Monday, June 24, 2013

முற்றுகைப் போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும்

குன்னூர் வெலிங்டன் இராணுவப் பயிற்சிக் கல்லூரி
முற்றுகைப் போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும்

வைகோ அறிக்கை

ஈழத் தமிழ் இனப் படுகொலை செய்த சிங்கள இராணுவத்தின் அதிகாரிகளுக்கு தாய்த் தமிழகத்தில் குன்னூர் வெலிங்டனில் உள்ள இந்திய இராணுவப் பயிற் சிக் கல்லூரியில் பயிற்சி கொடுக்கும் இந்திய அரசின் துரோகத்தை எதிர்த்து, நாளை 25 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு திட்டமிட்டபடி முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.

சிங்கள இராணுவ அதிகாரிகள் இன்று திருப்பி அனுப்பப்படவில்லை. ஈழத் தமிழர்கள் உரிமை காக்கவும், சிங்கள அரசுக்கு குற்று ஏவல் புரியும் இந்திய அரசின் துரோகத்தை எதிர்க்கவும் வீரமும் மானமும் கொண்டு போராடி வருகிற தாய்த் தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், உணர்வாளர்கள்அறப்போரில் பங்கேற்க ஆர்த்தெழுந்து வாரீர்!

‘தாயகம்’                                                                                         வைகோ
சென்னை - 8                                                                         பொதுச்செயலாளர்
24.06.2013                                                                                 மறுமலர்ச்சி தி.மு.க.

No comments:

Post a Comment