Tuesday, November 19, 2013

வைகோ மீண்டும் பிறந்திருக்கிற மீட்பர் அவர் வழி மீனவ சமுதாயம் நடக்கும்!

பேரறிஞர் அண்ணா அவர்களின் 105 ஆவது பிறந்தநாளையொட்டி, செப்டம்பர் 15 அன்று விருதுநகரில் நடைபெற்ற #மதிமுக  மாநாட்டில்,“மீனவர் கொடுந்து யர்” என்ற கண்காட்சியைத் திறந்து வைத்து அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்
பேராசிரியை ஃபாத்திமா பாபு ஆற்றிய உரை...

மாநாட்டுக்கு தலைமை ஏற்றிருக்கிற அருமைச் சகோதரர் இமயம் ஜெபராஜ்,
கழகத்தின் ஒப்பற்றத் தலைவர் பெருமரியாதைக்குரிய அண்ணன் வைகோ உள்ளிட்ட அனைவருக்கும் எனது வணக்கங்கள்.மாநாட்டு வாழ்த்துகளும் கூட.

இன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு சாதாரண அரசியல் கட்சி என்பதைத் தாண்டி, ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாகவே, மக்கள் பார்க் கின்றார்கள். பாராட்டுகின்றார்கள் என்றால், அதற்கு காரணம், எங்கெல்லாம் ஏழை மக்களின் அழுகுரல் கேட்கின்றதோ, எங்கெல்லாம் உழைக்கும் வர்க்கத் தின் உரிமைப் போராட்டங்கள் நடக்கின்றதோ,அங்கெல்லாம் முதல் ஆளாகக்
களமிறங்கி,அவர்களுக்காக உரிமை கேட்கும் குரலாய்,வலிமை சேர்க்கும் சக் தியாய் அருமைத் தலைவர் வைகோ அவர்கள் செயல்பட்டு வருகின்றார் கள்.

அந்த வரிசையிலே அவர்கள் மீனவர்கள் மீது அன்பும் ஆதரவும் தரும் ஒரு மூத்த அண்ணனாய், ஒரு சகோதரராய், எங்களுக்கு இருக்கின்றார். விவசாயக்
குடும்பத்தில் பிறந்தவரான அவர் முன்னின்று இந்த மாபெரும் இயக்கத்தைக் கட்டி எழுப்பி, இன்றைக்கு சரியான பாதையிலே நடத்திச் செல்கிறார் என்று எனக்கு முன்னால் பேசிய சகோதரர் சொன்னார். அவர் விவசாயக் குடும்பத் தில் பிறந்திருந்தாலும்,எங்களின் மீனவக்குடும்பத்தின் மூத்த சகோதரர் அவர் தான் என்பதையும் இங்கே நான் பதிவு செய்துகொள்ள விரும்புகின்றேன்.

இந்த வேளையிலே மீனவ சமுதாயத்தின் நெஞ்சார்ந்த நன்றியினை அவருக்கு
இந்த மேடையிலே நான் சமர்ப்பிக்க கடமைப்பட்டுள்ளேன். சமர்பித்துக் கொள் கின்றேன்.இன்றைக்கு நம் நாட்டிலே நடந்து கொண்டிருப்பது ஜனநாயக ஆட்சி அல்ல.பணநாயகத்தின் ஆட்சி.பன்னாட்டு நிறுவனங்களின் ஆட்சி.பெரு நிறுவ னங்களின் ஆட்சி. அவர்களுக்காக உழைக்கும் வர்க்கத்தையும், ஏழை மக்களை யும் காவுகேட்கிற ஆட்சி.மக்கள் இந்த கொடுங்கோல் ஆட்சியை சகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்தகுடிமக்கள்
நாங்கள் என்று நாம் பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்திய
அரசைப் பொருத்தவரை நாம் இரண்டாம் தர மூன்றாம்தர குடிமக்களே.அதி லும் குறிப்பாக தமிழக மீனவர்களை வாழத் தேவை இல்லாத மக்கள் என்ற
பட்டியலிலே முதலிடத்தில் வைத்து இருக்கின்றார்கள். பல்வேறு வளர்ச்சித்
திட்டங்கள் என்ற பெயரிலே மீனவ சமுதாயத்தின் மீதும், விவசாய சமுதாயத் தின் மீதும், தொழிலாளர்கள் மீதும், உழைக்கும் வர்க்கத்தின் மீதும் இன்றைக்கு பல்வேறு சுமைகளைச் சுமத்தி ஒட்டுமொத்தமாக அவர்களை அழிக்கும் எண் ணத்திலே திட்டங்களைப் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அதனால்தான் இந்த சிங்களக் காடையர்கள் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் கொடூர
கொலைவெறித் தாக்குதலைக் கண்டும் காணாமல் இருக்கின்ற ஒரு நிலை
இருக்கின்றது.

ஏறத்தாழ 600 மீனவர்கள் சிங்கள கடற்படையால் சுட்டுக்கொல்லப் பட்டார்கள். இதனால் 600 குடும்பங்கள் தத்தளிக்கின்றன.இந்த குடும்பங்களின் குழந்தைகள் கல்விக்கு வழி தெரியாமல் உழவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு ஏறக்குறைய அனாதைகளாக திரிந்து கொண்டு இருக்கிறார்கள். இது மட்டுமல்ல ஆயிரக்க ணக்கானோர் இன்று ஊனப்படுத்தப்பட்டு அவர்களின் குடும்பங்களும் இன் றைக்கு வீதியிலே நிற்கின்றன. ஆயிரக்கணக்கானோர் சிறையிலே வாடிக் கொண்டு இருக்கிறார்கள். சிங்களக் காடையர் களின் வெறித்தனத்தால் மீனவ சமுதாய மக்கள் பலகோடி நஷ்டத்திற்கு மத்தியிலே வாடிக்கொண்டு இருக் கிறார்கள்.


வக்கரத்தின் உச்சகட்ட வக்கரம் என்றால் என்னவென்று, கொடூரத்தில் அதிக பட்ச கொடூரம் என்றால் என்னவென்று,உலகத்துக்கு தங்களுடைய செயல்கள்
மூலம் செயல்முறை விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார்கள். சுட்டுக் கொல் வதோடு மட்டுமல்லாமல் மீனவர்களைப் பிடித்தவுடன் நிர்வாணப் படுத்தி, சிறுநீரைக் குடிக்க வைக்கின்றார்கள்.ஐஸ் கட்டியிலே படுக்க வைக் கின்றார்கள். பல்வேறு விதமான சொல்ல முடியாத அவலங்களை அவர்கள் மீது நிறைவேற்றுகின்றார்கள்.

ஜெயக்குமார் என்பவரது கழுத்திலே சுருக்குப்போட்டு, கையை படகில் சுற்றி
சுற்றி ஓட்டி, அவரை கொன்றார்கள்.இப்படியாக அவர்கள் இழைக்கின்ற துரோ கங்களை தமிழக மீனவர்கள் மீது நடத்துகின்ற கொடூர வெறியாட்டங் களை அடுக்கிக் கொண்டே போகலாம்.ஆனால், இதையெல்லாம் விட மிகப்பெரிய கொடுமை நமது நாடு, நமது அரசு தன்னுடைய சொந்த மக்களுக்குச்செய்கின்ற அந்தத் துரோகம்தான்.முன்னாள் பிரதமர் அவர்கள் சொல்கின்றார், பாம்பனா அது எங்கே இருக்கின்றது என்று! எப்படி தெரியும் உங்களுக்கு. தமிழ்நாட்டை
இந்தியாவின் ஒரு பகுதியாக நினைத்தால்தானே அது தெரியும்.இதைவிட கச் சத்தீவு பற்றி பேசும் பொழுது, அதை வெறும் பாறை என்று குறிப்பிடுகின்றார்.

பொதுவுடைமை பேசும் ஒரு கட்சியின் தலைவர் கூட, ஆமாம் மொட்டைப்
பாறையைக் கொடுத்து ஒரு நல்லதொரு நட்பை பெற்றுக் கொண்டிருக்கிறார்
என்று அவரைப் பாராட்டி இருக்கின்றார்.கச்சத்தீவு ஒரு மொட்டைப் பாறை யாம்.இவர்களுக்கெல்லாம் இந்த நாட்டை ஆள்வதற்கு என்ன தகுதி இருக்கின் றது.கச்சத்தீவை மொட்டைப் பாறை என்று சொல்கின்றவர்களுக்கு, மீனவர் களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்கும் என்பதைத் தவிர பவளப்பாறைகள்,
மருத்துவச்செடிகள் பல்வேறு இருகின்றன என்பதையும் விடுத்து எப்பேற்பட்ட ஒரு பாதுகாப்புக் கவசமாக இந்த கச்சத்தீவு இருந்திருக்கும் நமக்கு.

அன்றைக்கு அமெரிக்காகாரன், இன்றைக்கு சீனாக்காரன், பாகிஸ்தான் காரன் எல்லாம் அந்தக் கச்சத்தீவிலே என்னென்ன செய்ய நினைக்கின்றானோ அத்த னையும் நாம் அங்கு செய்திருக்க முடியும். கச்சத்தீவு என்பது ஒரு கற்பகத்தீவு. அந்த தீவிலே நீர்மூழ்கிக் கப்பல் களுக்கான பயிற்சியை நாம் நடத்தி இருக்க லாம். கடற்படைத் தளத்தை நிறுவியிருக்கலாம். ரேடார் நிலையத்தை நிறுவி யிருக்கலாம். போர் விமானங் களின் இறங்குதளத்தை நிறுவி இருக்கலாம்.

இப்படி எத்தனையோ பாதுகாப்பு அம்சங்களை அங்கு நிறுவக்கூடிய வாய்ப்பு இருந்த ஒரு இடத்தை மொட்டைப் பாறை என்று சொல்கின்ற அளவுக்குச் சூனி யங்களாக இந்த அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள்.அப்பேற்பட்ட கச்சத்தீ வை தூக்கிப் பக்கத்து நாடான இந்த இலங்கைக்கு தாரை வார்த்தது மட்டுமல் லாமல், எவ்வளவோ பெரிய வரலாற்றுப் பிழை செய்துவிட்டோம் என்றுகூட உணராமல் இருக்கின்றார்களே, இது நாட்டிற்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம் என்பது நிச்சயமாக பதிவாகும்.

கச்சத்தீவு மோதிலால் நேரு சேர்த்து வைத்த சொத்தா? ஜவர்ஹர்லால் நேரு
சம்பாதித்த சொத்தா? அது எங்கள் சொத்து. இராமநாதபுரம் சமஸ் தானத்தைச் சார்ந்தது. தமிழகத்தைச் சார்ந்தது.உங்களின் நட்பை நிரூபிக்க நரபலி கொடுக்க நாங்கள்தானா கிடைத்தோம் உங்களுக்கு. அன்றைக்கு இழைக்கப் பட்ட துரோ கத்திற்கு இன்றைக்கு வரை அரசியல் தலைவர்கள் விசுவாசமாகத் தான் இருக் கின்றார்கள்.

சமீபத்தில் மக்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்வி, லடாக் பகுதியிலே 640
சதுர கி.மீ. சீனா கைப்பற்றி ஊடுருவி உள்ளது என்ற கேள்வி எழும்பொழுது,
நம்முடைய பாதுகாப்பு அமைச்சர் சொல்கின்றார், No question of seeding any part of the country இதைக் கேட்கும் பொழுது எங்களுக்கு அச்சமாகவும், கவலையாகவும்
இருக்கின்றது. இதே பதிலைத்தான் கச்சத்தீவுக்கும் சொல்கின்றீர்கள். இதே
பதிலை சீனா ஊடுருவலுக்கும் சொல்கின்றீர்கள் என்றால், இப்படி நாட்டைச் சுற்றி எங்கு எங்கெல்லாம் இந்தியாவின் பகுதிகளை விற்று இருக்கின்றீர்கள். என்ன செய்ய நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்.

நாங்கள் மீனவர்கள் பாறாங்கல்லைச் சுமந்து நிற்கின்றோம். சிறிய பெரிய
பாறாங்கல்லை கழுத்திலே கட்டிவைத்து இருக்கின்றார்கள். அத்தனையும் தாங்கிக் கொண்டு மிதந்து கொண்டு இருக்கின்றோம். மேலே வந்து கொண்டு
இருக்கின்றோம்.இந்த தைரியத்தையும்,வீரத்தையும்,வேகத்தையும் எங்களுக் கு அளித்தவர் தலைவர் வைகோ அவர்கள்.

மீனவ மக்களின் பிரச்சினையாக இருக்கட்டும், கூடங்குளமாக இருக்கட்டும். ஸ்டெர்லைட்டாக இருக்கட்டும். கச்சத்தீவு பிரச்சினையாக இருக்கட்டும். எது வாக இருந்தாலும் எங்களோடு எங்களில் ஒருவராக மீனவ மக்களுக்காக தலைவர் குரல் கொடுக்கத் தொடங்கிய பிறகு, ஒரு மாபெரும் எழுச்சி இன் றைக்கு தொடங்கி இருக்கின்றது. ஒரு மறுமலர்ச்சி கிடைக்க வேண்டும் என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்த மறுமலர்ச்சியாய் உங்களைப் பார்க்கின்றார்கள். நீங்கள் வழிகாட்டுவீர் கள் என்று நம்புகிறார்கள். உங்கள் பின்னால் அணிதிரண்டுவர தயாராக இருக் கின்றார்கள். எனவே மீனவ மக்களின் சார்பாக உங்களிடம் நாங்கள் கேட்டுக் கொள்வது, நீங்கள் வழி காட்டுங்கள் உங்கள் பின்னால் அணி திரண்டு நாங்கள் வருகிறோம்.

நீங்கள் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே மீனவ சமுதாயத் திற்கு மட்டுமல்ல உழைக்கின்ற அத்துனைபேருக்கும், அடித்தட்டு மக்களுக்கும் உழைக்கும் வர்க் கத்துக்கும் ஒரு மீட்பு வரும்.உங்களை மீண்டும் பிறந்திருக்கின்ற மீட்பராய்ப் பார்க்கிறோம். அத்துனை மக்களையும் மீட்கின்ற பொறுப்பு உங்களுக்கு இருக் கின்றது என்று இந்த மாநாட்டு மேடையில் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

பேராசிரியை ஃபாத்திமா பாபு இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment