Thursday, August 8, 2013

கூட்டுறவு வங்கித் தேர்தலில் மதிமுக. வெற்றி

கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தேர்தலில் #மதிமுக வெற்றி

கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராக மறுமலர்ச்சி
தி.மு.க. சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினர் சம்பத் சந்திரா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி இன்று நாகர்கோவிலில், கன்னியகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜேஷை விட 9 வாக்குகள் கூடுதலாகப் பெற்று, மறுமலர்ச்சி தி.மு.க.வைச் சேர்ந்த சம்பத் சந்திரா வெற்றி பெற்றார்.

சம்பத் சந்திரா செய்தியாளர்களிம் கூறியதாவது:

"கன்னியாகுமரியில் தொடங்கிய மறுமலர்ச்சி தி.மு.க.வின் இந்த வெற்றி, கும்மிடிபூண்டி வரை தொடரும்" என்று கூறினார். 

No comments:

Post a Comment