Wednesday, April 24, 2013

ம.தி.மு.க. மாவட்ட செயலரின் தந்தை உடல் தானம்

விழுப்புரம் மாவட்ட ம.தி.மு.க. செயலர் ஏ.கே.மணியின் தந்தை குலசேகரன் (96) செஞ்சியில் அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை உடல் நலக் குறைவால் இறந்தார்.

மேலும் அவர், தனது உடலை மேல்மருவத்தூர் மருத்துவக்கல்லூரிக்கு தானம் வழங்குமாறு எழுதி வைத்துள்ளார். அதன்படி அவரது உடல் அந்த மருத்துவக்கல்லூரியில் ஒப்படைக்கப்பட்டது.



அவர், செஞ்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் இந்தி ஆசிரியராக பணியாற்றி வந்தார். பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட அவர், 1962-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமது இந்தி ஆசிரியர் பணியை துறந்தார்.

அவருக்கு ஏ.கே.மணி (விழுப்புரம் மாவட்ட மதிமுக செயலர்), பாண்டியன், ராஜசேகரன், ரவிசங்கர் ஆகிய மகன்களும் மைதிலி, உதயகுமாரி, அனுசுயா, மீரா, லலிதாம்பிகை, சாந்தி ஆகிய மகள்களும் உள்ளனர்.

No comments:

Post a Comment