Sunday, October 20, 2013

விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குக-மதிமுக

கார் பருவத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை யை  அரசு உடனடியாக வழங்கவேண்டும் என #மதிமுக சார்பில் வலியுறுத்தல்  

இதுகுறித்து மதிமுக மாநில விவசாய அணி துணைச் செயலர் வரதராஜன் கூறியதாவது,

கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், எட்டயபுரம் ஆகிய நான்கு வட் டங்களில், கடந்த ஆண்டு சுமார் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் உளுந்து, பாசி, மக்காச்சோளம், சூரியகாந்தி, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டன. போதிய மழை இல்லாததால் பயிர்கள் முளையிலேயே கருகி விட்டன.

எனவே தேசிய வேளான் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, இழப்பீட்டுத் தொகையை உடனடியாக அரசின் தேசிய வேளாண் பயிர் காப்பீட்டு கழகம் வழங்க வேண்டும் என்றார் அவர்.

No comments:

Post a Comment