Tuesday, August 20, 2013

அஞ்சலட்டை அனுப்புவோம்..

கூடங்குளம் அணு உலை குறித்த விவரங்களை கூடங்குளம் அணுமின்
 நிலையம் இயக்குனரிடம் தமிழக மக்கள் அனைவரும் கேட்க வேண்டும் என்று அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தை நடத்தி , இடந்தகரையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் போரட்டத்தை முன் எடுக்கும் திரு.உதயகுமார் கோரிக்கை வைத்துள்ளார் அவர் வைத்த கோரிக்கை விவரம் ...


தமிழ்ச் சொந்தங்களே! அஞ்சலட்டை ஒன்றை  கீழ்க்காணுமாறு எழுதி அனுப்புவீர்களா, தயவு செய்து!?

பெறுநர்
திரு. ஆர். எஸ். சுந்தர் அவர்கள்
வளாக இயக்குனர்
கூடங்குளம் அணுமின் நிலையம்
கூடங்குளம் 627 106
திருநெல்வேலி மாவட்டம்

ஐயா, தமிழக மக்கள் உயிருக்கும், பாதுகாப்புக்கும் மிகவும் இன்றியமை யாத, கூடங்குளம் அணுமின் நிலையம் சம்பந்தப்பட்ட மிக மிக முக்கிய மான சில தகவல்களை மத்திய அரசும், அணுசக்தித் துறையும் திட்ட மிட்டு மறைக்கிறீர்கள். கூடங்குளம் அணுமின் நிலைய உலைகள் 1 மற்றும் 2 பற்றிய தல ஆய்வறிக்கை, பாதுகாப்பு ஆய்வறிக்கை, மற்றும் 2008-ம் ஆண்டு ரஷ்யாவோடு இந்திய அரசு இரகசியமாக செய்து கொண்ட இழப்பீடு ஒப்பந்தம் போன்றவற்றை உடனடியாக மக்களுக்குத் தர வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன். இவற்றோடு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தரமற்ற உபகரணங்களும், உதிரிப் பாகங்களும் பயன்படுத்தப்பட்டிருப்பது பற்றியும், தரமற்றக் கட்டுமானம் பற்றியும், பொருளாதாரக் குற்றங்கள் பற்றியும் சார்பற்ற, ஒரு சுதந்திரமான விசாரணையும் வேண்டுமென்று கோருகிறேன். 


நன்றி!

தங்கள் அன்புள்ள,
______________________,
(பெயர்)
 ______________________ (ஊர்)
முகவரி, தொலைபேசி எண் (விரும்பினால் குறிப்பிடலாம்)

மேலே அவரின் கோரிக்கை படி அனைவரும் இணைந்து செய்வோம் வாருங்கள் ...

1 comment:

  1. உடனே அனுப்பிவிட்டோம்! அந்த ஆர்.எஸ்.எஸ்சின் மின் அஞ்சல் இருந்தால் நொடியில் போய் சேருமே! தூது அஞ்சல் அனுப்பினால் கூட நலமே அல்லவா!

    ReplyDelete