Friday, November 15, 2013

அண்ணாவும் வைகோவும் இனியவை நாற்பது

நெல்லை மாவட்டம் கடையம் என்ற ஊரில் பாரதியார் சில காலம் தங்கி இருந் தார். அப்போது அங்கே ஒரு கோயில் திருவிழாவின்போது ஊர்மக்கள் திரளா கக் கூடியிருந்தார்கள். வழக்கம் போல் ஒரு பாகவதர் (வள்ளிதிருமணம்) கதை யைச் சுவைபடச் சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது ஒருவர் மீது சாமி வந்து ஆவேசமாக ஆடிக் கொண்டே உரத்தகுர லில்...

“அடே... பாக்கு வச்சான், வெத்தலை வச்சான், போயிலை வச்சான், பழமும்
வச்சான் ஒண்ணு வைக்க மறந்துட்டான்...சுண்ணாம்பில்லே... சுண்ணாம் பில்லே...சுண்ணாம்பில்லே... என்று கூவினார்.

இதைக் கேட்ட மக்கள் எல்லாம் ஒரே சிரிப்பாய்ச் சிரித்தார்கள். இந்தப் பாட் டைக் கேட்டுக் கொண்டிருந்த பாரதியார் எழுந்து சிரித்துக் கொண்டே ஒரு எதிர்ப்பாட்டு பாடினார்.


இந்த மக்களுக்கு கடவுள் - நிலமும் வச்சான்... பலமும் வச்சான்... நிகரில்லாத
செல்வமும் வச்சான்... ஒண்ணு வைக்க மறந்துட்டான். புத்தியில்லே...புத்தி யில்லே... புத்தியில்லே என்று இராகம் போட்டுப் பாடினார்.

பாரதியார் சுட்டிக்காட்டிய அதே மக்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இவர்களுக்குப் புத்தி இருக்கிறது தெளிவில்லை, புத்தியிருக்கிறது கூர்மை
யில்லை, புத்தி இருக்கிறது அதைப் பயன்படுத்துவதில்லை.

இவர்களுக்குப் புத்தி புகட்டத்தான் தந்தை பெரியார் வந்தார். பேரறிஞர் அண் ணா வந்தார். உறங்காப் புலிவேந்தன் வைகோ வந்தார். ஆனாலும் இன்னும் மக்களுக்கு புத்தி தெளியவில்லை. சினிமா மயக்கம், சின்னத்திரை மயக்கம், பிராந்தி மயக்கம் என்று பல்வேறு மயக்கங்களில் தமிழ்ச் சமுதாயம் மயங்கிக் கிடக்கிறது.

அண்மையில் வைகோ அவர்களின் மறுமலர்ச்சிப் பிரச்சாரம் மயக்கம் தெளிய
வைக்கும் மாமருந்தாக விளங்கியது.இப்போது கொஞ்சம் புத்தி தெளிவு அடைந்திருப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. ஆனாலும், அரசியலில்
யாரை எங்கே வைப்பது? எந்த அளவு கோலைக் கொண்டு ஒரு தலைமையை
மதிப்பிடுவது? என்பதனை கழகத் தோழர்கள்தான் அடிக்கடி கவனப்படுத்த
வேண்டும்.

உலகில் மக்களின் மனமாற்றத்திற்கான நெறிமுறைகளைப் புகுத்துவதிலும்,
ஏற்பதிலும் அதை நிலைப்படுத்து வதிலும் மூன்றுவிதமான வழிமுறை களை வரலாறு சுட்டிக் காட்டுகிறது.

ஒன்று ஐரோப்பிய முறை, இன்னொன்று யூதர் முறை, மற்றொன்று அடிமை
முறை.

ஐரோப்பிய முறை என்பது தம்முடைய மதம், மொழி, பண்பாடு, ஆகியவற்றை
மற்றவர்கள் மீது திணிப்பது. இந்த முறையில் தான் வெள்ளையன் பல நாடு களை வசப்படுத்தினான்.

யூதமுறை என்பது உலகில் உள்ள வேறு வேறு நாடுகளில் வாழ்ந்தாலும் தம்
மதம், தமது மொழி, தமது பண்பாடு ஆகியவற்றை எந்த நிலையிலும் இழந்து விடாமல் இருப்பது.

அடிமை முறை என்பது தாம் வாழும் பூர்வீக இடங்களிலும், குடியேறிய இடங் களிலும், தமது மொழி, மதம்,பண்பாடு ஆகியவற்றை இழந்து விடுவது. ஆதிக் கம் செலுத்துவோரின் மொழி, மதம்,பண்பாடு ஆகியவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ்வது.

இந்த மூன்று முறைகளில் தமிழன் எப்படிப்பட்டவன்? ஐரோப்பியன் மாதிரியா? யூதர் மாதிரியா? நீக்ரோ மாதிரியா? ஏ...தமிழினமே நீயே உன்னை எண்ணிப்பார்.

