Thursday, September 26, 2013

மறுமலர்ச்சி பயணம் தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 30-ந் தேதி முதல் #மதிமுக பொதுச் செய லாளர் #வைகோ வாகன பிரசாரம் செய்கிறார்.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் எஸ்.ஜோயல் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வாகன பிரசாரம் மூலம் மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சி பயணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 30, 1 ஆகிய தேதிகளில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வாகன பிரசாரம் செய்கிறார்.

30-ந் தேதி மாலை 3 மணிக்கு செய்துங்கநல்லூரில் பிரசாரத்தை தொடங்கும் அவர், தொடர்ந்து கருங்குளம், ராமானுஜபுரம், சேரகுளம், பேய்க்குளம், சாத் தான்குளம், முதலூர், கடாட்சபுரம், வேப்பங்காடு, அடைக்காலாபுரம், இலங்க நாதபுரம், மெஞ்ஞானபுரம் ஆகிய ஊர்களில் பிரசாரம் செய்து விட்டு இரவு 9 மணிக்கு நாசரேத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

1-ந் தேதி ஸ்ரீவைகுண்டத்தில் பிரசாரத்தை தொடங்கும் அவர், தொடர்ந்து ஆழ் வார்திருநகரி, தென்திருப்பேரை, குரும்பூர், சோனகன்விளை, திருச்செந்தூர், அமலிநகர், ஆலந்தலை, குலசேகரன்பட்டினம், மணப்பாடு ஆகிய ஊர்களில் பிரசாரத்தை முடித்து விட்டு இரவு 9 மணிக்கு பெரியதாழையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

எனவே மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள் சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மறுமலர்ச்சி பயணத்தை வெற்றிகரமாக நடத்த உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார் கள். இவ்வாறு அந்த அறிக்கையில் மாவட்ட செயலாளர் எஸ்.ஜோயல் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment