Monday, August 5, 2013

கோவை நிதி அளிப்புக் கூட்டத்தில் வைகோ

தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளைக் காக்க,
நாடாளுமன்றத்தில் கழகத்தின் குரலை வலுப்பெறச் செய்யுங்கள்;
மக்களை அணுகுவோம்; மாற்றத்தை ஏற்படுத்துவோம் !

கோவை மாநகர் மற்றும் கோவை புறநகர் மாவட்டக்கழகத்தின் சார்பில், 22.07. 13 அன்று கோவையில், கழக வளர்ச்சி நிதி - தேர்தல் நிதி அளிப்புக்கூட்டம் நடைபெற்றது.நிதியினைப் பெற்றுக் கொண்டு,கழகப் பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரையில்  இருந்து....

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இந்தக் கொங்கு மண்டலம் ஒரு ஜிப்ரால்டர் கோட்டை என்று நான் கடந்த காலங்களில் கூறி வந்ததை
நிலைநாட்டுகின்ற விதத்தில், ‘கொடையால் சிறந்தது கொங்குச் சீமை’ என மாநாடுகளில் உரை ஆற்றியதை உறுதி செய்கின்ற விதத்தில், கழக வளர்ச்சி நிதி-தேர்தல் நிதியாக, 91 இலட்சம் ரூபாயை அள்ளித் தந்து இருக்கின்றீர்கள்.
அதிகார பீடத்தில் இதுவரையிலும் இல்லாத ஒரு கட்சிக்கு, ‘ஆட்சிக்கு வந்து உங்களுக்குச் சலுகைகள் வழங்குகின்றோம்’ என ஆசை வார்த்தை கூறாத ஒரு கட்சிக்கு, இந்த இயக்கத்துக்கு எதிர்காலம் இல்லை என்று பலரும் விமர் சனம் செய்து கொண்டு இருக்கின்ற ஒரு சூழலில், இல்லை; இது ஒளிமயமான
எதிர்காலத்தைப் பெற்று உள்ள கட்சி என்ற நம்பிக்கையோடு, நல்ல மனம்
கொண்டோர் தந்த நிதியை எல்லாம் திரட்டி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற் றக் கழகம் பெரு வலிவோடு வளர்ந்து வருகின்றது என்பதை, நாட்டுக்குப் பறை சாற்றுகின்ற விதமாக, நிதியை அள்ளி வழங்கிய உங்கள் அனைவருக் கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.



ஒவ்வொரு காசையும் எண்ணிப் பார்த்து, வழங்குகின்ற நிதி, செலவுகளால் குறைந்து விடக் கூடாது என்பதற்காக, நமது பாசறையிலேயே, நாம் எழுப்பி
இருக்கின்ற கட்டடத் திலேயே இந்த நிதி வழங்கும் நிகழ்வையும் நடத்திக்
கொண்டு இருக்கின்றீர்கள்.

அறிஞர் அண்ணா காலத்தில் இருந்து, திராவிட இயக்கத்தில் செயல்பட்டு வரு கின்ற மூத்த முன்னோடி நமது கழகத்தின் அவைத்தலைவர் அண்ணன் திருப் பூர் துரைசாமி, மூத்த மாவட்டச் செயலாளர் ஆர்.டி.எம்., இளைஞராக இருந் தாலும் துடிப்பாகச் செயல்படுகின்றனர்; நமது இளைஞர் அணிச் செயலாளர் ஈஸ்வரன் மக்கள் பிரச்சினைகளைக் கையில் எடுத்துக் கொண்டு போராடு கிறார்; சுற்றுச் சூழலைக் காக்க மக்கள் மன்றத்தில் போராடுகிறார்; இதனால், இயக்கம் நாளும் புதிய செல்வாக்கைப் பெறுகிறது என்று அவர் சொல்லும்
போதெல்லாம், அதனை அப்படியே மோகன்குமார் அவர்கள் வழிமொழி கின் றார். அழுக்காறு இல்லாமல் ஒருவரைப் பாராட்டுகின்ற தன்மை, இன்றைக்கு நம் இயக்கத்தில்தான் இருக்கின்றது.

இனி இயக்கத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டுமே, அதற் காக ஆயத்தப் படுத்த வேண்டுமே, இளைஞர்களை அணி திரட்ட வேண்டுமே என்று எண்ணுகின்றபோது, அந்தப் பணியைச் செய்வதற்குப் பொருத்த மாக, அனைத்து நிர்வாகிகளோடும் கலந்து பேசி, ஈஸ்வரனை இளைஞர் அணிச் செயலாளராக நியமித்து இருக்கின்றோம். கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புக்குப் பொருத்தமானவராக, நமது குகன் மில் செந்தில்
அவர்களைத் தேர்ந்து எடுத்து இருக்கின்றோம்.

அன்பின் அடையாளம்

சோதனைகள் என்பது, ஒரு இயக்கத்தைப் புடம் போடுவதற்குத் தான். வெற்றி டத்தைக் காற்று நிரப்பியே தீரும் என்ற இயற்கையின் விதியில் நான் நம்பிக்கை கொண்டவன்.

ஈழப் போர்க்களத்தில் ஒரு தோழன் குண்டடிபட்டு இறந்தால், அவனது துப்பாக் கியைத் தோளில் போட்டுக் கொண்டு அடுத்த தோழன் தொடர்ந்து பயணித்த படையின் தலைவர் பிரபாகரன் அவர்களது படை வீரர்களைப் போல அரசிய லில் பயணித்துக் கொண்டு இருக்கின்ற நமக்கு, எத்தனையோ சோதனைகள்
வந்தன. எதிரிகள் மட்டும் அல்ல,நம்மோடு இருந்த பலரும் நம்மீது ஈட்டிகளை வீசி இருக்கின்றார்கள்.

எனக்கு வந்த பதவிகளை மறுதலித்து, என்னுடைய சகாக்களுக்குப் பெற்றுத் தந்தவன் நான். அப்படி நாம் உயர்ந்த இடத்தில் கொண்டு போய் உயர்த்தி வைத் தவர் களால் நமக்குச் சோதனை வந்தபோது, இந்தக் கொங்கு மண்டலம் சிலிர்த்து எழுந்தது. அந்த வேளையிலும், இந்த இடத்தில்தான் நீங்கள் திரண் டீர்கள்.

இந்தச் சாலையிலும் பல்லாயிரக் கணக்கில் திரண்டு இருந்தது நினைவுக்கு வருகின்றதா? கழகத்துக்கு ஒரு ஆபத்து என்றால், ஆபத்து உதவிகளைப் போலத் திரண்டு வந்தவர்கள் நீங்கள்.

மாற்றம் எந்த நேரத்திலும் ஏற்படலாம்; அது எப்படியும் வரலாம். மழையும், சூறைக் காற்றும் எப்போது வரும் என்று எவரும் கணிக்க முடியாது. திடீரென மேகங்கள் சூழம்; மழையாகப் பொழியும். அதைப் போல, இந்தத் தமிழகத்துக்கு ஒரு மாற்றம் தேவை என்ற எண்ணம், கட்சி எல்லைகளுக்கு உள்ளே தங்க ளைக் கட்டுப்படுத்திக் கொள்ளாதவர்களுடைய உள்ளங் களில் ஏற்பட்டு இருக்கின்றது.

ஒழுக்கமான அரசியல், நேர்மையான அரசியல், சுயநலம் இல்லாத அரசியலை எதிர்பார்க்கின்ற மக்கள் இடையே, அதற்குத் தகுதி உள்ளவர் களாக நம்மை ஆக்கிக் கொள்ளுகின்ற விதத்தில் நாம் துடிப்போடு இயங்கிக் கொண்டு இருக் கின்றோம். அத்தகைய மக்கள் மன்றத்தில் நமக்குக் கிடைத்து இருக்கின்ற அங்கீகாரம்தான்,தோழர்களே நீங்கள் திரட்டித் தந்து இருக்கின்ற இந்தத் தொண் ணூறு இலட்சம் ரூபாய். இது, பொதுமக்கள் நம்மீது காட்டுகின்ற அன்பின்
அடையாளம்.

கூடங்குளம் அணு உலை;உண்மை நிலை என்ன?

