Sunday, November 17, 2013

ஈழம் என்றால் வைகோ வைகோ என்றால் ஈழம்!

ஈழம் என்றால் #வைகோ , வைகோ என்றால் ஈழம்!

விருதுநகர் மாநாட்டில் கவிஞர் மணிவேந்தன் உரை

கருணை சமுத்திரம், காஞ்சி சரித்திரம்,
உலகை வியக்க வைத்த விசித்திரம்
அறிஞர் பெருந்தகை அண்ணா
அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
கர்மவீரர், ஏழைப் பங்காளர் காமராசர்
கருத்தரித்த பூமியில் நடைபெறுகிற
மாநாட்டின் நாயகன்,

வைகோ ஈழத்தில் பிறந்திருந்தால்
அவர்தான் பிரபாகரன்.
பிரபாகரன் தமிழகத்தில் பிறந்திருந்தால்
அவர்தான் வைகோ என்று

அன்று பேராசிரியர் பெருந்தகை
அன்பழகன் சொன்னதை, தனது
உறுதியான ஈழ நிலைப்பாட்டின் மூலம்
இன்று உலகைச் சொல்ல
வைத்திருக்கிற உன்னத வீரன்.

அண்ணாவின் தகுதிமிக்க தம்பி
நாளை இந்த
விருதுநகர் தொகுதி எம்.பி.

ஓடி ஓடி உழைக்கிற உத்தமர்
உலகத் தமிழினத்தின் சொத்தவர்
அரசியலுக்குத் தன் சொத்தை வித்தவர்
அரசியலில் எவனும் வெல்ல முடியாத வித்தகர்.

எனக்குத் தாயாய், தந்தையாய் வாய்த்திருக்கிற தலைவர் வைகோ கம்பீரமாய் அமர்ந்திருக்க,

ஈழத்தில் நடந்தது என்ன? என்ற தலைப்பில் உரையாற்ற உங்கள் முன் நான் நிற்கிறேன். இந்த தலைப்பில் பேசியதற்காகத்தான் - என் பாசத் தலைவர் வைகோ மீது தேசப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது.

வீறுகொண்ட வேங்கைகள் வெவ்வேறு தலைப்பிலே இங்கே உரையாற்றினா லும் அடக்குமுறையை அடக்கிக் காட்டிய தலைப்பில் அடியேன்தான் பேசு கிறேன்.

எழுப்புகிறேன் சங்கொலி;
எழுப்புங்கள் கரவொலி.

ஈழத்தில் நடந்தது என்ன?

சிங்கள இராணுவம் குண்டு வீசியது.
ஐம்பது பேர் பலியானார்கள்.
ஐநூறு பேர் புலியானார்கள்.
இதுதான் ஈழத்தில் நடந்தது.

கொலைகாரச் சிங்களவன் நம் குழந்தைகளைத் தூக்கிப் போட்டான் கொதிக் கும் தாரிலே; கொதித்தெழுந்து பிரபாகரன் ஈடுபட்டான் போரிலே.இதுதான் ஈழத்தில் நடந்தது.

தமிழன் உடலைத் துண்டு துண்டாக்கி- சிங்களத் தருதலை வைத்தான்கறிக் கடை. கறிக்கடை வைத்தவனின் கழுத்தை அறுத்து இரத்தம் குடித்தது புலிப் படை. இதுதான் ஈழத்தில் நடந்தது.

தமிழன் கண்களைத் தோண்டித் தரையில் போட்டு நசுக்கினான்.நசுக்கிய நாய் களை களத்தில் நம்மவன் அடித்து நொறுக்கினான். இதுதான் ஈழத்தில் நடந்தது.

