Saturday, September 7, 2013

திருப்பூர் மாவட்ட இளைஞரணி

காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என #மதிமுக வலியுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்ட மதிமுக இளைஞரணி நகர, ஒன்றிய அமைப்பாளர்கள் கலந்
தாய்வுக் கூட்டம் பல்லடம் ராயர்பாளையம் ஸ்ரீ விநாயகர் திருமண மண்டபத் தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் ஆர்.ஆர்.ரவி தலைமை வகித்தார். பல்லடம் ஒன்றியச் செயலாளர் மு.சுப்பிரமணியம், நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

"காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது. காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும். மின்வெட்டு நேரத்தை முறைப்படுத்தி, முன் கூட்டியே மக்களுக்கு மின் வாரியம் அறிவிக்க வேண் டும். விசைத்தறியாளர்களுக்கு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும்.

விசைத்தறிக் கூடங்களில் டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment