Monday, September 2, 2013

நீலகிரி இளைஞரணி

நீலகிரி மாவட்ட #மதிமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மஞ்சூரில் நடைபெற்றது. மாவட்ட அமைப் பாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். 

ஒன்றிய துனை அமைப்பாளர் சுரேஷ், மாணவர் அணி அமைப் பாளர் செந்தில் குமார்,மஞ்சூர் இளைஞரணி அமைப் பாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜாசத்யபவன் வரவேற்றார். 

நிர்வாகிகள் சசிகுமார், சேகர், நஞ்சூண்டன், வீரகுட்டி, கிருஷ்ணன், லெனின், ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மணிகண்டன் நன்றி கூறினார்.

கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ..

1.வரும் 15ம் தேதி, விருதுநகரில் கழக பொதுசெயலாளர் வைகோ தலைமை
யில் நடைபெறும் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டிற்கு மாவட்டத்தில் இருந்து இளை ஞரணி சார்பில் சீருடைகளுடன் 50 வாகனங்களில் செல்வது. 

2.அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை எடுப்பது.

3.இலங்கையில்  கமன்வெல்த் மாநாடு நடத்தும் முடிவை கைவிட தொடர்ந்து வலியுறுத்துவது.

4.வரும் நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதி யில் மதிமுக போட்டியிட வேண்டும் என கழக பொது செயலாளரிடம் கேட்டு கொள்வது.

5.மஞ்சூர் அரசு மருத்துவமனை விரிவுபடுத்தும் பணி துவங்கி 3 ஆண்டுக்கும் மேலாகியும் இதுவரை பணிகள் முடியவில்லை. இதனால் நோயாளிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே மருத்துவமனை பணிகளை விரை வாக மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன 

உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment