Sunday, November 30, 2014

ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலின்படி கல்வி முறை -வைகோ கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலின்படி கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டம் #வைகோ கண்டனம்

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதிராணி, கல்வி முறையில் புதிய கொள்கைகள் வகுக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு முதல் அவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறார். இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள 48 ஆண்டுகால கல்வி முறையை மாற்றி அமைத்து புதிய கல்வி கொள்கையை புகுத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீழ் செயற்படும் பாரதிய ஷிக்ஸான் மண்டல் (BMS) என்ற அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரைகளை அளித்திருக்கிறது.