Tuesday, November 19, 2013

தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம் - வைகோ பங்கேற்பு

தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம் #வைகோ பங்கேற்பு

அகில இந்திய அளவிலான கரும்பு விவசாயிகள் சங்கப் போராட்டம், மறு மலர்ச்சி தி.மு.க.வின் ஆட்சிமன்றக் குழுச் செயலாளரும் ஈரோடு நாடாளும ன்ற உறுப்பினருமான அ.கணேசமூர்த்தி தலைமையில் வரும் 12.12.2013 வியாழக்கிழமை அன்று டெல்லியில் மிகப் மிகப்பெரும் அளவில் நடைபெற இருக்கிறது.

அதற்கு முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பாக 09.12.2013 திங்
கட்கிழமையன்று சென்னையில், மிகப் பெரும் அளவில் ஆர்ப்பாட்டம் நடத்து கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டம் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.

சென்னையில் ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு அன்று மாலை டெல்லி செல் லும் கரும்பு விவசாயிகளை மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சென்னை மத்திய புகை வண்டி நிலையம் சென்று வழியனுப்பி வைக் கிறார்கள்.

No comments:

Post a Comment