Saturday, September 21, 2013

சம வாய்ப்பு வழங்குக!

செவிலியர்’ படித்த மாணவிகளுக்கும் கல்லூரியில் பயில சம வாய்ப்பு வழங்குக!

தமிழக அரசுக்கு #வைகோ வேண்டுகோள்

2013-2014 ஆம் கல்வி ஆண்டிற்கான செவிலியர் பட்டயப் படிப்பில் ஏற்பட்ட குளறுபடிகளால் 10,000 க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவில் பயின்ற மாணவர்கள் மட்டுமே செவிலியர் பட்டயப் படிப்பில் சேர முடியும் என்ற நிலையை மாற்றி, கடந்த ஆட்சிக் காலத்தில் மேல்நிலையில் எந்தப் பிரிவில் பயின்றவர்களும் சேர லாம் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இந்தக் கல்வி ஆண்டிலிருந்து அறி வியல் பிரிவில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை எனவும், காலி இடங்கள் இருந்தால் மற்றப் பிரிவுகளில் பயின்றவர்களை சேர்த்துககொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேல்நிலைப் பள்ளிகளில் கணிதம், அறிவியல், கணினி அறிவியல் போன்று
செவிலியர் பயிற்சிப் பிரிவும் 76 பள்ளிகளில் தமிழகம் முழுவம் நடைபெறு கிறது. இதில் சேரும் மாணவியர்கள் செவிலியர் ஆகவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு இந்தப் பிரிவில் சேர்ந்து பயில்கிறாhர்கள். இவர்களுக்கும் இடமில்லை என்று சொல்வது வேதனைக்குரிய செயலாகும்.

இந்தக் கல்வி ஆண்டில் விண்ணப்பித்து இருந்த 2,000க்கும் மேற்பட்ட மாணவி கள் அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளில் பயில்வதற்கு இடம் கிடைக்கா மல் எதிர்காலம் இருண்டுவிட்ட வேதனையில் தவிக்கின்றனர்.

மேலும், தற்பொழுது பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்புப் பயிலும் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, மனிதாபிமானத்துடன் இப்பிரச்சினையை அணுகி மேல்நிலைப் பள்ளி களில் செவிலியர் பயிற்சிப் பிரிவில் பயின்ற மாணவிகளுக்கும், அறிவியல் பிரிவில் படித்த மாணவிகளுக்கும் சமவாய்ப்பு அரசு செவிலியர் கல்லூரிகளில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

‘தாயகம்’                                                                                          வைகோ
சென்னை - 8                                                                   பொதுச்செயலாளர்
21.09.2013                                                                           மறுமலர்ச்சி தி.மு.க.

No comments:

Post a Comment