Saturday, November 9, 2013

எதனாலே இந்த இழிநிலை! கருணாநிதிக்கு ஒரு பகிரங்க மடல்

தி.மு.க. தலைவர் மதிப்புக்குரிய கலைஞர் அவர்களுக்கு, வணக்கம்.மிகுந்த வருத்தத்துடன் இந்த பகிரங்க மடலை வரைகிறேன்.

தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஐந்துமுறை முதலமைச் சர் பதவியை அலங்கரித்தவர்; திராவிட இயக்கத்தில் தந்தை பெரியார் கரம் பற்றி, பேரறிஞர் அண்ணாவின் வழியில் நடைபோட்டு 90 வயதிலும் துடிப்பாக
இயங்குகிற தலைவர் நீங்கள் மட்டுமே.இனமானப் பேராசிரியர் உங்களைவிட
வயதில் மூத்தவர். அவரும் நீங்களும் மட்டுமே பழைய தலைவர்கள் வரிசை யில் பாக்கி இருக்கிறீர்கள். நீங்கள் குடியிருக்கும் கோபாலபுரம் இல்லம் உங் கள் வசிப்பிடம் மட்டுமல்ல, இந்திய அரசியலில் டெல்லி அதிகார பீடத்தையும் அசைத்துப் பார்க்கும் வகையில் ‘ரிமோட் கண்ட்ரோல்’ செயலகமாகவும் கோ பாலபுரம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.பழம் தின்று கொட்டை போட்ட தலை வரான தங்களின் இல்லம் எத்தனையோ சதி ஆலோசனை சபையான முற்ற மாகவும் திகழ்ந்து இருக்கிறது.

அரசியலில் ஏற்ற இறக்கங்களை சந்தித்த போதெல்லாம் தி.மு.க.வின் தொண் டர்கள் அங்கேதான் குவிந்து இருக்கிறார்கள். நெருக்கடி நிலை காலத்தில் உங் களுக்கு ஆறுதலும்,தேறுதலும் தருவதற்கு தி.மு.க.வின் தொண்டர்கள் தினந் தோறும் அங்குதான் வந்து குவிந்தவண்ணம் இருந்தனர்.‘கோபாலபுரம்’ கலை ஞரின் முகவரி என்பதில்தான் தி.மு.க.தொண்டர்களுக்கு ஒருவித பெருமிதம்.
இம்... இவையெல்லாம் பழைய கதைகள் என்று புலம்புவது என் காதில் விழு கிறது.

“நான் மரணித்த பிறகு, கோபாலபுரம் வீட்டை மருத்துவமனையாக மாற்றிவிட
வேண்டும்” என்று இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தீர்கள்.அதற் காக பத்திரம் தயார் செய்து தங்கள் குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட அறக் கட்டளையிடம் ஒப்படைத்து இருக்கிறீர்கள். ஆனால், உங்கள் குடும்ப உறுப்பி னர்கள் கோபாலபுரம் இல்லத்தை நீதிமன்றமாக மாற்றி விட்டார்களே என்ற
ஆதங்கம் என்னை வாட்டுகிறது. அந்த மனபாரத்தை இறக்கி வைக்கவே இந்த
மடல்.

ஆசை வெட்கமறியாது. உங்களைப் பொறுத்தவரை பதவியும்,பணமும் வெட்க மறியாது. ஒரு காலம் அதற்கென்று இருந்தது. இயக்க நலன், நாட்டு நலன் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தவராக நீங்கள் திகழ்ந்த அந்தக் காலம் திராவிட இயக்கத்தைப் பார்த்து டெல்லி அஞ்சி நடுங்கியதும் அந்தக் காலம் தான். எப்பொழுது குடும்ப நலன் உங்களை பற்றிக்கொண்டதோ அந்த நாளிலி ருந்துதான் வீழ்ச்சியும் தொடங்கிவிட்டது. ஐந்து முறை முதல்வர் பதவியில் இருந்த எனக்கா வீழ்ச்சி? ஆசியாவிலேயே, ஏன்? உலகப் பணக்காரர்கள் பட்டி யலில் என் குடும்பம் இடம் பிடித்துவிட்டதே,இது எழுச்சி அல்லவா? நான்
எங்கே வீழ்ந்தேன்? என்று கேட்கலாம்.

தமிழ்நாட்டில் முதல்வர் பொறுப்பில் இருந்த எந்தத்தலைவர் வீடும் நீதிமன்றம்
ஆனது இல்லை. ஏன் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் முதல்வர் பதவி வகித் தவர்களுக்கு இத்தகைய இழிநிலை வந்தது இல்லை. ஆனால்,உங்களுக்கு வந்து இருக்கிறதே! இது வீழ்ச்சியின்றி வேறு என்ன?

அக்டோபர் 28ஆம் தேதி கோபாலபுரம் வீடு நீதிமன்றமாக மாற்றப்பட்டது. டெல் லி சி.பி.ஐ. நீதிமன்றத்தின் உத்தரவின்படி எழும்பூர் நீதிமன்றத்தில் பணியாற் றும் சென்னை பெருநகர தலைமை நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு கோபாலன் நீதி விசாரணை நடத்த உங்கள் அருமை மனைவி தயாளு அம்மாளிடம் விசா ரணை நடந்து இருக்கிறது. உங்கள் பாச மகள் கனிமொழியும் அங்கே சாட்சிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருந்தார். நீதிமன்றத்தின் அலுவலர்கள் கம்ப்யூட்டர், டைப் ரைட்டிங் மிஷன் உள்ளிட்ட தளவாடங் களுடன் ஒரு மொபைல் அலுவ லத் தையே உங்கள் இல்லத்துக்குக் கொண்டுவந்து சேர்த்துவிட்டனர்.சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர்கள் யு.யு.லலித் மற்றும் கே.கே.கோயல் ஆஜரானர்கள் உங் கள் குடும்பத்தினர் நடத்தும் கலைஞர் டி.வி.க்கு 200 கோடி ரூபாயை அன்பளிப் பாக(?) வழங்கிய ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குநர் ஆசிஷ் பல்வா மற்றும் ராஜீவ் அகர்வால் போன்றோரும் கூண்டில் நிறுத்தப்பட்டிருந்தனர். மதியம் வரை விசாரணை நடந்தது. நீங்கள் கோபாலபுரம் வீட்டின் (நீதிமன்றத் தின்) முதல் மாடியில்தான் இருந்து இருக்கிறீர்கள்; சி.பி.ஐ. நீதிமன்றம் நடத்திய சிறப்பு விசாரணையை படம் பிடிக்க இந்தியா முழுவதிலிருந்தும் ஊடகங்கள் கோபாலபுரத்தில் குவிந்து விட்டன.

நீங்கள் சுயமாக சம்பாதித்த சொத்துகளுக்கு மட்டும் உங்கள் வாரிசுகள் பொறுப் பாக இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. இலட்சோப இலட்சம் தொண் டர்களின் வியர்வைத் துளிகள்-இரத்தத் துளிகள்-சிந்தி உருவாக்கப்பட்ட ஒரு
மாபெரும் இயக்கத்தை உங்கள் குடும்பச் சொத்தாக மாற்றி, வாரிசுகளை அதி பதிகளாக மாற்றிவிட்டீர்கள்.ஆட்சி அதிகாரம் உங்கள் குடும்பத்திற்கு சகல
ஐசுவரியங்களையும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.மத்திய அரசில் பதவி
வகித்ததன் மூலம் மாநில சுயாட்சி கிடைத்ததோ இல்லையோ உங்கள் குடும் பத்திற்கு “நிதி தன்னாட்சி” மட்டும் கிடைத்துவிட்டது.

குடும்பத்திற்கு எத்தனை தொலைக்காட்சிகள்! அதற்கு உரிமங்கள் பெறுவ தற் காகவே உங்கள் குடும்ப ஏஜெண்ட் ஒருவரை தகவல் தொடர்புத்துறை அமைச் சர் பொறுப்பில் உட்கார வைத்தீர்கள். இந்திய சரித்திரம் காணாத இமாலய ஊழல் 2ஜி அலைக்கற்றை ஊழல் மூலம் ஒரு இலட்சத்து எழுபத்து ஐந்தாயிரம் கோடி ரூபாய் ஏப்பம் விட்ட உங்கள் அடிப்பொடி ‘ஆ.ராசா’ உங்கள் குடும்பத் துக்கு சொத்து மதிப்பை நூறு கோடியிலிருந்து இலட்சம் கோடியாக உயர்த்தி யது உண்மை.ஆனால், பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற் றக் கழகத்தின் மதிப்பு சரிந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

தமிழக முதலமைச்சர் மகுடம் தரித்து இருந்த பெருந்தலைவர் காமராஜர், பேர றிஞர் அண்ணா குடும்பத்தை ஏழ்மைதான் ஆட்கொண்டிருந்தது. பத்து மாதம் சுமந்து பெற்ற தாயார் சிவகாமி அம்மாள், மாதச் செலவிற்கு பத்து ரூபாய் கூடு தலாக அனுப்பி வைக்குமாறு முதலமைச்சர் காமராஜர் அவர்களுக்கு கடிதம் எழுதியபோது, நான் வாங்கும் சம்பளத்தில் சாத்தியமே இல்லை. நான் கொடுக் கும் பணத்தில் காலத்தை ஓட்டு என்று காமராஜர் சொன்னாராம்.

பேரறிஞர் அண்ணா தமது குடும்பத்திற்கு கோடி கோடியாக பணத்தையும் சொத்துக்களையுமா சேர்த்து வைத்து விட்டுப் போனார்? மதிப்பு மரியாதை புகழ் இவைதான் அண்ணா சேர்த்துக் கொடுத்த செல்வங்கள்.

அறிஞர் அண்ணா அவர்கள் தமது பதவியை பயன்படுத்தி குடும்ப வளத்தை பெருக்கிக் கொள்ளவும் இல்லை. தாம் உருவாக்கிய தி.மு.கழகத்தில் வாரிசு களை கொண்டுவந்து உட்கார வைத்து அழகு பார்க்கவும் இல்லை. அண்ணா வின் பெயரை சொல்லிக் கொண்டு கொள்கைகளைக்குழிதோண்டிப் புதைத்தது மட்டுமல்ல,பதவியும் பணமும் மட்டுமே பிரதானம்.வாரிசுகளின் வளர்ச்சியே முக்கியம் என்று உங்கள் இலக்கு திசைமாறியதால் வந்த விளைவு இன்று வீடே வெப்பமாக மாறி இருக்கிறது.

உங்கள் மூத்த மகனுக்காக அண்ணாவின் இதயக்கனி எம்.ஜி.ஆரை கழகத்திலி ருந்து தூக்கி எறிந்தீர்கள். இன்னொரு மகனுக்காக கழகத்தின் போர்வாள் வைகோ வை அரசியல் களத்திலிருந்தே ஒழித்துக்கட்ட சதி செய்து கொலைப் பழி சுமத்தி வெளியேற்றினீர்கள்.

தி.மு.கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக வைகோ டெல்லியில் சிங்கம் போல் உலவியபோது, தி.மு.க.வின் பெருமையை உயர்த்தினார். பிரதமர் பதவி யில் இருந்தவர்களை நடு நடுங்கச் செய்த வைகோ அவர்களால் திராவிட இயக்கத்தின் கீர்த்தி டெல்லி தர்பார் மண்டபத்தில் சுடர்விட்டுப் பிரகாசித்தது.
ஒருநாளும் உங்களுக்கு தலைகுனிவை வைகோ ஏற்படுத்திய தில்லை.

டெல்லியில் தி.மு.கழகத்தின் முகமும் முகவரியாகவும் விளங்கிய வைகோ
இருந்த இடத்தை இட்டு நிரப்ப இருபது ஆண்டுகளாக ஒருவரைக்கூட உங்க ளால் உருவாக்க முடியவில்லை.உங்கள் அடிப்பொடிகளும் வாரிசுகளும் தீராத களங்கத்தை உங்கள் குடும்பத்திற்கு ஏற்படுத்தி இருப்பதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால்,திராவிட இயக்கத்தின் மீதல்லவா சேறு வாரி இறைக்கப்படுவதற்கு உங்கள் வாரிசுகள் காரணமாக இருக்கிறார்கள். இதைத் தான் பொறுக்க முடியவில்லை.

1989 இல் வி.பி.சிங் ஆட்சியில் ஓராண்டு காலம் மத்திய அமைச் சரவையில்
தி.மு.க. இடம் பெற்றது. அதன் பின்னர் 1996 லிருந்து 2012 வரை 16 ஆண்டுகள்
டில்லி ஆட்சிப் பீடத்தில் தி.மு.க.கோலோச்சியது. தமிழ்நாட்டின் நலனுக்காக, இனம், மொழி, சமூக,பொருளாதார வளர்ச்சிக் காக எள் முனை அளவேனும் டெல்லி பதவிகள் பயன்பட்டதா? நெஞ்சுக்கு நீதி இருந்தால் திரும்பிப் பாருங் கள். ஈழத்தில் இலட்சக் கணக்கானத் தமிழர்களை கொன்று குவிக்க சிங்கள கொலை வெறியன் ராஜபக்சேவுக்கு துணை போன டெல்லி அரசில் தி.மு.க. வும் இடம் பெற்று தமிழினத்திற்கு துரோகம் இழைத்ததை ஒருபோதும் வர லாறு மன்னிக்காது. வினை விதைத்தவன் வினை அறுத்துதான் ஆக வேண் டும். நீங்கள் விதைத்ததை அறுவடை செய்துதான் ஆக வேண்டும். இயற்கை
நியதியும் அறமும் தோற்றதாக சரித்திரம் இல்லை என்பதை மட்டும் நினை வூட்டுகிறேன்.

இப்படிக்கு

குமுறும் நெஞ்சத்துடன்

ஈழவாளேந்தி

No comments:

Post a Comment