Tuesday, November 12, 2013

மதுரையில் வைகை விரைவு இரயிலை மறித்த வைகோ

மதுரையில் வைகை விரைவு இரயிலை மறித்த #வைகோ

இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்பதை வலி யுறுத்தியும், இலங்கையில் காமன்வெல்த் நடைபெற துணைபோன இந்திய அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு மற்றும் இர யில் மறியல் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மதுரையில் மறுமலர்ச்சி தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் ஆயிரக்கணக் கான தோழர்கள் மதுரையில் இரயில் நிலையம் சென்று, இன்று (12.11.2012) காலை மதுரையிலிருந்து சென்னை புறப்பட்ட வைகை விரைவு இரயிலை மறித்து கைது செய்யப்பட்டனர்.

மாவட்டக் கழகச் செயலார்கள்: மதுரை மாநகர் - புதூர் மு.பூமிநாதன், தேனி-சந்திரன், மதுரை புறநகர் கிழக்கு -வீர.தமிழ்செல்வன், மதுரை புறநகர் மேற்கு-த.முனியாண்டி, அரசியல் ஆலோசைனக்குழு உறுப்பினர் எம்.டி.சின்னசெல் லம், கொள்கை விளக்க அணிச் செயலாளர் க.அழகுசுந்தரம், மாநில தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாஸ்கரசேதுபதி,மாநில மருத்துவர் அணித் துணைச் செய லாளர் டாக்டகர் சரவணன், மாநில தொழிலாளர் அணிச் செயலாளர் மக பூப்ஜான் ,மின்னல் முகம்மது அலி, உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கழகத்தினர் மறியலில் பங்கேற்று கைதாயினர்.





No comments:

Post a Comment