Tuesday, April 30, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 20

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே


ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு அரண் விடுதலைப்புலிகள்...

தலைவர் வைகோ தமிழீழம் சென்று வந்த தகவல்கள் குறித்து பின்னாளில்,
விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான பால்ராஜ் ‘ஈழமுரசு’ இதழில்
எழுதிய கட்டுரை ஒன்றில், வைகோவின் உயிருக்கு எவ்வாறு அச்சுறுத்தல்
இருந்தது என்பதைக் குறிப்பிட்டிருந்தார்.

“வை.கோபால்சாமி அவர்களைப் பத்திரமாக தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக் கும் படி தலைவர் என்னிடம் ஒப்படைத்தார். ஒவ்வொரு இடமாகத் தப்பி வந் தோம். மணலாற்றில் வை.கோபால்சாமி இருப்பதாக அறிந்த அமைதிப்படை அவரை உயிருடனோ, பிணமாகவோ பிடிக்கப் பெரும் முயற்சிகளை மேற் கொண்டது. அலம்பில் பகுதியில் அவரைப் படகேற்றும் வரை அவரது பயணம் பாதுகாப்பாகவே இருந்தது. ஆனாலும், அங்கிருந்து படகில் அவர் நல்ல தண் ணி தொடுவாயைச் சென்றடைந்திருந்த போது, அங்கு இராணுவத்தினருடன் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வை.கோபால்சாமி காப்பாற்றப் பட்டார். அப்போது நடந்த மோதலில் லப்டினன்ட் சரத் என்ற போராளி உயிரி ழந்தார்.”

தமிழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் -மதிமுக வழக்கு

இந்தி பேசாத மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதால், ஜம்மு காஷ்மீர் போல, தமிழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி, ம.தி.மு.க., தாக்கல் செய்த மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளிவைத்தது.

மதுரை ம.தி.மு.க.,தொண்டரணி செயலாளர் பாஸ்கரசேதுபதி தாக்கல் செய்த
பொது நல மனு: இந்தியாவில், இந்தி பேசாத மாநில மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். வடமாநில மீனவர்களை சோமாலிய கடற்கொள்ளையர்கள் தாக்கியபோது, சர்வதேச கோர்ட் மூலம் 450 வழக்கு களை மத்திய அரசு தாக்கல் செய்து, நியாயம் கோரியது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. இப்பிரச்னைக்கு சர்வதேச கோர்ட்டை, மத்திய அரசு நாடவில்லை.

புரட்சி தொடங்கிவிட்டது; மறுமலர்ச்சி நிகழ்ந்தே தீரும்!

தமிழ்நாட்டுத் தாய்மார்கள் போர்க்கோலம் பூண்டுவிட்டார்கள்;
டாஸ்மாக் கடைகளை எதிர்த்து வீதிக்கு வருகின்றார்கள்!
பொள்ளாச்சியில் வைகோ முழக்கம்

முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், தொண்டர் அணி -இளைஞர் அணி - மாணவர் அணி
தோழர்கள் பங்கேற்ற, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப்பிரச்சார நடைப்பயணம், 16.04.2013 அன்று பொள்ளாச்சியில் பல்லாயிரக் கணக்கான மக்களின் வாழ்த்து
முழக்கங்களுடன் தொடங்கியது.நடைப்பயணத் தொடக்க விழாப் பொதுக் கூட்டத் தில் வைகோ ஆற்றிய உரையில் இருந்து....

வீரத்தாலும், விவேகத்தாலும்,விருந்தோம்பும் பண்பாலும், கொடை உள்ளத் தாலும், வரலாற்றில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்று இருக்கின்ற கொங்கு மண்டலத்தில், பொள்ளாச்சித் திருநகரில், பயணம் வெல்க; தமிழகத்தின் எதிர் காலத்தில் நலம் விழைக என உயர்ந்த உள்ளத்தோடு வாழ்த்தி இருக்கின்ற
பெருமக்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித் துக் கொள்கின்றேன்.

சமூக நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் காக்க இருகரம் கூப்பி வேண்டுகிறேன் வைகோ அறிக்கை

வெறுப்பையும், வேற்றுமையையும் மனதில் அகற்றி,
சமூக நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் காக்க
இருகரம் கூப்பி வேண்டுகிறேன்

வைகோ அறிக்கை

ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத் தப்பட்ட மக்களுக்கும் சமூக நீதி மலரவும், அவர்கள் வாழ்வில் உயரவும், தமிழகத்தில் தந்தை பெரியார் அவர்களும், அறிஞர் அண்ணா அவர்களும் கால மெல்லாம் அறவழியில் போராடி, மகத்தான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய தில் வட தமிழ்நாடு பெரும் பங்கு வகித்து வந்துள்ளது.

இந்திய அரசியல் சட்டத்தைத் தந்த பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் காட்டிய சமூக நீதிப் பாதையைத் தமிழகம் ஏற்றுக்கொண்டதனால், தியாகச் சுடர் காம ராஜர் உள்ளிட்ட தலைவர்கள் முன்னெடுத்த முயற்சிகளால், சமூக நீதிக்காக இந்திய அரசியல் சட்டம் முதல் திருத்தத்தைக் கண்டது. அத்தகைய பெருமைக் குரிய தமிழகத்தில் மிகப் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களும், வர்ணாசிரமத்தின் பெயரால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டிருந்த தலித் சமூக மக்களும் நேசமும் நட்பும் கொண்டு கரம் கோர்த்து வாழும் நிலை மேலும் மேலும் வளர வேண்டும் என்று ஏங்கி இருந்தேன்.

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -37










மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -36


மே தின வாழ்த்து - வைகோ

வருடத்தின் 365 நாள்களில் ஒரு சில நாள்களே உலகம் முழுமையும் கொண்டாடப்படுகின்ற உன்னதமான நாள்கள் ஆகும். அத்தகைய திருநாள்தான் ‘மே’ திங்களின் தலைநாள் ஆன ஒன்றாம் தேதி ஆகும்.

“உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!

நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை - பூட்டப்பட்ட விலங்குகளைத் தவிர”

என்று பிரகடனம் செய்த காரல் மார்க்சும், ஃபிரடெரிக் எங்கல்சும் கண்ட கனவுகளை நனவாக்க, பாட்டாளித் தோழர்கள் பச்சை ரத்தம் பரிமாறி, உரிமைப் பதாகையை உயர்த்தி வெற்றி கண்டதைக் கொண்டாடும் நாள்தான் மே நாள் ஆகும்.

மரக்காணம் பகுதி மக்களைச் சந்திக்கச் செல்லும் மறுமலர்ச்சி தி.மு.கழகக் குழுவினர்

வடதமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கவும், ஏப்ரல் 25-ஆம் தேதி அன்று பாதிப்புக்கு உள்ளான மரக்காணம் பகுதி மக்களைச் சந்திக்கவும் ஏப்ரல் 30-ஆம் தேதி காலை 9.00 மணி அளவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் டாக்டர் இரா. மாசிலாமணி, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், தேர்தல் பணிச் செயலாளர் ந. மனோகரன், மாநகராட்சி மன்ற உறுப்பினர் சீமா பஷீர், வடசென்னை மாவட்டச் செயலாளர் சு. ஜீவன் உள்ளிட்ட குழுவினர் செல்ல இருக்கின்றனர்.

Monday, April 29, 2013

பாவேந்தர் பாரதிதாசன், பாவலர் செய்குதம்பி பாடல்களில் மதுவிலக்கு

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு”

என்று வாழ்நாள் எல்லாம் முழங்கிக் கொண்டிருந்தவர் பாவேந்தர் பாரதிதாசன் (29.04.1891 புதன் இரவு 10.15 மணி - 1964 ஏப்ரல் 21; வாழ்ந்தகாலம் 72 ஆண்டுகள்
71 மாதங்கள் மூன்று வாரங்கள், இரண்டு நாட்கள்)

தமிழர் தலைவர் வைகோ அவர்களை ஆசிரியராகக் கொண்டு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் அதிகார பூர்வ வார ஏடாக உலாவரும் சங்கொலி ஏட்டின் தலைப்பு வரிகளாக ‘பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு’ வரிகளும் புரட்சிக்கவிஞரின் வரிகளாகும். நெஞ்சு றுதிமிக்க வீர உள்ளத்திற்குச் சொந்தமான பாவேந்தர் மதுவிலக்கு பற்றி பாடிய பாடல்கள் இதோ:

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -35

பூரண மதுவிலக்கை வலியுறுத்தும் மூன்றாம் கட்ட நடைபயணத்தை, 13ஆம் நாளான நேற்று (28.04.13) குமாரபாளையத்தில் தொடங்கிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பள்ளிப்பாளையம் வழியாகச் சென்று இரவு ஈரோட்டில் நிறைவு செய்தார். வரும் வழியில்,

ஈரோடு கருங்கல்பாளையம் பட்டாளி படிப்பகத்தில் நடைபெற்ற இந்த உண் ணாவிரத போராட்டத்தில் பட்டாளிபடிப்பகம், கலைத்தாய் அறக்கட்டளை, குக்கூ குழந்தைகள் அமைப்பு, நீர்துளிகள் உள்ளிட்ட அமைப்புகள், மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

இந்த போராட்டத்தை காந்திவாதி சசிபெருமாள் தொடங்கி வைத்தார். வக்கீல் மோகன் முன்னிலை வகித்தார். உண்ணாவிரத போராட்டத்தை மதிமுக பொதுசெயலாளர் வைகோ பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார்.

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -34




மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -33




மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -32



மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -31



Sunday, April 28, 2013

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -30



மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -29




ஸ்டெர்லைட் ஆலை குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நாளை விசாரணை வைகோ பங்கேற்கிறார்!

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடுவதற்கு உத்திரவு பிறப்பித்தது. அந்த உத்திரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கு நாளை (29.04.2013 திங்கள்கிழமை) சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அந்த வழக்கு விசாரணை யில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பங்கேற்க உள்ளார்.

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -28



மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -27

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணத்தை மேற்கொண்டு இருக்கும் வைகோவும் மதிமுகவினரும் 12 வது நாள் பயணத்தில் நேற்று(27.04.13)  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திற்கு  வைகோ தொண்டர்களுடன் நடைபயண மாக வந்தார்.

அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ராஜீவ் படுகொலையில் நிரபராதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன், ஆகியோரின் உயிரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் தமிழக அரசு உள்ளது. அதற்காக இநதக் கூட்டத்தின் வாயிலாக தமிழக முதல்-அமைச்சருக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். தங்களது அமைச்சரவையை கூட்டி 161-வது சட்டப்பிரிவின் படி தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைக்க கவர்னரை வைத்து அறிவிக்க வேண்டும்.

வைகோவின் அறப்போர் வாகை சூடும்!


முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, பொள்ளாச்சியில் 16.04.2013 அன்று, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் தொடங்கிய மூன் றாம் கட்ட விழிப்புணர்வுப் பிரச்சார நடைப்பயணத்தை வாழ்த்தி, பேரூர் ஆதி னம் இளையபட்டம் மருதாசல அடிகளார் ஆற்றிய உரை:

முழுமையான மதுவிலக்கு கோரி,மூன்றாவது கட்ட நடைபயணத்தை,இந்தப் பொள்ளாச்சி நகரில் தொடங்குகின்ற, உலகத் தமிழர்களின் ஒருமித்த குரலாக ஒலித்துக் கொண்டு இருக்கின்ற பாராட்டுதலுக்கு உரிய ஐயா வைகோ அவர் களுக்கும், உங்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள் கின்றோம்.

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -26




Saturday, April 27, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 19

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே


தமிழீழம் சென்று நலமுடன் திரும்பிய
வைகோவுக்கு நாடாளுமன்றத்தில் வரவேற்பு

தமிழீழத்திற்கு தலைவர் வைகோ மேற்கொண்ட இரகசியப் பயணம் தமிழக அரசியல் களத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

1989 பிப்ரவரி 6 ம் நாள் நள்ளிரவு கடந்து கோடியக்கரை கடல் பகுதியிலிருந்து விடுதலைப்புலிகளின் படகில் தலைவர் வைகோ ஈழம் நோக்கிப் புறப்பட்டார். போகும் பாதையெல்லாம் கடற்கரையோரத்திலிருந்து இந்திய இராணுவத்தின் தாக்குதல். தாக்குதல் தொடுத்த போதும் விடுதலைப் புலிகள் போரிட்டவாறே வைகோ அவர்களை வவுனியா காட்டில் கொண்டுபோய்ச் சேர்த்தனர்.

வைகோவின் போராட்டம், தமிழகத்துக்கு விடியலைத் தரும்!

காந்தி நடத்திய கள்ளுக்கடை மறியல்,
இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தந்தது!
வைகோவின் போராட்டம், தமிழகத்துக்கு விடியலைத் தரும்!

முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், 16.04.2013 அன்று பொள்ளாச்சியில் தொடங்கிய மூன் றாம் கட்ட விழிப்புணர்வுப் பிரச்சார நடைப்பயணத் தொடக்க விழாப் பொதுக் கூட்டத்தில், பேராசிரியர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் ஆற்றிய உரை:-
இதயத்தில் இலட்சியங்களையும்,இன்னுயிரில் தமிழ் உணர்வையும் ஏந்திய வாறு, ஒரு இராணுவக் கட்டுப் பாட்டோடு இயங்குகின்ற ஒரு இளைஞர் பட் டாளத்துக்குத் தலைவராக வைகோ அவர்கள் திகழ்கின்றார்கள்.

தென்பெண்ணையாற்று நீரை தடுக்கும் கர்நாடகா!


மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -25



Friday, April 26, 2013

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -24









“சுய நிர்ணய உரிமையும், பொது வாக்கெடுப்பும்”-பகுதி 3

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே

“சுய நிர்ணய உரிமையும், பொது வாக்கெடுப்பும்” என்ற தலைப்பில்,11.02.2013 அன்று, தஞ்சாவூர் வழக்கறிஞர் சங்கத்தில், மதிமுக கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் உரை ஆற்றினார்.

சென்ற பகுதியில் வெளியான அவரது உரையின் தொடர்ச்சி வருமாறு:


இங்கிலாந்துதான் பொறுப்பு

இதைத்தான், 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள், நான் நெஞ்சார நேசிக் கின்ற பிரபாகரன் பிறந்த நாளில், லண்டன் மாநகரில் நாடாளுமன்றத்துக்கு
அருகில் இருக்கின்ற ஒரு அரங்கத்தில்,பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கள் அமர்ந்து இருந்த அந்தக்கூட்டத்தில் சொன்னேன்.

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -23




மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -22

மாற்று சக்தி மதிமுக.,தான்- வைகோ 

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணத்தை மேற்கொண்டு இருக்கும் வைகோவும் மதிமுகவினரும் 9 வது நாள் பயணத்தில் நேற்று(24.04.13)  ஈரோடு மாவட்டம் அரச்சலூருக்கு வைகோ தொண்டர்களுடன் நடைபயண மாக வந்தார். 

அரச்சலூரில் புதன்கிழமை இரவு 8 மணி அளவில்  டைபெற்ற மதுஒழிப்பு பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:

தமிழகத்தில் மதுவால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வரு கின்றன. மதுவின் பிடியில் இருந்து இவர்களை மீட்க வேண்டும் என்பதற்காக நடைபயணம் மேற்கொண்டு வருகிறோம். மதுவின் தீமைகளை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். 

காவிரிப் படுகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்!-வைகோ

விளைநிலங்கள் பாழாகும்

காவிரிப் படுகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்!
வைகோ அறிக்கை

“தமிழகத்தின் நெற்களஞ்சியமாகப் போற்றப்பட்ட காவிரி ஆற்றுப் படுகையில், தமிழ்நாடு-புதுச்சேரி கடலோரப் பகுதியில், புதுச்சேரியை அடுத்த பாகூரில் தொடங்கி, நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம், ஜெயங்கொண்டம் வழியாக மன்னார் குடியின் தெற்குப் பகுதிவரை காவிரிப்படுகையில் பழுப்பு நிலக்கரியும், மீத்தேன் வாயுவும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

எரிவாயுத் தேவைக்காக மீத்தேன் எரிவாயுவை எடுக்க இந்திய அரசின் பெட் ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் “கிரேட் ஈÞடெர்ன் எனர்ஜி கார்ப்பொரேசன் லிமிடேட்” என்ற நிறுவனத்திற்கு 29 ஜீலை 2010லேயே உரிமம் வழங்கி உள்ளது. மீத்தேன் எரிவாயு எடுக்கும் நிலப்பரப்பு பகுதிகளாக தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம் ஆகிய வட்டங்களும், திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி வட்டங்களும் இதற்கு உட்பட்ட 691 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள நிலங்கள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளன.

Thursday, April 25, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 18

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே

இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டவுடன், இந்திய இராணுவம் இலங்கைக்கு அமைதிப்படை எனும் பெயரில் அனுப்பப்பட்டு, தமிழீழ விடுதலைப் போராட் டத்தை நசுக்கவும், விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துக்கட்டவும் இந்திய
அரசு இராணுவ நடவடிக்கைகளை முடுக்கியபோது, இந்திய நாடாளுமன்றத் தில் தலைவர் வைகோ ஒருவர்தான் தமிழினத்தின் பிரதிநிதியாக குரல் கொடுத்தார்.

ஈழத்தமிழர்களை நாதியற்றவர்கள் என்று நினைத்துக் கொண்டு, இந்திய ராணு வம் அவர்களைக் கொன்று குவித்தபோது, தலைவர் வைகோ   எரிமலை
யானார்.இந்திய நாடாளுமன்ற சரித்திரம் காண இயலாத கடுமையான விவா தங்களை எழுப்பினார்.பிரதமர் இராஜீவ்காந்தியின் முதிர்ச்சியற்ற போக்கை யும், ஆணவ நடவடிக்கைகளையும் தயவு தாட்சண்யமின்றி கடும் விமர்சனத் திற்கு உள்ளாக்கினார். உலகம் முழுவதும் தமிழர்கள் இந்திய நாடாளுமன்றத் தினை உற்று நோக்கினர். தமிழகத்தில் இலட்சசோப இலட்சம் இளைஞர்கள் தலைவர் வைகோவின் நாடாளுமன்ற முழக்கங்களைக் கேட்டு இன உணர்வு கொண்டு இறும்பூதெய்தினர்.

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -21



“சுய நிர்ணய உரிமையும், பொது வாக்கெடுப்பும்”-பகுதி 2

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே


“சுய நிர்ணய உரிமையும், பொது வாக்கெடுப்பும்” என்ற தலைப்பில்,11.02.2013 அன்று, தஞ்சாவூர் வழக்கறிஞர் சங்கத்தில், மதிமுக கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் உரை ஆற்றினார்.

சென்ற பகுதியில் வெளியான அவரது உரையின் தொடர்ச்சி வருமாறு:


‘ஈழத்தை அமைப்பது இளைஞர்களின் கடமை’

இப்போது, இந்தியாவின் நிலைமையைக் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். 1947 ஆகஸ்ட் 15 இந்தியா விடுதலை பெற்றது. பாகிஸ்தான் பகுதியில் இருந்து பழங்குடியினரும்,பாகிஸ்தான் படையினரும் ஆயுதங்களோடு காஷ்மீருக்கு உள்ளே ஊடுருவி விட்டார்கள் என்று, காஷ்மீர் மன்னர் ஹரிசிங், நேருவுக்குத் தாக்கல் அனுப்பு கிறார். ‘எங்களைப் பாதுகாக்க வாருங்கள்;இந்தியப் படை களை அனுப்புங்கள்.இந்தியாவோடு காஷ்மீரை இணைப்பதற்கு நான் ஒப்புதல் தருகிறேன்; அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுகிறேன், என்கிறார்.

கம்பனும் மதுவிலக்கும்

‘முழு மதுவிலக்கு; அதுவே எமது இலக்கு’ என நெஞ்சிலே உறுதி கொண்டு தமிழர் தலைவர் வைகோ அவர்களும், மறுமலர்ச்சி தி.மு.கழகத் தோழர்களும் ஊர் ஊராக, வீதி வீதியாக நாட்டு மக்களைச் சந்தித்து வருகின்றனர். முதற் கட்ட மாக 12.12.2012-இல் உவரியில் நடைப்பயணம் எழுச்சியுடன் தொடங்கப் பட்டது. 25.12.2012-இல் கூடல் நகரில் நிறைவுற்றது.

2013 பிப்ரவரி காஞ்சியிலே தொடங்கி பிப்ரவரி 28-ல் மறைமலை நகரிலேயும், ஏப்ரல் 16-இல் பொள்ளாச்சியிலே தொடங்கி ஏப்ரல் 28-இல் ஈரோட்டிலும், ஜூன் 20-இல் விழுப்புரம் தொடங்கி ஜூன் 30-இல் கடலூரில் நிறைவடையும் வண் ணம் மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மது விலக்குப் பிரச்சாரப் பயணத்தைத் தொடர்ந்திட இருக்கிறார்.நாடெங்கும் நடை பெறும் நிகழ்ச்சியில் மதுவின் கொடுமைகளை விவரித்து ஒழித்தாக வேண்டி யது மது என்று ஓங்கி முழக்கமிட்டு வருகிறார்கள்.

சிங்கள வீரர் சங்கக்காரா விரட்டி அடிப்பு !

இது குறித்து தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்ந்த பாரி மைந்தன் தெரி வித்த செய்தி :-

இன்று (24.04.13) காலை இலங்கை கிரிக்கெட் வீரர் சங்கக்காரா சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யுவில் வோல்வோ நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வருவதாக தகவல் கிடைக்க, தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு மற்றும் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் நண்பர்கள் இணைந்து அந்த நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்தை பார்வையாளர்கள் போல 200 பேர் முற்றுகை இட்டோம்.

மாணவர்கள் கூடியிருக்கும் செய்தி அறிந்த காவல்துறை,வோல்வோ நிறுவன அதிகாரிகளிடம் மாணவர்கள் இந்த நிகழ்ச்சிகூட்டத்தில் ஊடுருவியுள்ளனர். 

Wednesday, April 24, 2013

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -20

பூரண மதுவிலக்கு அமலில் வரும் வரை 
எங்கள் போராட்டம் தொடரும்.-வைகோ

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணத்தை மேற்கொண்டு இருக்கும் வைகோவும் மதிமுகவினரும் 8 வது நாள் பயணத்தில் நேற்று(23.04.13)  திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் இருந்து, ஈரோடு மாவட்டம் கொடு முடி அருகே உள்ள ஒத்தக்கடைக்கு வைகோ தொண்டர்களுடன் நடைபயண மாக வந்தார். இரவு 8 மணி அளவில் ஒத்தக்கடையில் பொதுக்கூட்டம் நடை பெற்றது.

பொதுக்கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட ம.தி.மு.க. அவைத்தலைவர் குழந்தை வேலு தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணி வர வேற்று பேசினார்.

பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது:–

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -19




தூக்கு தண்டனைக் கொட்டடியில் இருந்து மூன்று தமிழர் உயிரைக் காப்போம்!

ச்ச நீதிமன்றம் ஏப்ரல் 12 ஆம் நாள் வழங்கிய தீர்ப்பு ஒன்று மனித உரிமை ஆர்வலர்களையும், குறிப்பாக -தமிழ் சமுதாயத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றது. 1993 செப்டம்பர் மாதத்தில், டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் அலுவலகம் முன்பு குண்டுவெடித்ததில் 9 பேர் பலி ஆனார்கள். இச்சம்பவத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த மனீந்தர்சிங் பிட்டா படுகாயத்துடன்
உயிர் தப்பினார். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பஞ்சாபில் தனிநாடு கேட் டுப் போராடிய காலிஸ்தான் விடுதலை முன்னணி அமைப்புதான் பின்னணி யில் இருந்தது என்றும், இதில் சம்பந்தப்பட்டவர் தேவிந்தர் பால் சிங் புல்லர் என் றும் காவல்துறை அவரை கைது செய்தது. ஜெர்மனிக்குத் தப்பிச் சென்ற புல் லர் அந்நாடு அடைக்கலம் தராமல் 1995 இல் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்திய போது,புல்லர் கைது செய்யப்பட்டார். அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் 2001 ஆகஸ்டு மாதம் புல்லருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டபோது,2002 மார்ச் 26 இல் தள்ளுபடி செய்யப்பட்டு, புல்லரின் மரண தண்டனை உறுதி யானது.  பின்னர் புல்லரின் மறு ஆய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் நிராகரித் தது.

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -18




“சுய நிர்ணய உரிமையும், பொது வாக்கெடுப்பும்”-பகுதி 1

ஒவ்வொரு தேசிய இனமும்,
தனித்தனி அரசுகளை அமைத்துக் கொள்ள உரிமை உண்டு;
அதுவே, தன்னாட்சி உரிமை; சுய நிர்ணய உரிமை!
இதுதான் உலக நியதி!

“சுய நிர்ணய உரிமையும், பொது வாக்கெடுப்பும்” என்ற தலைப்பில்,11.02.2013 அன்று, தஞ்சாவூர் வழக்கறிஞர் சங்கத்தில்,கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் உரை ஆற்றினார். 

அவரது உரை வருமாறு:

பல்லாயிரம் ஆண்டுகளான பழம் பெருமையும், உலகம் போற்றுகின்ற உயர்ந்த நாகரிகமும், வளையாத நீதிக்கு உரிய அரசும், தழைத்து ஓங்கிய சோழவள நாட் டில், தஞ்சைப் பெரு உடையார் இராஜராஜேச்சுரமாக உலகோரின் விழிகளை யும், கருத்தையும் ஈர்த்து இருக்கக்கூடிய இந்த மாநகரில்,200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட புகழுக்கு உரிய தஞ்சாவூர் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில்  நடை பெறுகின்ற இந்தக் கருத்து அரங்கத்துக்குத் தலைமை ஏற்று இருக்கின்ற,தஞ்சை வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் அன்புக்குரிய வழக்கறிஞர் மதியழகன் அவர்களே,

ம.தி.மு.க. மாவட்ட செயலரின் தந்தை உடல் தானம்

விழுப்புரம் மாவட்ட ம.தி.மு.க. செயலர் ஏ.கே.மணியின் தந்தை குலசேகரன் (96) செஞ்சியில் அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை உடல் நலக் குறைவால் இறந்தார்.

மேலும் அவர், தனது உடலை மேல்மருவத்தூர் மருத்துவக்கல்லூரிக்கு தானம் வழங்குமாறு எழுதி வைத்துள்ளார். அதன்படி அவரது உடல் அந்த மருத்துவக்கல்லூரியில் ஒப்படைக்கப்பட்டது.

Tuesday, April 23, 2013

சுடரை உங்களிடம் தருகிறேன்; இனி, நீங்கள் கொண்டு செல்லுங்கள்! -வைகோ

“சுதந்திரத் தமிழ் ஈழம் பொது வாக்கெடுப்பு” வைகோ நூல் மற்றும் ஒளிப்படக் குறுந் தட்டு வெளியீட்டு நிகழ்ச்சி, 13.04.2013 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து...