குமரி முதல் இமயம் வரை தமிழன் வாழ்ந்த தடயங்கள் உள்ளன என்பதனை
புவியியல் அறிஞர்கள் அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். சிந்துவெளி நாகரி கம் திராவிட இனத்திற்குச் சொந்த மானது எனபதையும் உலகம் ஒப்புக் கொள் கிறது.

“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தேவாளொடு
முன்தோன்றி மூத்தகுடி...”

எனும் பழம்பெருமையைப் பறிகொடுத்து விட்டோமே... ஏன்? உலக மொழி களுக் கெல்லாம் மூத்த மொழியான தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நாம்,
இந்தியாவின் எதேச்சதிகாரத்திற்கு முன்னே கெஞ்சும் நிலை ஏன் ஏற்பட்டது?

நம்மை வழிநடத்தும் தலைவர் வெல்லும் சொல் வீரர் வைகோ அவர்கள் தமிழி னத்தின் தாழ்வு நிலைகண்டு வேதனையை வெளிப்படுத்தும் செய்தி காணீரோ?

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும்,“செம்மொழி தமிழாய் வு மத்திய நிறுவனம் செய்து வரும் வஞ்சனையை அம்பலப்படுத்தி உள்ளார் வைகோ.

வைகோ அவர்களைத் தவிர வேறு எவரும் இதுபற்றிக் கவலைப்படுவ தில் லை. கண்டுகொள்வதும் இல்லை.செம்மொழி என்கிற இடத்திற்கு சமஸ்கி ருதம் முற்றிலும் தகுதியுடைய மொழியல்ல. ஆரியர்களின் சமத்து அதை
நிலைநாட்டிவிட்டார்கள்.

இத்தகைய சமஸ்கிருதம் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஒரே காரணத்தால்
அந்த மொழிக்கு ஆண்டுக்கு ரூ 1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 15
சமஸ்கிருதப் பள்ளிகளும், பல்கலைக் கழகங்களும் 58 கல்லூரிகளும் தொடங் கப்பட்டுள்ளன.

உலக அளவில் 100க்கும் மேற்பட்ட ஆய்வுக்கூடங்கள் இயங்கி வருகின்றன.
ஆனால் உலகில் மூத்த மொழியான நம் தமிழ் மொழிக்கு அத்தகைய வாய்ப்பு
வசதிகளைத் தருவதில்லை.

நம் தமிழ்மொழி உலகில் 65 நாடுகளில் 10 கோடிக்கும் அதிகமான மக்களால்
பேசப்படும் செம்மொழியான தமிழ் மொழிக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட
வில்லை. ஒதுக்கப்பட்ட நிதியைக்கூட முறையாகச் செலவு செய்யாமல் திருப் பி அனுப்பப்படும் அநீதியும் அலட்சியமும் நடந்து வருகிறது என்று வைகோ
அவர்கள் கடுமையான கண்டன அறிக்கை விடுத்திருப்பது உலகத் தமிழ் இனத் திற்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

வைகோ அவர்களின் இந்தக் கண்டன அறிக்கைக்குள் சமஸ்கிருதத்தின் போலித்தனங்களை அடையாளப் படுத்தும் ஏராளமான கேள்விகள் அடங்கி
உள்ளன. மொழியியல் வல்லுநர்கள் எவராலும் இதை மறுக்க முடியாது.சமஸ் கிருதம் 40,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், (கிர்நார்)என்ற ஊரில் உள்ள கல்வெட்டுதாம் சமஸ் கிருதத்தில் உள்ள முதல் கல்வெட்டு என்றும் ஆரியப் பண்டிதர்கள் கூறி வருகின்றனர். இது மாபெரும் புரட்டாகும்.

„சமஸ்கிருதத்திற்குச் சொந்தமாக எழுத்தே கிடையாது.பிறகு எப்படி கல்வெட்டு வந்தது? ஏன் இந்த ஏமாற்றுவேலை?

„எழுத்தே இல்லாத மொழியால் எப்படி மாபெரும் இலக்கியங்களைப் படைக்க
முடியும்?

„சமஸ்கிருதம் பேச்சு மொழியும் அல்ல! இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது சமஸ்கிருதம் மக்களால் பேசப்படுகிறதா? ஒரு மாவட்டத்திலாவது ஒரு ஊரி லாவது சமஸ்கிருதம் பேசப்படுகிறதா? நிச்சயமாக இல்லவே இல்லை.

„தேவபாஷை என்று சொல்லிக் கொண்டு கோயில் கருவறைக்குள்ளே மட்டும்
ஓதப்படுகிறது.

„சுருதி - என்றால் காதால் கேட்கப்படுவது. ஸ்மிருதி -என்றால் வாயால் உச்ச ரிக்கப் படுவது. இந்த இரு நிலைகளில் தான் சமஸ்கிருதம் இருந்து வருகிறது.

„எந்த ஓதுவார், பிரமாணாள் வீட்டிலாவது பெண்மணிகளுக்கு சமஸ்கிருதம் தெரியுமா என்றால் தெரியாது. ஏனென்றால் அது வீட்டு மொழியும் அல்ல. பெண்கள் பேசினால் தீட்டாகிவிடுமாம்.

„எந்தக் காலத்திலும் சமஸ்கிருதம் ஒரு பேச்சுமொழியாக இருந்ததில்லை, என் று மகாபெரியவாள் சங்கராச்சாரியார் சந்திரசேகர் அவர்களே அவரது நூலில் உறுதிப்படுத்தியுள்ளார்.இதற்குமேலே வேறு ஆதாரம் தேவையில்லை.

இத்தகைய சவலைமொழியான சமஸ் கிருதத்திற்கு வளர்ச்சி எப்படி வரும்?
விஜய நகரப் பேரரசு காலத்தில் கிருஷ்ணதேவராயரிடமிருந்து திராவிட மொழி இலக்கியங்கள் பலவற்றை, சமஸ்கிருதப் பண்டிதர்கள் இரவலாகப் பெற்றதாகவும், பிராகிருத எழுத்தில் இருந்து காப்பி அடித்துக் கொண்டு மூல நூல்களை அழித்துவிட்டதாகவும் மொழி இயல் ஆய்வு அறிஞர்கள் சான்று பகிர்ந்து உள்ளனர்.

கிருஷ்ண தேவராயர் திராவிட இனத்தைச் சார்ந்தவர்.அவரது தாய்மொழி துளு ஆகும். “கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன்னு திரத்தே எழுந்து ஒன்று பல ஆகிடினும்” என்று கூறிய மனோன்மணியம் சுந்தர னார். வாக்கின்படி திராவிட இனமொழிகளில் துளுவும் ஒன்றாக இருந்தது. இப் போது துளு சிதைந்து போய்விட்டது.

திராவிட நாடு மிகப்பெரும் நிலப்பரப்பு உடையது. அதை எந்தக் கொம்பனாலும்
மறைக்க முடியாது. துளு நாடு தமிழகத்தின் ஒரு பகுதியாகவே அந்தக் காலத் தில் இருந்தது. நமது இலக்கியங்களான. அகநானூறு, புறநானூறு, பதிற்றுப் பத்து, குறுந்தொகை, சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் ஆதாரங்கள் உள்ளன.

அந்தக் காலத்தில் துளு நாட்டை,நன்னன், கொங்கணக்கிழார் போன்ற தமிழ் மன்னர்கள் ஆண்டிருக்கின்றனர்.சங்க காலத்தில் துளு நாடு என்றும் கொங் கண நாடு என்று பெயர் பெற்றிருந்தது.இன்றைய வடகன்னடம் தென்கன்னடம் சார்ந்த மாவட்டங்கள் பண்டைய துளு நாட்டைச் சேர்ந்தவை.இப்போது மைசூர் மாநிலத்தில் உள்ள பெரும் பகுதிகள் பழைய சென்னை மாகாணத்தில் தான் இணைந்திருந்தது.

அசோகச் சக்கரவர்த்தி தம்முடைய சாசனத்தில் கூறுகிற, “சத்தியபுத்திர நாடு, என்பது துளு நாடுதான். கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் இருந்த ப்தாலமி Ptolemy என்னும் யவனர் துளு நாட்டில் Damirike தொடங்கியது என்று கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது, டமிரிகெ என்பது திராவிடகம் என்னும் தமிழகம் ஆகும்.

“தோகைக் காவின் துளு நாடு, - (அகம் 15:5) என்று சங்கப் புலவர் மாமூலனார்
குறிப்பிடுகின்றார். “பொன்படு கொண்கான நன்னன்” என்று பாலை பாடிய பெருங்கடுக்கோ என்னும் சேர மன்னன் பாடிய நற்றிணை 391 ஆம் செய்யுளில் குறிப்பிட்டுள்ளார்.

கி.பி.4 ஆம் நூற்றாண்டு வரையில் தமிழ்பேசும் நாடாக இருந்த துளு நாடு, இப் போது மலையாளத்திலும், கன்னடத்திலும் கலந்துவிட்டது. எல்லாம் அரசியல் அடிப்படையில் காலம் செய்த கோலம்.

பாண்டிச்சேரி உள்பட தமிழகத்தின் சார்பில் டெல்லிக்குச் சென்றிருக் கும் எம். பி.க் கள் எண்ணிக்கை நாற்பது.இலக்கிய வரிசையில் உள்ள இன்னா நாற்ப தாக இவர்கள் ஆகிவிடக்கூடாது.

அண்ணாவும், வைகோவும்தான் இனியவை நாற்பதின் ஒட்டுமொத்த அடையா ளம். வெல்லும் சொல் வல்லரசாக விளங்கும் வைகோ அவர்களை நாடாளு மன்ற உறுப்பினராகத் தேர்வு செய்து டெல்லிக்கு அனுப்புவதே இப்போது நமது குறிக்கோளாகும்.

நாடு நலம் பெறவும். பலம் பெறவும் இனியவை நாற்பதும் (40 எம்.பி.) நமதாக வேண்டும்.

கட்டுரையாளர் :- கவிஞர் தமிழ்மறவன் மதிமுக தலைமை நிலையச் செயலாளர்

No comments:

Post a Comment