Sunday, September 1, 2013

கூடுதல் பேருந்து -மாணவரணி

கூடுதல் பேருந்து இயக்க #மதிமுக மாவட்ட மாணவரணி கோரிக்கை

உடுமலை அரசுக் கல்லூரிக்கு காலை நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளருக்கு, மதிமுக மாவட்ட மாணவரணி சார்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்:

உடுமலை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் அரசுக் கலைக் கல்லூரியில் படித்து வருகின்றனர். இதில் அதிகமானவர்கள் கிராமப்புறங்களில் இருந்து உடுமலை பேருந்து நிலையம் வந்துதான் கல்லூரி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில் உடுமலை பேருந்து நிலையத்தில் இருந்து காலை 8.15, 8.45 மணிக்கு என இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

இதனால் பேருந்துகளில் படிகளில் தொங்கிக் கொண்டு செல்லும் நிலை ஏற் பட்டுள்ளது. எனவே காலை நேரங்களில் கூடுதலாக ஒரு பேருந்தை இயக்க வேண்டும்.

No comments:

Post a Comment