Tuesday, April 30, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 20

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே


ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு அரண் விடுதலைப்புலிகள்...

தலைவர் வைகோ தமிழீழம் சென்று வந்த தகவல்கள் குறித்து பின்னாளில்,
விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான பால்ராஜ் ‘ஈழமுரசு’ இதழில்
எழுதிய கட்டுரை ஒன்றில், வைகோவின் உயிருக்கு எவ்வாறு அச்சுறுத்தல்
இருந்தது என்பதைக் குறிப்பிட்டிருந்தார்.

“வை.கோபால்சாமி அவர்களைப் பத்திரமாக தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக் கும் படி தலைவர் என்னிடம் ஒப்படைத்தார். ஒவ்வொரு இடமாகத் தப்பி வந் தோம். மணலாற்றில் வை.கோபால்சாமி இருப்பதாக அறிந்த அமைதிப்படை அவரை உயிருடனோ, பிணமாகவோ பிடிக்கப் பெரும் முயற்சிகளை மேற் கொண்டது. அலம்பில் பகுதியில் அவரைப் படகேற்றும் வரை அவரது பயணம் பாதுகாப்பாகவே இருந்தது. ஆனாலும், அங்கிருந்து படகில் அவர் நல்ல தண் ணி தொடுவாயைச் சென்றடைந்திருந்த போது, அங்கு இராணுவத்தினருடன் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வை.கோபால்சாமி காப்பாற்றப் பட்டார். அப்போது நடந்த மோதலில் லப்டினன்ட் சரத் என்ற போராளி உயிரி ழந்தார்.”


தளபதி பால்ராஜ் எழுதியுள்ள கட்டுரையின் மூலம் தலைவர் வைகோ உயி ரோடு தமிழகம் திரும்பியது மிகப் பெரிய அதிசயம் ஆகும் என்று தெரிகிறது.
இந்திய இராணுவத்தின் துப்பாக்கிக் குண்டுகளால் தலைவர் வைகோ, துளைக் கப்பட்டிருந்தால் தமிழினம் நாதியற்றுப் போயிருக்கும். இன்றைக்கு இந்திய அரசாங்கத்தின் தமிழின விரோதப் போக்கைத் தட்டிக்கேட்க ஆளில்லாத நிலைமை உருவாகி இருக்கும். இயற்கை அன்னையைப் போற்றுவோம்!

தலைவர் வைகோவின் ஈழப்பயணத்திற்கு பிறகு, அங்கு பல மாற்றங்கள் ஏற் பட்டன. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பிரேமதாசா வெற்றிபெற்றார். அவர் பொறுப்பேற்ற உடன்வைத்த முதல் கோரிக்கை இந்திய அரசு அமைதிப்படை யை திரும்பப் பெற வேண்டும் என்பதுதான்.

விடுதலைப் புலிகளின் நிலைப்பாடும் அதுதான். அதுமட்டுமின்றி பிரேமதாசா
போர் நிறுத்தம் அறிவித்து புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக வும் அறிவித்தார். இந்தப் புதிய சூழல் இந்திய அரசுக்கு பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியது. அரசியல் ரீதியிலான நடவடிக்கைகள் எடுப்பதற்கு பதிலாக
இந்திய அரசு இராணுவத்தின் பலத்தைக் கொண்டு இலங்கை அரசாங்கத்தை யும் புலிகளையும் பணிய வைக்க தனது பிடியை இறுக்கியது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை மீதான விவாதங் களின் போது தலைவர் வைகோ, இந்திய அரசு போர் நிறுத்தம் செய்து, விடு தலைப்புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினார்.

1989 ஏப்ரல் 28 இல் மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் தலைவர்
வைகோ ஆற்றிய உரை:

பாகிஸ்தான் சீனப்போரைவிட இழப்பு அதிகம்

வைகோ: நமது அண்டை நாடுகளுடன் உறவுகள் குறித்து விவாதிக்கும்போது,
கடந்த சில ஆண்டுகளாக இலங்கையைப் பற்றி சில கேள்விகள் எழுகின்றன.
இலங்கைத் தீவில் அமைதியை நிலைநாட்டி, ஒரு நிலையான தீர்வை எட்டு வதற்கு விடுதலைப்புலிகளுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண் டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இந்திய அரசு, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மாறாக, அமைதிப் படையின் நடவடிக் கைகள் மூலம் தமிழர்களைக் கொன்று குவித்து வருகிறது.

