Sunday, August 25, 2013

கட்டாய இலவச கல்வி சட்டம்

அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் (ஆர்.டி.இ.) நலிந்த பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் 81 தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் ஒரு மாணவரை கூட சேர்க்கவில்லை என்ற தகவல் தெரியவந் துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 390 தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள், அனைவருக் கும் கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கை பற்றி 128 பள்ளிகளே தகவல் தெரிவித்துள்ளது. மீதமுள்ள 262 பள்ளிகள் எந்தவித தகவலை அளிக்கவில்லை என்ற விவரம் தற்போது தெரியவந்துள்ளது.
மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் வே.ஈஸ்வரன், மத்திய இடை நிலைக் கல்வி வாரியத்திடம் (சி.பி.எஸ்.இ.) இருந்து அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டத்தில் (ஆர்.டி.இ.) நலிந்த பிரிவினருக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் நடைபெற்ற மாணவர் சேர்க்கை குறித்த விவரத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழங்கும்படி கோரியிருந்தார்.

அதில், சென்னையில் உள்ள சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலகம் அளித்த தகவல் விவரம்:

தமிழகம் முழுவதும் தற்போது 390 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்ளன. இதில் தற் போது ஆர்.டி.இ. சேர்க்கைப் பற்றி தகவல் அளித்த பள்ளிகள் 128 ஆகும். ஆர்.டி. இ.சட்டப்படி ஒரு மாணவரை கூட சேர்க்காத பள்ளிகளின் எண்ணிக்கை 81 ஆகும். இது மொத்த பள்ளிகளின் எண்ணிக்கையில் 68 சதவீதம். ஆர்.டி.இ. சட்டத்தை சிறிதளவு அமல்படுத்திய தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 9 ஆகும். ஆர்.டி.இ. சட்டத்தை முழுமையாக அமல்படுத்திய மத்திய அரசின் கேந்திரீய வித்யாலயா பள்ளிகள் 9 ஆகும்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் வழங்கிய தனியார் சி.பி.எஸ்.இ.
பள்ளிகளில் ஆர்.டி.இ. சட்டப்படி சேர்க்கப்பட வேண்டிய மொத்த இடங்களின் எண்ணிக்கை 3055 ஆகும். ஆனால், மாணவர்கள் சேர்க்கப்பட இடங்களின் எண்ணிக்கை 762 ஆகும். சுமார் 119 சி.பி.எஸ்.இ. தனியார் பள்ளிகளில் 3055 இடங்களுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2958 ஆகும். ஆனால், 9 கேந்திரீய வித்யாலயா பள்ளிகளில் மட்டும் ஆர்.டி.இ. சட்டப்படி மாணவர் சேர்க்கைக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2826 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் ஆர்.டி.இ. சட்டப்படி மாணவர்களை சேர்ப்ப தற்கு போதிய விண்ணப்பங்களை வழங்கப்படாததையே காரணம் என்பது தெரிந்து கொள்ளலாம். இதை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கண் காணித்திட வேண்டும்.

மேலும், எஸ்.சி. எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள், எச்.ஐ.வி-யால் பாதிக்கப் பட் டோர், துப்புரவு பணியாளர்களின் குழந்தைகள், பொருளாதாரத்தில் பின்தங்கி யவர்கள் ஆகியோர் எத்தனை விகிதாசாரத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தைச் சேகரிக்கவில்லை என சி.பி.எஸ்.இ. வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, ம.தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் வே.ஈஸ்வரன் கூறியது:

ஒவ்வொரு பள்ளியிலும் நுழைவு வகுப்பு எது என்பது பற்றியும், அப்பள்ளியில் எத்தனை இடங்கள் ஆர்.டி.இ. சட்டப்படி நிரப்பப்பட வேண்டும் என்பது குறித் தும் சி.பி.எஸ்.இ. நிர்வாக அலுவலகத்திலேயே கூட தகவல் இல்லை.

ஒவ்வொரு பள்ளியிலும் ஆர்.டி.இ. சட்டப்படி மாணவர்களை சேர்க்கப்படுவது
முறையாக நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்ய ஒரு சி.பி.எஸ்.இ. பள்ளிக்கு கூட அதிகாரிகள் செல்லவில்லை. ஒவ்வொரு பள்ளியிலும் அந்தந்த பள்ளிக்கான ஆர்.டி.இ. இடங்களுக்கு அதிகமான விண்ணப்பங்கள் வரும்பட் சத்தில் எப்படி சேர்க்கையை நடத்த வேண்டும் என்பதை தெளிவான வழி காட்டுதலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வழங்கவில்லை.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை உண்மையாக அமல்படுத்தி, ஏழை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பை உருவாக்கித் தர தவறுகிறது என்றார்.

1 comment:

  1. aiya kaniyakumari maavattam, manavalakurichi ennum ooril St.Joseph CBSE School sila panguthanthayarkalal nadaiperukirathu, atharku urimam innum kidaika villai ena thagaval ullathu, anal angu LKG kattanam mattum 19,000 Rs. vasoolikirargal atharku sariyana bill kodupathillai,
    Admission fee : 2500
    EXTRA FEE : 2500
    Uniform : 1332
    Books : 833
    Notes : 585
    OTHERS : 450
    Tution fee : 4500 (1500 x 3)
    Smart : 300 (100 x 3)
    Bus : 6000 (2000 x 3)for 04 Kmt
    TOTAL : 19000 per year for LKG

    Intha pallikoodathai patri ethenum thagaval kidaikuma...

    Pravin.K.A

    ReplyDelete