Saturday, April 20, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 17

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி  படித்துவிட்டு வரலாமே


பிரதமர் இராஜீவ்காந்தி -வைகோ கடும் மோதல்!


இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பிரதமர் இராஜீவ்காந்தியின் அணுகுமுறை யும் அவர் எடுத்த நடவடிக்கைகளும் தமிழினத்திற்கு எதிராகவும், சிங்கள இன
வெறியர்களுக்கு ஆதரவாகவும் இருந்தது. இந்திய அமைதிப்படையை அனுப்பி விடுதலைப் புலிகள் இயக்கத்தை பூண்டோடு கருவறுக்க உத்தரவிட்டார். விடு தலைப்புலிகள் ‘‘afterall two thousand boys’- புலிகள் வெறும் இரண்டாயிரம் பையன் கள். இந்தியா நினைத்தால் ஒரே நாளில் அழித்துவிடுவோம் என்று மார்தட்டி னார்.

பிரதமர் இராஜீவ்காந்தியின் ஆணவ நடவடிக்கைக்கு நாடாளுமன்றத்தில் தலை வர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்தார்.பல சந்தர்ப்பங்களில் இராஜீவ்காந்தி யுடன் மிகக் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. இந்திய நாடே தலை யில் வைத்துக் கொண்டாடிக்கொண்டிருந்த, ‘இளம் பிரதமர்’ என்று புகழாரம் சூட்டப் பெற்று, அசைக்க முடியாத சக்திகொண்டவராக பத்திரிக்கைகள் உருவ கப்படுத்திய பிரதமர் இராஜீவ்காந்தியை, இலங்கைத் தமிழர் பிரச்சினையில், உண்டு இல்லை என்று தலைவர் வைகோ ஒரு கை பார்த்துவிட்டார்.



பிரதமரைப் பார்த்து ‘ஓடாதே நில்! என் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டுப் போ!’ என்று முகத்தில் அறைந்தது போன்று பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தலைவர் வைகோ ஒருவராகத்தான் இருக்க முடியும். கொள்கைத் திறமும், நெஞ்சில் உரமும், துணிவும் கொண்ட திராவிட இயக்கக் காளையாக வைகோ விளங்கியதால் தான் அந்நாட்களில் பிரதமர்களின் பிடரியைப் பிடித்து உலுக்க முடிந்தது.

1988, மார்ச்சு 2 ஆம் நாள் மாநிலங்களவையில் , குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் இராஜீவ் பேசியபோதே அவருக்கும் தலைவர் வைகோ அவர்களுக்கும் கடும் வாக்குவாதம் எழுந்தது.

பிரதமர் இராஜீவ்காந்தி:நாடாளுமன்றத்தின் பயனுள்ள நேரத்தைக் கடந்த ஆண்டு எதிர்க்கட்சியினர் ஆதாரமில்லாத ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி பேசு வதற்கே வீணாக்கினார்கள். ஒவ்வொரு அமைச்சரது இலாகாவிற்கும் ஒதுக்க
வேண்டிய நிதித்தேவை (Money Demonds) பற்றி பேச நேரத்தை ஒதுக்க இயலாமல் போனது.

வைகோ: பிரதமர் இராஜீவ்காந்தி அவர்கள் சிறிது நேரத்திற்கு முன்னால் மக்கள் அவையில் உரையாற்றுவதற்கு தயாரித்து வாசித்த அதே பேச்சைவார்த் தை மாறாமல் தற்போது இந்தச்சபையில் வாசிக்கிறார். அதனால்தான் நிதித் தேவைகள் ( Money Demonds)பற்றி ராஜ்ய சபை விவாதிப்பது கிடையாது என்ற அடிப்படை உண்மையைக்கூடத் தெரிந்து கொள்ளாமல் பிரதமர் பேசுகிறார். இந்த அவை மாநிலங்களவை என்பதை மறந்துவிட்டார் போலும்.

பிரதமர் இராஜீவ்காந்தி: குடியரசுத்தலைவர் உரை இரண்டு சபைக்கும் ஒன்று தானே?