(காங்கிரஸ் எம்.பி.க்கள் கூச்சல், இடையூறுகள்)

அவை துணைத்தலைவர் அவர்களே! இந்திய அமைதிப்படையில் சென்றுள்ள
இந்திய இராணுவ வீரர்களில் இதுவரை அங்கு நடைபெறும் போரில் கொல்லப் பட்டுள்ளவர்கள் எத்தனை பேர் என்பதை வெளியுறவுத்துறை அமைச்சரி டமி ருந்து அறிய விரும்புகிறேன். அமைச்சர் வெளியிட்டுள்ள கணக்கின்படி, இது வரை 863 இந்திய இராணுவ சிப்பாய்கள் பலிஆகி உள்ளதாகவும், 2500 சிப்பாய் கள் படுகாயமுற்று சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் தெரிய
வந்துள் ளது.

பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இந்தியா போர் புரிந்தபோது, ஏற்பட்ட இழப் பைக் காட்டிலும் இது அதிகம். இந்தியா எதற்காக இந்தத் தியாகத்தைச் செய்ய
வேண்டும்?

அவைத்துணைத்தலைவர்: தயவு செய்து முடித்துக்கொள்ளுங்கள். உங்கள் நேரம் முடிந்துவிட்டது.

வைகோ: நான் இன்னும் இலங்கை பிரச்சினை குறித்து பேசத் தொடங்கவே
இல்லையே!

ராவூப் வலியுல்லா (குஜராத்): இலங்கை சென்றுவந்த அனுபவங்களை அவர்
விவரிக்க வேண்டும் அல்லவா?

வைகோ: இப்பிரச்சினையில் ஓர் வரையறைக்குள் நின்றுதான் நான் கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.

அவைத்துணைத்தலைவர்:நிறைய அனுபவங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.

வைகோ: இல்லை; அவற்றையெல்லாம் விரித்துரைக்க இது நேரம் அல்ல.

அவைத்துணைத் தலைவர்:துரதிருஷ்டவசமாக உங்களுக்கு கால அவகாசம் தரமுடியவில்லை.


வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பது யார்?

வைகோ: இலங்கை சென்றுவந்த அனுபவங்களை நான் விவரிக்கப் போவதில் லை. அதற்கு இப்போது நேரமும் இல்லை. ஒரு வரையறைக்குள் நின்று என் கேள்வியை மட்டும் எழுப்ப விரும்புகிறேன்.

இந்தியா, இத்தனை உயிர்களை எதற்காக தியாகம் செய்ய வேண்டும்?இலங் கையில் இதுவரையில் எவ்வளவு தொகை செலவழிக்கப்பட்டு இருக்கிறது?
எத்தனை கோடி செலவழித்து இருக்கிறீர்கள்? இந்திய அரசு உண்மையான தகவல்களைத் தர தயாராக இல்லை. இதுகுறித்து திட்டவட்டமான பதில் தேவை என்று திரு உபேந்திரா கேள்வி எழுப்பியும்கூட, இதுவரை இந்திய இராணுவத்தின் எத்தனைப் படைப்பிரிவுகள் இலங்கையில் நிறுத்தப்பட்டு
இருக்கின்றன? என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

எவ்வளவு தொகை செலவழிக்கப்பட்டு இருக்கிறது? என்று நான் எழுப்பியகேள் விக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் கே.சி.பந்த் பதிலளிக்கத் தயாராக இல்லை. பிரிட்டன் ஹவுஸ் ஆப் காமன்ஸ் சபையில், போர் நடைபெற்றுக் கொண்டிருந் த வேளையிலும்கூட,நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக பிரத்யேகமாக போர் குறித்த தகவல்கள் ஒளிவு மறைவின்றி அரசின் சார்பில் தெரிவிக்கப் பட்டன. ஆனால் இந்திய அரசு, இலங்கையில் நடைபெறும் போர் குறித்தோ அமைதிப் படைக்கு ஆகும் செலவினங்கள் குறித்தோ நாட்டு மக்களுக்கும், நாடாளு மன்றத்திற்கும் உண்மையான தகவல்களைத் தெரிவிக்க மறுக்கின்றது.

