Sunday, October 6, 2013

மறுமலர்ச்சி பயணம் தூத்துக்குடி மாவட்டம் -2–வது கட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 2–வது கட்டமாக #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ மறுமலர்ச்சி பயணத்தை நாளை (07.10.13) தொடங்குகிறார்.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் எஸ்.ஜோயல் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் விவ சாயிகளின் வாழ்வாதார உரிமைகளுக்காகவும், அண்ணாவின் கனவை நன வாக்குவதற்காகவும், ஸ்டெர்லைட் ஆலையை அகற்றவும், கூடங்குளம் அணு மின்நிலையத்தை மூடவும், தமிழக மீனவர்களின் நலனுக்காகவும், மதுவை அடியோடு ஒழிப்பதற்காகவும் மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சி பயணத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மேற்கொண்டு உள்ளார்.

அதன்படி 2–வது கட்டமாக நாளை (திங்கட்கிழமை) முதல் 9–ந் தேதி வரை 3 நாட்கள் மறுமலர்ச்சி பிரசார பயணம் மேற்கொள்கிறார். 

நாளை திங்கட்கிழமை (07.10.13) மாலை 3 மணிக்கு விளாத்திகுளம் ஒன்றியம் குளத்தூரில் பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து வைப்பார், வேலாயுத புரம், மேல்மாந்தை, பெரியசாமிபுரம், வேம்பார், சூரங்குடி, ஊசிமேசியாபுரமம், அரியநாயகிபுரம், விளாத்திகுளம், சித்தவநாயக்கன்பட்டி, சிங்கிலிபட்டி, வேடு லிப்பட்டி, கழுகாசலபுரம், படர்ந்தபுளியில் பிரசாரத்தை முடிக்கிறார்.

நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை (08.10.13) மாலை 3 மணிக்கு புதூர் ஒன்றி யம் கருப்பூரில் பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து தோள்மாலைப்பட்டி, வடக்கு முத்துலாபுரம், தெற்கு முத்துலாபுரம், கோட்டூர், வடமலாபுரம், அச்சன் குளம், வேடப்பட்டி, புதுப்பட்டி, நாகலாபுரம், கவுண்டன்பட்டி, சங்கரலிங்கபுரம், சின்னவநாயக்கன்பட்டி, புதூர், சிவலார்பட்டி ஆகிய ஊர்களின் வழியாக பிரசா ரம் செய்து வெம்பூரில் பிரசாரத்தை முடிக்கிறார்.

வருகிற 9–ந்தேதி மாலை 3 மணிக்கு கோவில்பட்டி மேற்கு ஒன்றியம் அன்னை தெரசாநகரில் பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து மந்திதோப்பு, ஊத்துப் பட்டி, இடைச்செவல், வில்லிச்சேரி, சத்திரப்பட்டி, நாலாட்டின்புதூர், முடுக்கு மீண்டான்பட்டி, தோணுகால், படர்ந்தபுளி, ஆலம்பட்டி, சாலைப்புதூர், மணி யாச்சி, இந்திராநகர், சீனிவாசநகரில் பிரசாரத்தை முடிக்கிறார்.

எனவே மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், செயல்வீரர் கள் சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மறுமலர்ச்சி பயணத் தை வெற்றிகரமாக நடத்தி தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ் வாறு மாவட்ட செயலாளர் எஸ்.ஜோயல் தெரிவித்து உள்ளார்.

1 comment:

  1. மாற்றம் தேவை அதற்கு ஒரே ஒரு வழி மதிமுக வெற்றி பெற வேண்டும் நாம் அனைவரும் நல்ல வேலை செய்யணும் மதிமுகக்கு.

    நன்றி
    செல்வம்
    மஸ்கட்(கோவில்பட்டி)

    ReplyDelete