வைகோ: ஆனால், பிரதமரின் உரை எப்படி இரண்டு அவைக்கும் ஒரே உரை யாக இருக்க முடியும்? இரு அவைகளின் விவாதங்களும் வெவ்வேறாகவும்,
விமர்சனங்கள் வெவ்வேறு கோணத்திலும் தானே அமைகின்றன.லோக் சபா வில் சொல்ல வேண்டிய பதிலை ராஜ்ய சபை விவாதத்திற்கும் சொன்னால் எப்படி பொருந்தும்?

உபேந்திரா(தெலுங்குதேசம்): மக்கள் சபையில் பிரதமர் பேசிய உரையின்
பிரதியை அச்சடித்தே இங்கே கொடுத்திருக்கலாமே!

பிரதமரின் அதிகார துஷ்பிரயோகம்

வைகோ: நான்கு நாட்கள் இந்த அவையில் நடந்த விவாதத்திற்கு எந்தப்பயனும் இல்லை. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை எந்தப் பிரதமரும் இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதில்லை. இது மிகவும் கேலிக் குரியது. ஏளனத்திற்கு உரியது.(Highly Rediculous).

இராஜீவ்காந்தி: Rediculous என்பதற்கு உறுப்பினர் அர்த்தம் சொல்லுவாரா?

வைகோ: லோக்சபா விவாதத்திற்குத்தயாரித்த பதிலை ராஜ்ய சபாவிலும்
வாசிக்கிறீர்களே, இப்படி நடந்துகொள்வதைத்தான் Rediculous  என்று வர்ணிக் கலாம்.

இராஜீவ்காந்தி: சில அரசியல் கட்சிகள் வெளிநாடுகளிலிருந்து சித்தாந்தங்
களை இறக்குமதி செய்து பின் பற்றுகின்றன.

நிர்மல் சட்டர்ஜி(மார்க்சிஸ்டு கட்சி): உலகம் பூராவிலும் பின்பற்ற வேண்டிய
தத்துவத்தையே நாங்கள் சொல்லி வருகிறோம்.

வைகோ: இலட்சத்தீவுக்குப் பிரதமர் ஓய்வெடுக்கப் போனாரே, அங்கே பிரதமரு டன் சென்ற வெளிநாட்டுக்காரர்களுக்கு இந்தியக் கப்பல்படைக் கப்பல்களில் பயணம் செய்யவும், பயன்படுத்தவும் எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது? நாட் டின் பாதுகாப்பு விதிகளை மீறி பிரதமரின் அதிகார துஷ்பிரயோகம் செய்யப் பட்டதற்கு பிரதமர் என்ன பதில் சொல்லுகிறார்?

இராஜீவ்காந்தி: இலட்சத் தீவுக்கு நான் ஓய்வெடுக்கப் போனது பற்றிப் பல
விமசர்சனங்கள் எழுந்துள்ளன. எனது நிலையைத் தெளிவு படுத்திவிட விரும்பு கிறேன். நானோ, எனது உறவினர்களோ, எனது நண்பர்களோ எந்த சட்ட விதி யை யாவது மீறி இருந்தால் அதற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். விளைவுகளையும் ஏற்றுக்கொள்கிறேன்.

வைகோ: இந்தியக் கடற்படைக் கப்பலுக்குள் வெளிநாட்டினர் எப்படி அனுமதிக் கப்பட்டனர்? (பிரதமரிடம் இருந்து இதற்கு பதில் இல்லை)

இ.காங்கிரஸ் எம்.பிக்கள் (பேசாதே,பேசாதே, பேசாதே உட்கார் என்று தொடர்ந்து கூச்சல்)

வைகோ: இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகி உள்ள ஒரு நபரின் (அமிதாப்பச்சன்) குடும்ப உறுப்பினர்களை இலட்சத்தீவுக்கு உல்லா சப்பயணம் அழைத்துச் சென்றது ஏன்? அந்நியச் செலாவணி மோசடிக் குற்றச் சாட்டில் சிக்கி இருக்கும் இந்த நபர் மீது விசாரணை நடத்தும் அதிகாரிகளுக்கு பிரதமர் தன் இலட்சத்தீவு பயணத்தின் மூலம் தெரிவித்திருக்கும் எச்சரிக்கை என்ன? பிரதமர் பதில் சொல்லுவாரா?