இந்திய அரசு விவேகமான கொள்கை முடிவுகளைத்தான் எடுக்கிறதா? இலங் கைப் பிரச்சினை குறித்த கேள்விகளுக்கு பதில்கூற வாய் திறக்க மறுப்பது ஏன்? பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று விடுதலைப்புலிகள் உங்களுக்கு கோரிக்கை வைத்தவுடன்,பிரேமதாசா தற்போது அவர்களுக்கு அழைப்பு விடுத் துள்ளார். ஆனால், புலிகளின் வேண்டுகோளை நீங்கள் நிராகரித்துவிட்டீர்கள்.

இந்தியாவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட விடுதலைப்புலிகள் 157 பேரின் கதி என்ன? என்று நான் இந்த அவையில் கேள்வி எழுப்பினேன்.அவர்கள் இங் கிருந்து வெளியேற்றப் பட்டார்கள் என மத்திய உள்துறை இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார். அதன்பிறகு என்ன நடந்தது? அவர்கள் என்ன ஆனார்கள்? இலங்கையில் உள்ள இந்திய அமைதிப்படையின் முகாம்களில் சிறை வைக் கப் பட்டு இருக்கிறார்களா? என்ற எனது கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ‘எனக்கு எதுவும் தெரியாது’ என்று கூறுகிறார்.

போரில் காயமுற்று சிகிச்சை பெற்று வந்த விடுதலைப்புலிகளை நாட்டை விட்டு வெளியேற்றுகிறோம் என்று இந்திய விமானப்படை விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்துச் சென்றீர்கள், அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளார் களா? எங்கே போனார்கள்? இந்திய அமைதிப்படை ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தை அறிவித்து அதை மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டித்துள்ளது. ஆனாலும், இங்கிருந்து வெளியேற்றப்பட்ட புலிகள் எங்கே இருக்கிறார்கள்? என்று தகவல் கூற மறுப்பது என்ன நியாயம்? மத்திய வெளியுறவு அமைச்ச ருக்கே இவையெல்லாம் தெரியவில்லை என்றால், வேறு யார் இப்பிரச்சினை யில் தலையிடுகிறார்கள்?

வெளியுறவுத்துறையில் கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கும் சவுத் பிளாக் கில் சில இரக்கமற்ற கொடியவர்கள் இருக்கிறார்கள். நான் வெளியுறவுத் துறை அமைச்சர் பி.வி.நரசிம்மராவை குறிப்பிடவில்லை. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், சில இரக்கமற்ற கொடியவர்கள் தாங்கள் நினைத்ததை எல்லாம் செய்கிறார்கள்.

பேச்சுவார்த்தை மூலமே அமைதி! துப்பாக்கியால் அல்ல!

அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன், சோவியத் யூனியனை தீயசக்தி என்று
வர்ணித்தார். ஆனால், இன்று சோவியத் யூனியனுடன் பேச்சுவார்த்தைக்கு
தயாராகி வருகிறார்.இதில் என்ன தவறு இருக்க முடியும்? வெளியுறவு அமைச் சரின் கவனத்திற்கு ஒன்றைக் கொண்டு வருகிறேன். ஏனெனில் உலக அரங் கில் ‘கிளாஸ்னஸ்ட், பெரஸ்ட்ரிகா’ கொள்கைகள் மிகுந்த தாக்கத்தை ஏற்ப டுத்தி வருகின்றன. அதுபோல உங்கள் வெளியுறவுத்துறையிலும்,சவுத் பிளாக் கில் ‘கிளாஸ்னஸ்ட் ’ நடைமுறைப்படுத்தி, இலங்கைப் பிரச்சினையில் ஒரு புதிய பார்வையை, மறு ஆய்வை நடத்துங்கள்; இலங்கைக்கு செல்லப் போவ தாக நட்வர்சிங் நேற்று கூறியுள்ளார்! அங்கு சென்று எதை சாதிக்கப் போகிறார்?

பேச்சுவார்த்தைக்கு வருமாறு விடுதலைப்புலிகளுக்கு, பிரேமதாசா அழைப்பு விடுத்ததன்மூலம், பிரச்சினையை வேறு கோணத்தில் திசை திருப்ப நினைக் கிறார். ஏனெனில் நீங்கள் விவேகமான முடிவுகளை எடுக்கவில்லை. பேச்சு வார்த்தை மூலமே பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று தி.மு.க. வைத்த கோரிக்கையை நிராகரித்துவிட்டு, கதவுகளை அடைத்து விட்டீர்கள்.

சமாதான பேச்சுவார்த்தைகள் மூலமாகத்தான் அமைதி ஏற்படுத்த முடியுமே யொழிய, துப்பாக்கி தோட்டாக்களால் அல்ல; நாள்தோறும் தமிழர்கள் கொல் லப் பட்டு வருகிறார்கள். அப்பாவி பொதுமக்கள் மீது இன்றும், இந்த நிமிடத் திலும் அமைதிப்படை குண்டுகள் வீசுகின்றது. இதுவரையில் நீங்கள் சாதித்தது என்ன? என்ன காரணத்திற்காக இந்திய சிப்பாய்கள் செத்து மடிந்து கொண்டு இருக்கிறார்கள்? இந்திய அரசின் நடவடிக்கையில் உடனடியாக மாற்றம் வேண்டும். போர் நிறுத்தத்தை அறிவித்து பேச்சுவார்த்தையைத் தொடருங்கள்,
இல்லையெனில் வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகும்.

1989, மே 2 ஆம் நாள், வெளியுறவுத் துறை மீதான விவாதத்திற்கு பதிலளித்து
வெளியுறவுத்துறை அமைச்சர் பி.வி.நரசிம்மராவ் நேபாள அரசுடன் நடத்தப் பட்டு வரும் பேச்சுவார்த்தை குறித்துத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய தலைவர் வைகோ, இலங்கைப் பிரச்சினையில் மட்டும் பாராமுகம் ஏன்? என்று கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் பலத்த வாக்குவாதம் நடைபெற்றது.

இந்தியாவின் நாசகார வெளியுறவுக் கொள்கை

வைகோ: நேபாள நாட்டிலிருந்து நமது வெளியுறவுத்துறைச் செயலாளர் திரும்பியவுடன், தற்போது அங்குள்ள நிலைமை தெரிய வரும் என்று அமைச் சர் கூறி இருக்கிறார். இந்திய அரசாங்கத்தின் போக்கு எங்களுக்கு மிகுந்த
வேதனையைத் தருகிறது. கடந்த ஆண்டு, இருமுறை ஜனவரி 8 ஆம் தேதியும், மார்ச்சு 11 ஆம் தேதியும், நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயா ராக இருக்கிறோம் என்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தகவல் அனுப்பினார். (காங்கிரசு எம்.பி.க்கள் கூச்சல்)

பி.வி.நரசிம்மராவ் (வெளியுறவுத்துறை அமைச்சர்): இலங்கைப் பிரச்சினை
குறித்த விவாதத்தை இப்போது எழுப்ப வேண்டாம் என்று கோபால்சாமியை
நான் கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ: இந்திய அரசின் தாக்குதல் நடவடிக்கைகள் நிறுத்தப்படுமா?

ஜெகதீஸ் தேசாய் (அவைத்தலைவர் பொறுப்பு): இந்திய வெளியுறவுத்துறைச்
செயலாளர் அங்கு சென்றுள்ளார் என்று அமைச்சர் கூறி இருக்கிறார்.

வைகோ: நாசகார கொள்கையை அங்கே நடைமுறைப்படுத்துகிறீர்கள். அமை தியைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?
ஜெகதீஸ் தேசாய்: வெளியுறவுத்துறைச் செயலாளர் அங்கே சென்று ஆலோ சனையில் ஈடுபட்டு இருக்கிறார், அவர் திரும்பியதும் இதுகுறித்துப்பேசலாம் என்று அமைச்சர் தெரிவிக்கிறார்.

வைகோ: நாசகார கொள்கையை நடைமுறைப் படுத்திவிட்டு அமைதிப்பேச்சு வார்த்தை குறித்துப் பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது? மிருகத்தனமான இராணுவ பலத்துடன் விடுதலைப்புலிகளையும், தமிழ் மக்களையும் இரத்த தடாகத்தில் மூழ்கடித்துவிட்டு, அமைதி குறித்தா பேசுகிறீர்கள்? இந்த நிமிடம் வரை இராணுவத் தாக்குதல்கள் தொடருகின்றன.

ஜெகதீஸ் தேசாய்:அரசின் நிலைப்பாட்டை அமைச்சர் தெளிவுபடுத்தி விட் டார். வெளியுறவுச் செயலாளர் அங்கே சென்றுள்ளார்.

வைகோ: இலங்கையில் தமிழர்களைப் பூண்டோடு அழிக்க வேண்டும் என்று
கருதுகிறீர்களா? எப்போது தாக்குதலை நிறுத்தப்போகிறீர்கள்?

பி.வி.நரசிம்மராவ்: கோபால்சாமி இதுபோன்று அடிக்கடி குறுக்கீடு செய்து கொண்டே இருப்பதற்கு அவருக்கு திரும்பத் திரும்ப நேரம் கொடுத்துக் கொண் டே இருக்கிறீர்கள்.நான் உட்கார்ந்து விடுகிறேன். எந்தப்பிரச்சினையும் இல் லை. ஆனால், எந்த பதிலையும் நாம் பெற முடியாது. நான் முன்பே கூறி யிருக் கிறேன். வெளியுறவு செயலாளர் வருகைக்காக காத்திருக்கிறேன் என்று.

வைகோ : பின்னர் எதற்காக இந்த விவாதம்? இந்திய இராணுவத்தின் தாக்கு தலை நிறுத்தப்போகிறீர்களா? இல்லையா?

பி.வி.நரசிம்மராவ் : ஐந்து நாட்களுக்கு முன்பே விவாதம் முடிந்து விட்டது.
அப்போது உறுப்பினர் இதுகுறித்து கேள்வி எழுப்பும் நிலையில் இல்லை.
இன்றும் தெரிவித்திருக்கிறேன். நமது பிரதமரின் சிறப்புத் தூதர் இலங்கை
சென்றிருக்கிறார். அவர் நாடு திரும்பும் வரையில் காத்திருப்போம்.

வைகோ: போர் நிறுத்தம் அறிவிக்கத் தயாராக இருக்கிறீர்களா? இதுதான் என்
கேள்வி?

பி.வி.நரசிம்மராவ்: எண்ணற்ற முறை இந்தக் கேள்விக்கு நான் பதில்கூறி
விட்டேன். அமைதிப்படை திரும்புமா? என்பது புதிய கேள்வி அல்ல. பலமுறை
பதில் கூறிவிட்டோம். இனியும் திரும்ப பதில் கூறத் தேவையில்லை.

வைகோ: நீங்கள் உருவாக்கிய சதுப்பு நிலத்தில் இப்போது நீங்களே வலை யில் சிக்கி விட்டீர்கள்.

தேசிய முன்னணி அரசில்...

1987 ஜூலையில் இந்தியப் பிரதமர் இராஜீவ்காந்தி இலங்கை சென்று ஜெய வர்த்தனேவுடன் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது முதல்
1989 நவம்பரில் இராஜீவ்காந்தி பிரதமர் பொறுப்பிலிருந்து வெளியேறும்வரை,
நாடாளுமன்றத்தில் தலைவர் வைகோ மிகக் கடுமையான வாக்குவாதத்தில்
ஈடுபட்டார்.

1989 நவம்பரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல், காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குக் காரணமாயிற்று.

1989 டிசம்பர் 2 இல் தேசிய முன்னணியின் சார்பில் புதிய பிரதமராக வி.பி.சிங் தேர்வு செய்யப்பட்டார். தி.மு.க. உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் இடம்பெற்ற
தேசிய முன்னணி அரசிலும், இலங்கைப் பிரச்சினையில் நாடாளுமன்றத்தின்
கவனத்தை ஈர்த்து தலைவர் வைகோ, விவாதங்களை எழுப்பினார்.

1989 டிசம்பர் 27இல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் புதுவை நாராயணசாமி, இந் திய அமைதிப்படைக்கும், இலங்கை இராணுவத்திற்குமிடையே ஏற்பட் டுள்ள பதற்றமான சூழ்நிலை குறித்து மாநிலங்களவையில் பேசினார். விடு தலைப் புலிகள் குறித்தும் புலிகளுடன் மட்டும் தமிழ்நாடு முதல்வர் பேச்சு வார்த் தை நடத்துவது குறித்தும், இன்னும் பல போராளி இயக்கங்கள் அங்கே இருக்கின் றன என்றும் தெரிவித்தார். அப்போது தலைவர் வைகோ குறுக்கிட்டுப் 
பேசி னார்.

வைகோ : இந்திய அமைதிப்படை - இலங்கை இராணுவம் மோதல்தான் விவா தப்பொருள். ஆனால், உறுப்பினர் விவாதப் பொருளின் எல்லையைத் தாண் டும் போது, நான் குறுக்கிடுவதற்கு உரிமை இருக்கிறது.

நாராயணசாமி : இலங்கையின் தற்போதைய நிலை குறித்து, தற்போது பொறுப் பேற்றுள்ள அரசின் கொள்கை என்ன என்று தெளிவுபடுத்த வேண்டும்.
வைகோ: நிச்சயம் வெளியிடப்படும். இருப்பினும் திரு ஐ.கே.குஜ்ரால்....
நாராயணசாமி : நண்பர் கோபால்சாமி, இன்னும் அமைச்சராகவில்லை என்று
நினைக்கிறேன்.

வைகோ : திரு. குஜ்ரால் அறிக்கை தருவார்.

நாராயணசாமி : அமைச்சர் அதைக் கூறட்டும்; அவருக்குப் பதிலாக நீங்கள்
அமைச்சர் ஆகிவிட்டீர்களா? இன்னொரு அமைப்பும் அங்கே தமிழர்களுக்கு
பாதுகாப்பாக இருக்கிறது.

வைகோ: அந்தத் துரோகிகள், முந்திய அரசால் உருவாக்கப்பட்டனர்.

நாராயணசாமி: தீவிரவாதிகளான விடுதலைப்புலிகளை கோபால்சாமி ஆத ரிப்பதற்கு வெட்கப்படுகிறேன்.

வைகோ: அது ஒரு விடுதலை இயக்கம்.விடுதலைப்புலிகள்தான் தமிழ் மக்க ளைப் பாதுகாத்து வருகிறார்கள்.நீங்கள் உருவாக்கிய தேசத்துரோகிகள்அல்ல.

நாராயணசாமி:தமிழர்கள் இலங்கையில் இனப்படுகொலை செய்யப்படுகிறார் கள்.வட இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை எவரும் மறுக்க முடி யாது. ஆனால், கோபால்சாமி தீவிரவாதிகளான விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாக இருக்கிறார்.

வைகோ: இலங்கையில், தமிழ் மக்களின் ஒரே பாதுகாப்பு அரண் விடுதலைப்
புலிகள் தான்.

நாராயணசாமி: இந்த அரசு இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும்...
(வைகோ எழுகிறார்... குறுக்கீடு)
அவைத் துணைத்தலைவர் அவர்களே இது என்ன? என் பேச்சில் கோபால்சாமி
குறுக்கிட்டுக்கொண்டே இருக்கிறார்.)

அவை துணைத்தலைவர்: சில நேரங்களில் நீங்களும் இதைப்போன்று குறுக்கிட்டு இருக்கிறீர்கள். தற்போது பொறுத்துக் கொள்ள வேண்டும்.

தொடரும் ..........
நன்றிகள் 

கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment