Monday, September 30, 2013

விருதுநகர் மாநாட்டு வைகோ உரை-3

இளைஞர்கள் நம்பிக்கையோடு நம்மை நெருங்குகிறார்கள்....
ஆம்; புதுவெள்ளம் பாய்கிறது!

விருதுநகர் மாநாட்டில் #வைகோ பெருமிதம்

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா -மறுமலர்ச்சி தி.மு.க. மாநாடு, 15.09.2013
அன்று, விருதுநகரில் மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்றது. மாநாட்டில் கழ கப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையின் தொடர்ச்சி வருமாறு:

தியாகச்சுடர் காமராசர்

இது தியாகப் பெருஞ்சுடர் காமராசரின் மண்.எட்டு ஆண்டுகள் வெஞ்சிறையில் வாடிய, வீரத்திருமகனின் பூமி.


காங்கிரஸ் தலைவர் தேர்தலில் யாருக்கு ஓட்டு?நேதாஜி சுபாஷ் சந்திர போசுக் கா? அல்லது மகாத்மா காந்தியின் வேட்பாளர் பட்டாபி சீதாராமையாவுக்கா? என்று, திரிபுராவில் நடைபெற்ற தேர்தலில், பசும்பொன் தேவர் திருமகனாரும், தியாகச்சுடர் காமராசரும் இணைந்து, நேதாஜிக்கு வாக்கு அளித்த வரலாறும் என் நினைவுக்கு வருகிறது.

52 தேர்தலில், திருவில்லிபுத்தூர் தொகுதியில், எம்.பி.யாக வெற்றி பெற்றார் காமராசர். குலக்கல்வித் திட்டத்தால், ராஜாஜி வெளியேறியபோது, தமிழ்நாடு
முதல் அமைச்சராக முடிசூட்டியது காமராசருக்கு. 

63 இல், சட்டமன்றத்தில் பெரும்பான்மை இருந்தும்,நேருவின் கவலை போக்க, கட்சிக்குத் தொண்டு செய்ய முதல் அமைச்சர் பதவியை, தானாகவே ராஜினா மா செய்த தியாக மாமணி அல்லவா காமராசர்?

1985 இல், மும்பை நகரில், காங்கிரஸ் கட்சியின் நூற்றாண்டு விழா மலரை, ராஜீவ் காந்தி வெளியிட்டார். அந்த மலரில், பட்டாபி சீதாராமையா படத்தைப் போட்டு, அதற்குக் கீழே, கு. காமராஜ் நாடார் என்று எழுதி இருந்தார்கள். நான் எரிமலையாகச் சீறினேன் நாடாளுமன்றத்தில். சித்தரஞ்சன் தாசை அவமானப் படுத்தினால், நீ வங்காளத்தில் நுழைய முடியுமா? திலகரைக்கொச்சைப்படுத்தி விட்டு, மராட்டியத்திலே கால் வைக்க முடியுமா? எங்கள் தென்னகம் நாட்டுக் குத் தந்த, காமராசரை அவமரியாதை செய்த, இந்த நூற்றாண்டு விழா மலரைத் தீ வைத்துக் கொளுத்த வேண்டும் என்றேன்.



1999. குமரி முனையில் காமராசருக்கு மணி மண்டபம் கட்ட அனுமதி இல்லை. நாஞ்சில் நாடு கோபத்தால் கொந்தளித்தது.

டெல்லி அரசியலில் இக்கட்டான நிலைமை. அண்ணா தி.மு.க. தலைமை, சோனியா காந்தியோடு சேர்ந்து போட்ட திட்டத்தால், ஒரேயொரு ஓட்டு வித் தியாசத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது.

அந்த நெருக்கடியான நேரத்திலும், பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்து, அதுவரை மத்திய அரசு அனுமதி மறுத்ததைச் சுட்டிக் காட்டி, நிலைமையை எடுத்துச் சொல்லி, அடுத்த 48 மணி நேரத்துக்குள், கன்னியாகுமரியில் காமராசருக்கு
மணி மண்டபம் கட்ட அனுமதியைப் பெற்றுத் தந்தவன் அடியேன் என்ற தகுதி யோடு இந்த மண்ணில் நிற்கிறேன்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனம்

வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொடுத்தோம்.

2002 நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 51 சதவீதப் பங்குகளை விற்பதற்கு,அந் நிறுவனத்தைத் தனியார் மயம் ஆக்குவதற்கு, மத்திய அரசு முடிவு செய்தது. இனி இந்த முடிவை எவரும் மாற்ற முடியாது என்று, அமைச்சர்களும், ஏன் தி.மு.க.வின் முக்கியத் தலைவர்களுமே கைவிரித்த பின்னர், பிரதமர் வாஜ்பா யைச் சந்தித்து, இது அநீதி, தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதி; உங்கள் ஆட்சியில் இது நடக்கக் கூடாது என்று, அடுக்கடுக்கான வாதங்களை வைத்த போது, அப்பெருமகனார் வாஜ்பாய், அரசு எடுத்த முடிவை, ‘இரத்துச் செய்கி றேன்; என் எல் சி தனியார்மயம் ஆகாது’ என அறிவிக்க வைத்தவன் என்ற முழுத்தகுதியோடு இங்கே பேசுகிறேன்.

ஈழத்தமிழர் பாதுகாப்பு

அது மட்டுமா?

ஒருநாள் இரவு எட்டு மணி இருக்கும். தில்லி லோதி கார்டன் வீட்டில் இருக் கிறேன். தொலைபேசி மணி ஒலிக்கிறது. கையில் எடுக்கிறேன். மறுமுனை யில்,எனக்குப் பழக்கப்பட்ட, கரகரப்பான குரல். ஆம்; தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் பேசுகிறார். வைகோ வருத்தத் தோடு சொல்லுகிறேன். இந்திய அரசின் நடவடிக்கையால், தம்பி மிகுந்த கவ லையோடு இருக்கிறார்; உடனடியாக உங்களுக்குத் தெரிவிக்கச் சொன்னார் என்றார். திடுக்கிட்டவனாக, என்ன நடந்தது? என்று கேட்டேன்.

நேற்றையதினம், இந்தியக் கடல் எல்லையில் இருந்து 400 நாட்டிகல் மைல் களுக்கு அப்பால், பன்னாட்டுக் கடல் பரப்பில் ,எங்களுக்குப் பொருள்கள் கொண்டு வந்த கப்பலை, இந்தியக் கடற்படைக் கப்பல் வழிமறித்து இருக்கி றது. நெடுந்தொலைவுக்கு விரட்டி இருக்கிறது.புலிகளுக்கு உலகப் புகழையும் வெற்றியையும் பெற்றுத் தந்த ஆனை இறவு யுத்தத்துக்கு சில நாள்களுக்கு
முன்பு. பாலசிங்கம் சொல்லுகிறார்: பலத்த யுத்தத்தை எதிர்கொண்டு இருக் கிறோம்.இந்தக் கட்டத்தில், எங்களுக்குப் பெருத்த இடையூறைச் செய்து, சிங்க ளவனுக்கு உதவுவதா? என்று தம்பி உங்களைக் கேட்கச் சொன்னார். நீங்கள் உடனடியாக, மேற்கொண்டு இதுபோல் நடக்க விடாமல் தடுக்க, ஆவன செய் யுங்கள் என்றார். அடுத்த ஒரு மணி நேரத்தில், தில்லி கிருஷ்ண மேனன் தெரு மூன்றாம் எண் வீட்டில், என் உயிர் நண்பர், இராணுவ அமைச்சர் இன்று பேசும் சக்தி இழந்து நோய்ப்படுக்கையில் வாடுகிறாரே, ஜார்ஜ் பெர்ணான்டஸ் அவர் களைச் சந்தித்தேன்.

இந்தியக் கப்பற்படைக் கப்பல்,புலிகளின் கப்பலை, பன்னாட்டுக் கடல் பரப்பில் மறித்து உள்ளது, மிரட்டி விரட்டி உள்ளது. இது அடுக்குமா? என்று கேட்டேன். ஒருக்காலும் அப்படி நடந்து இருக்காது. இந்தியக் கடற்படை அதை ஒருபோ தும் செய்யாது என்றார்.புலிகளின் தலைவர் பிரபாகரன், பாலசிங்கம் மூலம்
எனக்குத் தந்த தகவல் இது. நேற்று நடந்து இருக்கிறது.அதிர்ச்சி தருகிறது. இது தொடரக் கூடாது என்றேன்.

நான் உடனே விசாரிக்கிறேன்; அப்படி நடைபெற்று இருந்தால், சம்பந்தப்பட்ட வர்களைக் கண்டிப்பேன்; எச்சரிப்பேன்; இதுபோல் இனி நடக்காது என்றார்.
பிரதமரிடமும் இதுபற்றி நான் சொல்லலாமா? என்று கேட்டேன். அவசியம் சொல்லுங்கள் என்றார். மறுநாள், காலை 11.30 மணி அளவில், நாடாளுமன்றக்
கட்டடத்தில் அமைந்து உள்ள, பிரதமர் அலுவலகத்தில், வாஜ்பாய் அவர் களைச் சந்தித்தேன். ஈழத்தமிழர்களை அழிக்க, சிங்கள அரசு, பாகிஸ்தானிடம் இருந்தும், சீனாவிடம் இருந்தும் ஆயுதங்களை வாங்கிக் குவிக்கிறது என்று, நீங்களே சில நாள்களுக்கு முன் என்னிடம் சொன்னீர்கள்.

போரில் புலிகளை அழிக்க, சிங்களவனுக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுக் கின்றன இந்த நாடுகள்.புலிகளுக்கு இந்தியா ஆயுதம் கொடுக்குமா? உங்களால்
முடியாது.போரை மேற்கொள்ள அவர்களுக்கு,மருந்துகள் வேண்டும், பொருள் கள் வேண்டும், ஆயுதங்களும் வேண்டும். அவற்றை, கப்பல்கள் வழியாகத் தான் அவர்கள் கொண்டு போக முடியும்.அந்தக் கப்பலில் ஆயுதங்களே கொண் டு போகலாம். பன்னாட்டுக் கடலில் செல்லுகின்ற அவர்களது கப்பலை, இந்தி யக் கடற்படைத் தடுக்க முனைந்தது நியாயமா?அவர்களைக் காத்துக் கொள்ள, அதுதானே வழி? அதையும் தடுத்து, அவர்கள் குரல் வளையை நெரிக்கப் பார்க் கிறீர்களா? Do you want to strangulate them? ...நேற்றைக்கு நடந்து இருக்கிறது; இனி இப்படி நடக்காமல் நீங்கள் தடுக்க வேண்டும் என்றேன்.

என்னை மேலும் கீழும் ஒருமுறை பார்த்துவிட்டு, ‘ஜார்ஜ் பெர்ணான்டசிடம் இதுபற்றிச் சொல்லி விட்டீர்களா?’ என்றார். நேற்று இரவிலேயே சொல்லிவிட் டேன்.உங்களுக்குத் தெரிவிக்கப் போகிறேன் என்பதையும் சொல்லி விட்டேன் என்றேன். தலையை அசைத்தார்.அதன் ஆயிரம் அர்த்தங்கள் எனக்குப் புரியும். கவலைப் படாதீர்கள் என்றார். அதன்பின், புலிகளுக்குச் சென்ற எந்தக் கப்பலை யும் இந்தியக் கடற்படை நெருங்கவே இல்லை. இந்தப் பாதுகாப்பை ஏற்படுத் திக் கொடுத்தவன் வைகோ.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் நாம் இருந்தபோது, 99 ஆம் ஆண்டில், ஈழத்தமிழர்கள் மீது சிங்களவரின் இராணுவத் தாக்குதல் கடுமையாக நடந்த போது, அதைத் தடுப்பதற்கு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட, பிரதமரி டம் கூறி ஏற்பாடு செய்ய, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப் பாளரான ஜார்ஜ் பெர்னாண்டசிடம் சொன்னேன். அதன்பேரில், பிரதமர் கூட்டத் தைக் கூட்டினார். அந்தக் கூட்டத்தில், சோனியா காந்தி, மன்மோகன்சிங், பிரி யரஞ்சன் தாஸ் முன்ஷி, முலாயம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ், நிதீஷ் குமார், சோம்நாத் சட்டர்ஜி உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.அந்தக் கூட்டத்தில், 18 நிமிடங்கள் நான் பேசி இருக்கிறேன்.

சிங்கள அரசுக்கு எந்த உதவியும் செய்வது இல்லை என்று,அக்கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு எடுக்கப் பட்டது. இலங்கை அரசு பணமே கொடுத்தாலும், இந் தியா எந்த ஆயுதத்தையும் விற்காது என்று பிரதமர் வாஜ்பாய் அறிவிக்கவும் செய்தார்.

இது அன்றைய நிலைமை. ஆனால், 2004 க்குப் பிறகு, தலைகீழாக மாறியது.

வெளிப்படையாக ஒப்பந்தம் செய்யாமலேயே, சிங்கள அரசுக்கு, காங்கிரஸ் அரசு, அனைத்து உதவிகளும் செய்தது; ஆயுதங்கள் தந்தது; வான்வழித் தாக்கு தலுக்கு ரடார்கள் கொடுத்தது; பலாலி விமான தளத்தைப் புதுப்பித்துக் கொடுத் தது. முப்படைத்தளபதிகளை அனுப்பி வைத்து, யுத்தத்தை இயக்கியது. உலகம்
தடைசெய்த குண்டுகளையும் கொடுத்தது.

2004, 2005, 2006 ஆம் ஆண்டுகளில், சிங்களவனுக்கு இந்திய அரசு இராணுவ உத விகள் செய்யக்கூடாது என்று, அதைத்தடுப்பதற்குக் கடுமையாகப் போராடியது
ம.தி.மு.க. என்பதும், அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் வேறு எவரும் இது குறித்துக் கருத்துத்தெரிவித்தது இல்லை;அறிக்கைகள் வெளியிட்டது இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை ஆகும். எவர் வேண்டு மானாலும் ஏடு களைத் திருப்பிப் பார்த்துக் கொள்ளலாம்.

காங்கிரசைத் தூக்கி எறிவோம்

மன்னிக்க முடியாத மாபாதகம் செய்த காங்கிரஸ் அரசை,வரலாற்றின் குப் பைத் தொட்டியில் தூக்கி எறிய வேண்டும்; இது மக்கள் விரோத அரசு. மக்கள்
சொத்துகளை பகல் கொள்ளை அடித்த ஊழல் அரசு.

வெறும் 64 கோடி போஃபர்ஸ் ஊழலால், ராஜீவ் காந்தி அரசு துhக்கி எறியப் பட் டது. அதை விட ஆயிரம் மடங்கு ஊழல், இன்றைய காங்கிரஸ் அரசில் நடக் கிறது.கடல்தான் அலையலையாக எழும் என்பார்கள். ஆனால்,இந்தக் காங் கிரஸ் அரசில், ஊழல் அலையலையாக எழுகிறது; அலைக்கற்றை ஊழல், ஸ்பெக்ட்ரம் ஜி ஊழல்; தி.மு.க.அமைச்சரையும், கலைஞரின் திருமகளாரை யும், திகார் ஜெயிலுக்கே அனுப்பி வைத்த ஊழல். 50 கோடி 60 கோடி அல்ல. தொகையைக்கேட்டாலே மயக்கம் வந்து விடும்.1 இலட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல்.இதற்குப் பிறகும் வெட்கம், மானம், சூடு சொரணை இல்லாமல் கொட் டம் அடிக்கிறார்கள்.

உலகத்தில் இதுவரை எங்கும், விளையாட்டுப் போட்டிகளை நடத்தியதில் ஊழல் கிடையாது.ஆனால்,இந்த காங்கிரஸ் அரசில்தான் காமன்வெல்த்விளை யாட்டுப் போட்டிகளில் 1000 கோடி ஊழல். ஆதர்ஷ் வீடு கட்டும் திட்டத்திலும் 1000 கோடி ஊழல்; நிலக்கரிச் சுரங்க அனுமதி வழங்குவதில், 1 இலட்சத்து 86 ஆயிரம் கோடி ஊழல். இது தொடர்பான 257 முக்கியக் கோப்புகள் அரசின் பாது காப்பில் இருந்து களவு போய்விட்டதாம். காணாமல் போய்விட்டதாம்.

ரயில்வே அமைச்சராக இருந்த பவன்குமார் பன்சல் மருமகன் விஜய் சிங்லா, 90 இலட்சம் இலஞ்சம் வாங்கினார் என்று, மே 3 இல் கைது செய்யப்பட்டார். மே
10 இல் பன்சால் பதவி இழந்தாரே? 

இந்த சர்க்காரையே தன் கால் விரலால் ஆட்டி வைத்துக் கொண்டு இருக்கின்ற சோனியா காந்தியின் மருமகன் இராபர்ட் வதேரா, அடுக்குமாடி வீடுகளைக்
கட்டுவதற்கு, அரசாங்க நிலத்தையே அபகரித்ததில், 800 கோடி ரூபாய் ஊழல் செய்தாரே, அவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?

நாடாளும் எஜமானியின் மருமகன் அல்லவா? அவன் மீது இந்த சர்க்காரின் சட்டம் பாயாது.