இன்றைக்குத் தமிழகத்தில் நிலவு கின்ற மின்வெட்டால், கோவையில் பாதிப்பு கள் அதிகம். தொழில்கள் முடங்கிப் போயிருக்கின்றன. நான் அந்தத் தொழில் முனைவோருக்குச் சொல்லுவேன்; நான் தமிழகத்தில் தொழில் வளம் பெருக வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவன்.உழவர் பெருங்குடி மக்களை நேசிப்பவன்; விவசாயம் தழைக்க வேண்டும்; வேளாண் பெருங்குடி மக்களின் விழிநீர் துடைக்கப்பட வேண்டும். வேலை இல்லாத் திண்டாட்டம் நீங்க வேண் டும்; இலவசங்கள் மற்றும் மதுவின் பிடியால், உழைக்கின்ற எண்ணம் குறைந்து வருகின்றது; இந்தக் கேடுகளில் இருந்து தமிழகத்தை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பவன். நான் தமிழ்நாட்டுக்கு மின்சாரம்
வேண்டாம் என்று நினைப்பேனா? எங்களுக்கு எந்தச் சுயநலமும் இல்லை.

கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு குறித்துக் கூறப்படுகின்ற உறுதி மொழிகள் உண்மை அல்லவே? இன்றைக்கு நாட்டில் உள்ள 21 அணு உலை களின் ஒட்டுமொத்த மின் உற்பத்தி, இந்தியாவின் ஒட்டுமொத்த மின் உற்பத்தி யில் வெறும் 2.7 விழுக்காடு மட்டும்தானே? ஆனால், ஒரு அணு உலை வெடித் தாலும் நேரக்கூடிய அழிவு எவ்வளவு தெரியுமா?

மதுரை தம்பி பிரபாகரன் எழுதிய அணு உலை அறிவோம் என்ற நூலைப் படி யுங்கள். அவர் எந்தக் கட்சியையும் சேர்ந்தவர் அல்ல; சமூக அக்கறை உள்ள ஒரு நல்ல இளைஞர். அவர் எழுதிய அந்த நூலை, வெளியிடுகின்ற வாய்ப்பை
நான் பெற்றேன். அந்த நூலை, இந்தப் பகுதியில் உள்ள மக்களிடம் பெருமள வில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்.

அந்த நூலில் இடம் பெற்று உள்ள படங்களை மட்டும் பார்த்தீர்கள் என்றால், உங்களால் சாப்பிட முடியாது; உறங்க முடியாது.செர்னோபில் விபத்துக்குப் பிறகு, அந்தப் பகுதியில் பிறந்த குழந்தை களின் உருவத்தைப் பார்க்கவே முடி யாது. அத்தகைய நிலைமை, நமது தமிழகத்துக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்ப தற்காகத்தான் கூடங்குளம் அணு உலையை நாங்கள் எதிர்க்கின்றோம்.

ஆகக் கூடுதலாக, ஒரு யூனிட்டில் இருந்து 190 மெகாவாட் மின்சாரத்துக்கு மேல் நமக்குக் கிடைக்காது என்பதற்கான புள்ளி விவரங்களை நான் கொடுத்து
இருக்கின்றேன். கூடங்குளம் அணு உலையின் கழிவுகளைக் கொட்டுவதற்கு, கர்நாடகம் எதிர்ப்புத் தெரிவித்து விட்டது. உள்ளே வராதே என்று சொல்லி விட்டானே?கர்நாடக அரசே, ஒருநாள் போராட்டம் அறிவித்து விட்டதே? ஏற்க னவே மூடப்பட்ட அணு உலைகளிலும், கழிவுகளை என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கின்றார்கள். அதனால், பல நூறு ஆண்டு களுக்கு அழிவு இருக்கும் என்கிறார்களே?

இன்றைக்கு உலகில் இருக்கின்ற அணு உலைகள் 404. நன்றாக இயங்கினால், ஆகக் கூடுதலாக 45 ஆண்டுகள் இயக்க முடியும். ஆனால், மூடுவதற்கு வழி இல்லாமல், நீட்டித்துக் கொண்டே வருகின்றார்கள். படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகின்றது.எண்பதுகளில் அமைக்கப்பட்ட அணு உலைகளின் மொத்த எண்ணிக்கை 206. தொண்ணுhறுகளில் அமைக்கப் பட்டவை 51. கடந்த பத்து ஆண்டுகளில் அமைக்கப்பட்டவை 35. ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பெல் ஜியம் ஆகிய நாடுகள், அணு உலைகளை மொத்தமாக மூடப் போகிறோம் என அறிவித்து விட்டார்கள்.

கூடங்குளம் அணு உலைக்கு வந்த கருவிகள் தரம் அற்றவை; அதில் ஊழல் நடந்து இருக்கின்றது; கொள் முதல் செய்தவனைக் கைது செய்து, ரஷ்யாவில் சிறையில் அடைத்து வைத்து இருக்கின்றார்கள்; அவன் தான், இந்தியாவுக்கும் கொள்முதல் செய்து அனுப்பியவன் என்ற உண்மைகளை விளக்கி, அணு உலையைப் பற்றி ஆய்வு செய்யக் கூடிய திறம் கொண்ட 59 விஞ்ஞானிகள் கையெழுத்துப் போட்டு, பிரதமர், தமிழக முதல்வர், கேரள முதல்வருக்கு அனுப்பி வைத்து இருக்கின்றார்கள். இதை எல்லாம் சுட்டிக் காட்டித்தான் இடிந்தகரையில் 700 நாள்களாகப் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கின் றார்கள். தாய்மார்கள் பட்டினி கிடக்கின்றார்கள்.உலகிலேயே இப்படிப்பட்ட
போராட்டம் வேறு எங்கும் நடந்தது இல்லை.

மாற்று வழிகளில் மின்சாரம் 

கூடங்குளம் அணு உலை,தமிழகத்தின் மின் தேவையை நிறைவு செய்யாது; பெரும் கேட்டைத்தான் உருவாக்கும்.எனவே, அணு உலை என்கிற விபரீதத் தில் நாம் ஏன் சிக்கிக் கொள்ள வேண்டும்? இன்றைக்கு, அனலில், சூரிய ஒளி யில், காற்றில், கடல் அலைகளில், மின்சாரத்தைத் தயாரிப்பதற்கு என எத்த னையோ புதிய வழிகளைக் கண்டுபிடித்து விட்டார்கள். நடக்கும்போதும்,
வண்டிகள் ஓடுகின்றபோது ஏற்படு கின்ற உராய்விலும் கூட மின்சாரத்தைப் பெற முடியும் என்கிறார்கள். அத்தகைய வழிகளில் மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மின்சார
விரயத்தைத் தடுக்க வேண்டும்.

வாழ்வாதாரங்களை வஞ்சிக்கும் மத்திய அரசு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தொலைநோக்கோடுதான் போரா டுகிறது. முல்லைப்பெரியாறு, அமராவதி ஆற்று நீரைப் பாதுகாப்ப தற்கும் போராடினோம். வாழ்வாதாரப் பிரச்சினைகளில், மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. ஈழத் தமிழர்களை அழிப்பதற்கு, ஆயுதங் களையும், ஆயிரம் கோடிப் பணத்தையும் அள்ளிக் கொடுத்தது.இந்த நிலை நீடிக்கக் கூடாது. தமிழ கத்தின் வாழ்வாதாரங்களைக் காக்க வேண்டும். தாய்த் தமிழகத்தின் உரிமை களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.ஈழத்தமிழர்களுக்கு இழைத்த வஞ்சகம் தொடரக் கூடாது; தமிழ் ஈழம் அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும்; அதற்கு ஏற்ற சூழலை நாம் உருவாக்கினால், அதை உலக நாடுகள்
ஏற்றுக் கொள்ளும். ஆனால், அதைத் திசை திருப்புவதற்காகத்தான், இப்போது 13 ஆவது அரசியல் சட்டத்திருத்தம் என்ற பித்தலாட்ட வேலையைச் செய்து கொண்டு இருக்கின்றார்கள். இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டும்.

இத்தகைய கடமைகளை நிறைவேற்று வதற்காகத்தான், நாடாளுமன்றத்தில் கழகம் இடம் பெற வேண்டும் என்று கருதுகிறோம். அதற்காக மக்களிடம் செல் வோம். எங்களைத் தேர்ந்து எடுத்து அனுப்புவது, ஏழரைக் கோடி மக்களின் உரிமைகளைக் காக்க; உலகத்தின் எந்த மூலையில் தமிழனுக்குத் துன்பம் என் றாலும் அதைத் தடுக்க; நேர்மையான அரசியலை நடத்த; தமிழகத்தின் வருங் காலத் தலைமுறையினரைக் காக்க; மதுவின் கோரப் பிடியில் இருந்து மீட்க, எங்கள் கரங்களை வலுப்படுத்துங்கள். எங்கள் குரல் ஒலிக்கட்டும் நாடாளு மன்றத்திலே! இந்த அணுகுமுறையைத்தான் நாடாளுமன்றத் தேர்தலில்
மக்களிடம் முன்வைப்போம்.