இந்தக் கரிய இரவு விரைந்து ஓடி மறைந்து விடும்.
புள்ளினங்கள் குரல் எழுப்புகின்ற
வைகறை மலர்கின்ற விடிகாலை வெளிச்சத்தில்
துப்பாக்கி ரவைகள் என் மார்பிலே பாயும்.
என் மேனியில் இருந்து சிதறுகின்ற இரத்தத்துளிகள்
காலை வானத்தைச் செக்கர் மயமாக்கட்டும்
நான் மடிந்ததற்குப் பின்னர்
என் உடல் மண்ணில் புதைக்கப்பட்ட இடத்தில்
எழுகின்ற எளிமையான கல்லறையின் மீது,
புற்கள் அடர்ந்து படரும்;
அங்கே ஒரு மலர் பூக்கும்
அந்த வழியாகப் போகின்ற வழிப்போக்கர்களே
அருகில் வாருங்கள்
அந்த மலரை உங்கள் நாசியால் முகருங்கள்
அப்போது,
என் ஆன்மாவை நீங்கள் வருடியது போல
உங்கள் மூச்சுக் காற்றின் வெப்பத்தை நான் உணர்வேன்

மணிமேகலையும் மதுவிலக்கும்!

தண்டமிழ் ஆசான் சீத்தலைச் சாத்தனார் இயற்றியது மணிமேகலை; இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரமும், மணிமேகலையும் தமிழர் தம் அறக்கருத்து களைத் தரணிக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன.

மணிமேகலை உயர்ந்த நன்னெறிகளையும் உலகு தழுவிய உயர் நோக்கமும், கவின்கலை விளக்கமும்,காவியச்சுவையும் அமைந்த தமிழ்ப் பெருங்காப்பிய மாகும். மனித சமுதாயம் பசிப்பிணியினின்றும் நீங்கி, அடிப்படைத்தேவைகள் நிறைவு எய்திய ஒளிமிக்க புதிய சமுதாயத்தைப் படைப்பதற்கு வேண்டிய இலட்சிய நோக்கை இக்காவியம் அளிக்கிறது.

மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெறு-புதுச்சேரி மதிமுக

புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தைத் திரும்பப்பெற வேண்டுமென மதிமுக வலியுறுத்தியது.

புதுச்சேரி மாநில மதிமுக நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் கூட்டம்
அண்மை யில் நடைபெற்றது. பொறுப்புக்குழுத் தலைவர் ஹேமா க.பாண்டு ரங்கன் தலைமை வகித்தார். தொழிற்சங்கத் தலைவர் செ.முத்து, மாநில பொறுப்புக்குழு உறுப்பினர்கள் எஸ்.அப்பர்சாமி, தூ.சடகோபன், ப.பாவாடை சாமி, அ.கபிரியேல், வி.கலைவாணன், வ.செல்வராஜு, விசா எழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -17

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணத்தில் 7 ஆம் நாள் பயணமாக நேற்று (22.04.13) இரவு வெள்ளக்கோவிலில் வந்த வைகோ.



ஸ்டெர்லைட் வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்த வைகோ

ஸ்டெர்லைட் வழக்கு - சீராய்வு மனு தமிழாக்கம் – சுருக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி தொழிற்பேட்டையில் ஸ் டெர்லைட் தாமிர ஆலை நிறுவுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்த ஸ் டெர்லைட் ஆலை அமைப்பதை
எதிர்த்து மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் 1997-ஆம் ஆண்டு ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு 13 ஆண்டு காலம் நிலுவையில் இருந்தது. 2010-ஆம் ஆண்டு இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 28.09.2010 அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், பால் வசந்தகுமார் கொண்ட அமர்வு, இந்த ஸ் டெர்லைட் ஆலை இயற்கை உயிரினங்கள்வாழ் பகுதியான மன்னார் வளைகுடாப் பகுதியில் அமைந்துள்ளது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இயற்கை உயிரினங்கள் வாழ்பகுதியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட வேண்டும் என்று விதித்த நிபந்தனையை மீறிய செயல் என்றும், பசுமை அரண் அளவை 250 மீட்டர் அகலத்தில் இருந்து 25 மீட்டராக குறைத்தது சரியான செயல் அல்ல என்றும், இந்த ஆலையில் இருந்து வெளியேறிய கழிவுகள் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தி விட்டன என்ற காரணங்களால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தானே நேரில் ஆஜராகி வாதாடினார். இரண்டு வருடங்களாக உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. இறுதியில் கடந்த 02.04.2013 அன்று சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூடிட பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

Monday, April 22, 2013

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -16




மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -15




மது விலையை கட்டுபடுத்த தமிழக அரசு என்ன எல்லாம் செய்கிறது !

மது விலையை  கட்டுபடுத்தி ,மக்களுக்கு வழங்க தமிழக அரசு விதிகளை எந்த அளவிற்கு தளர்த்தி உள்ளது என்பதற்கு இதுவே எடுத்து காட்டு .

இதை எல்லாம் செய்கிற அரசு கல்வி கட்டணத்தையும் , விலைவாசி உயர்வையும் கட்டுபடுத்த முடியவில்லை ...



அடுத்த கட்ட நகர்வு என்ன? எனத் திக்குத் தெரியாத நிலையில் திகைத்து நின்றபோது, வழிகாட்டியவர் வைகோ!- கொளத்தூர் மணி


சென்னையில் 13.04.2013 அன்று நடைபெற்ற “சுதந்திரத் தமிழ் ஈழம் பொது வாக்கெடுப்பு” நூல் மற்றும் ஒளிப்படக் குறுவட்டு வெளியீட்டு நிகழ்வில், கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து.....

பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்சில் நடைபெற்ற மாநாட்டிலும், தஞ்சை வழக்குரைஞர் மன்றத்திலும் வைகோ ஆற்றிய உரைகளின் தொகுப்பு, இங்கே நூலாகவும், குறுந்தட்டாகவும் வெளியிடப்பட்டு இருக்கின்றது. தமிழ்
ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பை வலியுறுத்துகின்ற வகையில், இந்த வெளி யீடு கள் அமைந்து இருக்கின்றன.

தமிழர்களுக்குச் சிக்கல்கள் நேருகின்ற பொழுதெல்லாம் முகம் கொடுக்கின்ற
ஒரு போராளி, மதிப்பிற்கு உரிய அண்ணன் வைகோ அவர்கள், இன்றைய சூழலில், நமக்குத் தேவையான தகவல்களைத் திரட்டிக் கொடுத்து இருக்கின் றார்.

மரணதண்டனைக்கு எதிராக பஞ்சாப்பும் -தமிழகமும்

பஞ்சாப்பில் சீக்கிய இன உரிமைகளுக்காகப் போராடிய குடும்பத்தைச் சேர்ந்த, பேராசிரியர் புல்லார் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி தூக்கிலிட முனைந்துள்ள இந்திய அரசைக் கண்டித்தும், பேராசிரியர் புல்லாரை விடுவிக்கக் கோரியும் நேற்று(21.04.2013) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், மரணதண்டனைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில், பட்டினிப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தை, பேராசிரியர் சரசுவதி தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார்.

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, 

பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் திரு. குணங்குடி அனீபா,

தூத்துக்குடியில் இன்று கருப்பு தினம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கடந்தமாதம் (மார்ச்) 23-ந்தேதி விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதன்காரணமாக பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஏராளமான மரம், செடி,கொடிகளும் கருகின. இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் முற்றுகை போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அதேநேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் கோட்டாட்சியர், தாசில்தார் மற்றும் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் அதிரடிசோதனை நடத்தினர். அதில் அங்கிருந்து விஷவாயுவை திறந்துவிட்து தெரியவந்தது. இதனால் தமிழ்நாடு மாசுகட்டுப் பாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில் ஸ்டெர்லைட் ஆலை கடந்த 30-ந்தேதி மூடப்பட்டது.

சீவகசிந்தாமணி சொல்லும் மதுவிலக்கு!

தமிழ்த்தாய்க்குச் சமணச் சான்றோர் அணிவித்துள்ள தலையாய அணிகலன் களில் ஒன்றான திருத்தக்க தேவர் என்னும் சமணத் துறவி தண்ணார் தமிழில்
விருத்தப்பாவால் வடித்துத் தந்தது சீவகசிந்தாமணி.

Rev.H.Bower

1868 இல் சிந்தாமணியின் சில பகுதிகளை தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் ரெவரஸ்ட் எச்.பவர் ஜைந சமய சித்தாந்தம் (Jainism) என்று அதில் விரிவாகச் சொல்லுவார்.

உ.வே.சா

1887 இல் திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி மூலமும், மதுரை யாசி ரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியனாருரையும் வெளிவந்தது.1907ல் சென்னை
பிரசிடென்ஸி அச்சுக்கூடத்திற் பதிப்பித்து பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டிதர் உ.வே.சா. அவர்கள் 1048 பக்கங்களில் இரண்டாம் பதிப்பை வெளியிட் டார்.தொடர்ந்து, பல பதிப்புகள் வந்துள்ளது.

துபையில் உள்ள ஈழத்தமிழர்களை வேறு நாடுகளுக்கு அனுப்பப்படும்

வைகோவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம்!

துபையில் உள்ள 19 ஈழத் தமிழர்களை, இலங்கைக்கு அனுப்ப துபை அரசு திட்டமிட்டு உள்ளது. அவர்களை இலங்கைக்கு அனுப்பினால், கொடூரமான சித்ரவதைக்கும் உயிர்க்கொலைக்கும் ஆளாவார்கள்; எனவே, அவர்களை இலங்கைக்கு அனுப்ப விடாமல் உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, வைகோ அவர்கள் ஏப்ரல் 02 ஆம் தேதி கடிதம் எழுதினார்.

இது தொடர்பாக, ஏப்ரல் 06 ஆம் தேதி, பிரதமரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வைகோ பேசினார்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் அவர்கள் வைகோவிடம் உறுதி அளித்தார். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -14

தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண நதிகளை தேசிய மயமாக்கி இணைக்க வேண்டும் - வைகோ

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 3–வது கட்டமாக  நடைபணத்தில் ஐந்தாம் நாள் (20.04.13 ) பயணத்தில் தாராபுரம் வந்தார்.

பின்னர் தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:–



Sunday, April 21, 2013

2016 தேர்தலில் ம.தி.மு.க தலைமையில் புதிய அணி உருவாகும்.-தமிழருவிமணியன்

காந்திய மக்கள் இயக்கம் சார்பில் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கலந்தர் முன்னிலை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் இலக்கியராஜா வரவேற்றார்.

கூட்டத்தில் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி காந்திய மக்கள் இயக்க நிறுவன தலைவர் தமிழருவிமணியன் பேசினார். கூட்டத்தில் மாநில பொது செயலாளர்கள் கணேசன், லட்சுமிகாந்தன்பாரதி, மாநில துணைத்தலைவர்கள் நரசிம்மன், கந்தசாமி, மாநில துணை பொது செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொருளாளர் குமரய்யா, தலைமை நிலைய செயலாளர் இனியண்ணன், மாநில செயலாளர் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மறைந்த தினத்தந்தி அதிபர் சிவந்திஆதித்தனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -13




தமிழ்ச் சமூகத்தின் தலைசிறந்த வழக்குரைஞர்; வழிகாட்டி வைகோ !-திருமுருகன் காந்தி


சென்னையில் 13.04.2013 அன்று நடைபெற்ற “சுதந்திரத் தமிழ் ஈழம் பொது வாக்கெடுப்பு” நூல் மற்றும் ஒளிப்படக் குறுவட்டு வெளியீட்டு நிகழ்வில்,திரு முருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து.........

வரலாற்றின் மிக முக்கியமான பக்கங்களைத் தமிழ்ச் சமூகம் கடந்து கொண்டு இருக்கின்ற சூழலில், ‘தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு வேண்டும்’ என்பதை வலியுறுத்துகின்ற வகையில், ஒரு மிக முக்கிய நாளாகத்   தான், வைகோ அவர்களுடைய நூல் மற்றும் ஒளிப்படக் குறுந்தட்டு வெளியீட்டு விழா வை நான் கருதுகிறேன்.

கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடுகள்!


சங்கொலி தலையங்கம் 

மின்வாரியம் முன் மதிமுக சார்பில் வருகிற 26ம் தேதி ஆர்ப்பாட்டம்

மதிமுக விவசாய அணி கூட்டம்

நாகை மாவட்டம் செம்பனார்கோவிலில் மதிமுக விவசாய அணி கூட்டம் நடந்தது. ஒன்றிய விவசாய அணி தலைவர் ராமச்சந்திரன், துணைத்தலைவர் நம்பிராஜன் தலைமை வகித்தனர். ஒன்றிய செயலாளர் கொளஞ்சி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மதிமுக ஒன்றிய செயலாளர் கொளஞ்சி கூறியதாவது: 

கூடங்குளம் அணு உலையை உடனடியாக மூட வேண்டும் - வைகோ

வைகோ அறிக்கை

தமிழர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல மாதங்களாக வீரியத்தோடு போராடி வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் கூடங்குளம் அணு உலைக்கான பொருட்களை வாங்குவதில் ஊழல் நடந்திருக்க கூடும் என்று வெளியாகியிருக்கும் தகவல்கள் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கூடங்குளம் அணு உலைக்காக பொருட்கள் வாங்கப்பட்ட ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஜியோ-போல்டோஸ்க் என்கிற நிறுவனத்தின் அதிகாரி செர்ஜி ஷுடோவ் பல நாடுகளிலுள்ள அணு உலைகளுக்கு தரக்குறைவான பொருட்களை வழங்கியதில் ஊழல் என்கிற குற்றசாட்டுகளின் அடிப்படையில் பிப்ரவரி 2012ல் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -12

மதுகடைகளை நிரந்தரமாக மூடினால் மட்டுமே மதுவை ஒழிக்க முடியும் என்று கணியூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ கூறினார்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 3–வது கட்ட நடைபயணத்தில்  4–வது நாளன்று (19.04.13) காலை உடுமலையில் இருந்து நடை பயணத்தை தொடங்கினார். பாலப்பம்பட்டி, கிருஷ்ணாபுரம், மடத்துக்குளம் வழியாக இரவு கணியூரை அடைந்ததார். அங்கு நடந்த பொது கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆர்.டி. மாரியப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் டபிள்யூ.என்.கே. ஈஸ்வரன் வரவேற்று பேசினார்.