ஆனால், மக்களின் சாட்டை பாயும். அதுதான் ஓட்டு.வருகின்ற நாடாளுமன் றத் தேர்தலில் போடப் போகும் ஓட்டு.

சீரழியும் இந்தியப் பணம்

சுதந்திர இந்தியாவின் சரித்திரத்திலேயே இல்லாத பொருளாதார நெருக்கடி இன்று ஏற்பட்டு உள்ளது.இந்திய ரூபாயின் மதிப்பு தரை மட்டமாகி விட்டது,
காங்கிரஸ் கட்சியைப் போலவே.

நூறு ரூபாய் தாளுக்கும் மதிப்பு இல்லை; போகிற போக்கில் ஆயிரம் ரூபாய் தாளுக்கும் மதிப்பு இல்லை. ஜிம்பாவே நாட்டில் நடக்கின்ற விபரீதத்தைப் போல, இலட்ச ரூபாய் நோட்டு அச்சடிப்பார்கள். சாக்கு மூட்டையில் கரன்சி நோட்டுக் கட்டுகளைத் திணித்துக் கொண்டு போய்த்தான் காய்கறி வாங்க முடியும்.

ஒரு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு, ஒரு வேன் நிறைய கரன்சி நோட்டுக் கட்டுகளை நிரப்பி எடுத்துக் கொண்டு போகிறார்களாம். ஒரு கூடைப் பணத் தைக் கொடுத்து, இரண்டு கோழி முட்டைகளை வாங்கு கிறார்கள். சாலை ஓரங்களில் கரன்சி நோட்டுகளைக் கட்டுக் கட்டாகக் குவித்து வைத்து இருக்
கின்றார்கள்.சோப்பு, சீப்பு கண்ணாடி கொடுத்து வாங்கலாம்.இரண்டு மூட்டைக் கரன்சியைக் கொடுத்து, ஒரு சீப்பு வாழைப்பழம் வாங்குகிறான்.

இந்த நிலைமை நீடித்தால், ஆடம் ஸ்மித், கீன்ஸ் பொருளாதாரம், சந்தைப் பொருளாதாரம், பிரவ்தான் பொருளாதாரம் எல்லாம் வருவதற்கு முன்பு, பண் டமாற்றுதான் இருந்தது.

காய்கறியைக் கொடுத்து பதிலுக்கு அரிசி வாங்கு வான்;ஆடு மாடுகளைக் கொடுத்து, ஜவுளிக்கடையில் துணி வாங்குவான்.

இந்த அபாய நிலைமைக்கு யார் காரணம்? மன்மோகன்சிங் தான் காரணம்.காங் கிரசின் பொருளாதாரக் கொள்கை காரணம். பன்னாட்டுக் கம்பெனிகளின் படையெடுப்பு காரணம். கோடிக் கணக்கான சில்லறை வணிகர்களின் வாழ் வைச் சீரழித்தது காரணம்.

இந்த அரசை இனியும் விட்டு வைக்கக் கூடாது.நாட்டைக் காப்பாற்ற ஒரே வழி. காங்கிரஸ் ஆட்சியை அதல பாதாளத்துக்குள் வீசி எறிவதுதான். அந்த வேலை யைத்தான் நாம் செய்யப் போகிறோம். இந்த நிலைமை இந்தியாவுக்கும் வந்து விடக் கூடாது.இப்பொழுதே வந்து விட்டது, கரன்சி சுனாமி. இந்தச் சுனாமியில் காங்கிரஸ் காணாமல் போய்விடும்.

தமிழகத்துக்கு இழைத்த துரோகம்

பக்ரா நங்கல் அணைத் திட்டக் காலத்தில் இருந்தே, டெல்லி தர்பார் தமிழ்நாட் டுக்கு வஞ்சகம் செய்து உள்ளது. ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில், தமிழ் நாட்டுக்குக் காங்கிரஸ் சர்க்கார் செய்த துரோகத்தைப் போல, வஞ்சகத்தைப் போல, இந்தியாவில் எந்த மாநிலத்துக்கும் கேடு இழைக்கப் படவில்லை.

இதோ, பக்கத்தில்தான் பரந்து கிடக்கின்றன முல்லைப் பெரியாறு பாசன நிலங் கள். இலண்டனில் பிறந்த பென்னி குயிக் கட்டித் தந்த அணையால் வாழ்ந்து வரும் தென்பாண்டி மண்டலம். அந்த அணையை உடைக்க, கேரளம் கச்சை கட்டுகிறது. 142 அடி உயரத்துக்கும் தண்ணீரைத் தேக்கலாம் என்று, உச்சநீதி மன்றம் தீர்ப்புத் தந்த 17 ஆம் நாள்,முல்லைப்பெரியாறு அணையையும் உடைப் போம் என்று, கேரளம் சட்டம் போடுகிறது. நீதி கிடைக்குமா நமக்கு? உச்சநீதி மன்றத்தில் வழக்கு இருக்கிறது. ஆனால், இந்த அக்கிரமத்தை மத்திய அரசு
தடுத்ததா? கண்டித்ததா? சட்டத்தைச் செல்லாது என்று சொல்ல முனைந்ததா?

அதற்கு மாறாக, குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல்,குழியும் பறித்த கதை யாக, கேரளத்தின் சட்டத்தையே,அணை பாதுகாப்பு மசோதா என்ற பெயரில், அனைத்து இந்தியாவுக்குமான மத்திய அரசின் சட்டமாக ஆக்கிட காங்கிரஸ் அரசு முடிவு செய்தது.

2011டிசம்பர் 5 ஆம் தேதி, பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது வீட்டில் சந்தித் துச் சொன்னேன். இதை நீங்கள் சட்டம் ஆக்கினால், ஒவ்வொரு மாநிலமும் தங்கள் எல்லைக்கு உள்ளே ஓடுகின்ற தண்ணீர் குறித்தும், அங்கே அமைந்து உள்ள அணைக்கட்டுகள் குறித்தும் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ள லாம். முழு அதிகாரங்களும் அவர்களுக்கே.

அப்படியானால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாங்கள் அனுபவித்து வரு கின்ற பாசன உரிமைக்கு, கேரளம், ஆந்திரம், கர்நாடக அரசுகள் வேட்டு வைக் கும்.பன்னாட்டுச் சட்டங்கள் புதைகுழிக்குப் போகும்.

நான் எச்சரிக்கிறேன்; இதை நீங்கள் சட்டம் ஆக்கினால், நாங்கள் ஒரு முடிவு எடுப்போம். மாநிலத்துக்கு உள்ளே உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் அனைத் தும், மாநிலத்துக்குச் சொந்தம் என்று அறிவிக்க நேரிடும். இதுதான் உக்ரேனில் நடந்தது; உஸ்பெகிஸ்தானில் நடந்தது; கஜகஸ்தானில் நடந்தது; சோவியத் ரஷ்யா, 15 நாடுகளாக உடைந்து சிதறியது.

அதே நிலைமை, இந்தியாவிலும் ஏற்படும். மாநிலங்கள் தனித்தனி நாடுகள் ஆகும். அக்கிரமத்தை விதைக்காதீர்கள்;விபரீதத்தை அறுக்காதீர்கள் என்றேன். முகத்துக்கு நேராகப் பிரதமரிடம் சொன்னேன்.

காவிரிப் பிரச்சினையில் துரோ கம்; பாலாற்றுப் பிரச்சினையில் துரோகம்; இது தான் இந்தியா என்றால், எதற் குத் தேவை இந்தியா? ஏன் வேண்டும் ஒருமைப் பாடு? அந்த முடிவுக்குப் போவ தற்கு முன்பு, ஜனநாயக வழியில் தீர்வு காண் போம். வஞ்சகம் செய்யும் காங்கிரசைத் தூக்கி எறிவோம்.தமிழகத்தின் உரிமை களைக் காக்கும் நிலையை, தில்லியில் ஏற்படுத்துவோம்.

பாவம் கருணாநிதி

புறநானூற்றை மூட வந்த புழுதிக்காற்றே, கலிங்கத்துப் பரணியை மறைக்க வந்த காரிருளே, ஓங்காரக் கூச்சலிட்டு ஓடும் ஓடும் என்று எழுதிய கலைஞர்
எங்கே?

மானம் என் மகன் கேட்ட தாலாட்டு
மரணம் அவன் ஆடிய விளையாட்டு

என்று உணர்ச்சி வரிகளைத் தீட்டிய கலைஞர் கருணாநிதி எங்கே?

சோனியா காந்திதான் மணிமேகலை என்று இப்போது கூறுகின்ற கலைஞர் எங்கே? இவரா இப்படிப் பேசுவது? 

