பட்ட நிலையில் கான்சாகிப் இவ்வளவு படைகளையும் கொண்டுவந்து வெற்றி பெற்றுவிடலாம் என்று 1759 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி வாசு தேவநல்லூர் கோட்டையையும், நெற்கட்டுஞ் செவல் கோட்டையையும் தாக் கவேண்டும் என்று படைப் பிரிவுகளோடு வந்தான். 1759 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி தொடங்கிய யுத்தம் டிசம்பர் 26ஆம் தேதிவரை நடந்தது.அவன் வெற் றி பெறுவான் என்று பிரிட்டிக்ஷ்காரன் நினைத்தான். ஹைதர் அலியையேத் தோற்கடித்தவன் ஆயிற்றே. சூராதி சூரனாயிற்றே என்று நினைத்தார்கள். அப் படி நினைத்த அந்தப் போரில் கான்சாகிப் தோற்றான்.

பூலித்தேவன் வெற்றிபெற்றான். பீரங்கிகளும், துப்பாக்கிகளும் கொண்ட இத் தனை படைகளை வெள்ளைக்காரன் கொண்டுவந்து பெரும்படையோடு தாக்கி ஏறத்தாழ ஒருமாதகாலம் நடைபெற்ற முதல் யுத்தத்தில் பூலித்தேவன் வெற்றி பெற்றான். கான்சாகிப் தோற்கடிக்கப்பட்டான். புறமுதுகிட்டு ஓடினான். ஏன் அவனைப்பற்றிச் சொல்கிறேன் என்றால் அவனுடைய மனத்துணிவையும் நான் அறிவேன்.

நாளைய தமிழகம் வளம் காண

நாளைய தமிழகம் வளம் காண #வைகோ வின் முயற்சிகள் வென்றாக வேண் டும்! விருதுநகர் மாநாட்டில் சிப்பிப்பாறை அ.இரவிச்சந்திரன்

பேரறிஞர் அண்ணா அவர்களின் 105 ஆவது பிறந்தநாளையொட்டி, செப்டம்பர் 15 அன்று விருதுநகரில் நடைபெற்ற #மதிமுக மாநாட்டில், அரசியல் ஆலோச னைக்குழு உறுப்பினர் சிப்பிப்பாறை அ.இரவிச்சந்திரன்  ஆற்றிய உரை...

தலைவர் உள்ளிட்ட சபைக்கு வணக்கம், கடல் மண்ணில் வீழ்ந்தாலும் தலை வர் நெஞ்சில் நிறைந்திருக்கின்ற ஐயா கே.பி.கே. அறிமுகப்படுத்திய வண்ண மணிக்கொடியினை விண்முட்ட பறக்க விட எனக்கு வாய்ப்பு அளித்தமைக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எனது நன்றியைத் தெரிவித் துக் கொள்கிறேன்.

புகழேந்தி தங்கராஜ் நூல் வெளியீடு - வைகோ உரை -பாகம் 2

புகழேந்தி தங்கராஜின் “இது இல்லை எனில் எது இனப்படுகொலை?” நூல் வெளியீட்டு விழா #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ ஆற்றிய உரை பாகம் 1 தொடர்ச்சி வருமாறு:

ஈழத்தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள்


இந்த நூலில், எடுத்த எடுப்பிலேயே இந்தக் கேள்வியை முன்வைத்து இருக் கி றார் புகழேந்தி தங்கராசு. அடுத்து, ஈழத்தில் நடந்த துயரங்களை விவரிக்கிறார். நான் தொடக்கத்தில் கூறியதைப்போல, அந்தப் புனிதவதியின் துயரமான வாழ் வை, உச்சிதனை முகர்ந்தால் என்ற காவியமாக ஆக்கினாரே,அவர் கேட்கிறார்: 1996 ஆம் ஆண்டு, பிப்ரவரி 11 ஆம் நாள், குமாரபுரம் என்ற இடத்தில் இருந்து, பள்ளிக்குச் சென்று திரும்பிய 16 வயது மாணவி தனலெட்சுமி, தம்பியோடு சைக்கிளில் வந்து கொண்டு இருக்கின்றார். இராணுவ நடமாட்டத்தைப் பார்த் துப் பயந்துபோய், ஒரு கடைக்குள் நுழைந்து ஒளிந்து கொள்கிறார்.அதை சிங் கள இராணுவம் பார்த்து விடுகிறது. அவளைத்தூக்கிக் கொண்டு போகிறார்கள். மிகக் கொடூரமாக அவளைச் சின்னாபின்னப்படுத்துகிறார்கள். தங்கைகள்
இருக்கின்ற இடங்களில் பேசுகையில், நான் என்சொற்களில் மிகக் கவனமாக இருப்பேன்

நெல்லை ஜான்ஸ் கல்லூரியில் உள்ளிருப்பு போர் – மதிமுக ஆதரவு

பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் பேராசிரியர்கள் தற்காலிக சஸ் பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து 3வது நாளாக பேராசிரியர்கள், மாணவர் கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு #மதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

ஜான்ஸ் கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவர்களின் ஓய்வு அறைகளை திறக்க வேண்டும். மாணவர் பேரவைக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே வரலாற்றுத் துறை தலை வர் பீட்டர் பேரின்பராஜ், ஆங்கிலத் துறை பேராசிரியர் ஹெய்ஸ் தாசன் ஆகி யோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Tuesday, October 22, 2013

பூலித்தேவன் விழா-வைகோ உரை-பகுதி 3

#வைகோ உரை ,பூலித்தேவன் பிறந்த நாள் விழா 18.10.2008

அவருடைய காந்தசக்தி மகத்தானது. ஆர்க்காட்டு நவாப்பின் படையில்வந்த மூன்று இஸ்லாமிய தளபதிகள் முடேமியா எனும் முகம்மது மியானச், மியா னோ எனும் முகம்மது பார்க்கி, நபிகான் கட்டாக் ஆகிய மூன்று தளகர்த்தர்கள் மன்னர் பூலித்தேவர் முகத்தைக்கண்டு அவரால் கவரப்பட்டு அவரது படை யில்  சேர்ந்தார்கள். சேர்ந்து வீரப்போர் புரிந்தார்கள். 12 மாதம்கழித்து 1756 மார்ச் 21 இல் திருநெல்வேலியில் மீண்டும் போர் நடத்தி வெள்ளையரை தோற்கடித் தார்,மன்னர் பூலித்தேவன்.அந்தப்போரில் இஸ்லாமியனாகப் பிறந்து ஆர்க் காடு நவாப்புக்குப் பக்கத்தில் இருந்து மன்னர் பூலித்தேவர் படைக்கு வந்து சேர்ந்த முடேமியா என்கின்ற இÞலாமியத் தளபதியின் மார்பில் குண்டு பாய்ந் து இரத்த வெள்ளத்தில் அவன் புரண்டு கொண்டிருந்த வேளையில் மன்னர் பூலித்தேவ ருக்குத் தகவல் கிடைத்து ஓடிச்சென்று முடேமியாவை எடுத்து மடியிலே கிடத்தி இந்த மண்ணில் அந்நியனை எதிர்த்து வீரப்போர் புரிந்த தங்க மே! உன் ஆவி பிரிகிற வேளையில் உன் மேனியின் இரத்தம் என் மடியில் பாய் கிறது என்று உச்சி மோந்து அவனை அரவணைத்துக் கொண்டார். மன்னா,நான் கடமையாற்றி விட்டுத்தான் மடிகிறேன் என்று முடேமியா இறந்துபோனான். இஸ்லாமியக் குலத்தில் பிறந்து தன்னோடு வந்து படையிலே சேர்ந்து போரி லே உயிர் விட்டவனுக்கு நடுகல் எழுப்பினார் பூலித்தேவன். அவருடைய பணி கள் அளப்பரிய பணிகள்.

ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு காலத்தின் கட்டாயம்!

ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு காலத்தின் கட்டாயம்!

விருதுநகர் மாநாட்டில் மு.செந்திலதிபன் முழக்கம்

செப்டம்பர் 15,விருதுநகரில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டில்,#மதிமுக அரசியல் ஆய்வு மையச் செயலாளர் மு.செந்திலதிபன்
ஆற்றிய உரையில் இருந்து...

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் வீறுகொண்டு எழுந்த விருதுநகர் மண்ணில், கழகம் நடத்துகின்ற அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 105 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு மிகுந்த சிறப்புடன் நடைபெற்றுக் கொண்டு
இருக்கின்றது. முக்கியமான கால கட்டத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக் கின்ற இந்த மாநாட்டில்,“சுயநிர்ணய உரிமையும் பொது வாக்கெடுப்பும்” என்ற தலைப்பில் உரையாற்றிடப் பணித்த தலைவர் வைகோ அவர்களுக்கு எனது நன்றி.

புகழேந்தி தங்கராஜ் நூல் வெளியீடு - வைகோ உரை -பாகம் 1

புகழேந்தி தங்கராஜின் “இது இல்லை எனில் எது இனப்படுகொலை?” நூல் வெளியீட்டு விழா 14.10.2013 அன்று சென்னையில் நடைபெற்றது. நூலை வெளி யிட்டு #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ ஆற்றிய உரை வருமாறு

தாயகக் கனவினில் சாவினைத் 
தழுவிய சந்தனப் பேழைகளே!
எங்கள் குரல் ஒலி கேட்கிறதா, குழிகளில் வாழ்பவரே
எங்கே? எங்கே? எங்கே?
இப்பக்கம் உங்கள் விழிகளைத் திறவுங்களேன்
ஒருதரம் எங்களுக்கு உங்கள் திருமுகம் காட்டிவிட்டுத்
திரும்பவும் உறங்கச் செல்லுங்களேன்

Monday, October 21, 2013

பூலித்தேவன் விழா-வைகோ உரை-பகுதி 2

#வைகோ உரை ,பூலித்தேவன் பிறந்த நாள் விழா 18.10.2008

ஆனால், அந்த மன்னருக்கு விழா எடுக்க வேண்டும் என்று விரும்புவதற்குக் காரணம் நான் உலகத்தின் யுத்தகளங்களை ஆர்வத்தோடு படிப்பவன். உலகத் தின் மகாபெரிய வீரர்களின் போர்க்களக் காட்சிகளை நான் விருப்பத்தோடு படிப்பவன். சின்னவயதில் இருந்தே என் உணர்வு அதுதான். நான் சிறுவனாக பள்ளியில் படிக்கிறபோதும் நான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் எழுதி ய வியாசர் விருந்தைப்படிப்பதற்கு முன்பு பெரிய எழுத்து மகாபாரதத்தை மழை வரவேண்டும் என்பதற்காக ஊர் மடத்திலே விராட பருவம் வாசிக்கின்றஅந்தக் காலத்தில் நான் சின்னஞ்சிறுவனாக மகாபாரதத்தைப் படிக்கிற போது என் மனம் கவர்ந்த காட்சி அந்த 13 ஆம் போர்சருக்கம். அபிமன்யு வதைக்காட்சி தான். அதைப்போல, கம்பனின் இராமாயணத்தில் என் உள்ளம் கவர்ந்த காட்சி நிகும்பலை வேள்வி சிதைக்கப்பட்டபோது களத்தில் போராடிய இந்திரஜித்தின் வீரக்காட்சிதான். இது என் உணர்வு.

சல்மான் குர்ஷித் கொழும்பு பயணம்

சங்கொலி தலையங்கம் 

சல்மான் குர்ஷித் கொழும்பு பயணம்....தமிழின துரோகம் தொடருகிறது!

இந்தோனேசியா நாட்டின் பாலி நகரில் நடைபெற்ற ஆசியா பசிபிக் பொருளா தார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் அதன் 21 உறுப்பு நாடுகளின்
தலைவர்கள் பங்கேற்றனர். அக்டோபர் 8 ஆம் தேதி முடிவுற்ற இம்மாநாட்டில்
கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் 7 ஆம் தேதி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான ஆட்சி யில், ஜனநாயக சுதந்திரம் கேள்விக் குறியாகிவிட்டது. அரசியல் தலைவர்கள் மிரட்டப்படுகின்றனர்.தலைமை நீதிபதியையே குற்றம் சுமத்தி பதவியிலிருந் து நீக்கிவிட்டனர். மனித உரிமைகள் விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படவில் லை” என்று குற்றம் சாட்டினார்.

நிலத்தடி நீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-மதிமுக

நாகை மாவட்டத்தில் விவசாயத்தை பாதுகாக்க நிலத்தடி நீரை சேமிப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என #மதிமுக வலியுறுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட இளைஞரணி அணி கலந்து ரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாநில துணை அமைப்பாளர் மார்கோனி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாநில இளை ஞரணி அமைப்பாளர் ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது: 

நடைபெறவுள்ள ஏற்காடு இடைத்தேர்தல் குறித்து பொதுக்குழுவு கூடி முடிவெ டுக்கும். விவசாயத்திற்குப் பெயர் பெற்ற நாகை மாவட்டத்தில் இன்றைக்கு நிலத்தடி நீர் குறைந்துகொண்டே வருகிறது. காவிரி ஆற்றில் விடப்படும் தண் ணீரும் விவசாயத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள முடியாத அள விற்கு ஆறு, வாய்க்கால் தூர் வாரப்படாமல் ஆற்றுநீர் கடலுக்குச் செல்கிறது. உபரியாக கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் யாரும் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் வங்கக்கடலில் கலந்து வீணாகியது. 
  

Sunday, October 20, 2013

மதுரை,காந்திய மக்கள் இயக்க மாநாட்டில் வைகோ உரை -2

காந்திய மக்கள் இயக்கத்தின் நான்காம் ஆண்டுத் தொடக்க விழாவையொட்டி, 02.10.2013 அன்று மதுரையில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ அவர் கள் ஆற்றிய உரை பகுதி 1 தொடர்ச்சி....

அமைச்சரவை முடிவு முட்டாள்தனம் 

அஜய் மேக்கன் என்பவர் காங்கிரஸ் கட்சியின் செயலாளர்களுள் ஒருவர். அவர் பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அவசரச் சட்டம் நூற் றுக்கு நூறு சரி என்கிறார்.அதேபோலத்தான் கபில் சிபலும், இது மிகச் சரியான சட்டம் என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றார். அதைச் சரியாகப் படிக்கா மல், நுனிப்புல் மேய்ந்தவர்கள் தான் எதிர்த்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்கிறார்.அமைச்சர்கள் எல்லாம் பல்வேறு இடங்களில் ஆதரித்துப் பேசிக் கொண்டு இருக்கின்றார்கள்.

மாநிலம் தழுவிய பேச்சு போட்டிகள் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்ப்பு

#மதிமுக மாணவர் அணி சார்பாக இன்று (20.10.13 )  தமிழகம் முழுவதும் மாண வர்களுக்கான பேச்சு போட்டிகள் முதல் கட்டமாக ,மாவட்ட அளவில் நடத்த பட்டது.ஒவ்வொரு மாவட்ட அளவில் நடந்த பேச்சு போட்டிகளில் தமிழக முழு வதும் ஆயிர கணக் கான மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்...

இன்றைய போட்டியில் வென்றவர்கள் அடுத்து நிகழும் மண்டல அளவிலான போட்டிகளின் பங்கேற்பார்கள்..


தமிழக உரிமைகளை, வாழ்வாதாரங்களைக் காப்பவராக

தமிழக உரிமைகளை, வாழ்வாதாரங்களைக் காப்பவராக மக்கள் தலைவர் #வைகோ திகழ்கிறார்!

- விருதுநகர் மாநாட்டில் அ.கணேசமூர்த்தி எம்.பி.,

பேரறிஞர் அண்ணா அவர்களின் 105 ஆவது பிறந்தநாளையொட்டி, செப்டம்பர் 15 அன்று விருதுநகரில் நடைபெற்ற கழக மாநாட்டில், ஆட்சிமன்றக்குழுசசெய லாளர் அ.கணேசமூர்த்தி எம்.பி., ஆற்றிய அ.கணேசமூர்த்தி உரை...

விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குக-மதிமுக

கார் பருவத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை யை  அரசு உடனடியாக வழங்கவேண்டும் என #மதிமுக சார்பில் வலியுறுத்தல்  

இதுகுறித்து மதிமுக மாநில விவசாய அணி துணைச் செயலர் வரதராஜன் கூறியதாவது,

தலைமை தேர்தல் அதிகாரியின் நாடகம்-வைகோ பேட்டி

இடைத்தேர்தல்களில்,பணம் பட்டுவாடா செய்ததை தேர்தல்கமிஷன் தடுத்தது கிடையாது; ஓட்டுக்கு பணம் பெறுபவர் மீதும், நடவடிக்கை என, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியுள்ளது நாடகம்,'' , #மதிமுக பொது செயலாளர்  #வைகோ குற்றச்சாட்டு

மதுரையில், நிருபரிடம் கூறியதாவது: 

ஏற்கனவே, சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகள், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தன.இதுகுறித்து, ஆதாரப்பூர்வமாக தகவல்கள் கொடுத்தும், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவில்லை. 

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிடுக-வைகோ



அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் போனஸ்  உடனே வழங்கிடுக! #வைகோ வலியுறுத்தல்

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 1,45,000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுடைய ஊதிய உயர்வானது மூன்றாண் டு களுக்கு ஒருமுறை தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி ஒப்பந்தம் செய்யப் பட்டு வருகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டில் போடப்பட்ட ஊதிய ஒப்பந்தம் 2013 ஆகஸ்டு மாதத்துடன் முடிந்துவிட்டது. என்றாலும் தமிழக அரசும், போக்குவ ரத்துக் கழக நிர்வாகங்களும் இதுவரை ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை தொடங்காதது தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Saturday, October 19, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 33

மே தினம் பொது விடுமுறை அறிவிப்பு நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியார் மயமாகாமல் தடுப்பு வைகோவின் சரித்திரச் சாதனை!

நாடாளுமன்றத்தில்24 ஆண்டுக்காலம் பணி ஆற்றிய தலைவர் #வைகோ வின்
வரலாற்றுச் சாதனைகளில் முத்தாய்ப்பாகத் திகழ்வது, தொழிலாளர் வர்க்கத் தின் உரிமைகளை நிலை நாட்டிட ஓங்கிக் குரல் எழுப்பியது மட்டுமின்றி, அவற்றைச் சாதித்துக் காட்டியதும்தான். உலகம் முழுவதும் இன்றும் எழுச்சி யோடு கொண்டாடப் படும் மே தினத்திற்கு இந்திய அரசு விடுமுறை அளித்து அங்கீகரிக்கச் செய்த பெருமை தலைவர் வைகோவுக்கு உண்டு. 1990 ஆம் ஆண்டு மே தினத்தின் நூறாவது ஆண்டின் நிறைவை இந்தியத் தொழிலாளர் வர்க்கம் கொண்டாடிய நேரத்தில், தொழிலாளர் தினத்திற்கு விடுமுறை வழங் கக்கோரி தலைவர் வைகோ வைத்த கோரிக்கையை,அன்றைய பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் ஏற்றுக்கொண்டு அதற்கான உத்திரவைப் பிறப்பித்தார்.

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 26

நாள்:-17.4.2008

பிரதமருடன் #வைகோ சந்திப்பு: நார்வே அமைதி மாநாடு குறித்து விளக்கம்!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இந்தியப் பிரத மர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களை இன்று (17.4.2008) அன்று மாலை 5.10 மணி முதல் 5.35 மணி வரையிலும்,தில்லியில் பிரதமர் அலுவலகத்தில் சந்தித் தார்.

நார்வே தலைநகர் ஓஸ் லோவில் நடைபெற்ற, தெற்கு ஆசிய அமைதி மாநாடு குறித்தும், அதில் தாம் கலந்து கொண்டது குறித்தும் பிரதமரிடம் எடுத்துக் கூறி னார். கோரிக்கை விண்ணப்பம் ஒன்றையும் பிரதமரிடம் வழங்கினார்.

தமிழர்களின் வாழ்வுரிமைக்காகப் பாடுபடும் ஒரே இயக்கம்

தமிழர்களின் வாழ்வுரிமைக்காகப் பாடுபடும் ஒரே இயக்கம் மறுமலர்ச்சி தி.மு. க. மட்டுமே!

- விருதுநகர் மாநாட்டில் துரை.பாலகிருஷ்ணன்

பேரறிஞர் அண்ணாவின் 105 ஆவது பிறந்தநாளையொட்டி,செப்டம்பர் 15அன்று விருதுநகரில் நடைபெற்ற கழக மாநாட்டில்,துணைப் பொதுச் செயலாளர்
துரை.பாலகிருஷ்ணன் துரை.பாலகிருஷ்ணன் ஆற்றிய உரை...

மதுரை,காந்திய மக்கள் இயக்க மாநாட்டில் வைகோ உரை -1

தண்டனைக்கு உள்ளானவர்களைப் பாதுகாக்க முயன்ற, ஊழல் காங் கிரஸ் அரசை மக்கள் தண்டிப்பார்கள்!

மதுரை - காந்திய மக்கள் இயக்க மாநாட்டில் #வைகோ

காந்திய மக்கள் இயக்கத்தின் நான்காம் ஆண்டுத் தொடக்க விழாவையொட்டி, 02.10.2013 அன்று மதுரையில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு #மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர் கள் ஆற்றிய உரை வருமாறு:

மதுரை மாநகரில், பிரம்மாண்டமான கூட்டங்கள்பலவற்றை நான் பார்த்து இருக்கின்றேன். ஆனால், இப்படி உணர்ச்சிமயமான ஒரு கூட்டத்தை மிக அபூர் வமாகத்தான் மதுரை சந்தித்து இருக்கின்றது.

ஈரோடு மதிமுக வாக்குச்சாவடி முகவர் கூட்டம்

ஈரோட்டில் #மதிமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் வாக்குச்சாவடிகளில் முகவர்கள் பணியாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடிகள் குறித்தும், அதில் முகவர்களின் பணிகள் குறித்தும் மதிமுக சார்பில் ஈரோடு கருங்கல் பாளை யம் பாட்டாளிகள் படிப்பகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத் திற்கு மாநில இலக்கிய அணி துணை செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். 

செம்பனார்கோவிலில் மதிமுக கூட்டம்

நாகை மாவட்டம் செம்பனார்கோவிலில் #மதிமுக உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய பொருளாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். 

மாவட்ட பிரதிநிதி ராஜமாணிக்கம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜ சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செம்பனார்கோவில் ஒன்றிய செய லாளர் கொளஞ்சி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட கழக செய லாளர் மோகன், தலைமை ஆலோசனை குழு உறுப்பினர் மகாலிங்கம், முன் னாள் ஒன்றியக்குழு தலைவர் தங்கையன் கலந்து கொண்டனர். 

Friday, October 18, 2013

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால்

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால் வெல்ல முடியாத தலைவர் #வைகோ!

- விருதுநகர் மாநாட்டில் மல்லை சத்யா

பேரறிஞர் அண்ணாவின் 105ஆவது பிறந்தநாளையொட்டி,செப்டம்பர் 15 அன்று விருதுநகரில் நடைபெற்ற கழக மாநாட்டில், துணைப் பொதுச் செயலாளர்
மல்லை சத்யா ஆற்றிய உரை...

பேரறிஞர் அண்ணா அவர்களின் 105ஆவது பிறந்த நாள் விழாவினை மாபெரும் மாநாடாக கழகம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. நமது விருப்பத்தை நிறை வேற்றப் போகின்ற மாநாடாக இந்த மாநாடு அமைந்து இருக்கிறது. விருதுநக ரின் சிறப்புகளை வரவேற்புரையில் நமது மாவட்டக் கழகச் செயலாளர் அண் ணன் ஆர்.எம்.எஸ்.அவர்கள் சொன்னார்கள். இதுவரை நடந்த மாநாடுகளில் இதற்கு நிகரான மாநாடு இல்லை என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை. இந்த மாநாடு மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்து சிறப்பாக நடந்துகொண்டு இருக் கிறது.

Thursday, October 17, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 25

நாள்:-18.03.2008

தமிழக மீனவர்களை இந்திய அரசு பாதுகாக்கவில்லை! #வைகோ குற்றச் சாட்டு!


அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இலங்கைத் தீவில் இலங்கைத் தமிழர்களை அடியோடு அழித்துவிட வேண்டும் என்று செயல்பட்டு வருகின்ற இலங்கை அரசின் கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டும், கொல்லப்பட்டும் வருவதைக் குறிப் பிட் டு, எனது வேதனையையும், கவலையையும் வெளிப்படுத்தி, நான் தங்களுக்கு 9.12.2007, 18.12.2007,25.01.2008 ஆகிய நாள்களில் எழுதிய கடிதங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், தாங்கள் 5.03.2008 தேதியிட்டு எனக்கு எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றேன்.

சிலப்பதிகார விழாவில் வைகோ உரை -பகுதி 2

“சிலம்பு சிலம்பு” என்று முழங்கிய சிலம்புச்செல்வரின் முழக்கம், தமிழர் களின் இதயங்களில் ஒலிக்க வேண்டும்!

ம.பொ.சி. நினைவு விழா மற்றும் முதலாம் ஆண்டு சிலப்பதிகார விழா வில் #வைகோ

சிலம்புச் செல்வரின் படைப்புகள்

140 நூல்கள் எழுதி இருக்கிறார் ம.பொ.சி.

முதல் நூல் 1944 இல் ‘கப்பலோட்டிய தமிழன்’. கடைசி நூல், ‘எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடர்பு’, 1995 ஆம் ஆண்டு எழுதியது.பதினான்கு நூல்கள் சிலப் பதிகாரத்தைப் பற்றி,பதின்மூன்று நூல்கள் திருக்குறளைப் பற்றி,வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி நான்கு நூல்கள்,பாரதியைப் பற்றி எழுதுகிறார். சாகித் ய அகாதமி பரிசு பெற்று வந்ததே, அந்த ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ எழுதினா ஒருமைப்பாடு’ ர். ஒவ்வொரு பாடலிலும் நுணுக்கமான பொருளைத் தந்து, எண்ணற்ற நூல்களை வெளியிட்டு இருக்கின்றார்.

மதிமுக மாணவர் அணி நடத்தும் பேச்சுப்போட்டி

மறுமலர்ச்சி தி.மு.க. மாணவர் அணி நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான மூன்றுகட்டப் பேச்சுப்போட்டிமூன்றாயிரம் மாணவர்கள் பங்கேற்பு- மொத்தப் பரிசு ஏழு இலட்சம்!

தமிழகத்தின் எதிர்கால நம்பிக்கைகளாய் வளர்ந்து வரும் இளம் மாணவக் கண் மணிகளின் பேச்சாற்றல் திறனை வளர்க்கவும், கொள்கைப் பகைவர் கள் நிறைந்த அவையில் இனத்தின் உரிமைக்காக இருபத்தி ஐந்து ஆண்டுகள் அஞ் சாது போரிட்ட தலைவர் வைகோ அவர்களின் வாதத் திறனை உணர்ந்து உள் வாங்கி, உணர்வு பெற வேண்டும் என்ற நோக்கில், மறுமலர்ச்சி தி.மு.க. மாண வர் அணி, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்காக “நாடா ளுமன்றத்தில் வைகோ” என்ற தலைப்பில் மூன்று கட்டப் பேச்சுப் போட்டி களை நடத்துகிறது.

வீரபாண்டிய கட்டபொம்மன் 214 வது நினைவஞ்சலி

கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் 214 வது நினைவஞ்சலி பொதுக் கூட்டத்தில் #மதிமுக பொது செயலாளர் #வைகோ உரையாற்றிய போது பெரும் திரளான மக்கள் கலந்துகொண்ட புகைப்படம்..


Wednesday, October 16, 2013

பூலித்தேவன் விழா-வைகோ உரை-பகுதி 1

#வைகோ உரை பூலித்தேவன் பிறந்த நாள் விழா 18.10.2008

வானமேசாயினும் மானமே பேணிடும்
மறக்குல மன்னன் நான்
அன்னியனுக்கு அடிபணிவனோ?
உயிரே போயினும் உரிமை காப்பேன்
கூற்றமே சீறினும்
இக்கொற்றவன் கலங்கேன்
நெஞ்சுரம் கொண்டோர் உறையும்
நெற்கட்டான் செவல் நிமிர்ந்தே நிற்கும்

என முழங்கிய வீரவேந்தர் பூலித்தேவருக்கு இன்று விழா.

வைகோவின் கரங்களை வலுப்படுத்துவோம்!

அண்ணாவின் பாதையிலே பயணிக்கும் #வைகோ வின் கரங்களை வலுப் படுத்துவோம்!

- விருதுநகர் மாநாட்டில் நாசரேத் துரை

பேரறிஞர் அண்ணாவின் 105ஆவது பிறந்தநாளையொட்டி,செப்டம்பர் 15 அன்று விருதுநகரில் நடைபெற்ற கழக மாநாட்டில்,துணைப் பொதுச்செயலாளர்
நாசரேத் துரை ஆற்றிய உரை...

இராமச்சந்திர ஆதித்தனார் மறைவுக்கு வைகோ இரங்கல்

தமிழ் மான உணர்வுச் சுடர் அணைந்தது! தமிழர் நீதிக்கு ஒலித்த பத்திரிகைக் குரல் ஓய்ந்தது!

இராமச்சந்திர ஆதித்தனார் மறைவுக்கு #வைகோ இரங்கல்

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் தலைமகன்,மாலை முரசு ஏட்டின் அதிபர் இராமச்சந்திர ஆதித்தனார் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாய் தாக்கி யது. அதிர்ச்சியால் மனம் கலங்குகிறேன். தன் தந்தையாரைப் போலவே தமிழ் இனமான உணர்வு கொண்டவராக தமிழ் ஈழ விடுதலை உணர்வாளராகவே வாழ்ந்தார். தமிழர்கள் உரிமைக்காக, தமிழ் ஈழ விடியலுக்காக தனது மாலை முரசு ஏட்டையும், தான் நடத்திய கதிரவன் பத்திரிகையையும் அர்ப்பணித்தார்.

Tuesday, October 15, 2013

இயக்குனர் புகழேந்தியின் புத்தக வெளியீட்டு விழா

இயக்குனர் புகழேந்தி தங்கராஜின் நூல் வெளியீட்டுவிழா நேற்று (14.10.13) சென்னையில் நடை பெற்றது.

இயக்குனர் ஆர்.சி.சக்தி தலைமையில் நடைபெற்ற  நூல் வெளியீட்டு விழா வில் #மதிமுக பொது செயலாளர்  #வைகோ அவர்கள் நூலை வெளியிட்டார்.

திரைப்பட நடிகரும் , திராவிட இயக்க பற்றாளருமான  சத்தியராஜ் அவர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டார்.

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் நூலை அறிமுகம் செய்துவைத்து உரை யாற்றினார். நிகழ்ச்சியில் அற்புதத்தம்மாள், வெள்ளையன் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.. நிகழ்ச்சியில் எடுக்க பட்ட படங்கள்....

சிலப்பதிகார விழாவில் வைகோ உரை -பகுதி 1

“சிலம்பு சிலம்பு” என்று முழங்கிய சிலம்புச்செல்வரின் முழக்கம், தமிழர் களின் இதயங்களில் ஒலிக்க வேண்டும்!

ம.பொ.சி. நினைவு விழா மற்றும் முதலாம் ஆண்டு சிலப்பதிகார விழா வில் #வைகோ

சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் 18-ஆம் ஆண்டு நினைவு விழா மற் றும் முதலாம் ஆண்டு சிலப்பதிகார விழா 05.10.2013 சனிக்கிழமை அன்று சென் னையில் ம.பொ.சி.அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் பங் கேற்று, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரை:

நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு
மாட மதுரையும் பீடுஆர் உறந்தையும்,
கலிகெழு வஞ்சியும், ஒலிபுனல் புகாரும்
அரசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின்

விவசாயக் கடன் அடித்தளத்தைத் தகர்க்கும் முயற்சி ?

மூன்றடுக்கு விவசாயக் கூட்டுறவு கடன்முறையின் அடித்தளத்தைத் தகர்க் கும் முயற்சியை முறியடிப்போம்!
#வைகோ அறிக்கை 

இந்தியா எங்கும் கிராமங்கள்தோறும் விவசாயிகளுக்குக் கடன் கொடுப்பதோ டு அவர்களின் பொருளாதார முயற்சிகளுக்கு உதவ, அரசுக்குள் ஓர் அரசாக (State within a State) ஜனநாயக முறையில் உருவாக்கப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கு மேலாகச் செயல்பட்டு வருபவை கிராமக் கூட்டுறவு விவசாயக் கடன் சங்கங் கள் ஆகும். மாவட்ட அளவில் இவற்றுக்குக் கடன் வழங்கி வழிகாட்டக் கூடிய வை மாவட்டக் கூட்டுறவு மத்திய வங்கிகள் ஆகும். மாநில அளவில் இவற் றுக்குக் கடன் வழங்கி பாதுகாப்பவை மாநிலக் கூட்டுறவு வங்கிகள் ஆகும். இதை மூன்றடுக்கு விவசாயக் கூட்டுறவுக் கடன்முறை என்பர். 

ஈகை உணர்வால் வாகை சூடுவோம்! வைகோ

ஈகை உணர்வால் வாகை சூடுவோம்! #வைகோ 

ஈதுல் அல்ஹா என்னும் ஈகைத் திருநாளாம் தியாகத் திருநாள் பக்ரீத் பண்டி கையாக இன்று உலகெங்கும் உவப்புடன் கொண்டாடப்படுகின்றது. தன் ஒரே பிள்ளை என்றும் பாராமல் மூன்று முறை கனவில் கண்டதையே இறைவனின் கட்டளை என்று கருதி,தள்ளாத வயதில் பெற்றெடுத்த இஸ்மாயிலை,நபி இப் ராகீம் (அலை) பலியிட முன்வந்த தியாகம் இன்றவும் உலகெங்கும் நினைவு கூரப் படுகின்றது. இஸலாமிய வரலாற்றின் திருப்புமுனையாக நடைபெற்றது இந்த நிகழ்வு.

Monday, October 14, 2013

5 லட்சம் மாணவர்களில் 50 பேரின் தவறு,மாணவ சமுதாயமே ?

விருத்தாசலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி இன்று (14.10.13 ) ஒன்றில் கலந்து கொள்வதற்காக #மதிமுக பொது செயலாளர் #வைகோ வந்திருந்தார். 
அந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

சமீபத்தில் ஒரு கல்லூரி முதல்வருக்கு கோர முடிவு ஏற்பட்டது. இதை கண் டித்து அடுத்து அரை மணி நேரத்தில் அறிக்கை விட்டவன் நான். லட்சக்கணக் கான மாணவர்கள் வாழ்வில் உயரவேண்டும் என்றும், தகப்பன், தாய்களின் கனவை நினைவாக்க வேட்கையோடு, சுமக்க முடியாத புத்தக கட்டுகளை துக்கி சுமந்து இரவு பகலாக படிக்கிறார்கள். முதல் மதிப்பெண்கள் பெற வேண் டும் என்று லட்சகணக்கான மாணவர்கள் துடிக்கிறார்கள்.

களப்பணி ஆற்றுவோம்; காங்கிரசை அகற்றுவோம்!-பகுதி 3

கச்சத்தீவு யார் சொத்து?

கச்சத் தீவு எவனுடையது. மோதிலால் நேரு தானாகச் சம்பாதித்து, தான் சம்பா தித்த பணத்தில் வாங்கியதுதான் ஆனந்த பவனம். அந்த ஆனந்த பவனத்தை, மகாத்மா காந்தி தண்டி யாத்திரை நடத்துகிறபொழுது உப்புச் சத்தியாகிரகம் நடத்தி ஒரு ஆட்சியை மாற்றிவிட முடியுமா? என்று மோதிலால் நேரு சிரித் தார். ஆனால், காந்தி தொடங்கிய அந்தப் பயணத்தில் இலட்சக்கணக்கான மக்கள் பின் தொடர்ந்தார்கள். இந்தத் தேசமே அவர் பின்னால் நின்றது. பார்த்து வியந்தார்கள்.

அந்த மனிதனுடைய அரசியல் வியூகத்தை உணர்ந்து, என்னுடைய சம்பாத்தி யத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஆனந்த பவனத்தையே நான் தேசத்திற்கு அர்ப் பணிக்கிறேன் என்று மோதிலால் நேரு சொன்னார். அது சரி,அது அவர் சம்பா தித்தது. கச்சத் தீவு என்ன நேருவின் குடும்பம் சம்பாதித்த சொத்தா?மோதிலால் நேரு சம்பாதித்து கச்சத் தீவை நேருவுக்கு வைத்துவிட்டுப் போனாரா? நேரு அதை அப்படியே எடுத்துப் பாதுகாத்து மகள் இந்திரா காந்தியிடம் கொடுத்து விட்டுப் போனரா?இந்திராகாந்தி தன்னிடம் இருக்கும் சொந்தச் சொத்து கச்சத் தீவு என்று சிறிமா வோ பண்டாரநாயகாவுக்கு சீதனமாக எடுத்துக்கொடுத்தா ரே, யார் சொத்து? சேது சமஸ்தானத்திற்குச் சொந்தமான சொத்து இல்லையா அது?

மாநில சுயாட்சியை வென்றெடுக்க அணிதிரண்டு வாரீர்!

அறிஞர் அண்ணாவின் எண்ணமாம் மாநில சுயாட்சியை வென்றெடுக்க அணிதிரண்டு வாரீர்!

விருதுநகரில், செப்டம்பர் 15 அன்று நடைபெற்ற மறுமலர்ச்சி தி.மு.க. மாநாட் டில், மாநில சுயாட்சி என்ற தலைப்பில், கழக வெளியீட்டுச் செயலாளர் ஆ.வந் தியத்தேவன் ஆற்றிய உரை....

சுயமரியாதை இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாய் - நீதிக் கட்சியின் வழித் தோன்றலாய் - நூற்றாண்டு பெருமைக்குரிய திராவிட இயக்கத்தின் வாரிசாய் பீடுநடைபோட்டுவரும் பெருமைக்குரிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்களாகிய நாம், நம் ஒப்பற்ற தலைவர் அண்ணாவின் பிறந்த நாளைக் கொண்டாட இந்த மாநாட்டில் கூடியுள்ளோம்.

இது இல்லை எனில் எது இனப்படுகொலை?

இயக்குனர் புகழேந்தி தங்கராஜின் நூல் வெளியீட்டுவிழா சென்னையில் நடை பெறுகின்றது. தமிழக அரசியல் வார இதழ்களில் இயக்குனர் புகழேந்தி அவர் கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூலாக இது வெளியிடப்படுகின்றது.

இயக்குனர் ஆர்.சி.சக்தி தலைமையில் நடைபெறும் நூல் வெளியீட்டு விழா வில் #மதிமுக பொது செயலாளர்  #வைகோ அவர்கள் நூலை வெளியிடு கின்றார்.

Sunday, October 13, 2013

களப்பணி ஆற்றுவோம்; காங்கிரசை அகற்றுவோம்!-பகுதி 2

வித்தியாசமானவர்கள்

முதலில் மூன்று பேர் ஒன்றாக நில்லுங்கள். நாங்கள் அதற்கு மேடை போடுகி றோம். திருப்பூரில் என் நண்பர்கள் தெருத் தெருவாக துண்டு ஏந்தி வசூலித்து பிரம்மாண்டமாக ஒரு கூட்டத்தை நடத்தினோம். நான் சொன்ன அடுத்த கண மே வைகோ மிகுந்த விருப்பத்தோடு மேடைக்கு வந்தார். எந்தத் தயக்கமும் இல்லை.அண்ணே,இடதுசாரிகளோடு நானும் சேர்ந்து ஒரு மாற்று அரசியலை
உருவாக்குவது என்றால், இதைவிட மகிழ்ச்சி வேறு என்ன இருக்கிறது?வரு கிறேன் என்றார். உங்களிடம் நான் வந்து பேசினேன்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் டுகள் வித்தியாச மானவர்கள்.அவர்கள் மண்ணில் வலம் வருவதைவிட,விண் ணிலேயே சஞ்சரித்துக் கொண்டிருக்கக் கூடியவர்களாக இருக்கிறார்களே என்பதில்தான் எனக்கு வருத்தம்.

வைகோ தலைவர் மட்டும் அல்ல..

#வைகோ தலைவர் மட்டும் அல்ல; உலகத் தமிழர்களுக்கு தாயும் ஆனவர்!

விருதுநகர் மாநாட்டில் டாக்டர் நடேசனார், டாக்டர் டி.எம்.நாயர்,பிட்டி தியாக ராயர் படங்களைத் திறந்து வைத்து, கவிஞர் தமிழ்மறவன் பேச்சு 
செப்டம்பர் 15 அன்று, விருதுநகரில் நடைபெற்ற கழக மாநாட்டில்,டாக்டர் நடே சனார்,டாக்டர் டி.எம்.நாயர், பிட்டிதியாகராயர் படங்களைத் திறந்து வைத்து, தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் தமிழ்மறவன் ஆற்றிய உரை.....

இமயம் எனது எல்லை என உலகத்திற்குப் பறைசாற்றுகின்ற விதத்தில் சேர-சோழ-பாண்டியர்கள் இமயத்தின் உச்சியில் கொடிபொறித்த காட்சியினையும்,

நெல்லை ரயில்வே கோட்டம்-மதிமுக வலியுறுத்தல்

திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என #மதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோச னைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருநெல்வேலி மாநகர், புறநகர் மதிமுக வழக்கறிஞர் அணி  நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சட்டத்துறை துணைச் செயலர் அரசுஅமல்ராஜ் தலை மையில் நேற்று  (12.10.13 ) நடைபெற்றது.

இளைஞர்கள்,மாணவர்கள் என1,500 பேர் மதிமுகவில் இணைந்தனர்

தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள்  மாணவர்கள் என 1500 பேர் நேற்று (12.10.13) இரவு #மதிமுக வில் #வைகோ தலைமையில் இணைந்தனர்.

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண் டு அரங்கத்தில் பல்வேறு இயக்கத்தினர்,மாணவர்கள், இளைஞர்கள் ம.தி.மு.க. வில் இணையும் விழா நடந்தது. விழாவிற்கு துணைப் பொதுச் செயலாளர் துரை.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் உதய குமார் வரவேற்றார். விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந் து கொண்டு பேசினார். 

Saturday, October 12, 2013

களப்பணி ஆற்றுவோம்; காங்கிரசை அகற்றுவோம்!-பகுதி 1

களப்பணி ஆற்றுவோம்; காங்கிரசை அகற்றுவோம்! தமிழ்ச் சமுதாயத் தின் நலன் காப்போம்! 

மதுரை மாநாட்டில் தமிழருவி மணியன் பேச்சு காந்திய மக்கள் இயக்கத்தின்
நான்காம் ஆண்டுத் தொடக்க விழாவையொட்டி, 02.10.2013 அன்று மதுரையில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவிமணியன் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

வணக்கத்திற்குரிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச்செயலாளரும், 2016 இல் நடக்க இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில்
மக்களின் பேராதரவோடு பெரு வெற்றியைப் பெற்று, கோட்டையில் முதல்வ ராக வீற்றிருக்கக்கூடிய வாய்ப்பு உள்ள, நெறிசார்ந்த தூய்மையான அகத்திலும் புறத்திலும் எந்தக் களங்கமும் இல்லாத, எந்த மனிதனாலும் எதைக் கொடுத் தும் விலைக்கு வாங்க முடியாத, யாருக்கும் தரகுவேலை பார்க்க வேண்டிய அவசியமே இல்லாத, வைகோ அவர்கள் உள்ளிட்ட இந்த அவையை வணங்கி மகிழ்கிறேன்.

வாலிபால் போட்டியும் வைகோவும்

பாளையங்கோட்டை சேவியர் பள்ளி சார்பில் பள்ளி மாணவர்களுக் கான மின்னொளி மாநில வாலிபால் போட்டி இறுதி விழாவில் #மதிமுக பொது செயலாளர் #வைகோ

 14 வது லூயிஸ் வெர்டியர் சுழற்கோப்பை மற்றும் புரொபசனல் கூரியர் சுழற் கோப்பைக்கான மின்னொளி மாநில வாலிபால் போட்டியில் மாநிலம் முழு வதும் இருந்து பங்கேற்றுள்ள 14 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 3 நாட் கள்  போட்டிகள் நடத்தப் பட்டன.

நேற்று (11.10.13 )இரவு நடந்த இறுதி போட்டியில் பாளை.,சேவியர் பள்ளி அணி, தஞ்சாவூர் அரசு பள்ளி அணிகள் மோதின. இதில் பாளை.,சேவியர் பள்ளி அணி வெற்றி பெற்று முதலிடத்தையும், தஞ்சாவூர் அரசு பள்ளி 2ம் இடத்தையும்,திரு வாரூர் பள்ளி அணி 3ம் இடத்தையும், திருப்பூர்  வித்யவிகாசி பள்ளி அணி 4ம் இடத்தையும் பிடித்தன.

மாணவர்களுக்கான எழுச்சிமிகு பேச்சுப்போட்டி

 #மதிமுக மாணவர் அணி நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான எழுச்சிமிகு பேச்சுப்போட்டி 

தலைப்பு: நாடாளுமன்றத்தில் வைகோ

நாள்: 20.10.2013 ஞாயிறு காலை 9.30 மணி

மாவட்ட வாரியாக பேச்சுப்போட்டி நடைபெறும் இடங்கள் - நடுவர்கள்

தோழர் தியாகு உயிரைக் காப்போம்!

தோழர் தியாகு உயிரைக் காப்போம்! இந்திய அரசே! காமன்வெல்த்மாநாட்டில் பங்கேற்காதே!

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த்மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி உண்ணாப் போராட்டம் நடத்திவரும் தோழர் தியாகு வின் உயிரைக் காப்போம்எனவும், இலங்கை காமன்வெல்த் மாநாட்டை இந்தி யா புறக்கணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, அனைத்துக் கட்சிகளின் சார் பிலும் நேற்று (11.10.13) தமிழகமெங்கும்ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

பேரறிவாளனின் உயிர் வலி ஆவண படம் -பாடல் வெளியீடு

கடந்த வியாழக்கிழமை அன்று (10.10.2013) சர்வதேச மரண தண்டனை எதிர்ப்பு நாளை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் பேரறிவாளன் அவர்களின் 'உயிர் வலி' ஆவணப்படதின் பாடல் வெளியீடு. இக்சா அரங்கம் எழும்பூர் அருங்காட் சியம் எதிரில். மாலை 5மணிக்கு இந்த கருத்தரங்கம் வெளியீட்டு நிகழ்வு நடை பெற்றது .

இதில் பேரறிவாளன் தயார் அற்புதம்மா,#மதிமுக துணை பொதுசெயலாளர் மல்லை சத்யா , திரைப்பட இயக்குனர் சுப்ரமணியம் சிவா , கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் மரணதண்டனை எதிரான தோழர்களும் கலந்து கொண்டனர் .

Friday, October 11, 2013

வ.உ.சி “சிவஞான போதம்” உரை நூல் விழா-வைகோ உரை- பாகம் 8

வைக்கம் வீரரின் படத் திறப்பு. தந்தை பெரியார் படம் திறப்பு. திறந்து வைத்தது யார்? வ.உ.சிதம்பரம் பிள்ளை.பெரியாரும் காங்கிரசை வளர்த்தவர்தானே, காங் கிரசில் இருக்கும் வர்ணாசிரமக் கொடுமையை எதிர்த்து வெளியேறியவர் தானே?

1928 ஆம் ஆண்டு பெரியார் படத்தை வ.உ.சிதம்பரம் திறந்து வைத்ததை குடிய ரசுப் பத்திரிகை வெளியிடுகிறது. 20 ஆண்டுகள் கழித்து வ.உ.சி. மறைந்த பிறகு, 1948 இல் மே மாதம் 9 ஆம் தேதி தூத்துக்குடியில் திராவிடர் கழகத்தின் 18 ஆம் மாகாண மாநாடு. அந்த மாநாட்டில் வ.உ.சி. படம் திறந்து வைக்கப்பட்டது.அந்த மாநாட்டில் படத்தைத் திறப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தவர் தமிழ்த் தென் றல் திரு வி.க. ஆனால், அவர் வரவில்லை. அவர் வரவில்லை என்பதால் குத் தூசி குருசாமி அந்தப் படத்தைத் திறந்து வைத்தார். அந்த உணர்வோடுதான் நான் இங்கே பேசுகிறேன்.

Thursday, October 10, 2013

விவசாயிகளின் பாசன உரிமையில் கைவைக்காதீர்கள்-பகுதி 2

விவசாயிகளின் பாசன உரிமையில் கைவைக்காதீர்கள்..... #வைகோ


ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்களுக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு எங் கள் மக்களின் வயிற்றில் அடிக்காதீர்கள்!


தூத்துக்குடி மாவட்ட-தாமிரபரணி நதிநீர்ப் பாதுகாப்புப் பேரவையின் விவசாயிகள் வாழ்வாதார விழிப்புணர்வு மாநாட்டில் #வைகோ


அலைமோதும் நினைவுகள்

முதன் முதலாக என் கிராமத்திலிருந்து பாளையங்கோட்டை சவேரியார் கல் லூரியில் பயில்வதற்காக வந்தேன்.நான் என் கிராமத்துப் பள்ளிக்கூடத்திலே
படித்துவிட்டு, அதிகம் மதிப்பெண் பெற்றதனால் பரிந்துரை இல்லாமல் பாதர் கத்தோலிக்க சாமியார் சூசைஅவர்கள் முதல்வராக இருக்கும்போது நான் சேவியர் கல்லூரியில் போய்ச் சேர்ந்தேன். எனக்கு பட்டணமே தெரியாது. எனக்குத் திருநெல்வேலியே சொர்க்கலோகமாகத் தெரிந்தது. மாடுகள் பூட்டப் பட்ட வில்வண்டிதான் எங்களுக்கு கார்.அங்கு நான் சந்தித்த என் உயிர் நண்பன் நான்கு ஆண்டுகள் உயிருக்கு உயிராகப் பழகிய நண்பன் இந்த ஏரலைச் சேர்ந்த ஆனந்த முதலியாருடைய குடும்பத்துப் பிள்ளை மாரி இராமச்சந்திரன். நாங் கள் உயிருக்கு உயிராகப் பழகினோம்.சித்திரம்போல் எழுதுவார்.சிறந்த கவிஞர் உயர்ந்த ஒழுக்கமான குடும்பத்திலே உள்ளவர்.நானும் அவரும் உயிர் நண்பர் கள்.

மறுமலர்ச்சி பயணம் தூத்துக்குடி மாவட்டம் -2–வது கட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் மறுமலர்ச்சிப் பயணம்

மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சி பயணத்தை தமிழகத்தில் மேற்கொண்டு மக்கள் தலைவர் #வைகோ அவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக (09.10.2013) கோவில்பட்டி ஒன்றியத்தின் புகைப்படங்கள்


கல்லூரி முதல்வர் படுகொலை வைகோ வேதனை

கல்லூரி முதல்வர் படுகொலை #வைகோ வேதனை;
வளரும் தலை முறைக்கு வேண்டுகோள்!

இதயத்தை உறைய வைக்கும் கொடூரமான துன்பச் செய்தி, அறிந்த மாத்திரத் தில் அனைவரையும் பலத்த அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறது. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்குச் செல்லுகின்ற வழியில், வல்லநாட்டுக்கு அருகில் உள்ள குழந்தை ஏசு பொறியியல் கல்லூரியின முதல்வர் சுரேஷ் அவர்கள், இன்று காலை, அதே பொறியியல் கல்லூரியின் மூன்று மாணவர்களால், கல் லூரி வளாகத்துக்கு உள்ளேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். 

பேருந்துகளில் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறுகளில் இம்மாண வர்கள் நடந்து கொண்ட விதம் கல்லூரியின் ஒழுங்குக்குக் கேடு ஏற்படுத்தும் என்று எண்ணி, இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தற்காலிக நீக்கம் செய்து உள்ளார். அதனால், இம்மாணவர்கள், அவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து உள்ளனர். 

மறுமலர்ச்சி பயணம் தூத்துக்குடி மாவட்டம் -2–வது கட்டம்

காங்கிரஸ் கட்சிக்கு நேரடியாகவோ,மறைமுகமாகவோ ஆதரவளிக்கும் எந்த கட்சிக்கு மதிமுக ஆதரவு கிடையாது என #மதிமுக பொதுச்செயலர் #வைகோ கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு ஒன்றியத்தில் ம.தி.மு.க மாவட் டச் செயலர் ஜோயல் தலைமையில், மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணத்தை அன்னை தெரசா நகரில் நேற்று (09.10.13) புதன்கிழமை தொடங்கிய வைகோ அங்கு பேசியதாவது: 

கோவை மெட்ரோ ரயில் -முதல்வருக்கு மதிமுக மனு

கோவை மெட்ரோ' திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக "கோவைக்கு வரும் "மெட்ரோ மேன்' ஸ்ரீதரனுடன் மாநகராட்சி மற்றும் மாநில அரசு அதிகாரி கள், அதிகாரப்பூர்வமாக சந்தித்துப் பேச ஏற்பாடு செய்ய வேண்டும்'  #மதிமுக இளைஞரணி வலியுறுத்தல்.

முதல்வருக்கு மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் அனுப்பி யுள்ள மனு:

டில்லி மெட்ரோ திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றிய ஸ்ரீதரன், கோவைக்கு வரும் 25ம் தேதி வரவுள்ளார். 

Wednesday, October 9, 2013

வ.உ.சி “சிவஞான போதம்” உரை நூல் விழா-வைகோ உரை- பாகம் 7

இந்தக் காலகட்டத்தில் வழக்கை நடத்துவதற்கும்,இந்தப் பிரச்சனையில் பாதிக் கப்பட்டவர் களுக்கு உதவுவதற்கும் சிறையிலே இருந்த சிதம்பரம் பிள்ளை அவர்கள் தன் சொத்தை விற்று இராஜபாளையத்தில் இருந்த சுப்பையா முதலி யார் என்பவர் மூலம் பாண்டிச்சேரிக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பி இருக்கிறார். அங்கு ஒட்டப்பிடாரம் மாடசாமிப்பிள்ளையைச் சந்திக்கிறார். அன்றைக்கு ஆயிரம் ரூபாய் என்றால் இன்றைக்கு பத்து இலட்சம். அதைவிட அதிகம்.

சிறையில் இருந்தவாறே தகவல் கொடுத்து, ஆயிரம் ரூபாய் பணம் ஏற்பாடு செய்து இந்தப் பணத்தை வழக்கு சம்பந்தப்பட்டவரிடத்தில் பாண்டிச்சேரியில் கொண்டுபோய் கொடுத்துவிட்டு வாருங்கள் என்று பணத்தைக் கொடுத்து அனுப்புகிறார். இதற்கு ஆதாரம் இருக்கிறது. ஒன்றல்ல பல ஆதாரங்கள் இருக் கின்றன.

விவசாயிகளின் பாசன உரிமையில் கைவைக்காதீர்கள்.

விவசாயிகளின் பாசன உரிமையில் கைவைக்காதீர்கள்..... #வைகோ

ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்களுக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு  எங் கள் மக்களின் வயிற்றில் அடிக்காதீர்கள்!

தூத்துக்குடி மாவட்ட-தாமிரபரணி நதிநீர்ப் பாதுகாப்புப் பேரவை யின் விவசாயிகள் வாழ்வாதார விழிப்புணர்வு மாநாட்டில் #வைகோ


தூத்துக்குடி மாவட்ட - தாமிரபரணி நதிநீர்ப் பாதுகாப்புப் பேரவையின் விவ சாயிகள் வாழ்வாதார விழிப்புணர்வு மாநாட்டு - செப்டம்பர் 29 அன்று ஏரலில் நடைபெற்றது.மாநாட்டில் கலந்து கொண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

கோவை தேசிய நெடுஞ்சாலை, மத்திய,மாநில அரசுகள் ?

மதுக்கரை, வாளையார் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றி திட்டத்தை விரைந்து

மதுக்கரை, வாளையார் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றி திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக #மதிமுக மாநில இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன் நெடு ஞ்சாலைத்துறை அமைச்சருக்கு எழுதிய கடித விவரம்:

மறுமலர்ச்சி பயணம் தூத்துக்குடி மாவட்டம் -2–வது கட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் #வைகோ இரண்டாம் கட்டமாக மறுமலர்ச்சி பயணம்

நேற்று (08.10.13) தூத்துக்குடி மாவட்டம், புதூர் ஒன்றியத்தில் இரண்டாம் கட்ட மறுமலர்ச்சி பயணத்தை கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மேற் கொண்டிருக் கிறார்கள். உடன் மாவட்டக் கழகச் செயலாளர் வழக்கறிஞர் எஸ் .ஜோயல் உள்ளார். இப்பயணத்தில் கழக முன்னணினரும், தோழர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

பயண காட்சிகள்


Tuesday, October 8, 2013

வைகோ தலைமையில் நம்பிக்கையுடன் செயலாற்றுவோம்!

தமிழகம் இழந்த உரிமைகளைப் பெற்றிட,தமிழன் தொலைத்த பெருமைகளை மீட்டிட, #வைகோ தலைமையில் நம்பிக்கையுடன் செயலாற்றுவோம்!

விருதுநகர் மாநாட்டில் டாக்டர் இரா.மாசிலாமணி

செப்டம்பர் 15, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி,விருதுநகரில் நடை பெற்ற #மதிமுக வின் எழுச்சிமிகு மாநாட்டில், பொருளாளர் டாக்டர் இரா.மாசி லாமணி ஆற்றிய உரை:

மறுமலர்ச்சி பயணம் தூத்துக்குடி மாவட்டம் -2–வது கட்டம்-பகுதி 2

மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சி பயணத்தை #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ மேற்கொண்டு வருகிறார். நேற்று (07.10.13 )மாலை கன்னியாகுமரி யில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடிமாவட்டம் விளாத்திகுளம் யூனியன் பகுதி யில் சுற்றுப்பயணம் செய்தார். குளத்தூரில் இருந்து வைகோ தனது சுற்றுப்பய ணத்தை தொடங்கினார். முன்னதாக அங்கு அவர் பேசியதாவது:- 

578 தமிழக மீனவர்களின் படுகொலைக்கு மத்தியஅரசு தான் காரணம். இலங் கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன், சாத்தான் (இலங்கை அதிபர் ராஜபக்சே) கையால் பதவி ஏற்றுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தொடர்ந்து 17 ஆண்டுகளாக போராடி வருகிறேன். 

திண்டுக்கல்-குமுளி நெடுஞ்சாலை சுங்கவரி கூடாது -மதிமுக

திண்டுக்கல்-குமுளி நெடுஞ்சாலையில் சுங்கவரி வசூல் செய்யக்கூடாது என்று #மதிமுகவினர் கோரிக்கைவிடுத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் (தெற்கு) ஒன்றிய ம.தி.மு.க. கூட்டம், செம் பட்டி அருகே ஆதிலட்சுமிபுரம் அகரத்தம்மன் கோவிலில் நடைபெற்றது. கூட் டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வராகவன் தலைமை தாங்கினார். 

மறுமலர்ச்சி பயணம் தூத்துக்குடி மாவட்டம் -2–வது கட்டம்-பகுதி 1

தூத்துக்குடி மாவட்டம் கொளத்தூர் பகுதியில் தலைவர் #வைகோ அவர்கள் இரண்டாம் கட்ட மறுமலர்ச்சி பிரச்சார பயணத்தை புகைப்படங்கள்.


காங்கிரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்: வைகோ பேச்சு

#மதிமுக. பொதுச் செயலாளர் #வைகோ குமரி மாவட்டம் திருவரம்பு பகுதி யில் நேற்று (07.10.13)நடந்த ம.தி.மு.க. பிரமுகர் இல்ல விழாவில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது:–

இலங்கையில் தமிழர்களை பாதுகாக்க தவறிய காங்கிரஸ் கட்சிக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். இதற்காக அனைத்து கட்சி யினரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். கட்சி பாகுபாடின்றி அனைவரும் இந்த முயற்சியில் பங்கெடுக்க வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற கட்சி பாகுபாடின்றி அனைவ ரும் இணைந்து செயல்பட வேண்டும். இதற்காக தான் எங்கள் பயணத்தை தொடங்கியுள்ளோம்.

திருக்கழுக்குன்ற பகுதியில் நோய்க்கிருமி

திருக்கழுக்குன்ற பகுதி மக்களை நோய்க்கிருமிகளிடமிருந்து காப்பாற்றுக!


தமிழக அரசுக்கு #வைகோ கோரிக்கை


மத்திய அரசின் நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் லேடெக்ஸ்  (எச்.எல். எல்) பயோடெக் லிமிடெட் நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த திருக்கழுக்குன்றம் தாலுக்கா, திருமணி ஊராட்சியில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் மனித உயிர்களைப் பறித்திடும் கொடிய கொள்ளை நோய்களான அம்மை, காசநோய், காலரா, போலியோ, ரேபிஸ்,ஆந்ராக்ஸ்,டெட்டனக்ஸ், மஞ்சள் காமாலை, புற்றுநோய், பால்வினை உள்ளிட்ட பல்வேறு நோய்களை உருவாக்கும் கிருமிகளை அழித்து எதிர்வினை ஆற்றி குணப்படுத்தும் மருந் தைக் கண்டறிய, நடப்பாண்டில் மத்திய அரசு சுமார் 600கோடி ரூபாய் நிதி ஒதுக் கீடு செய்து, பணிகள் நடந்துகொண்டிருக்கிறது.

Monday, October 7, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 24

நாள்:-06.03.2008

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை துப்பாக்கிச்சூடு!

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

மிகுந்த வேதனையுடனும், மனவருத்தத்துடனும் இந்தக் கடிதத்தைத் தங்க ளுக்கு எழுதி இருக்கிறேன்.

இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்களைத் தாக்கிக் கொன்று வருகின்ற
நடவடிக்கைகள், அன்றாட நிகழ்வுகளாகி விட்டன.

வ.உ.சி “சிவஞான போதம்” உரை நூல் விழா-வைகோ உரை- பாகம் 6

நான் பகத் சிங் பிறந்த ஊரான கட்கர் கலான் என்ற ஊருக்கு இன்றைக்குக் காலையில் சென்று இருந்தேன். அந்த வீரமிக்க மண்ணைத் தொடுகிற பெரும் பேறு எனக்குக் கிடைத்தது. அந்த மண்ணைத் தொட்டு வணங்கினேன் என்று சொல்லிவிட்டு அந்த மண்ணை நான் எடுத்து வந்து இருந்தேன். அந்த மண் ணை எடுத்துக்காட்டி உயர்த்திக் காண்பித்து முத்தமிட்டு வணங்கிவிட்டு நான் பேசினேன். இங்கும் பாஞ்சாலங்குறிச்சி மண்ணை நெற்றியில் பூசினால் பிள் ளைக்கு வீரம் பிறக்கும் என்கின்ற நம்பிக்கை இந்த நாட்டு மக்களிடத்தில் இருக்கிறது.

சிறையில் அடைக்கப்பட்ட வ.உ.சிக்கு, அங்கே கொடுக்கப்பட்ட வேலையின் காரணமாக உள்ளங்கை கிழிந்து பார்ப்பதற்குக் கொப்புளம் கொப்புளமாக கக்ஷ் டப்படுகிற நேரத்தில், அந்தச் சிறை அதிகாரி அதற்கு மேலும் கொளுத்துகின்ற வெயிலில், அவருடைய முதுகில் மாட்டைக் கட்டுவதைப்போல கயிறு கட்டி அவருடைய தோளிலும் முதுகிலும் கயிற்றினைக்கட்டி செக்கு இழுக்கச்சொன் னார்கள். அவர் செக்கு இழுத்தார்.

வைகோவின் கரங்களை வலுப்படுத்துங்கள்!

மக்கள் பிரச்சினைகளுக்காக போராடுகின்ற #வைகோ வின் கரங்களை வலுப் படுத்துங்கள்!

விருதுநகர் மாநாட்டில் #மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி, செப்டம்பர் - 15 அன்று விருதுநக ரில் நடைபெற்ற மதிமுக  மாநாட்டில், அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி
ஆற்றிய உரை:

ரயில்வே கட்டண உயர்வு - வைகோ கண்டனம்

ரயில்வே கட்டண உயர்வு #வைகோ கண்டனம்

காங்கிஸ் கூட்டணி அரசு ஆட்சியில் நீடிக்கும் கடைசி மணித்துணி வரை மக்களை வாட்டி வதைக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்தும் என்பதற்கு இன்னொரு உதாரணம்தான் ரயில் கட்டண உயர்வு.

கடந்த ஜனவரி மாதத்தில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே இரயில் கட்டணங்களை 20 சதவீதம் உயர்த்திவிட்டு, பிப்ரவரி மாதம் ரயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வு இல்லை என்று மோசடி அறி விப்பைச் செய்தார் ரயில்வே அமைச்சர்.

Sunday, October 6, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 23

நாள்:-12.01.2008

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை துப்பாக்கிச்சூடு!

#வைகோ கடும் கண்டனம்

சிங்கள இனவெறி அரசை எச்சரிக்குமாறு இந்தியப் பிரதமருக்கு வேண்டு கோள்!

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இன்று (12.01.08) காலை, இராமேஸ்வரம் அருகே இந்திய மீனவர்கள் மீது
இலங்கைக் கடற்படை நடத்திய மிருகத்தனமான துப்பாக்கிச்சூடு குறித்துத்
தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

வ.உ.சி “சிவஞான போதம்” உரை நூல் விழா-வைகோ உரை- பாகம் 5

தமிழ்த்தாத்தா’ உ.வே.சா செய்த பணியை, இன்றைக்கு திவான் செய்து கொண் டு இருக்கிறார். சாகித்ய அகாடெமி போன்ற விருதுகளுக்கு அவர் தகுதி உடை யவரா என்றால் ஆம், என்பேன். இவருக்குக் கொடுத்தால் அந்த விருதுக்குத் தகுதி என்று கருதுகிறவன் நான். 70 புத்தகங்களுக்கு மேல் அவர் தந்து இருக் கிறார். என்ன அருமையான ஆராய்ச்சி! அவர் எம்.பில். பட்டம் பெற்றதேகூட. ஆக்ஷ் கொலைவழக்கை ஆய்வு செய்ததை வைத்துத்தான் பரிசு பெற்றார், விரு துபெற்றார்.

செக்கு இழுத்த செம்மல் சிதம்பரம் பிள்ளை இந்த ம.தி.தா. இந்து பள்ளியில் தான் படித்தார். முண்டாசுக் கவிஞன் பாரதி இங்கேதான் படித்தார். அந்த நாள் களை நான் எண்ணிப் பார்க்கிறேன். வ.உ.சி. தொழிலாளர்களுக்காகப் போராடி னார். கோரல் மில்லில் அவர் நடத்திய போராட்டம். அந்தப் போராட்டத்தில் தொழிலாளர்களுக்கு உணவு படைக்க தன் சொத்துகளைத் தந்தார். இந்தியாவி லேயே தொழிலாளர்களைத் திரட்டிப் போராட்டத்தில் வெற்றிபெற்ற ஒரே தலைவர் அந்தக் காலகட்டத்தில் செக்கு இழுத்த செம்மல் வ.உ.சி.யைத்தவிர வேறு யாரும் கிடையாது.

ம.பொ.சி. 18–ம் ஆண்டு நினைவு விழா

ம.பொ.சி.யின் 18–ம் ஆண்டு நினைவு விழா மற்றும் முதலாம் ஆண்டு சிலப்பதி கார விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பழ.நெடுமாறன், #வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி. அறக்கட்டளை மற்றும் ம.பொ.சி. பதிப்பகம் சார்பில், சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 18–வது ஆண்டு நினைவு விழா மற்றும் முதலாம் ஆண்டு சிலப்பதிகார விழா சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஓட்டல் சவேராவில் நேற்று (05.10.13 ) நடைபெற்றது. விழாவுக்கு உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார்.விழாவில், சிலப்பதிகார இணையதளத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடங்கிவைத்தார். வாழ்நாள் சாதனை விருதா ன ம.பொ.சி. விருதுகளை, ஓய்வுபெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் மற்றும் கவிஞர் தாமரைச்செல்வன் ஆகியோருக்கு பழ.நெடுமாறன் வழங்கினார்.