பொதுக்கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:–

Saturday, April 20, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 17

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி  படித்துவிட்டு வரலாமே


பிரதமர் இராஜீவ்காந்தி -வைகோ கடும் மோதல்!


இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பிரதமர் இராஜீவ்காந்தியின் அணுகுமுறை யும் அவர் எடுத்த நடவடிக்கைகளும் தமிழினத்திற்கு எதிராகவும், சிங்கள இன
வெறியர்களுக்கு ஆதரவாகவும் இருந்தது. இந்திய அமைதிப்படையை அனுப்பி விடுதலைப் புலிகள் இயக்கத்தை பூண்டோடு கருவறுக்க உத்தரவிட்டார். விடு தலைப்புலிகள் ‘‘afterall two thousand boys’- புலிகள் வெறும் இரண்டாயிரம் பையன் கள். இந்தியா நினைத்தால் ஒரே நாளில் அழித்துவிடுவோம் என்று மார்தட்டி னார்.

பிரதமர் இராஜீவ்காந்தியின் ஆணவ நடவடிக்கைக்கு நாடாளுமன்றத்தில் தலை வர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்தார்.பல சந்தர்ப்பங்களில் இராஜீவ்காந்தி யுடன் மிகக் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. இந்திய நாடே தலை யில் வைத்துக் கொண்டாடிக்கொண்டிருந்த, ‘இளம் பிரதமர்’ என்று புகழாரம் சூட்டப் பெற்று, அசைக்க முடியாத சக்திகொண்டவராக பத்திரிக்கைகள் உருவ கப்படுத்திய பிரதமர் இராஜீவ்காந்தியை, இலங்கைத் தமிழர் பிரச்சினையில், உண்டு இல்லை என்று தலைவர் வைகோ ஒரு கை பார்த்துவிட்டார்.

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -11




சிலப்பதிகாரமும் மதுவிலக்கும்!

அன்னைத்தமிழில் முதல்காப்பியம் சிலப்பதிகாரம்;அது மொழிவளம், பண்பாடு, மொழியைப் பேசியவர்கள் வாழ்விடம் ஆகிய பிறவற்றை அறிவதற்கான அரிய
தரவாகவும் அமைந்துள்ளது. மூன்று காண்டம், முப்பது காதைகள் கொண்ட சிலப்பதிகாரத்தில், கி.பி. 1863 இல் பி.ஏ. பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மங்கல வாழ்த்துப் பாடல், மனையறம் படுத்த காதை, அரங்கேற்று காதை, அந்தி மாலைச் சிறப்புச் செய்காதை, இந்திரவிழா வெடுத்த காதை, கடலாடுகாதை, கானல்வரி என ஏழு காதைகள் மட்டும் தேர்விற்குரிய பாடமாகச் சென்னைப்
பல்கலைக்கழகம் வைத்திருந்தது. எனவே ஏட்டுப்பிரதியில் இருந்து சிலப்பதி காரத்தை தேவை கருதி முதலாவது புகார்கண்டத்தை அச்சுக்கு கொண்டு வரும் முயற்சி நடைபெற்றது.

Friday, April 19, 2013

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -10

மூன்றாம் கட்ட நடைபயணத்தில் நான்காம் நாள் பயணத்தில் 



பத்திரிகை உலகின் பேரொளி அணைந்தது! - வைகோ உருக்கம்

பத்திரிகை உலகின் பேரொளி அணைந்தது!

மனிதநேய சிகரமான பண்பின் வேந்தர் சிவந்தி ஆதித்தனார் மறைந்தார்!

வைகோ உருக்கம்

“தமிழர் வரலாற்றின் புகழ்மிக்க அங்கமான தினத்தந்தி ஏட்டின் அதிபர் ஐயா சிவந்தி ஆதித்தனார் மறைந்தார்” என்ற செய்தி ஈட்டியாய் என் இதயத்தில் பாய்ந்தது. என் செவிகளையே என்னால் நம்ப முடியவில்லை!

எழில் சிந்தும் புன்னகையுடன் அனைவரையும் காந்தமெனக் கவர்ந்த உத்தமராம் ஐயா சிவந்தி ஆதித்தனார், தமிழர் தந்தை ஐயா ஆதித்தனார் தொடங்கிய தினத்தந்தி ஏட்டை, தமிழ் கூறும் நல் உலகத்தின் காப்பரணாகவும், கலங்கரை விளக்கமாகவும் நடத்தி வந்தார்.

வலது கை கொடுப்பது இடது கை அறியாத கொடை உள்ளத்தால் பல்லாயிரக் கணக்கான குடும்பங்களை வாழ வைத்தார். விளையாட்டுத் துறையில் இந்தியாவின் கைப்பந்தாட்டத்தை உலகளாவிய தகுதிக்கு தன்னுடைய முயற்சியாலும், சொந்த பொருட்செலவினாலும் உயர்த்திய உத்தமர் ஆவார்.

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -9



நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 16

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே


தனி நபரின் அகந்தைக்குத் தீனி போடுவதற்காகவே
ஈழத்தில் இந்தியா போர் நடத்துவதா? -வைகோ 

இந்தியப் பிரதமர் இராஜீவ்காந்தியின் கட்டளையை நிறைவேற்ற,இந்திய அமைதிப்படை, தமிழீழத்தில் கொலை வெறி கொண்டு அலைந்து,மாவீரர் பிரபாகரனையும் அவரது தளகர்த்தர்களையும் கொன்றொழிக்க வேட்டை நடத்திய போது, இந்திய நாடாளுமன்றத்தில் தலைவர் வைகோ தமிழினத்தின் சார்பாக இந்திய அரசின் அடக்குமுறையை, இனப்படுகொலைகளை அம்பலப் படுத்தி, நமது இனத்திற்காக ஓங்கிக் குரல் கொடுத்தார்.

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -8

:""தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை போராடுவேன்,'' என, உடுமலை அருகே நடைபயணம் சென்ற வைகோ பேசினார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, மூன்றாம் கட்ட நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
கரட்டு மடத்திலிருந்து நேற்று(18.04.13) காலை 7:30 மணிக்கு மூன்றாம் நாள் நடைபயணத்தை வைகோ துவக்கினார். இவருக்கு கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர். 

தீபாலபட்டி அருகே, பெண்கள் கூட்டமாக வைகோவை சூழ்ந்து கொண்டு, "மதுவை ஒழித்தால் நிம்மதியாக இருக்கும். சம்பாதிக்கிற பணத்தயெல்லாம் கொண்டு போய் அதுலேயே போடுறாங்க... நிம்மதியே இல்ல; 

Thursday, April 18, 2013

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -7


மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -6



கூடங்குளம் நோக்கி ஒரு பயணம்

நண்பர்களே, நாங்கள் வரும் மே மாதம் 5ஆம் தேதி இருசக்கர வாகனங்களில் இடிந்தகரை செல்ல திட்டமிட்டு உள்ளோம்.

பயணத் திட்டம்

1)காலை ஆறு மணி அளவில் முதல் அணி துறையூரில் (காமநாயக்கன்பட்டி) இருந்து கிளம்பி 6:30 மணிக்கு சொக்க லிங்க புரம்(கடம்பூர்) வந்தடைந்து , அங்குள்ள குழுவினரோடு சேர்ந்து கயத்தார் நோக்கி புறப்படும்.

2) எழு மணிக்கு கயத்தாறில் இருந்து கிளம்பி திருநெல்வேலி சென்றடையும்.
3) எட்டு மணி அளவில் திருநெல்வேலியில் இருந்து கிளம்பி சரியாக 10மணிக்கு இடிந்தகரை சென்றடையும்

4) திரும்புவது பற்றி பின்னர் பேசிக்கொள்ளலாம் அல்லது அவரவர் விருப்பதிற்கே விட்டுவிடுகிறோம் 

5)இடைப்பட்ட பகுதியில் உள்ளவர்கள் அவரவர் பகுதியில் இருந்து இணைந்து கொள்ளலாம். 

6) நண்பர்கள் இச்செய்தியை மற்ற தோழர்களிடம் பரப்பவும்.

திருமந்திரமும் மதுவிலக்கும்!

சைவ சமயத்தைச் சார்ந்த பக்தி இலக்கியம் பன்னிரு திருமுறைகளாகப் பாகு பாடு செய்து அமைக்கப்பட்டது.முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம்; நான்கு முதல் ஆறுவரையிலான திருமுறைகள் திருநாவுக் கரசர் அருளியது; ஏழாம் திருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் பாடியது.

மாணிக்கவாசகரின் திருவாசகமும்,திருக்கோவையாரும் எட்டாம் திருமுறை; திருமாளிகைத் தேவர்,கருவூர்த்தேவர் முதலிய சிவனடியார் ஒன்பது பேர் பாடிய பக்திப் பாடல்கள் 301 திருவிசைப்பா இது ஒன்பதாம் திருமுறை ஆகும்.

திருமூலரின் திருமந்திரம் பத்தாம் திருமுறை; நக்கீரர், பட்டினத்தார் முதலான சான்றோர்களின் நூல்கள் பதினொன்றாம் திருமுறை; சேக்கிழாரின் பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறை. பத்தாம் திருமுறையான திருமூலநாய னார் அருளிய திருமந்திரத்தில் மதுவிலக்கு பற்றி வரும் செய்திகள் இதோ:

"செங்காந்தள் புரட்சி" -தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு

சென்ற 13-04-2013இல் நடைபெற்ற தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள சிராஜ் மகாலில் நடைபெற்றது.

இது குறித்து திரு,பாரி மைந்தன் தெரிவித்த்  செய்தி 

1976 இல் இனி சிங்களரோடு சேர்ந்து வாழ முடியாது தனி ஈழம் ஒன்றே தீர்வு என தந்தை செல்வா கூறிய வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப் பட்ட நாளான மே 14 ஆம் நாளை "தமிழீழ விடுதலை நாள்" என அறிவித்து உள்ளோம். 


மேலும் அந்தநாளில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பேரணி நடத்து வது என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது. ஈழ உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கு பெறலாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. செங்காந்தள் மலரினை சூடுவதே எங்கள் இலக்கு ஆகவே இந்த மாணவர் போராட்டத்திற்கு "செங்காந்தள் புரட்சி" என்று பெயரிட்டுள்ளோம்.

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -5

நடைபயணத்தில் உடல் நலம் பதித்த வைகோ ...

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி நடைபயணம் இரண்டாம் நாளில் நேற்று (17.04.13 ) கோட்டூர் என்ற ஊர் அருகில் உள்ள மலையன்பட்டிணம் என்ற கிராமத்திலிருந்து இன்று காலை 7 மணி அளவில்,ள் நடைபயணத்தை மேற் கொண்டார். வைகோ விற்கு இன்று திடீரென மயக்கமும்,வயிற்றுப் போக்கும் ஏற்பட்ட நிலையிலும், அவர் தனது நடைபயணத்தை தொடர்ந்தார்.






முதல் நாள் வெயிலின் காரணமாக இந்த உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது .

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -4

முதல்  நாள்  நடைபயண நிறைவு கூட்டம் ..

16.04.13 அன்று இரவு ஆனைமலையை அடுத்துள்ள கோட்டூர் மலையாண்டி பட்டணம் குமரன் திடலில் பூரண மதுவிலக்கு நடைபயண பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 ஒன்றிய செயலாளர் சுந்தரசாமி தலைமை தாங்கினார். சின்னு (எ) சண்முக சுந்தரம், சண்முகவேல், அப்பு என்ற லோகநாதன், பழனிச்சாமி, வக்கீல் ராதா கிருஷ்ணன், இளங்கோ, ரேணுமாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பட்டணம் பாலு வரவேற்று பேசினார். ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

Wednesday, April 17, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 15

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி  படித்துவிட்டு வரலாமே


“ஒரு பிரபாகரனை அழித்தால் 
ஆயிரம் பிரபாகரன்கள் தோன்றுவார்கள்”- வைகோ

விடுதலைப் புலிகளை பூண்டோடு அழிக்க வேண்டும் என்ற உத்திரவு போட்ட இந்தியப் பிரதமர் இராஜீவ்   காந்தியின் விருப்பத்தை நிறைவேற்ற,  இந்திய அமைதிப்படை வெறிகொண்டு அலைந்தது.1988 ஜனவரியில் தேடுதல் வேட்டை என்ற பெயரால், மூன்றாயிரம் தமிழ் இளைஞர்களை விடுதலைப் புலி கள் என்ற முத்திரை குத்தி, இந்திய இராணுவம் கைது செய்து சிறை வைத்தது.

தமிழ் மக்களின் வீடுதோறும் சென்று இளைஞர்களையும், இளம் பெண்களை யும் வேட்டையாடிய இந்திய இராணுவத்தை எதிர்த்து தமிழீழம் கொந்தளித்த போது, அன்னையர் முன்னணி சார்பில் இந்திய இராணுவத்தைக் கண்டித்து,
மட்டக்களப்பு மாமாங்கத் திடலில்,வீரத்தாய் அன்னை பூபதி அம்மாள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -3