Wednesday, September 4, 2013

பொய்ச் செய்தி மறுப்பு

#மதிமுக இராயபுரம் பகுதிச் செயலாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் நான் இதன் மூலம் தெரிவிப்பதாவது:

நான் ம.தி.மு.க.வில் இருந்து விலகியதாகவும், தி.மு.க.வில் இணைந்து விட்ட தாகவும் கருணாநிதியின் குடும்ப நாளேடான முரசொலி செய்திவெளியிட்டுள் ளது. சிலரின் சுயநலத்திற்கு பலிகடாவாக்கி தனிமையில் இருந்தபோது ம.தி. மு.க.வில் இருந்து விலகிய சிலரும், தி.மு.க.வினர் சிலரும் சேர்ந்து என்னை வலுக்கட்டாயப்படுத்தி, நிர்பந்தத்திற்கு உள்ளாக்கி, மேடைக்கே அழைத்துச் சென்று நிறுத்திவிட்டார்கள்.

உண்மையில் நான் ம.தி.மு.க.வில் இருந்து விலகவில்லை. தி.மு.க.வில் இணையவில்லை. இவ்விஷமத்தனமான செய்தியை நான் வன்மையாக மறுத்துக் கண்டிப்பதோடு, நான் தொடர்ந்து தலைவர் வைகோ தலைமையில் மறுமலர்ச்சி தி.மு.க.வில் பணியாற்றுவேன் என உறுதி கூறுகின்றேன்.

இவண்
எம்.கே.இஸ்மாயில்

சென்னை
04.09.2013 

No comments:

Post a Comment