Thursday, September 12, 2013

மாற்றத்துக்கு மக்கள் தயார்

மாற்றத்துக்கு மக்கள் தயாராகி விட்டனர்....#வைகோ சாதனை படைப்பார்!

இலவசப் பொருட்களை வழங்குவதாக,தேர்தல் வாக்குறுதி அளிப்பது லஞ்சம்
கொடுப்பது சீட்டுகளை வாங்குவதற்கு சமம், தேர்தலை நேர்மையாக நடத்த
வேண்டும் என்ற அரசியல் சட்ட கட்டுப்பாட்டுக்கு எதிரானது. இலவச வாக்கு களை லஞ்சம் என அறிவிக்க வேண்டும். இலவச வாக்குறுதிகளை நிறைவேற் றுவதற்கு, அரசு கஜானா காலியாவதை தடுக்க வேண்டும் என்ற குரல் இந்தி யா முழுவதும் எதிரொலிக்க ஆரம்பித்து உள்ளது. அரசியல் ஆரோக்கிய நிலை மை அடைய வழி வகுப்பதாக உள்ளது.
தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலாகும் முன்பே, அரசியல் கட்சிகள்
தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. எனினும், தேர் தல் கமிஷன் ஒரு விதிவிலக்கை ஏற்படுத்தி தேர்தல் அறிக்கைகளையும், நன் னடத்தை விதிமுறைகளுக்குள் கொண்டுவர முடியும். தேர்தல் அறிக்கையில் எதை எதைக் குறிப்பிடலாம் என்பதற்கான வழி காட்டுதல் விதிமுறைகளை உடனடியாக உருவாக்க வேண்டும் என நீதியரசர்கள்,ரஞ்சன் கோகய் கொண்ட சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் தீர்ப்பு வழங்கி உள்ளது.

மக்கள் பிரச்சனையில் எதிரும் புதிருமாக உள்ள கட்சிகள்.இந்த தீர்ப்பை கண்டு
அதிர்ச்சியில் ஆடிப்போய் உள்ளன.இலவச வாக்குறுதிகளைத் தடுக்கக்கூடாது எனவும், மறுசீராய்வு செய்யக் கோரி, பல கட்சிகள் இதில் மட்டும் ஒற்றுமை யுடன் ஓங்கி குரல் கொடுக்கின்றன.

தமிழகத்தில் திருமண விழா மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்களின் துக்க
சம்பங்களில் கூட சந்திக்கவோ சிரிக்கவோ மறுக்கும் அ.தி.மு.க -தி.மு.க.வினர் தில்லியில் டிஆர்.பாலும்,தம்பித்துரையும் ஒரே காரில் பயணம் செய்துள்ளனர். கொள்ளை அடிப்பதற்கும், பங்கு போடுவதற்கும், இலவசங்கள் தந்தால் தான் வாக்குகளை பெற முடியும். மக்களை அடிமை களாகவே வைக்க முடியும் என்ற கொள்கையுடன் தி.மு.க.வும்,அ.தி.மு.க.வும் கைகோர்த்து செயல்படுவ தைக் காண வேண்டி உள்ளது.

இந்த தீர்ப்பு, தலைவர் வைகோவின் எண்ணங்களுக்கும், கொள்கைக்கும்,வாக் காளர்களுக்கு பணம் தந்து வாக்குகளை பெறவேண்டாம் என்ற பிடிவாதகுணத் திற்கும், கிடைத்த வெற்றியாக நாடே கருதுகிறது. 1996 மற்றும் 2001 சட்டமன் றத் தேர்தல் தோல்விக்கு தனது தொகுதிகளில் பரப்புரைக்கு நீண்ட நாள் ஒதுக் காதது ஒரு காரணமாக இருந்தாலும் வாக்குகளைப் பெற, திருமங்கலம் பாணி யை மறுதலித்தது தான் காரணம்.

2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், திருமங்கலம் பாணியை, திருவாரூர்
காரரும், காங்கிரஸ் கட்சியும்,தலைவர் வைகோ வெற்றி பெறவே கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு ஒவ்வொரு வாக்குகளுக்கும் ஆயிரம்,இரண்டா யிரம், ஐந்தாயிரம் என கொடுத்து, ஜனநாயகத்தை கெடுத்து குட்டிச் சுவராக்கிய போது குறைந்த பட்சம் ரூ50 கொடுத்துவிட்டால் போதும்,ஈசியாக வெற்றி பெற லாம் கூட்டணி கட்சி தோழர்கள் சொன்ன போதும் பிடிவாதமாக கொண்ட கொள்கையில் பிடிவாதமாகவும், அரசியலில் நேர்மை,பொதுவாழ்வில் தூய் மை, இலட்சியத்தில் உறுதி என்ற தாரக மந்திரத்திலிருந்து எள் முனை அளவு கூட விலகாமல் சமரசம் செய்து கொள்ளாமல் தேர்தலை சந்தித்த தலைவர் இந்தியாவில் தலைவர் வைகோ மட்டும்தான் என்பது நாடறியும்.

நீண்ட காலமாக தென் தமிழகத்தின் வாழ்வாதாரத்திற்கு தலைவர் வைகோ வின் பங்கு அளப்பரியது,அளவிட முடியாதது. முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் கேரளக் கட்சிகள் ஒற்றுமையுடன், போக்கிரித்தனமான, பொறுப்பற்ற அறிக்கைகளை தொடர்ந்து தந்து கொண்டே இருந்தன.

ஒரு முறை பெரியாறு அணையை மையப்படுத்தி, அணை உடைந்து இலட்சக் கணக்கான மக்கள் செத்து மிதப்பதுபோல் கிராஃபிக்ஸ் காட்சிகளை உருவாக்கி உருவான “டேம் 999” என்ற திரைப்படத்தில் தென்கோடியில் உள்ள அணை பலமிழந்து உடைவது போல காட்டி, கேரள மக்களிடையே, குழப்பத்தை ஏற் படுத்தி குட்டையை குழப்பி, பெரும் பிரளயம் ஏற்பட முனைந்தபோது தமிழகத் தில் அந்த படத்தை வெளியிடவே முடியாமலும் அரசு தடை விதிக்கவும் சூழ் நிலையை உருவாக்கித் தந்தவர் தலைவர் வைகோ. அதுமட்டுமல்ல, நாட்டு மக்களுக்கு முல்லைப் பெரியாறு பற்றிய பெரிய விளக்கத்தை தந்தார். பூகம் பம் ஏற்படுவதற்கு ஒவ்வொரு நிலை உண்டு.

இதில் முல்லைப் பெரியாறு அணை உள்ள பகுதி 3 ஆவது மண்டலத்தில் உள் ளது.அணைப்பகுதியில் பூகம்பம் வந்தால் 3.5 அல்லது 4.2 என்ற ரிக்டர் அளவில் தான் வரும், 7 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் வந்தாலும் பெரியாறு அணை தாங்கும் என்று கேரள நாட்டு மக்களின் சந்தேகத்தை தெளிவு படுத்தியவர் தலைவர் வைகோ. ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் செய்யாத சாதனையை செய்தவர் தலைவர்.

அரசியலை தொழிலாகக் கொண்ட அரசியல் வியாபாரிகள் மத்தியில் அரசியல் தலைவர் வைகோ மட்டும்தான்,ஆரம்பத்திலிருந்து கடல் அலை போல மக்க ளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி,பல்லாயிரக்கணக்கான மக்களை ஒன்று
திரட்டி வெற்றி கண்டார். பெரியாறு அணையை பாதுகாக்க வேண்டி இரு முறை நடைப்பயணம் மேற்கொண்டு,முற்றுகைப் போராட்டம் நடத்தி, கேரளா வின் அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு, பொருளாதாரத்தடையை ஏற்ப டுத்த வகை வகையான போராட்டங்களை முன் எடுத்துச் சென்றார்.

அதுமட்டுமல்ல, புள்ளி விபரங்கள்,ஆதாரங்களை அடுக்கடுக்காக எடுத்து வைத்ததன் விளைவு, நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எச்.எல். தத்து  சந்திரமவுலி, குமார் பிரசாத், மதன் பி.லோகுர் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வந்தன. தற்பொழுது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் “முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்ற வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பினை தந்துள்ளனர்.

எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் வலுவில்லாத அணை என்ற கேரளாவின்
வாதத்திற்கு, நீதிமன்றம் தனது கண்டனத்தையும் பதிவு செய்து உள்ளது.இந்தத் தீர்ப்பு தலைவர் வைகோவின் முயற்சிக்கும், இடைவிடாத உழைப்புக்கும் கிடைத்த பரிசாக தமிழக மக்கள் பார்க்கிறார்கள்.

ஈழத்தமிழ் மக்களின் முப்பதாண்டு கால வீரம் மிகுந்த போராட்டம் வீணாகிப்
போனதற்கும், முள்ளி வாய்க்காலில் முடங்கிப் போனதும்,ஐந்து முறை முதல் வராக கோலோச்சிய கருணாநிதி காலத்தில் தானே 2009 மே திங்களில் முள்ளி வாய்க்கால் படுகொலை நடந்து முப்பது நாட்கள் முடியாத நிலையில் மக னுக்கு மகுடம் சூட்ட மாதக்கணக்கில்,முகாமிட்டு தில்லியில் திரிந்த கருணா நிதியை வரலாறு மன்னிக்குமா? சட்டமன்றத்தில் கி.மு. - கி.பி. என்பது போல ரா.மு - ரா.பி (ராஜிவ்காந்திக்கு முன் - ராஜிவ்காந்திக்கு பின்) என்று பேசி தமிழி னத்திற்கும், ஈழத்தமிழர்களுக்கும் செய்த துரோகத்தையும் மறக்க முடியுமா?
இன்றும் ஈழத்தமிழர்கள், புலம் பெயர்ந்த ஈழ மக்கள் நெஞ்சம் கொதித்துக் கொண்டு தான் உள்ளது.

ஆனால் தலைவர் வைகோ பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்சில்
நடைபெற்ற ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் ஈழ மக்களின் பிரச்சினைக்கு இனி பொதுவாக்கெடுப்பு நடத்துவது தான் ஒரே தீர்வு என முதன் முறையாக சொன்னதும், அதனை ஐ.நா.மன்றம் நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததும் தலைவர் வைகோதான்.

உலக நாடுகளில் பல நாடுகள் இதனை வழிமொழிந்தும் வருகிறது. தலைவர்
வைகோவின் முயற்சிதானே காரணம்.ஈழம் ஒரு நாள் மலர்ந்தே தீரும். அந்த
நாட்களுக்காக இன்று வரை தலைவர் தன்னலமற்று போராடி வருகிறார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலையால் மனித உயிர்கள் காவு
கொடுக்க நேரிடும், சுற்றுச்சூழலை நாசமாக்கிடும் என பல ஆண்டு காலமாக
அறவழிப் போராட்டம் நடத்தி, மக்களை பேராபத்தில் இருந்து காக்கும் பொருட் டு ஒரு காவல்காரனாகவே, காவியத் தலைவர் வைகோ போராடி வருகிறார்.
புற்று நோய்கள், மனிதர்களின் சிறுநீரகங்கள், நுரையீரல்கள் பாதிக்கும், தோல் நோய்கள் ஏற்படும் என மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகளையும், தண் ணீரை பருகினால் ஆடு, மாடு என அனைத்து விலங்குகளுக்கும் பல கடுமை யான நோய்கள் தாக்கும், இறந்து போகும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற் படுத்தி வருகிறார்.

கடல் வாழ் உயிரினங்கள் அழியும், மீன்பிடி தொழில் அழியும். எனவே ஆலை யை நிரந்தரமாக மூட வேண்டும் மக்கள் நலனை காக்க எதிர்கால சந்ததிகள்
வாழ்க்கை வளமாக வாழ வழக்கறிஞராக மாறி நீதிமன்றத்தின் நெடிய படிக் கட்டுகளில் ஏறி ஏறி உரத்த குரலில் வாதாடி வருகிறார் தலைவர் வைகோ.நீதி மன்றமும் அவ்வப்போது ஆலை இயங்குவதற்கு தடை விதிப்பதும், பிறகு சட் டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி இயக்குவதும் தொடர் கதையாகி வரு கிறது. இந்த அறவழிப் போராட்டத்திலும் தலைவர் வைகோ நிச்சயம் வென்றே தீருவார்.

தலைவர் வைகோவின் குரல் நீதிமன்றத்தின் காதில் கேட்க ஆரம்பித்துள்ளது. தலைவர் பின்னால் வர தமிழக மக்கள் தயாராகிவிட்டனர்.அனைத்து தளங் களிலும், களங்களிலும் தமிழகத்திற்கும், தமிழ் இனத்திற்கும்,உலகெங்கும் வாழும் தமிழர்களும் நலமோடும், வளமோடும் வாழ தன்னையே தமிழகத் திற் கு தந்துவிட்ட தலைவர் வைகோ அகிலம் போற்றும் அளவு சாதனை படைத்து
அதிகாரத்தைக் கைப்பற்றுவார். 

கட்டுரையாளர் :- கொப்பம்பட்டி சி.மதிவாணன் 

No comments:

Post a Comment