(பிரதமர் இராஜீவ்காந்தி மெளனம், சபையில் மிகப்பெரிய அமளி ஏற்பட்டது)

அவைத் தலைவர் சங்கர்தயாள் சர்மா:இவ்வளவு அமளிக்கு மத்தியிலும்
கோபால்சாமி பலத்த சப்தம் போட்டுப் பேசுகிறார். இரத்தக்கொதிப்பு ஏற்பட்டு
விடாமல் அவர் தனது உடல் நலத்தைப் பாதுகாத்துக்கொள்ளட்டும்.

வைகோ: எனது உடல்நலம் மிகவும் நன்றாக இருக்கிறது. தங்கள் கவலைக்கு
நன்றி!

(விவாதம் தொடர்ந்தபோது ஒரு கட்டத்தில்)

ஜெகஜித்சிங் அரோரா(அகாலிதளம்): 1984 நவம்பரில் டில்லியில் சீக்கியர்கள்
ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனரே,அக்கொடுமை மீது இந்த அரசு எடுத்த
நடவடிக்கை என்ன?

வைகோ: நவம்பர் படுகொலைகளை நியாயப்படுத்தி அச்சம்பவத்தில் பிரதமர்
பேசினார்.

இராஜீவ்காந்தி: (தொடர்ந்து பேசும்போது...) இலங்கையில் தமிழர்களுக்கு நிதி வழங்கும் வகையில் இந்திய அரசு ஒப்பந்தம் செய்து அதை நிறைவேற்ற முழு அளவில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

வைகோ: ஒப்பந்தம் செத்துக் காலாவதியாகி விட்டது. பிரதமர் அவர்களே... இப்பிரச்சினை குறித்து உங்களிடம் விளக்கம் கேட்க விரும்புகிறேன். நான் கேள்விகள் கேட்க இடமளித்து நீங்கள் தயவுசெய்து உங்களது இருக்கையில் அமர வேண்டுகிறேன்.

இராஜீவ்காந்தி:நீங்கள் கேள்விகள் கேட்க வாய்ப்பளித்து உட்கார தயார்.அதற்கு நான் பதிலளித்துப் பேசும்போது,மீண்டும் குறுக்கிடாமல் இருக்க நீங்கள் உறுதி அளீப்பீர்களா?

வைகோ: ஏற்றுக்கொள்கிறேன்.

இராஜீவ்காந்தி: இன்று மட்டுமல்ல, இனி நடக்கப்போகும் எல்லா  விவாதங் களிலும் இனி குறுக்கிட்டு இடைமறிக்காமல் இருப்பீர்களா? 

இலங்கைத் தமிழர் களை அழிக்கும் இந்திய இராணுவம்

வைகோ: அதற்கு நான் உடன்பட மாட்டேன்.

(பிரதமர் தனது இருக்கையில் அமர்ந்தார்)

வைகோ: இலங்கையில் அன்னையர் முன்னணியைச் சேர்ந்த இரண்டு தமிழ்த்
தாய்மார்கள் சாகும்வரை உண்ணாவிரதம் நடத்துகின்றனர். எந்த நேரத்திலும் அவர்கள் சாக நேரிடலாம். அத்தாய்மார்களின் வேண்டுகோளை ஏற்று, போர் நிறுத்தம் அறிவித்து அவர்களைக்காப்பாற்ற இந்தியஅரசு முன்வருமா? ஜனவரி 13 ஆம் தேதி விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் (பிரதமர் அவர்களுக்கு
எழுதியுள்ள கடிதத்தில்) போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறும், பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறும் தமிழர் நலன் காக்கும் வகையில் புலிகள் ஒத்துழைக்கத் தயார் என்றும் எழுதி இருக்கிறார். பிரபாகரன் வேண்டுகோளுக்கு இந்த அரசாங் கத்தின் பதில் என்ன? இலங்கையில் தமிழர் இனத்தைப் பூண்டோடு அழிககும்
வகையில் இந்திய இராணுவம் நடத்தி வரும் தாக்குதலை நிறுத்த இந்திய அரசு
முன்வருமா?

இராஜீவ்காந்தி: இந்திய இராணுவத்தைப் பற்றி உறுப்பினர் கூறிய ஒரு வார்த் தையை இந்த அவையிலுள்ள அனைவரும் கண்டனம் செய்ய வேண்டுகிறேன்.

(மத்திய அமைச்சர்களும், காங்கிரஸ் கட்சி எம்.பிக்களும் அந்த வார்த்தையை
அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கூச்சலிட்டு வைகோ அந்த
வார்த்தையை திரும்பப் பெற வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர்)

வைகோ: ஆத்திரத்தில் சொல்லவில்லை;யோசித்தே சொன்னேன்.

அவைத்தலைவர் சங்கர்தயாள் சர்மா: அந்தவார்த்தையை சபைக்குறிப்பி லிருந்து நீக்குகிறேன்.

நிர்மல் சட்டர்ஜி(மார்க்சிஸ்ட்டு):உறுப்பினர் தனது கருத்தைச் சொல்ல உரிமை உண்டு. சபைக் குறிப்பிலிருந்து நீக்குவது நியாயமல்ல.



மயான பூமி

வைகோ: ஏற்கனவே எங்கள் நாடாளுமன்றக்குழுத் தலைவர் அந்த வார்த்தை களை இந்த அவையில் பயன்படுத்தி உள்ளார். வேண்டுமானால்,வேறு வார்த் தைகளைப் பயன்படுத்து கிறேன். விடுதலைப் புலிகளை உரிமைக்குப்போராடும் தமிழர்களை இந்திய இராணுவம் கொன்று குவிக்கிறது.இரத்தக் களரி நடத்து கிறது என்று குற்றம் சாட்டுகிறேன்.

இராஜீவ்காந்தி: இந்திய இராணுவம் மெச்சத்தக்க பணி ஆற்றுகிறது. இலங்கை யில் அப்பாவித் தமிழர்களை விடுதலைப் புலிகள் தான் கொலை செய்கின்றனர்.

வைகோ: ஈழ விடுதலைக்கு எதிராக இந்திய இராணுவத்திற்கு காட்டிக் கொடுக் கும் துரோகிகளை விடுதலைப்புலிகள் தாக்குவதில் என்ன தவறு? ஈழம் அவர் களது தாய் நாடு.பூர்வீக மண். புலிகளைத் தாக்க இந்திய இராணுவத்திற்கு ஏது உரிமை?நியாயத்திற்கு விரோதமான யுத்தத்தை நிறுத்தப் போகிறீர்களா? இல்லையா?

இராஜீவ்காந்தி:இந்திய இராணுவம் சென்றிருக்காவிடில் வேறு சக்திகள் அங்கே நிலைபெற்றிருக்கும்.

வைகோ:  பாகிஸ்தானும், இஸ்ரேல் உளவாளிகளும் இலங்கையில் தொடர்ந்து இருக்கத்தான் செய்வார்கள் என்று இலங்கை அமைச்சர்களே சொல்லி விட்டனரே?

உபேந்திரா: பிரதமர் சொன்னதற்கு மாறாகத்தானே பிற நாட்டுப் படையினர்
இலங்கையில் உள்ளனர். அவர்கள் வெளியேறப்போவதில்லை.

இராஜீவ்காந்தி:விரைவில் இலங்கையில் உள்ள மாநிலங்களில் தேர்தல் நடை பெறும். தங்களுக்கு உண்மையான பிரதிநிதிகளை தமிழர்கள் தேர்ந்தெடுப்பார் கள்.

வைகோ: மயான பூமியிலா தேர்தல் நடத்தப்போகிறீர்கள்? இராணுவத்தைக்
கொண்டு துப்பாக்கி முனையில் தேர்தல் நடத்த முற்படுவது அக்கிரமம். 

இராஜீவ்காந்தி: நான் பேசும்போது குறுக்கிட மாட்டேன் என உறுதியளித்த
உறுப்பினர், அதை மீறுகிறார்.

அவைத் தலைவர் சங்கர்தயாள் சர்மா:கோபால்சாமி வாக்குதியை மீறக் கூடாது.

வைகோ: பிரதமர் புதிது புதிதாக தவறான தகவல் தருகிறார். எப்படி நான் குறுக் கிடாமல் இருக்க முடியும்?

இராஜீவ்காந்தி: இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் தங்கள் நாட்டுக்கு
திரும்பிச் செல்லுகின்றனர்.

வைகோ: இங்குள்ள இலங்கை அகதிகளை மிரட்டி, பயமுறுத்தி, வலுக்கட்டாய மாக இலங்கைக்கு இந்திய அரசு அனுப்புகிறது.

இராஜீவ்காந்தி: அகதிகளை வற்புறுத்திநாங்கள் அனுப்பவில்லை.

வைகோ: இலங்கை அகதிகளே இதுபற்றி முறையிட்டு பிரதமருக்கு மகஜர் அனுப்பி உள்ளனர். ஒரு காலத்தில் இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வை நாடுவது தவறு என்று சொன்ன பிரதமர்,தற்போது இராணுவத் தாக்கு தலை பிடிவாதமாகத் தொடர்வது எந்த வகையில் நியாயம்?ஜெயவர்த் தனே யின் கைக்கூலிப் படையாக இந்திய இராணுவம் செயல்படுவது வெட்கத்திற் குரியதாகும்.

மாலத் தீவில் புரட்சி

இந்துமா கடலில் உள்ள சிறிய நாடு மாலத்தீவு. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவு களைக் கொண்ட இந்த நாட்டின் மக்கள் தொகை 2 இலட்சம்தான். தலைநகர் மாலியில் மட்டும் 54 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். இந்தியாவின் நட்பு நாடான மாலத்தீவில் 1988 செப்டம்பரில்,மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக அப்துல க்யூம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.நவம்பர் 3 இல் ஜனாதிபதிக்கு எதிராக 
400 க்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கி,வெடிகுண்டு போன்ற ஆயுதங்களுடன்
ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர்.

தலைநகரில் துப்பாக்கி கொண்டு புரட்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். வெடி குண்டுகளை வீசினர்.தொலைக்காட்சி, வானொலி நிலையங்கள் விமான நிலையங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். சில அமைச்சர் களை யும், 2 ஆயிரம் பொதுமக்களையும் பணயக் கைதிகள் ஆக்கினர்.இந்நிலை யில் மாலத்தீவு ஜனாதிபதி அப்துல் க்யூம், இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியைத்
தொடர்புகொண்டு, புரட்சிப் படையினரை ஒடுக்க இந்தியா இராணுவம் அனுப்பி உதவிட வேண்டும் என்று கோரினார். உடனடியாகப் பிரதமர்

இராஜீவ், அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார்.. இந்திய இராணுவத்தின் 1600 பாராசூட் வீரர்களை உடனடியாக அனுப்புவது என்ற முடிவு செய்து, உடனடி யாக இராணுவம் மாலத்தீவுக்கு அனுப்பப்பட்டது. திடீர் புரட்சியும் முறியடிக்கப் பட்டது.

மாலத்தீவிற்கு இராணுவம் அனுப்பப் பட்டதையும், புரட்சி ஒடுக்கப்பட்டதையும் சிலாகித்து இந்தியப் பிரதமர் இராஜீவ்காந்தி 1988 நவம்பர் 4 இல் நாடாளுமன்றத் தில் ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதம் நடந்த போது, தலைவர் வைகோவுக்கும், பிரதமர் இராஜீவ் காந்திக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

வைகோ: மாலத்தீவில் இந்திய இராணுவம் வெற்றிகரமான சாதனை செய்து விட்டதாக இந்தியப் பிரதமர் இராஜீவ்காந்தி சற்றுமுன் நிகழ்த்திய உரையைக் கேட்டபோது, ஏதோ இந்தியா, தனக்கு சவால்விடப்பட்ட மிகப்பெரிய யுத்தகளத் தில் போராடி ஜெயித்து வந்ததைப் போல குதூகலமான தொனியில் இராஜீவ் காந்தி மார்தட்டிப் பேசினார்.

மாலத்தீவில் எழுந்த உள்நாட்டுக் கலகத்தை அடக்க இந்திய இராணுவத்தை அனுப்பிய பிரதமர்,மாலத்தீவில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற என்று காரணம் சொல்கிறார்.அப்படியானால், நான் பிரதமரை கேட்க விரும்புகிறேன். இந்துமகா சமுத்திரத்தில் உள்ள அனைத்து நாடுகளின் ஜனநாயகத்தின் பாதுகாப்புக்கும்
தர்மகர்த்தாவாக உங்களுக்கு நீங்களே பட்டம் சூட்டிக்கொண்டீர்களா?

எந்த நாட்டில் உள்நாட்டுக் கலகம் எழுந்தாலும், பாதிக்கப்பட்ட தரப்பினர் இந்திய அரசுக்கு முறையிட்டால் உடனே இந்திய இராணுவத்தை அங்கு அனுப்பி
வைப்பீர்களா? 

இந்திய இராணுவம் கூலிப்படையா? 

பக்கத்து நாடாகிய பாகிஸ் தானிலோ அல்லது பர்மாவிலோ உள்நாட்டுக் கலகத் தை அடக்க தங்கள் அதி காரத் தைக் காப்பாற்றிக்கொள்ள அங்குள்ள அதிகார வர்க்கம்,இந்தியாவுக்கு வேண்டுகோள் வைத்தால், இந்தியா அங்கு இராணுவ
ரீதியாக தலையிடுமா? என்று அறிய விரும்புகிறேன்.

இந்திய இராணுவத்துக்கு தனி மரியாதையும், மரபும் உண்டு என்றும், அதன் திறமையைக் குறித்தும் பிரதமர் வெகுவாகப் பாராட்டினார். இலங்கைத் தீவில் தமிழர்களை இந்திய இராணுவம் கொன்று குவிக்கிறதே? இதுதான் இந்திய
இராணுவத்தின் மரபா? 

(இ.காங்கிரஸ் எம்.பி.க்கள்: இலங்கையைப் பற்றி கோபால்சாமி பேசக்கூடாது. கூச்சல்)

வைகோ: இந்திய இராணுவத்தை ஒரு அடியாட்கள் படையாக கூலிப் படையாக இராஜீவ்காந்தி எப்போதோ மாற்றிவிட்டார். இலங்கையில் ஜெயவர்த்தனாவின் கூலிப்படையாகத் தான் இந்திய இராணுவம் செயல்படுகிறது.

அவைத்தலைவர் சங்கர்தயாள் சர்மா:இலங்கைப் பிரச்சினையை விட்டு விட்டு மாலத்தீவுக்கு வாருங்கள்.

வைகோ: ஜெயவர்த்தனாவின் வேண்டுகோள்படிதான் இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பினார்கள்.இராஜீவ்காந்தியின் தவறான அணுகுமுறை யால் இலங்கைப்பிரச்சினையை விடுபட முடியாத ஒரு புதைகுழி ஆக்கி, அதில் இந்திய இராணுவத்தை சிக்க வைத்த இராஜீவ்காந்தி, அந்தப் புதைமணலில்
இருந்து விடுபட முடியாமல் நாள்தோறும் தமிழ் இளைஞர்களை இந்திய
இராணுவம் படுகொலை செய்யக் காரணம் ஆகிவிட்டார்.

(காங்கிரஸ் எம்.பி.க்கள் பலத்த கூச்சல்)

எதிர்க்கட்சி உறுப்பினர்கள்கோபால்சாமி தனது கருத்தைச் சொல்ல
அவருக்கு உரிமை உண்டு.

பிரேமதாசா பேச்சு

வைகோ: ஜெயவர்த்தனா அழைத்தார்.இராணுவத்தை அனுப்பினீர்கள். ஆனால்
இன்று அதே கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளர் பிரேமதாசா,இந்திய இராணுவத்தை வெளியேற்றுவேன் என்கிறார்.

தற்போது மாலத்தீவு அதிபர் க்யூம் குரல் கொடுத்தவுடன் இராணுவத்தை அனுப்பி விட்டீர்கள். பிரதமர் நினைத்தால் இந்திய இராணுவத்தை எங்கு வேண்டுமானாலும் அனுப்பி வைப்பார்.அதனால்தான் அதிரடி கூலிப்படையாக
இந்திய இராணுவம் ஆக்கப்பட்டு விட்டதென்று குற்றம் சாட்டினேன்.

ஈழத்தமிழருக்கு அநீதி

சங்கர்தயாள் சர்மா: இந்திய இராணுவத்தின் மீது பழி சுமத்தாதீர்கள்.

வைகோ: இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு இந்திய
இராணுவ வீரர்கள் பொறுப்பாளிகள்.பொறுப்பு இல்லையெனில் இராணுவத்தை ஏவிவிட்ட பிரதமர் மீது பழி சுமத்துகிறேன். இலங்கைப் பிரச்சினையில் அநீதி யான அணுகுமுறைக்கு காரணமான இந்திய அரசைக் குற்றம் சாட்டுகிறேன். இந்து மகா சமுத்திர வட்டாரம் எங்கும் அமைதியை நிலைநாட்டுவதே இந்தியா வின் நோக்கம் என்று பிரதமர் கூறினார்.

பிரதமர் அவர்களே! எந்த வகையான அமைதி? மயான அமைதியா? இலங்கை யில் தமிழர்கள் வாழும் பகுதியில் நீங்கள் ஏற்படுத்த முயல்வது மயான அமைதி தானே? எனவேதான் இந்திய அரசு இராணுவத்தைப் பயன்படுத்தும் முறையைக் கடுமையாகக் கண்டனம் செய்கிறேன்.

இராஜீவ்காந்தி: இந்திய இராணுவத்தைக் குறித்து உறுப்பினர் கோபால்சாமி செய்த விமர்சனம் ஆபத்தானது மட்டுமல்ல, தேசபக்தி இல்லாத செயலாகும். இந்திய இராணுவத்தைப் பற்றி இப்படி விமர்சிப்பதை சகிக்க முடியாது.தேசபக்தி
இருந்தால் இந்திய இராணுவத்தை விமர்சிக்க மாட்டார்கள்.

எது தேசபக்தி?

வைகோ: பிரதமர் அவர்களே! தேசபக்தி குறித்து ஒரு புதிய தத்துவத்தைக் கண்டுபிடித்து சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். இந்திய இராணுவம் தவறு செய்தால்- அக்கிரமம் செய்தால் அதனை குற்றம் சாட்டுவது தேச பக்திக்கு விரோதமா? யாரும் இதுவரை கேள்விப்படாத தத்துவம் இது.

இலங்கையில் தமிழ் மக்களை ஈவு இரக்கமின்றி இந்திய இராணுவம் படு கொலை செய்ததைக் கண்டிக்கக்கூடாதா?

(காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் அமளி)

இராஜீவ்காந்தி: நான் இந்திய இராணுவத்தைப் பாராட்டுகிறேன்.ஆனால், உறுப் பினர் அதனை எதிர்க்கிறார். தேசபக்தி உள்ளவர்கள் இந்திய இராணுவத்தைப்
பாராட்டுவார்கள். எனது தேசபக்தி இந்திய தேசம் பூராவும் தழுவிய தேசபக்தி. இந்தியாவில் உள்ள சில வட்டாரங்களுக்கு மாத்திரமான தேசபக்தி அல்ல.

வைகோ: பிரதமர் அவர்களே! தேசபக்தி என்பது உங்களின் ஏகபோக சொத்து
அல்ல.

உபேந்திரா(தெ.தேசம்): இலங்கையில் இந்திய இராணுவத்தை சிக்கலில்
மாட்டிவிட்டது. இந்தியப் பிரதமர் தான்.


தொடரும்..................
நன்றிகள் 

கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment