Saturday, November 2, 2013

சாலமன் மீன்களின் சவால்கள் நிறைந்த பயணம்!

உலக ஜீவராசிகளின் பரிணாமப் பல்லுயிர் பெருக்கத்தின் இருப்பிடமாக கடல் விளங்குகிறது. முதல் ஜீவராசியான ஒரு செல் உயிரினம் அமீபா. அது நீரில் தான் தோன்றியது.அதுதான் பல்கிப் பெருகி பல்வேறு பரிணாமங்களை அடைந்து மீன்களாக உருவானது. இப்பொழுது நீரில் மட்டுமே வாழ்ந்த ஜீவராசி கள் இடம் பெயர வேண்டிய பரிணாமத்தில் நீரில் வாழ்ந்து நிலத்தை சார்ந்து வாழ்கின்ற, தவளை,ஆமை, முதலை, நண்டு போன்றவை நிலத்தில் முட்டை யிட்டு பொரிக்கச் செய்து பின் நீரில் வாழ்பவைகளாக பரிணாமம் அடைகிறது. தவளைக் குஞ்சுகளை தலைப்பிரட்டை என்று அழைப்பர். அவை பார்ப்பதற்கு மீன் குஞ்சுகளைப் போன்று இருக்கும். வளர வளர உடல் பகுதியில் உள்ள
துடுப்புக்கள் கால்களாக மாறித் தவளையாக உருமாறும்.அடுத்த இடப்பெயர்வு என்பது நிலத்தில் வாழ்ந்து நீரை சார்ந்தவையாக உருவெடுக்கிறது. இப்படி யான சங்கிலித்தொடர் பரிணாமம் தான் பல்லாயிரம் கோடி ஆண்டுகளில் ஒன் றை ஒன்று சார்ந்து இன்றைய மனித இனம் உருவாகி முழுமை பெருகிறது. காலச்சூழற்சியில் அடுத்து என்ன நிகழும் என்பதை அறிஞர்கள் ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். நீரின்றி அமையாது உலகு என்பது நமது மூதுரை.உலகத் தின் மூன்றில் இரண்டு பகுதி கடல் நீரால் சூழப்பட்டுள்ளது.

ஆன்மீகத்தில் பத்து அவதாரங்கள் உண்டு. அவை உயிரினங்களின் பரிணாமத் தை விளக்குவது.ஆன்மீகத்தை அறிவியலாக ஊடுருவிப் பார்த்தால் இவை புரி யும். ஆன்மீகத்தில் மதம் புகுந்ததால் புனை சுருட்டல்களும் தனிநபர் சிந்தனை களின் மடாலயமாக மதம் உருவெடுத்ததன் காரணமாக அவற்றை பகுத்தறிவு மூலமாக பகுத்தாயப்பட்டது.

கடல்

கடல் உயிருள்ள ஜீவராசிகளை மட்டுமே தன்னுடன் வைத்துக் கொள்ளும்.அது
மீன்களாக, கடல் தாவரமாக, சிப்பிகளாக,சங்காக, மனிதர்களாக ஏனைய கடல் வாழ் உயிரினங்கள் எதுவாக இருந்தாலும் அவை உயிருடன் இருந்தால் மட்டு மே கடலில் உயிர்வாழ முடியும். இறந்து விட்டால் அதைக் கரையில் சேர்த்து
விடும். உயிர் உள்ள கடல் இறந்த வற்றை கரையில் கக்கிவிடுகிறது. 

உலகில் சுமார் 22,000 வகை மீன் இனங்கள் உள்ளன. ஒரு கிராம் எடை கொண்ட நெத்தி லியில் தொடங்கி,(20,000)இருபதாயிரம் எடை கொண்ட திமிங்கலம் வரை கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. நிலத்தில் பெரிய உயிரினம் யானை. ஒரு யானையின் எடை 1,000 கிலோ. அப்படியென்றால் 20 யானையின் எடை கொண்டது ஒரு திமிங்கிலமாகும்.

மீன்கள் முதுகெலும்பு உள்ள உயிரினம்.சூழ் வெப்பநிலை விலங்குகள் என்று
ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.மீன்கள் பல்வேறு வண்ணங்களில் பல் வேறு வடிவங்களில் இருக்கின்றன.சில மீன் வகைகள், ஆழ்கடலில் ஒளி புகா பேராழத்திலும், சிலவகை மீன்கள் வெப்ப மண்டலப் பகுதிகளிலும், சில வகை மீன்கள் கடுங்குளிர் பகுதியான ஆர்டிக் பெருங்கடலிலும் வாழ்கின்றன.

கடல்கள்

பெருங்கடல்கள் ஐந்து. இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், அட்லாண் டிக் பெருங்கடல், தென்முனைப் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல்.

அவற்றை சுற்றியுள்ள கண்டங்களில் உள்ள நாடுகளில் பாயும் ஆறுகள் கலக் கின்றன. இந்த நீர் பரப்பு கரைகளில் உள்ள நாடுகள் சூழலுக்கு ஏற்ப கடலுக்குப் பெயர் வைக்கப்படுகிறது.அப்படிப் பார்த்தால் உலகத்தில் சுமார் 102 கடல்கள் உள்ளது. இந்தியாவின் தென்பகுதியில் இந்தியப் பெருங்கடலுக்கு கிழக்குப் பகு தியில் கடல் எல்லையாக வங்காளம் இருக்கின்ற காரணத்தால் அது வங்காள
விரிகுடாவானது. இதில் கலக்கின்ற இந்திய ஆறுகள் மகாநதி, கோதாவரி,
கிருஷ்ணா, தமிழக ஆறுகளான காவிரி,பாலாறு, அடையாறு, கூவம் உள்ளிட் ட ஆறுகள் கலக்கின்றன. மேற்கே அரபிக்கடல் உள்ளது.

இதில் சிந்து நதி, நர்மதை, தபதி ஆறுகள் கலக்கின்றன. இந்தியப் பெருங்கட லின் தொகுப்பு ஆறுகள் செங்கடல், ஏடென்குடா, பாரசீக வளைகுடா, ஏமன்
வளைகுடா, அரபிக் கடல், வங்காளவிரிகுடா, அந்தமான் கடல், திமோர் கடல் உள்ளிட்ட எட்டு கடல்களின் தொகுப்பே இந்தியப் பெருங்கடலாகும். இதன் கிழக்கே ஆஸ்திரேலியாவும், மேற்கே ஆப்பிரிக்காவும், வடக்கே ஆசியாவும்,
தெற்கே தென் பெருங்கடலும், எல்லையாக இருக்கிறது. இதன் மொத்த பரப் பளவு 6,85,56,000 சதுர கி.மீ.ஆகும். இந்தியப் பெருங்கடலில் மிக ஆழமான பகுதி ஜாவா. ஆழம் 7,258 மீட்டம், 21,774 அடி ஆகும்.

இந்தியாவின் கடல் எல்லை சுமார் 6080 கி.மீ. ஆகும். கிழக்கு கடற்கரையின்
நீளம் 3080 கி.மீ. இதில் தமிழகத்தில் 1070 கி.மீ. கடலின் பரப்பளவு ஆகும்.மேற்கு கடற்கரையின் நீளம் 3010 கி.மீ. இந்தியாவின் முக்கிய துறைமுகங்களான சென்னை, தூத்துக்குடி, கொச்சின், மும்பை, கொல்கத்தா, விசாகப்பட்டினம்
போன்றவை பெரியதுறைமுகங்களாகும்.

கடல் அலை

நிலநடுக்கோட்டுப் பகுதி சூரியனால் சூடேற்றப்படும் போது ஐஸ்கட்டிகள் உரைந்து தண்ணீர் விரிவடைந்து நீர்மட்டம் உயர்ந்து எதிர்திசை நோக்கிப் பாய் கிறது. பூமியின் இயக்கம் சூரியனை நோக்கி கிழக்குப் புறமாகச் சூழன்றுகொண் டிருப்பதால் கடல்நீர் மேற்கு,திசையை நோக்கிப் பாய்கிறது. இவையே அலை கள் என்று அழைக்கப்படுகிறது.

கடல் மீன்

கடலில் உள்ள மீன் வகை களில் நாம் அறிந்த சிலவகை மீன்கள், நெத்திலி, காரல் என்னும் காரப்பொடி,கானங்காத்தான்,மத்தி,நவரை, கெழங்கான், பாறை, கல்லுரி, திருக்கை,வவ்வால்,வஞ்சிரம்,ஷீலா,சங்கரா,கொடுவா,சுதும்பு, நாக்கு,  வாலை, காலா, கவளை, திமிலை, கோலா,பொறுவா, ஆலா, இருங் கெலுத்தி, எரா,கனவா, கட்லா, கயல், கிளி, கீரி, சூரை,சூடை, செம்மீன், பன்னா, உள்ளிட்ட 22 ஆயிரம் வகை மீன்கள் கடலில் உள்ளது 

நன்னீர் மீன்

நன்னீரில் வாழும் மீன்கள், கெண்டை,விரால், குறவை, கெலுத்தி, தேளி,சொட் டைவாளை, உலுவை, கட்லா,அயிரை, அசரை, ஆரா, புரோட்டி,ஜிலேப்பி, விலாங்கு உள்ளிட்டவை.மீன்களுக்கு உடலின் மேல்பகுதியில் சிறால் இருக்க வேண்டும்.

பாலூட்டி இனம்

கடல்வாழ் உயிரினங்களில்,சுறா,திமிங்கிலம்,கடற்பசு,நீர்நாய்,டால்பின் போன் றவை பாலுட்டி இனம். இவை முட்டையிடாது. மாறாக விலங்குகளைப் போன்று குட்டியிடும். இதற்கு உடலில் மேல் பகுதியில் சிறால் இருக்காது,
வலுவான வழவழப்பான தோல்தான் இருக்கும். இவை உண்பதற்கு உகந்தவை அல்ல.காரணம் இதன் உடல்களில் அளவுக்கு அதிகமாக பாதரசத் தன்மை இருப்பதால் அவை ஒவ்வாமையை உருவாக்கிவிடும்.எனவே உணவு வகை
களிலிருந்து விலக்கப்பட்டுள்ளது.

நவரத்தினம்

நவரத்தினங் களில் முதல் மரியாதைக் குரிய முத்தும், பவளமும் கடலின் கொடை. அதே போன்று விலை மதிப்பு மிக்க வலம்புரி சங்குகள். வாசனை திர வியங்களுக்குப் பயன்படுத்தும் மூலப் பொருளான ஆம்பரும் கடலில் இருந்து
தான் கிடைக்கின்றது. ஸ்பெரலோலினா என்ற கடல் பாசியிலிருந்து தயாரிக் கப் படும் வைட்டமின் சத்து மாத்திரைகள் கடலில் விளைபவையே.

மூவேந்தர்கள்

மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் சின்னமாக வில் கொடி,
புலிக் கொடி, மீன் கொடி இருந்துள்ளது.பாண்டிய மண்டலத்தின் தலைநகர்
கடம்பவனம். மதுரை மூதுரை விழி மூடாமல் காக்கும் தெய்வத்தை மீனாட்சி
அம்மன் என்று பக்தர்கள் வணங்கி வருகிறார்கள். நீரில் மீன்கள் உறங்குவது
இல்லை.

சாலமன் மீன்களின் சவால்கள் நிறைந்த வாழ்க்கைப் பயணம்

அரை உலகம் என்று போற்றப்படும் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள அமேசான் காடுகளிலும், குடியேற்ற கண்டமான ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள காடுகளிலும்,ஆசியக் கண்டத்தில் இந்திய, சீன கலாச்சார நாடான இந் தோனேசியா காடுகளிலும் உள்ள நன்னீர் நிலைகளில் காணப்படும் சாலமன் மீனின் இடம்பெயர்வு வாழ்க்கை, சாகசங்கள் நிறைந்தவையாக உள்ளது.

கடலில் பல்லாயிரக்கணக்கான மீன் இனங்கள் வாழ்கின்றன. அவற்றுள் சால மன் மீன் வகை நன்னீரில் முட்டை இட்டு, குஞ்சு பொரித்து, கடலில் வாழ்ந்து, இனப்பெருக்கத்திற்காக கடலில் இருந்து இடம் பெயர்ந்து நன்னீர் நிலைக்கு வரவேண்டும்.

