Tuesday, September 3, 2013

வரும் தேர்தலில் மதிமுக

செப்டம்பர் 15, விருதுநகரில் அண்ணா பிறந்த நாள் மாநாட்டை மறுமலர்ச்சி தி.மு.க. நடத்துகிறது. இதற்கான பந்நதல் அமைக்கும் பணியினை 4 முறை யாக பொதுச்செயலாளர் #வைகோ அவர்கள் பார்வையிட்டார்.

மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.சண்முகசுந்தரம், புதூர் மு.பூமிநாதன், எம்.டி. சின்னசெல்லம், தி.மு.இராசேந்திரன், சிப்பிப்பாறை இரவிச்சந்திரன், ஆர்.வரத ராஜன், ஆர்.ஞானதாஸ், மின்னல் முகமது அலி ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர் சந்திப்பில் வைகோ கூறியது 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக்ததின், அண்ணா பிறந்த நாள் மாநாடு முன்னேற்பாடுகள் மிக பிரமாண்டமாக மின்னல் வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இலட்சக் கணக்கானவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி தி.மு.க.வின் அணுகுமுறை என்ன என்பது இந்த மாநாட்டில் தெரியும்.

மாநாட்டில் முன்னணித் தலைவர்கள் உரையாற்றுவார்கள். இதுவரை நடை பெற்ற மாநாடுகளை விட மிகச் சிறப்பாக நடைபெற இருக்கிறது.

ரூபாய் மதிப்பும், மத்திய அரசின் மதிப்பும் வேகமாக சரிந்து வந்துகொண்டிருக் கிறது இந்தியப் பொருளாதாரம் முடங்கிக் கிடப்பதற்கு காங்கிரஸ் அரசே கார ணம் ஆகும். இந்த நாட்டையே பன்னாட்டு கம்பெனிகளின் காலனி அரசாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மாற்றி வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ்ஆட்சிக்கு வர முடியாது. அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் அடியோடு பாழாகிவிட்டது.தமிழகத்திலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும்.

மறுமலர்ச்சி தி.மு.க. நாட்டு மக்களுக்கு தொடர்ந்து பாடுபடும். நாங்கள் மிக வேகமாக மக்கள் மத்தியில் வளர்ந்து வந்துகொண்டிருக்கிறோம்.

காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறக்கூடாது.

காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறக் கூடாது என்று மாணவர்கள் சைக்கிள் பயணம் செல்ல இருக்கிறார்கள்.

நவநீதிம் பிள்ளை இலங்கை சென்றபோது, இலங்கை அமைச்சர் எனக்கு திரு மணம் ஆகிவிட்டது. நவநீதம்பிள்ளையை வேண்டுமானால்,இரண்டாவது திரு மணம் செய்துகொள்ள தயார் என்று அகம்பாவத்தோடு பேசுகிறான்

அங்குள்ள தமிழர்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்திருயிருக்கிறார்கள். அங்கு பன்னாட்டு விசாரணை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியிருக் கிறார்கள். கடந்த ஆண்டு நவநீதம் பிள்ளை சென்றபோதும் அந்த கருத்துதான் வலியுறுத்தப்பட்டது

இவ்வாறு வைகோ கூறினார் .







No comments:

Post a Comment