சோழத் தமிழர்களாம்
ஈழத்தமிழர்களை - ஓர் அடிமைக்கு
ஒப்பாக்கி - அவர்தம்
உழைப்பைத் தங்கள் உணவுக்கு
உப்பாக்கி
செம்பொன்னாய் இருந்தோரைச்
செப்பாக்கி
அவர்கள் வாழ்வை வெட்டவெளியில்
நிறுத்தி
வெப்பாக்கி - விட்ட சிங்களக்
காடையரை
வீழ்த்தத்தான் பிரபாகரன் தூக்கினான்
துப்பாக்கி -
இதுதான் ஈழத்திலே நடந்தது!

ஈழத் தமிழச்சி என்றைக்கும் ஈனத்
தமிழச்சியாய் இருந்ததில்லை.

பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்து
பாலூட்டி தாலாட்டி வளர்த்து
ஆளாக்கிய பிள்ளையைப் புலியாக்கி


குருதியாய் ஒரு தமிழீழம்

கொண்டு வா மகனே - உன்னைக்
கூண்டில் இட்டவன் பிணக்கோலம்
கண்டு வா மகனே!
கருவினால் நீ புலியடா
வென்று வா மகனே - எதிரி
எறிகின்ற வெடிகுண்டை
தின்று வா மகனே - என்று வீரமூட்டி
போர்க்களத்துக்கு அனுப்பி வைத்தாள்.

முறங்கொண்டு புலியடித்த
முந்தைய தமிழச்சியின் மார்பில்
பால் குடித்தவன்

வனத்தில் விமானம் தயாரித்து
வானத்தில் பறக்கவிட்டு - தமிழர்
இனத்தின் பெருமையை எட்டுத்திக்கும்
எதிரொலிக்கச் செய்த இணையற்ற
மாவீரன்
பிரபாகரன் கரம்பற்றி போனான்
களத்துக்கு...

அடடா தமிழா எடடா படைநீ
அடிமை விலங்கை உடைத்தெறி
இடடா முழக்கம் கொடடா செந்நீர்
இனத்தைக் காப்போம் நாள்குறி
நடடா களத்தே எடடா கைவாள்
நட உன் பகைவன் தலைபறி
தொடடா போரை விடடா கணைகள்
சுடடா எழட்டும் தீப்பொறி...

தீ ஆடு களத்தில் ஆடு
செத்தாலும் களம் நின்று சாகடா சாகு
தாய்நாடு காத்திடும் சாவு சாவன்று
சர்க்கரைப் பாகடா பாகு!

என்ற உணர்ச்சிக் கவிஞரின்
உணர்ச்சியை தலைவர் பிரபாகரன்
உள்வாங்கி உணர்ச்சியூட்டினார்,
கிளர்ச்சியூட்டினார்.

இராஜபக்சேவின் நாட்டுக்
குண்டுகளைவிட பிரபாகரனின்
காட்டுக் குண்டுகள் வீரியமாகவே
வெடித்தன.

மன்மோகனின் ரேடாரும்,
சைனாகாரனின் பீரங்கியும் - நம்
மனித வெடிகுண்டுகளுக்கு முன்னால்
மண்மேடாகிப் போயின

விஷக்குப்பிகளை கழுத்தில் அணிந்து கொண்டு வீரச்சமர் புரிந்தவனின் கெண்டைக்கால் முடியைக்கூட ஊதியத்துக்கு ஆயுதம் தூக்கிய சுண்டைக்காய் இராணுவத்தால் பிடுங்க முடியவில்லை!

சிங்களவனின் சிங்கக்கொடியை புலிக்கொடி வீழ்த்தியது -
உலகத் தமிழ்க்குடி அதை வாழ்த்தியது!

இதுதான் ஈழத்திலே நடந்தது.

முழந்தாளிட்டு வாழ்வதைவிடநின்றுகொண்டே சாவதுமேல் என்று
முடிவெடுத்துக் களமாடிய புலிகளைப்போல் வீரம் மிக்கவர்கள்
இந்த பூகோளப் பூமியில் வேறு எங்கும் இல்லை.

