Thursday, September 12, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 16

நாள்:- 10.03.2007


உலகத் தமிழர் பேரமைப்பு திரட்டிய உதவிப் பொருள்களை, செஞ்சிலு வைச் சங்கம் வழங்கிடவழி செய்க!


அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இலங்கைத் தீவில், தமிழ் ஈழ மக்கள் படும் துன்பங்கள் குறித்துத் தங்களின் மே லான கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். சொல்லொணாத் துயரங்களை யும், துன்பங்களையும் அனுபவித்து வருகின்ற தமிழ் ஈழமக்களுக்கு, அமைதி யும் ஆதரவும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டுகிறேன்.

சிங்கள இனவாத அரசு, தமிழ் ஈழ மக்களுக்கு எதிராகப் பெருமளவில் இராணு வத் தாக்குதலை நடத்தி இனப்படுகொலை செய்து உள்ளது. எஞ்சி இருப்பவர் களைப் பட்டினிச் சாவுக்குத் தள்ளும் முயற்சியில் முழுமூச்சாக ஈடுபட்டு வரு கிறது.

ஈவு இரக்கமற்ற இலங்கை இராணுவத்தால், அப்பாவி ஆண்களும், பெண் களும், குழந்தைகளும் கொல்லப்பட்டு, காயப்படுத்தப்பட்டு,முடமாக்கப்பட்டு வருகிறார்கள். தமிழ் நாட்டில் உள்ள ‘உலகத் தமிழர்கள் பேரமைப்பு’, மனிதா பிமான அடிப்படையில் உணவுப் பொருள்களையும்,மருந்துப் பொருள்களை யும் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்து,அவற்றை யாழ்ப்பாணத் தில் அவதியுறும் தமிழ் மக்களுக்கு அங்கே உள்ள பன்னாட்டுச் செஞ்சிலு வைச் சங்கத்தின் வழியாகத் தவறாமல் கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளது.

இந்தியச் செஞ்சிலுவைச் சங்கத்தின் அலுவலகம், இந்த வேண்டுகோளைக்
கடந்த பிப்ரவரி 9, 2007 அன்றே உரிய அனுமதிக்காக இந்திய அரசுக்கு அனுப்பி விட்டதாக உலகத் தமிழர்கள் பேரமைப்பின் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்களுக்குத் தெரியப்படுத்தி உள்ளது.

ஆகவே, மனிதாபிமான அடிப்படையில் மறுவாழ்வு உதவிப் பொருள்களை,
இலங்கையில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் வழியாக அனுப்புவதற்கு
உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பணிவுடன் வேண்டுகிறேன்.

தங்கள் அன்புள்ள,

வைகோ

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

No comments:

Post a Comment