பெரியாரின் சுட்டு விரலைப் பற்றியவரா? அண்ணாவின் இதயம் இந்த மகானு பாவருக்கா இரவலானது? சரித்திரம் கைகொட்டிச் சிரிக்கும்.

வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண்டமிழ் மொழிக்கு, சீத்தலைச் சாத்தனார் பூட்டிய பொன் அணி அன்றோ மணிமேகலைக் காப்பியம்? சிலப்ப திகாரம் பெற்ற குலக் கொடி அன்றோ மணிமேகலை? பச்சிளம் பருவத்திலே யே அறநெறி ஏற்று, இகத்தின் சுகங்கள் எல்லாம் துறந்து, மணிமேகலா தெய் வத்தின் மறுவடிவ மாகவே, கையில் அட்சய பாத்திரம் ஏந்திய மாதவியின்
மகள்,

ஆற்றுநர்க்கு அளிப்போர் அறம் விலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

என்று, பசித்த வயிற்றுக்கெல்லாம், அமுதசுரபியால் அன்னம் வழங்கி, உலகத் தின் எந்தக் காவியத்திலும் படைக்கப்படாத, ஓங்கு புகழ் மணிமேகலையா சோனியா காந்தி? அதுவும் ஆயிரம் மணிமேகலைகளாம்.

இப்படிச் சொன்னதற்கு மன்னிப்பே கிடையாது. தமிழ் இனத்துக்குச் செய்த துரோகம் போதாதா? இப்படியெல்லாம் தொடர வேண்டுமா? பசி போக்கியவரா சோனியா காந்தி? பட்டினிக்குச் சோறு போட்டவரா சோனியா காந்தி? எத்தனை ஆயிரம் தமிழர்கள் பசியால் செத்தனர்? பட்டினியால் துடிதுடித்துச் செத்தனர்? ஐ.நா.வின் பான்-கி-மூன் நியமித்த, மார்சுகி தாருஸ்மன் அறிக்கையில் என்ன
சொன்னார்?

முல்லைத் தீவில், கிளிநொச்சியில், புதுக்குடியிருப்பில், புது மாத்தளனில் பல் லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். பட்டினி போட்டே கொன்ற து சிங்கள அரசு. வயது முதிர்ந்தவர்கள், ஒருவேளை உணவு பல நாள் கிடைக் காமல், தொடர்ந்து நடக்க முடியாமல், உறவுகள் கண் எதிரிலேயே மண்ணில் விழுந்து செத்தார்கள்?

அந்தக் காடுகளில் விளைந்த புல் பூண்டுகளைப் பிடுங்கிச் சாப்பிட்ட பலர், விஷச் செடியால் செத்தார்கள்.பச்சிளம் குழந்தைகளுக்குப் பால் பவுடர் வாங்க,
அட்டைகளோடு வரிசையில் நின்ற தாய்மார்கள், மண்ணில் செத்துக் கிடந்த போது, ஒரு கையில் செத்துப் போன குழந்தை,மறு கையில் பால் பவுடர் அட்டை.

தண்ணீர் தண்ணீர் என்று தாகத்துக்குத் தவித்தார்கள். தண்ணீர் கிடைக்க வில் லை. மூன்று நாள்களுக்குப் பிறகு ஒரு படகைத் தரையில் கொண்டு வந்து போட்டு, அதில் தண்ணீரை நிரப்பினானாம். ஒரு வாய்த் தண்ணீர் குடிப்பதற்கு முண்டியடித்து நெருங்கியதிலேயே மூச்சுத் திணறிப் பலர் செத்துப் போனார் களாம். இத்தனை பேரின் சாவுக்கும், சோனியா காந்திதானே காரணம்?

பலாலி விமானதளத்தைப் பழுது பார்க்க உத்தரவிட்டது சோனியா காந்திதா னே? அங்கிருந்து சீறிப் பாய்ந்த கீஃபர் ஜெட் விமானங்கள்தானே, செஞ்சோலை யில் 61 சிறுமிகளைத் துடிக்கத்துடிக்கக் குண்டுவீசிக் கொன்றது.

பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் பட்டினிச் சாவுக்குக் காரணமானவர் சோனியா காந்தி. 

ஜூடாசுக்கா இயேசு விருது?
கோட்சேக்கா மகாத்மா பட்டம்?
சோனியா காந்தியா மணிமேகலை?

தொடரும் ........

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

No comments:

Post a Comment