கழகத்தின் கட்டுக் கோப்பு

இளைஞர்களின் பார்வை, புதிய வாக்காளர்களின் பார்வை நம் பக்கம் திரும்பி இருக்கின்றது.மாற்று அரசியலுக்குத் தகுதியான இயக்கம் மறுமலர்ச்சி திமு.க. என்ற எண்ணம் அரும்பி இருக்கின்றது. அந்த எண்ணத்தைத் தக்க வைத்துக்
கொள்வோம். தன்மானத்தை, சுயமரியாதையை, மக்களிடம் நமக்கு இருக் கின்ற மதிப்பைப் பாதுகாத்துக் கொள்வோம். கழகத்துக்கும்,மக்களுக்கும் இடை யில் ஒரு பிணைப்பை, இந்த நிதி திரட்டும் பணி ஏற்படுத்திக் கொடுத்து இருக் கின்றது.

தியாகத் தழும்பு ஏறியவர்கள்,கொள்கைக்காகவே அண்ணாவின் இயக்கத்தில் தங்கள் வாழ்நாள் முழுமையும் ஒப்படைத்துக்கொண்டவர்கள் இங்கே அமர்ந்து
இருக்கின்றார்கள்.அவர்களுடைய துணை நமக்கு இருக்கின்றது.கழகம் கட்டுக் கோப்பாக இருக்கின்றது.எல்லோரும் ஒரே நோக்கத்தோடு,ஒரே கருத்தைச் சிந்திக்கின்றோம்.இதற்கு முன்பு இருந்ததைவிட,ஆயிரம் மடங்கு ஒற்றுமை யாக இன்றைக்கு நமது இயக்கம் திகழ்கின்றது.

நம்மை நோக்கி வருகின்ற புதிய இளைஞர்களை நாம் தட்டிக் கொடுப்போம். அவர்களுக்கு அரசியல் சம்பிரதாயங்கள் எதுவும் தெரியாது. செயலாளரைப் பார்க்க வேண்டும்; அவர் பெயரை விளம்பரங்களில் போட வேண்டும்; மதிக்க வேண்டும் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. அதைப் பெரிதாகக் கருத வேண்டாம். என் பெயரைப் போட வில்லையே, சொல்லவில்லையே என்ற
தன்முனைப்பு தேவை இல்லை. அதையெல்லாம் விட்டு விடுவோம்.இருபது ஆண்டுகள் கடந்து விட்டன; எப்படியாவது இந்த இயக்கத்தை வெற்றிப் பாதை யில் கொண்டு போய் நிறுத்துவதற்கு, உறுதியுடன் போராடுவோம்.அனை வரை யும் அரவணைத்துத் தட்டிக் கொடுத்து இணைப்போம்.

ஒரு மாதத்துக்கும் மேலாகப் பாடுபட்டு இந்த நிதியைத் திரட்டித் தந்து இருக் கின்றீர்கள். நானும் ஓயாது இயங்குகிறேன்; ஓய்வு இல்லாது இயங்குகிறேன். நான் எனக்காக எதையும் சிந்திப்பது இல்லை. இத்தனை இலட்சம் தோழர்கள் வைகோ வைகோ என்று அன்பாக என்னை நேசிக்கின்றீர்களே, இனி எனக்கு
என்ன வேண்டும்? எனக்கு என்று வேறு ஒன்றுமே தேவை இல்லை.

ஆனால், நீங்கள் பாடுபட்டு வளர்த்த இந்த இயக்கம் வெற்றி பெற வேண்டும். உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி நிலவ வேண்டும்.கழகத்தின் வெற்றிச்செய்தி யை, உங்கள் குடும்பத்தினர், பேரப் பிள்ளைகள் கேட்டு மகிழ வேண்டும்.அந்தக் காட்சியை நான் பார்க்க வேண்டும். அதுவே என் நெஞ்சுக்கு நிம்மதி.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment