Tuesday, November 26, 2013

பொன்னமராவதியில் அரசு கல்லூரி வேண்டும்-மதிமுக கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் #மதிமுக நிர்வாகிகள் கூட் டம் நடந்தது. 
 
கூட்டத்திற்கு ஒன்றியச்செயலாளர் பழனியாண்டி தலைமை வகித்தார். மாநில மருத்துவர் அணி துணைச்செய லாளர் டாக்டர் சின்னப்பா முன்னிலை வகித் தார். 

பொதுக்குழுஉறுப்பினர் சதாசிவம் வரவேற்றார். 

கூட்டத்தில் 

பொன்னமராவதி பகுதியில் அறிவிக்கப்படாத மின் வெட்டை சரி செய்ய வேண்டும், 

பொன்னமராவதியில் கருவூலம் அமைக்க வேண்டும், 

தாலுகா அலுவலகத்திற்கு கட்டிடம் கட்டவேண்டும், 

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்கவேண்டும்.

பொன்னமராவதி தாலுகாவில் அரசு கல்லூரி அமைக்கவேண்டும், 

குண்டும் குழியு மாக உள்ள சாலைகளை சரிசெய்யவேண்டும், 


ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மதிமுக கிளைகளை வழுப்படுத்து வது, வாழ் நாள் உறுப்பினர்கள் சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் திருக்களம்பூர் ராமச்சந்திரன், மாவட்ட விவசாய அணி அமைப் பாளர் மேலைச்சிவபுரி முத்து, மாணவரணி மாவ ட்ட துணை அமைப்பாளர் பிரின்சிலி, ஒன்றிய அவைத்தலைவர் சின்னையா, இலக்கிய அணி அமைப் பாளர் மிதிலை முத்து, இளைஞரணி துணை அமைப்பாளர் முரளி கிருஷ்ணன், மாணவரணி அமைப்பாளர் ராமச்சந்திரன், விவசாய அணி அமைப்பாளர் சக்திவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment