Monday, November 18, 2013

விழும்புரம் மாவட்டத்தில் ரூபாய் 40 இலட்சம் தேர்தல் நிதி வழங்கப்பட்டது-படங்கள்

விழுப்புரம் வடக்கு-தெற்கு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநில #மதிமுக வளர்ச்சி நிதி-தேர்தல் நிதி பொதுக்கூட்டம், விழும்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சியில் நேற்று (17.11.2013) நடைபெற்றது. இதில் விழுப்புரம் வடக்கு-தெற் கு மாவட்டங்களின் சார்பாக ரூபாய் 40 இலட்சம் தேர்தல் நிதியாக பொதுச்செய லாளர் #வைகோ அவர்களிடம் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கழகப் பொருளாளர் டாக்டர் இரா.மாசிலாமணி, அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர் மு.செந்திலதிபன், வெளியீட்டுச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், தொழிலாளர் முன்னணித் தலைவர் புதுவை செ.முத்து, மாவட்டச் செயலாளர்கள் விழுப்புரம் வடக்கு-க.நடராசன், தெற்கு-செஞ்சி ஏ.கே.மணி, புதுச்சேரி ஹேமா பாண்டுரங்கன், கடலூர் என்.இராமலிங்கம், உளுந்தூர்பேட்டை பேரூராட்சித் தலைவர் ஜெய்சங்கர் மற்றும் முன்னணி யினர் கலந்துகொண்டடினர்.

நிதியினைப் பெற்றுக்கொண்டு கழகப் பொதுச்செயலாளர் வைகோ பேசியதா வது: 

இந்த இயக்கம் பலமான சக்திகளோடு மோத வேண்டிய இருக்கிறது. இனி உழைப்பவர்கள்தான் பொறுப்புக்கு வரவேண்டும். முடியாதவர்கள் தானாக ஒதுங்கிக்கொள்ளலாம். வரும் லோக்சபா தேர்தலில் மறுமலர்ச்சி தி.மு.க. நிச்சயம் போட்டியிடுகிறது. நிச்சயம் போராடி வெற்றி பெறுவோம். குடும்ப நலனை பாதுகாத்துக்கொண்டு, வருமானத்திற்கு ஏற்றாற்போல் செலவு செய்யுங்கள். புதிய இளைஞர்கள் நமது இயக்கத்தில் சேருவதற்கு ஆவர்மாக வருகிறார்கள், அவர்களை அன்போடு அழைத்து நாம் அரவணைத்துக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.




No comments:

Post a Comment