Wednesday, November 13, 2013

முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் சுவர் இடிப்பு:தஞ்சையில் வைகோ ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதை பார்க்க வந்த #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ,அங்குள்ள மாவீரர் மண்ட பத்தின் முன் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். 

தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் சுவர் இன்று அதிகாலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் இடிக்கப்பட்டது.

இந்த தகவல் கிடைத்ததும் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ இன்று மதியம் 12.20 மணிக்கு தஞ்சை வந்தார். அவர் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் உள்ளே சென்றார். அப்போது போலீசார் தடுத்தனர். மதிமுக.,வினருக் கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 
அதற்கு வைகோ நான் பிரச்சினை எதுவும் செய்ய வரவில்லை. என்னை கைது செய்ய வேண்டுமானால் கைது செய்யுங்கள் என்றார்.

பின்னர் முள்ளி வாய்க்கால் நினைவு முற்ற வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

இந்த முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் பணி 3 ஆண்டுகளாக நடைபெற்று தற்போது திறக்கப்பட்டுள்ளது. மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவின் பேரில் தான் இந்த நினைவு முற்றம் திறக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இந்த நினைவு முற்றத்தின் காம்பவுண்டு சுவர், நீருற்று, பூங்கா ஆகியவற்றை அதிகாரிகள் இடித்து சேதப்படுத்தி உள்ளார்கள். இதனை மன்னிக்க மாட்டேன்.

இந்த நினைவு முற்றத்தில் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்த முத்துக் குமார் உள்ளிட்டோர் சிலை உள்ளது. அதனை இடிக்க அதிகாரிகளுக்கு எப்படி தான் மனம் வந்ததோ.

இந்த நினைவு முற்றம் தமிழர்கள் சொத்து. இது இடிக்கப்பட்டது திட்ட மிட்ட செயல். இதனை நீதிமன்றத்தில் சந்திப்போம்.


முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்த ஜெயலலிதாவின் இந்த செயல் பச்சை அயோக்கியத்தனமானது. கண் துடைப்பு தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு பிரபாகரன் படத்தை வைக்கக்கூடாது என்று வழக்குகள் போடுகிறார். ஆனால், லட்சோப லட்சம் மக்களின் நெஞ்சத்தில் இருக்கும் பிரபாகரனை நீக்க முடியாது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்! இது போயஸ் கார்டன் சொத்தோ, ஜெயலலிதாவின் சொத்தோ கிடையாது. கேள்வி கேட்க ஆள் இல்லை என்று இப்படியெல்லாம் செய்துகொண்டிருக்கிறார். இதைப் பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள். ஈழ ஆதரவாளர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிறது. எத்தனை தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தாலும் அவை எல்லாம் எங்கள் கால் தூசுக்குச் சமம். முள்ளிவாய்க்கால் முற்றம் எங்கள் சொத்து. நாங்கள் உள்ளே போவோம். அதை தடுக்க முடியாது. ஜெயலலிதாவின் இந்தச் செயல்களூக்கு பாவமன்னிப்பே கிடையாது என்றார் ஆவேசத்துடன்.வைகோ கூறினார். 

பின்னர் அவர் அங்குள்ள மாவீரன் மன்றத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். அவருடன் தொண்டர்களும் உட்கார்ந்து இருந்தனர்.

No comments:

Post a Comment