Thursday, April 25, 2013

சிங்கள வீரர் சங்கக்காரா விரட்டி அடிப்பு !

இது குறித்து தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்ந்த பாரி மைந்தன் தெரி வித்த செய்தி :-

இன்று (24.04.13) காலை இலங்கை கிரிக்கெட் வீரர் சங்கக்காரா சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யுவில் வோல்வோ நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வருவதாக தகவல் கிடைக்க, தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு மற்றும் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் நண்பர்கள் இணைந்து அந்த நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்தை பார்வையாளர்கள் போல 200 பேர் முற்றுகை இட்டோம்.

மாணவர்கள் கூடியிருக்கும் செய்தி அறிந்த காவல்துறை,வோல்வோ நிறுவன அதிகாரிகளிடம் மாணவர்கள் இந்த நிகழ்ச்சிகூட்டத்தில் ஊடுருவியுள்ளனர். 


நீங்கள் இலங்கை வீரரை அழைத்து வந்து ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் பாதுகாப்பு அளிக்க முடியாது என கூறிவிட்டனர். அதனால் அந்த நிறுவனத் தினர் நிகழ்ச்சியை அங்கிருந்து தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதிக்கு மாற்றினர். 

இந்த செய்தி அறிந்த மாணவர்கள் அங்கும் முற்றுகையிட சென்றோம். அதனால் அங்கும் நிகழ்ச்சியை ரத்து செய்யப்பட்டு மீண்டும் மாலை எக்ஸ் பிரஸ் அவென்யுவிற்கு மாற்றப்பட்டது. 

மீண்டும் மாணவர்கள் அங்கேயும் முற்றுகையிட ஒரு அணியை தயார் நிலை யில் வைத்து இருந்தோம். இறுதியாக அங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. 

இறுதியில் அந்த நிகழ்ச்சி அரங்கம் காலி செய்து அனைவரும் கிளம்பும்வரை இருந்து இரவு 8 மணிக்குத்தான் திரும்பினோம். நம் கிடுக்குப்பிடியால் சங்கக் காராவின் வருகை தடுக்கப்பட்டது. கோடிகளைக் கொட்டி நிகழ்ச்சி நடத்திய பணப் பேய்கள் ஓடிக்கொண்டே இருந்தன.



No comments:

Post a Comment