விடுதலை காணும் நாள்வரை - எங்கள் துப்பாக்கித் தூங்காது? -
புலிக் கொடியை ஏற்றியே தீருவோம் - எங்கள் குறிக்கோள் தப்பாது

என்று சூளுரைத்துச் சுடர் முகம் தூக்கிக் களமாடிய புலிகளை வெல்லவே
முடியவில்லை சிங்கள அலிகளால்!

எறிந்தான் தடைசெய்யப்பட்ட கிளாஸ்டர் குண்டுகளை, பாஸ்பரஸ் குண்டு களை, அமிலக் குண்டுகளை எரிந்தது ஈழதேசம்...

அழகின் உச்சமாய் இருந்த ஈழநாடு -இன்று சுடுகாடாய் கிடக்கிறது.
கடல் சூழ்ந்த யாழ்ப்பாணம் - இன்று கண்ணீர் சூழ்ந்து கிடக்கிறது
குடைபோல விரிந்திருந்த பனைமரங்கள் - இன்று குண்டுகள் பாய்ந்து கரிந்து கிடக்கிறது.
கொள்ளை அழகாய் காட்சி தந்த ஈழதேசமின்றுகொள்ளிக்காடாய் ஆகிவிட்டது - நம் பிள்ளை விளையாடிய வீதி சிங்கள நாயின் வீடாகிவிட்டது

மட்டு மாநகர் மண் - இன்று குட்டிச் சுவராய் கிடக்கிறது
மணற்மேட்டில் கடற்காற்றில் கூத்தாடிய தென்னை - தன்னை
மணலுக்குள் புகுத்தி மறைந்து கொண்டது
தங்கமாய்க் காய்த்த வயலின் அங்கமெல்லாம் காயம்
ஏ... உலகமே இது என்ன நியாயம்?

அழகள்ளிச் சொறிந்த வன்னிமண்
அழகிழந்து கிடக்கிறது
முத்து விளைந்த மன்னார் - இன்று
செத்துக் கிடக்கிறது - நம் காட்டில்
ஆடிய மயில்களும் - தத்தி தத்தி
துள்ளி ஓடிய மான்களும் - எங்கோ
ஓடிப்போய்விட்டன - தமிழ்ச் சொந்தம்
உயிர் இழந்துவிட்டதால்!

ஈழத் துயரத்தைப்
பட்டியலிட்டால் நீளுமடா
பதைபதைத்தே நெஞ்சம் துடிக்குமடா
காட்டு மிருகங்களும் இதைக் கேட்டால்
கண்ணீர் வடித்தே கதறுமடா!

மயிரிழையில் உயிர்தப்பிய குழந்தை
அழுகிறது...

தாயே நான் செய்த குற்றமென்ன?
ஒரு தமிழச்சிக்குப் பிள்ளையாய்
பிறந்தது குற்றமா தாயே?

நீ பொட்டு வைத்த வட்ட நெற்றி
கொட்டுகிறதே குருதியை - நீ
முத்தமிட்ட கன்னச் சதையைக்
காணலியே தாயே - உனக்காய்ப்
புன்னகை பூத்த உதடுகள் புண்ணாகிப்
போனதம்மா
கண்கள் எரியுதம்மா - காதுகள்
கேட்கலேயே அம்மா
பிஞ்சு விரல்கள் பிய்ந்து போனதம்மா
நீ நடக்க வைத்து அழகுபார்த்த
கால்களை
முடக்கிப் போட்டுவிட்டானே அம்மா...
என்று அழுகிற குழந்தையை
ஏந்தியவாறு,

அன்று அறுக்கப்பட்டது என் தாலி
இன்று நான் அடைக்கப்பட்டிருப்பது
முள்வேலி
என்றுதான் முடியுமோ என் துயரம்?
என்றுதான் பிரியுமே என் உயிரும்?
என்று தாய் அழுகிறாள்.

ஒரு தாய் செத்துக் கிடக்கிறாள். தாங்க
முடியாத பசியால் அந்த தாயின் மார்பில்
வாய் வைத்து உறிஞ்சுகிறது குழந்தை!
அய்யகோ செத்துப் போனவளின் மார்பு
பால் சுரக்காது என்று அந்த சின்னக்
குழந்தைக்கு எப்படித் தெரியும்!

எங்கள் ஆசைத் தங்கை இசைப்
பிரியாவின் கண்ணைக் கட்டி, வாயைக்
கட்டி, நிர்வாணமாக்கி
கற்பழித்தவனே... நீ
நிர்வாணமாக்கிப்போட்ட இசைப்
பிரியாவின் உடல் எங்கள் தேசத்தின்
மானத்தைக் காத்த ஆடையடா!

கவிஞர் தாமரை சபித்தாரே...

எங்கள் சகோதரிகளைக் கதற கதற
கற்பழித்த சிங்களவனின் மாளிகையில்
விருந்துண்டு கும்மாளமிட்டவர்களே..

உங்கள் வீட்டு உணவெல்லாம்
நஞ்சாகட்டும் என்று. இதோ இந்தக்
கூட்டமும் அப்படியே சபிக்கிறது!

ஈழப்போர் இந்தியாவின் துரோகத்தல்
வீழ்ந்தது - அந்தத் துரோகத்தின் வேர்
தமிழகத்தில் இருந்தது. ஈழத்தில்
நடந்தது சகோதர யுத்தமென்று - ஒரு
சண்டாளன் சொன்னான். தியாகியும்
துரோகியும் எப்படியய்யா ஒன்றாக
இருக்க முடியும்.

ஈழம் என்றால் வைகோ என்று அர்த்தம்.
வைகோ என்றால் ஈழம் என்று அர்த்தம்.
இக்கரைத் தலைவனின் ஈழ
அக்கரையும். அக்கரைத் தலைவனின்
ஈழ அக்கரையும் ஒரே வீரியம்
உள்ளதுதான்.

வல்வெட்டித்துறை தலைவன்,
சிங்களவனின் தோட்டாவுக்கு எதிர்
தோட்டா பாய்ச்சினான்.

கலிங்கப்பட்டி தந்தவனோ,
சிங்களவனின் தோட்டாவுக்கு டாட்டா
காட்டினான்.

எங்களிடம் இருக்கும் ஆயுதங்களின்
வீச்சாற்றலைவிட, எம் அண்ணன்
வைகோவின் பேச்சாற்றல் வீரியமிக்கது
என்று அன்று பிரபாகரனால் பெருமைப்
படுத்தப்பட்ட எங்கள் தலைவனே
ஈழத்தில் நடந்தது என்ன? என்று
அகிலத்துக்கு அறிவித்தவர்.

மனித உரிமை ஆணையத்தின்
கதவைத்தட்டி, இங்கிலாந்து
நாடாளுமன்றத்தில் எரிமலையாய்
குமுறி, ஆஸ்லோ சென்று உரக்க ஓசை
எழுப்பி, இந்திய நாடாளுமன்றத்தில்
இதயம் குமுறிப் பேசி,
ஈழத்தமிழர்களுக்காய் தூக்கு மேடை
ஏறவும் தயாரென்று துணிந்து கர்ஜித்து,
சாஞ்சிக்கே படையெடுத்துச் சென்று
போர் முரசு கொட்டி, ஈழத்தில் நடந்தது
என்ன என்று ஒட்டுமொத்தத்
தேசத்திற்கும் உரைத்த
தலைவனுக்காய் உயிர் கொடுக்கவும்
சித்தமாக இருக்கும் உணர்ச்சிக்
கூட்டமே..

நீறு பூத்த நெருப்பு - தமிழ்
நிலத்தில் என்றும் இருக்கும்
ஊறு விளைவித்த சிங்களவனின்
உயிர்தனை குடிக்கும்.

நன்றி. வணக்கம்.

இவ்வாறு கவிஞர் மணிவேந்தன் உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment