Tuesday, November 5, 2013

கொளத்தூர் மணி மீது தேச பாதுகாப்புச் சட்டத்தை ஏவிய ஜெயலலிதா அரசின் பாசிச அடக்குமுறை

கொளத்தூர் மணி மீது தேச பாதுகாப்புச் சட்டத்தை ஏவிய ஜெயலலிதா அரசின் பாசிச அடக்குமுறை - #வைகோ  கண்டனம்

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்று ஒரு பழமொழி உண்டு. அண்ணா தி.மு.க. அரசின் பாசிச முகத்திரை கிழிந்தது. ஈழத்தமிழர்களுக்கு எதிராக, குறிப் பாக விடுதலைப்புலிகளுக்கு எதிராக கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக கடந்த காலத்தில் சர்வாதிகார பொடா அடக்குமுறையை ஏவிய முதலமைச்சர் ஜெய லலிதா, தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு என்று ஒரு கபட நாடகத்தை நடத்தினார்.

அவரது சர்வாதிகார வெறிப்போக்கு மாறவே இல்லை. எந்தப் படிப்பினையை யும் அவர் கற்றுக்கொள்ளவில்லை. எந்தக் காலத்திலும் வன்முறையில் துளி யும் ஈடுபடாத திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி மீது காவல்துறையின் மூலம் பொய்வழக்குப் போட்டு சேலம் சிறையில் அடைக்கச் செய்தார்.

அவர் பிணையில் வரக்கூடாது என்பதற்காக தற்போது தேசப் பாதுகாப்புச் சட் டத்தை ஏவியுள்ளார் என்பது அவரது காட்டாட்சி தர்பாரையே காட்டுகிறது. இந்த அடக்குமுறையை எதிர்கொண்டு ஜனநயக கருத்துரிமையைக் காக்க வீறுகொண்டு போராடுவோம்.

அ.தி.மு.க. அரசின் அக்கிரமமான அடக்குமுறைக்கு எனது பலத்த கண்டனத் தைத் தெரிவிக்கிறேன்.

‘தாயகம்’                                                                     வைகோ
சென்னை - 8                                               பொதுச் செயலாளர்,
05.11.2013                                மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

No comments:

Post a Comment