மேற்சொன்ன நாடுகளில், பாதுகாக்கப் பட்ட அடர்ந்த காடுகளில் மலை முகடு
களுக்கு ஊடே உள்ள நன்னீர் ஏரிகளில் சாலமன் மீன்களால் இடப்பட்ட முட் டையிலிருந்து குஞ்சுகள் பொரித்து வெளியே வந்து, தன் தாய் பூமியிலிருந்து
கோடைக்காலங்களில் பனிக்கட்டிகள் உரைந்து பாய்ந்தோடும் நன்னீரை விட் டு சாகசங்கள் நிறைந்த தன் வாழ்க்கைப் பயணத்தைக்கூட்டாக மேற்கொள் கிறது. இந்த சாலமன் குஞ்சுகள் வெள்ளி நிறத்தில் இருக்கும்.மலைமுகடு களி லிருந்து கடலை நோக்கிப் பாய்ந்தோடும் நன்னீர் பயணம் புதுமையான தாக வும், மகிழ்ச்சியான தாகவும், ஆபத்து இல்லாததாகவும் இருக்கும்.

இவை பல்லாயிரக்கணக்கான மைல் தூரம் பயணம் மேற்கொண்டு, குதித் தோ டும் நீர்வீழ்ச்சியில், பாய்ந்தோடும் பள்ளத்தாக்குகளில் பயணம் செய்து கடலுக் கு உள்ளே செல்லும் முன் முகத்துவார பகுதிக்கு வந்து சில நாட்கள் தங்கி, கடல் உப்புநீருக்கு தங்களை ஆயத்தப்படுத்த, மற்ற மீன்களுக்கு இல்லாத உட லுறுப்புகள் இயற்கை தந்த அருட் கொடையால் சில நாட்களில் தங்களை தயார் படுத்திக் கொண்டு கடல் உப்பு நீருக்கு உடல்தகுதியானதும் பெரிய கடற் பரப்பிற்கு உள்ளே செல்கின்றது. அங்கே சில ஆண்டுகள் கழிந்த நிலையில் தலைமுறைக்கு ஒருமுறை பூக்கும் மூங்கில் பூவைப்போல் இந்த அரிய வகை சிவப்பு பச்சை நிறம் கொண்ட சாலமன் மீன்களும் வாழ்நாளில் ஒரே முறை தான் இனப்பெருக்கம் செய்கின்றன.

இனப்பெருக்க காலம் வந்தவுடன்அவற்றின் இடப்பெயர்வும் நிகழ்ந்தாக வேண் டும். அவை கூட்டாகக் கடலில் இருந்து இடம் பெயர்ந்து அடர்ந்த காடுகளில் மலை முகடுகளில் உள்ள தங்கள் தாய் மண்ணில் உள்ள நன்னீர் நிலையை பனிக்காலத்திற்குள் சென்று சேர்ந்தாக வேண்டும்.

சாலமன்களின் தேவை

சாலமன் மீன்கள் நல்ல பருவம் அடைந்து இருக்கும் போது உடல்பகுதி சிவப் பாகவும், தலைவால் பச்சை நிறத்திலும் இருக்கும். மீன்களில் மிகவும் சுவை யானது சாலமன் மீன்கள்.இவற்றில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆம்வே போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறது.மனித உடலில் ஏற் படும் சக்தி குறைபாடுகளுக்கும், ஊட்டச்சத் திற்கும், நோய் எதிர்ப்பிற்க்கும், சரும பளபளப்பிற்க்கும் இந்த மீன்கள் பயன்படும். எனவே எல்லா காலத்திலும்
சாலமன் மீன்களின் தேவை அதிகம்.

சவால்கள்

சாலமன் மீன்கள் இனப்பெருக்கக் காலங்களில் கடலிருந்து இடம்பெயர்ந்து
நன்னீரை நோக்கி முகத்துவாரம் வரும்.கடலின் பருவ காலங்களை அறிந்தி ருக்கும் மீனவர்கள், சாலமன் மீன்களின் வருகைக்காக, அதற்கேற்றார் போன் ற வலைகளையும், மீன்பிடி கருவிகளையும் தயார்படுத்தி காத்திருப்பார்கள்.

இங்கேதான் சாலமன் மீன்கள் நன்னீர் பயணத்தில் முதல் சவாலை எதிர்கொள் கிறது. சாலமன் மீன்கள் புத்திக் கூர்மையானவை என்று ஆராய்ச்சி யாளர்கள் கூறுகிறார்கள். நீந்திச் செல்லும் போது நீரில் ஏற்படும் அழுத்தத்தை வைத்து, சக்தி கொண்ட எதிரியை சந்திக்கப் போகிறோம் என்பதை உணர்ந்து அதற்கேற் றார் போல் எதிர்வினை ஆற்றக்கூடியவை.

கடலில் மீன் வலை தடுப்பு இருப்பதை உணர்ந்து கொண்டால் அவை ஒட்டு
மொத்தமாக பின்வாங்கி கடலுக்கு உள்ளே சென்றுவிடுகிறது. பின் வலை தடுப்பு இல்லாத காலங்களை அறிந்து அவை பல்லாயிரக்கணக்கில் கடலில்
இருந்து முகத்துவாரம் வழியாக வெளியேறி நன்னீர் பயணத்திற்காக உடலில் உள்ள உறுப்புகள் மாற்றம் பெற்று தன் பயணத்தை கொஞ்சம் கொஞ்சமாக மேலான இடம் நோக்கிச் செல்கின்ற போது, அதற்கான உடல்சக்தி பெருகிறது. குஞ்சுகளாக இருந்த சாலமன் மீன்கள் உருண்டோடும் தண்ணீரில் பயணம் செய்தவை.இப்பொழுது எதிர்திசையில் பாய்ந்து வரும் தண்ணீரில் நீந்தியாக வேண்டும்.

கரடி

இக்காலகட்டத்தில் தான் பனிக்காலம் முடிந்து ஐந்து மாதங்களாக பனிக்குகை யில் அடைப்பட்டிருந்த கரடிகள், அடுத்த பனிக்காலத்திற்கு முன்பாக தேவை யான கொழுப்புச்சத்தை சேகரித்துக்கொள்ள நீர்வீழ்ச்சியில் சாலமன் மீன் களின்  வருகைக்காக கூட்டமாகக் காத்திருக்கும். இப்போது நீர்வீழ்ச்சியை எதிர்த்து சாலமன் மீன்கள் உயரே செல்ல தங்களை ஆயத்தப் படுத்தி நீர்வீழ்ச்சி யின் வேகத்தை பரிசோதிக்க அது எழும்பி மேலே வரும் போது, கரடி அவற் றைப் பிடித்துவிடும்.எதிரிகள் நீழவீழ்ச்சியில் முகாமிட்டு இருப்பதை உணர்ந்த சாலமன் மீன்கள்,நீர்வீழ்ச்சிக்கு வெளியே வராமல் நீரின் ஊடே நீந்திச் செல்ல சக்தி பெருகிறது.சிலநேரங்களில் முப்பது அடி உயரம் கூட இவை பாய்ந்து ஓடி கரடிகளுக்கு கண்ணாமூச்சி காட்டி விடும்.

தொடர்ந்து எதிரிகளை எதிர்கொள்ள வேண்டிய போர்க்களமாக அதன் இனப் பெருக்க காலங்கள் இருக்கின்ற போது, பளபளப்பாக வெள்ளி நிறத்தில் இருக் கும் சாலமன்மீன்களின் உடல் கொஞ்சம் கொஞ்சமாக சிவப்பு நிறத்திற்கு மாறு கிறது. உடல்தசையும் சிவப்பு நிறத்திற்கு மாறுகிறது. தலையும் வாலும் பச்சை நிறத்திற்கு மாறுகிறது.இவை அனைத்தும் போராட்டக் காலத்திற்கு ஏற்ப பாது காப்பான பயணத்திற்காகவே நடைபெறுகிறது.

நரி, நாய், கழுகு

இவ்வேளையில் தான், நீர்வீழ்ச்சியைக் கடந்து பள்ளத்தாக்குகளில் செல்லும்
போது சாலமன் மீன்களின் சுவைக்காக நாவில் உமிழ்நீர் சுரந்தபடி நரிகளும்,
காட்டு நாய்களும் வேட்டையாடக் காத்து இருக்கும். அவற்றிடம் இருந்து தப் பிக்க வேகத்தைக் கூட்டி நீந்தி அடர்ந்த காடுகளுக்கு ஊடே வளைந்தும் நெளிந் தும் செல்லும். நன்னீர் ஏரிகளில் அனகோண்டா போன்ற பெரிய மலைப்பாம்பு களிடமிருந்து தப்பித்துச் செல்லும் போது, சாலமன் மீன்களின் வருகையை எதிர்பார்த்து வானத்தில் பல்லாயிரக்கணக்கில் வல்லூருகளும், கழுகுகளும், ராஜாளிப் பருந்துகளும் எல்லை வகுத்து இடைவெளிவிட்டு பறந்து கொண் டிருக்கும். இலட்சக் கணக்கில் இடம்பெயரும் சாலமன் மீன்களின் வேகத்தால் நீரில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்து, பருந்துகள் வேட்டையைத் தொடங்கும். தங்களின் கூர்மையான பார்வையால் சாலமன் மீன்களின் இருப்பிடம் நோக்கி அம்பைப் போன்று பாய்ந்து வலிமையான அலகாலும் கால்களாலும் சாலமன்
மீன்களைப் பிடித்துத் தூக்கிச் செல்லும் சாலமன் மீன்கள் ஆபத்தை அறிந்து,
கழுகுகளின் பார்வையில் மண்ணைத் தூவுவதைப் போன்று ஒட்டுமொத்தமாக
அந்த நீர்பரப்பைக் கலக்கி, கலங்கடித்து கழுகின் பார்வையிலிருந்து தப்பிச் செல்கிறன்றன. இங்கேதான் காடுகளில் பூக்கும் சிவப்புப் பூக்களும் இலை களின் பச்சை வண்ணமும் நீரில் உள்ள பாசி களின் வண்ணமும் சாலமன் மீன் களின் உடலில் உள்ள சிவப்புப் பச்சை வண்ணத்தால் அவை பாதுகாக்கப் படு கிறது.

வாழ்நாள் கடமையை நிறைவு செய்தல்

இறுதியாக தங்கள் தாய் நிலம் வந்த பின் இனப்பெருக்க காலம் தொடங்குகின் றது.பெண் சாலமன்கள் முட்டையிட்டு அவற்றுக்கு பாதுகாப்பாக திரவத்தை
பாய்ச்சி, கூழாங்கற்களில் ஒட்டிக் கொள்ள உறுதிப்படுத்துகிறது. இதற்கு ஆண் சாலமன் மீன்கள் அரண் அமைத்து துணை நிற்கிறது. பின் அவை கொஞ்சம்
கொஞ்சமாக சோர்வடைகிறது. காரணம் கடல் நீரிலிருந்து நன்னீர் பயணத்தில்
தொடர்ந்து சவால்களை சந்தித்து,எதிரிகளிடம் போராடி வரும் போது அவை உணவை மறுத்து வருகிறது.இறுதியாக தங்களின் இனம் பல்கிப் பெருக எந்த காடுகள் துணையாக இருந்தனவோ, அந்த காடுகளுக்கு உரமாக மரத்தின் வேர் களில் சென்று தஞ்சமடைந்து இறந்து போகிறது.இவ்வேளையில் மீண்டும் சாலமன் மீன் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் பொரித்து இயற்கையின் துணை
கொண்டு தங்களின் சவால்கள் நிறைந்த நெடிய பயணத்தை கடலை நோக்கித்
தொடங்குகிறது.

ஒரு சாலமன் மீன் தன்னை தன் சந்ததியை பாதுகாக்க இவ்வளவு சவால்களை எதிர்கொண்டு இலக்கை சென்றடைகிறது என்றால், மனிதர்கள் நாம் மனம் தளரலாமா?

தலைவர் வைகோ அவர்களின் 1998 ஆம் ஆண்டு அன்றைய இந்தியப் பிரதமர் மாண்புமிகு அடல்பிகாரி தலைமையிலான வாஜ்பாய் அரசு உலக வல்லரசு களின் இந்தியாவும் ஒன்றே என்பதை மெய்பிக்கும் வகையில் ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் அணுகுண்டு பரிசோதனை செய்தபோது உலக வல்லர சான அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இந்தியா மீது பொருளாதார தடை விதித்தது. அதை உடைத்தெரிகின்ற களத்திற்கு இந்திய அரசின் சார்பில்
அனுப்பப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அமெரிக்கா சென்று இந்திய தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்கின்ற களத்தில் தலைவர் வைகோ அவர் களின் பங்கு பிரதானமானது என்பது உலக அறிந்தது. அமெரிக்கப் பயணத்தை தலைவர் வைகோ அவர்கள் கண்ணின் மணிகளுக்கு கடிதமாக சங்கொலியில் எழுதியதை சகோதரர் அருணகிரி அவர்கள் தொகுத்து ‘இதயச்சிறகுகள்’ என்ற புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். அப்புத்தகத்தில் தலைவர் வைகோ அவர்கள் அன்றைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் அவர்களுக்கு பிடித்த உணவு சாலமன் மீன் என்பதை குறிப்பிட்டுள்ளார்.

தமிழக இளைஞர்களின் தணியாத பாசம்

தமிழ்நாட்டிலிருந்து வந்து வாஷிங்டனில் வேலை பார்க்கும் இளைஞர்கள் 10 பேர் இங்கு தங்கியிருந்த மூன்று நாட்களிலும் என்னைச் சந்தித்துப் பொழிந்த
பாசமழையில் நான் திக்குமுக்காடிப் போனேன். வாஷிங்டன் நகரின் மிகப் பிர சித்திப் பெற்ற இந்திய உணவு விடுதிக்குப் பெயர் பாம்பே கிளப் என்பதாகும். அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மேடலைன் அல்பிரைட் முதல் முக்கியப் புள்ளிகள் பலரும் வழக்கம்.சுவையான செய்தியைச்சொல்வதனால் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இங்கு அடிக்கடி உணவருந்த வருகின்றார்.

தமிழ்நாட்டு இளைஞர்களின் வற்புறுத்தலின் பேரில் உமர் அப்துல்லா எம்.பி. யும், ரஞ்சிப் பிஸ்வாஸ் எம்.பி.யும், இரண்டாம் நாள் இரவு பாம்பே கிளப்பிற்குச் சென்றோம். கிளிண்டன் வழக்கமாக உணவருந்தும் மேஜையை நண்பர்கள் தேர்ந்தெடுத்தனர். அதிபர் வரும் போதெல்லாம் வழக்கமாக உணவு பரிமாறும் இந்திய வாலிபர் ஒரு காஷ்மீர்காரர்.அதிபர் கிளிண்டன் ஓரிரு சமயங்களில் துணைவியார் ஹிலாரி கிளிண்டனுடனும், புதல்வி செல்சியாவுடனும் வந்த தாகவும், மற்ற சமயங்களில் நண்பர்களோடு வந்து உணவருந்தியதாகவும் சொன்னார்கள்.

சாலமன் என்ற ஒருவகையான மீன் இந்திய முறையில் சுவைபட சமைக்கப் படுகின்றது. ருசிப்பதில் அலாதியான சுவை கண்டுள்ள கிளிண்டனுக்கு இந்த மீன் மிகவும் பிடிக்குமாம். அதிபர் உணவருந்தும் போது விடுதிக்குள் கெடுபிடி உண்டா என்று கேட்டேன். மூன்று அல்லது நான்கு மேஜைகள் அதிபர் குழுவி னருக்கு ஒதுக்கப்படும் என்றும், மற்ற மேஜைகளில் யாரும் சாதாரணமாக
உணவருந்தலாம் என்றும், அதிபர் வருகை உணவு விடுதியின் உரிமையாள ருக்கு மட்டும் சொல்லப்படும் என்றும், அதிபர் உணவருந்தும் நேரத்தில் விடு திக்குள் நுழைவோரை பாதுகாப்பு சோதனை செய்து உள்ளே அனுப்புவர் என் றும், சமையல் கூடத்தின் மீதும் பரிமாறுவோர் மீதும் உளவுப்பிரிவினரின் விழி கள் வட்டமிடும் என்றும் அறிந்து கொண்டேன். இதயச்சிறகுகள் நூல் (பக்-109)

சங்குகள் அருங்காட்சியகம்

மாமல்லபுரத்தில் நண்பர் ராஜாமுகமது அவர்கள் கடந்த 33 ஆண்டுகளாக பல் வேறு நாடுகளைச் சேர்ந்த 40 ஆயிரம் வகை கடற்சங்குகளை சேகரித்து அருங் காட்சியகம் திறந்துள்ளார். இது கடல்வாழ் உயிரினங்கள் பற்றி ஆராய்ச்சி செய் பவர்களுக்குப் பயன்படும். அங்கே ஒரு சிறிய மீன் அருங்காட்சியகமும் வைத் துள்ளார். அதில் ஒரு தொட்டியில் கடல் தாவரம் ஒன்று உள்ளது. அவை ஒரு வகை மீனை மட்டும் நட்பாகப் பாவிக்கிறது. மற்ற மீன் இனம் அந்த தாவரத் திடம் சென்றால் உடனே அவற்றைப் பிடித்து அதன் இரத்தத்தை உரிஞ்சி சாக டித்து விடுகிறது. தாவரம் மீன் நட்பு வியப்பாக இருந்தது.

மற்றொரு தொட்டியில் உள்ள மீனின் உடலில் அரபி எழுத்துக்களால் அல்லா
என்று எழுதப்பட்டதைப் போன்று உள்ளது. நம் தலை எழுத்தைப் போன்று அதன் உடல் எழுத்தாக அது உள்ளது. 

சூரிய ஒளியைப் போன்ற சக்தி கொண்ட மின்விளக்கின் வெளிச்சத்தில் ஒரு வகை தாவரம் உயிர் வாழ்கின்றது.

சில வகை மீன்கள் இருக்கும் இடத்திற்கு ஏற்றார் போல் வண்ணத்தை மாற்றி எதிரியை ஏமாற்றி விடுகின்றன. 

ஆலா என்னும் மீன்கள் பெரிய மீன்களால் ஆபத்து சூழும் போது, அதனுடைய துடுப்பு பகுதி வளர்ந்து இருக்கும்.அவசர காலத்தில் அவற்றை ரெக்கைகளாகப் பயன்படுத்தி 25 அடி தூரம் பறந்து எதிரியிடம் இருந்து தப்பித்துவிடும் ஆற்றல் பெற்றவையாக அவை உள்ளன.

திமிலை மற்றும் ஹீல்

திமிலை மற்றும் ஹீல் வகை மீன்கள் உடலில் மின்சாரம் சேமித்து வைத்து இருக்கும் ஆற்றல் பெற்றதாக இருக்கிறது. எதிரி தாக்க வரும் போது அதிக பட்சமான மின்சாரத்தை பாய்ச்சி பெரிய மீன்களை நிலைகுலைய வைத்து விட்டு தப்பி விடுகிறது அல்லது உணவாக்கிக்கொள்கிறது.

சிலவகை மீன்கள் சூரிய ஒளி புக முடியாத ஆழ்கடலில் வாழ்கின்றன. தங்கள் தலை அல்லது வால்பகுதியில் மின்விளக்கைப் போன்று ஒளியை உருவாக்கி, மீன்களை மயக்கி கவர்ந்திழுத்து இரையாக்கிக் கொள்கின்றன.

கடம்பான் என்னும் மீன் தன்னை இரையாக்க வரும் பெரிய மீன்களிடம் இருந் து தப்பிக்க, தன் உடலில் இருந்து ஒரு வகையான கருப்பு மை போன்ற திரவத் தைப் பீய்ச்சி அடித்து, நீரை நிறம் மாற வைத்துவிட்டு தப்பி விடுகிறது.

சிலவகை மீன்கள் கொடிய விஷம் கொண்டவையாக இருக்கும். அவை பற் களால் அல்லது முட்களால் எதிரியின் உடலில் விஷத்தைப் பாய்ச்சி மயக்க
முறச் செய்து இரையாக்கிக் கொள்கிறது.

மனித சமுகத்தில் ஆள்பவர் யார்? ஆளப்படுவது யார்? என்பதில் உள்ள போட்டி யைப் போன்று, மீன்களில் ஒரு வகை தன்னை இரையாக்கும் பெரிய மீன் களிடம் இருந்து எப்படித் தப்பிப்பது,மற்ற மீன்களை இரையாகக் கவர்வதைப்
பற்றிய யுத்திகளை உள்ளடக்கியதாக, அவைகளின் வாழ்க்கை நிலை உள்ளது.
எல்லா உயிரினங்களுக்கும் போராட்டங்கள் இல்லாத வாழ்க்கை இல்லை.

கட்டுரையாளர் :- மல்லை சத்யா மதிமுக துணைப் பொதுச்செயலாளர்

No comments:

Post a Comment