Monday, September 9, 2013

கோவை மாவட்ட இளைஞரணி

கோவை மாவட்ட #மதிமுக இளைஞரணிக் கூட்டம் அமைப்பாளர் ஸ்ரீதர் தலை மையில் நேற்று (௦08.09.13)  நடந்தது. மாநில இளைஞர் அணிச் செயலர் வே.ஈஸ் வரன், மாவட்ட பொறுப்பாளர் ஆ.செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிப்பதோடு அதிலிருந்து இலங்கை யை நீக்கவும் இந்தியா வலியுறுத்த வேண்டும். 
அறிவிக்கப்படாத மின்வெட்டால் கடுமையாக கோவை பாதிக்கப்படுகிறது.
மின்வெட்டைச் சரி செய்ய வேண்டும்.

கோவைக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தைத் துவங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

போத்தனூர் பொள்ளாச்சி அகல ரயில் பாதைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.

வெள்ளலூர் குப்பைக் கிடங்கை மக்கள் வசிக்காத இடத்துக்கு மாற்ற வேண்டும். 

யானை மனித மோதல்களால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

திருச்சி சாலையில் காங்கேயம்பாளையம் முதல் சிந்தாமணிப் புதூர் புறவழிச் சாலை வரையிலான 7 கி.மீ.தூரத்தை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத் தும் திட்டத்தை உடனடியாகத் துவக்க வேண்டும்.

மேற்கு புறவழிச் சாலைத்திட்டத்தை உடனடியாகத் துவங்க வேண்டும். போக் குவரத்து நெரிசலைக் குறைக்க போத்தனூர் முதல் பொள்ளாச்சி வரையிலான ரயில் பாதையில் செட்டிபாளையம், நல்லட்டிபாளையம், கோவில்பாளையம் ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்க வேண்டும்.

திண்டுக்கல் பொள்ளாச்சி கோவை வழியாக சத்தியமங்கலம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிப்பாதையாக மாற்ற வேண்டும். 

நீலம்பூர் முதல் வாளையார் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை அகலப் படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

என்று கோவை மாவட்ட மதிமுக இளைஞரணி கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment