Monday, September 30, 2013

மதிமுக கோவில்பட்டி பொதுக்கூட்டம்

கோவில்பட்டி நகர, ஒன்றிய #மதிமுக சார்பில் விருதுநகரில் நடைபெற்ற மா நாட்டு தீர்மானங்கள் குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடை பெற்றது.

கோவில்பட்டி லாயல் மில் காலனி அருகே நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட இளைஞரணிச் செயலர் விநாயகா ஜி.ரமேஷ் தலைமை வகித்தார். 

கோவில்பட்டி மேற்கு ஒன்றிய இளைஞரணிச் செயலர் சீனிவாசன், இலக்கிய அணி குழந்தைவேலு, கோவில்பட்டி நகர மாணவரணிச் செயலர் செண்பகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநிலப் பேச்சாளர் வாகை முத்தழகன் சிறப்புரையாற்றினார். 

கூட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்.எஸ்.கணேசன், கோவில் பட்டி மேற்கு ஒன்றியச் செயலர் சிவக்குமார், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் மு.பெ.செல்வராஜ், மாநில தீர்மானக் குழுச் செயலர் முத்துசெல்வம், பொதுக்குழு உறுப்பினர் தெய்வேந்திரன், மாவட்ட இளைஞரணி துணைச் செய லர் அழகர், அவைத் தலைவர் அப்பாவு, வார்டு செயலர் அரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலர் பவுன்மாரியப்பன் வரவேற்றார்.முன் னாள் யூனியன் கவுன்சிலர் இந்திரன் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணைச் செயலர் செ.ராமச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கொம்பையா ஆகியோர் செய்தி ருந்தனர்.

No comments:

Post a Comment