Sunday, November 24, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 31

நாள்:-12.01.2009

ஈழத் தமிழர்கள் உயிர் காக்க நடவடிக்கை எடுங்கள்!

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

தாங்கமுடியாத மனவேதனையுடன் இந்தக் கடிதத்தை உங்கள் உடனடிக் கவ னத்துக்கும், நடவடிக்கைக்கும் எழுதி உள்ளேன். இலங்கைத் தீவில்,இரத்த வெறி பிடித்த இனவாத சிங்கள அரசு, தமிழ்  இனத்தையே படுகொலைசெய்து பூண்டோடு அழிக்க, முப்படைகளையும் ஏவி ‘இன அழிப்பு’யுத்தம் நடத்துகிறது. விடுதலைப்புலிகளுடன் போர் என்ற பெயரில், இந்த இனக்கொலையை நடத் துகிறது.

இன்றைக்கு 6 இலட்சம் ஈழத் தமிழர்கள் முல்லைத் தீவில் மரணப் பள்ளத்தாக் கில் தவிக்கின்றனர். இலங்கை இராணுவம் இடைவிடாமல் பீரங்கித் தாக்கு தலும், விமானக் குண்டு வீச்சும் நடத்துகிறது.பசுமை நிறைந்த ஈழத்து வயல் வெளிகளில், தமிழர்களின் குருதி வெள்ளமாகப் பாய்கிறது.
அப்பாவித் தமிழர்கள், பெண்கள், குழந்தைகள், வயதானோர், நோயாளிகள்
இராணுவக் குண்டுவீச்சில் மடிகின்றனர். உணவும், மருந்தும் இன்றிச் சாகின் றனர்.

மிகுந்த வருத்தத்தோடு, இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை
நான் குற்றஞ் சாட்டுகிறேன். இந்திய அரசு திட்டமிட்டு, சிங்கள அரசின் இராணு வத் தாக்குதலுக்கு முழு அளவில் தொடர்ந்து உதவி செய்து வருகிறது. இலங் கை விமானப் படைக்கு ராடார்களைத் தந்தது. இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளித்தது. இந்திய இராணுவ, விமானப் படை நிபுணர்க ளை இலங்கைக்கு அனுப்பி,இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவியது.தமிழ் மக்களைக் குண்டு வீசிக் கொன்று குவிக்கும் சிங்கள விமானப் படை விமா னங்கள் பயன்படுத்தும் பலாலி விமானதளத்தை, இந்திய அரசின் செலவில் பழுதுபார்த்துக் கொடுத்தது.இலங்கைக்கு வட்டியில்லாக் கடனாக ஆயிரம் கோடி ரூபாயும் கொடுத்தது.இலங்கை, அந்தப் பணத்தைக் கொண்டு பாகிஸ் தான், சீனாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க உதவியது.

இலங்கையில் சிங்கள அரசு போர்நிறுத்தம் செய் வதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டும், தமிழகத்தின் அரசியல் கட்சிகள், கலைத்துறையினர், இலக்கியத் துறையினர் ஊர்வலங்கள், அறப்போராட்டங் கள், மனிதச் சங்கிலிகள் நடத்தியும், இந்திய அரசு அவற்றை அவமதித்து அலட் சியம் செய் தது. மாறாக, வெந்தபுண்ணில் வேல்பாய் ச்சுவதுபோல், இலங் கைக்கு இராணுவ உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.

உலகெங்கும் உள்ள தமிழர்களின் சார்பில், உங்களைக் கைகூப்பி, மன்றாடி
வேண்டுகிறேன். முல்லைத் தீவில் மரணத்தின் கோரப்பிடியில் சிக்கி இருக் கின்ற, ஆறு இலட்சம் ஈழத் தமிழர்களின் உயிர்காக்க நடவடிக்கை எடுங்கள்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் உதவியால் ராஜபக்ஷே அரசு நடத்தும்
தமிழ்  இனக்கொலையைத் தடுத்து நிறுத்துங்கள். இந்த நியாயமான கோரிக் கையை நீங்கள் நிராகரித்தால், தமிழர்களும், எங்கள் சந்ததிகளும் இந்திய அர சின் இந்த வஞ்சகமான துரோகத்தை எந்நாளும் மன்னிக்கமாட்டார்கள்.

தங்கள் அன்புள்ள,

வைகோ


வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 30

No comments:

Post a Comment