Monday, June 17, 2013

இளைஞர்களே கிளர்ந்து எழுங்கள் ! பகுதி 1

தொடர்கிறது இந்தியாவின் துரோகம், மன்னிக்க மாட்டோம்! 
தமிழ் ஈழத்தை அமைக்க தமிழகத்து இளைஞர்களே கிளர்ந்து எழுங்கள்! 
- #வைகோ 

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் முள்ளிவாய்க்கால் படுகொ லையில் உயிர் ஈந்தவர்களுக்காக 17.5.2011 அன்று, புரசைவாக்கம்,டாணா தெரு வில், நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பொதுச் செயலாளர் வைகோ, “தொடர்கிறது இந்தியாவின் துரோகம், மன்னிக்க மாட்டோம்!தமிழ் ஈழத்தை அமைக்க தமிழகத்து இளைஞர் களே கிளர்ந்து எழுங்கள்!” என்று உணர்ச்சி முழக்கமிட்டார். அவரது உரை வருமாறு...

பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்
பாசறை ஆயிரம் தோன்றும் 
எங்கள் கருப்பையும் ஆயுதம் ஏந்தும் 
என்ற உணர்ச்சி அலைகள்,உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சில் கொந் தளித்துக் கொண்டு இருக்கின்ற முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு ஆளான
தமிழ் மக்களுக்குப் புகழ் அஞ்சலியும், தமிழ் ஈழ விடுதலைக் களத்தில் உதிரம் சிந்தி உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு வீர வணக்கம், செலுத்துவதற்காகவும்
நாம் இங்கே உணர்ச்சிப் பிழம்பாகத் திரண்டு இருக்கின்றோம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மே 17 ஆம் நாள்,நம்முடைய நெஞ்சம் சல் லடைக் கண்களாகத் துளைக்கப்பட்டு இருந்த, தாங்க முடியாத அந்த துக்கத் தைச் சுமந்து கொண்டு இருக்கின்ற நாம், களத்திலே மாண்டவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதோடு, தமிழ் இனத்தை அழிக்க மாபாதகம் செய்த கொடி யவன் இராஜபக்சே கூட்டத்தை, சர்வதேச நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டி லே நிறுத்தித் தண்டிப்பதற்குச் சூளுரைக்கவும், தாய்த் தமிழகம் ஆர்த்து எழவும் இந்த நிகழ்ச்சியை இங்கே நாம் நடத்திக் கொண்டு இருக்கின்றோம்.

அண்ணன் தா. பாண்டியன் அவர்கள் குறிப்பிட்டதைப் போல, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் 16 ஆம் தேதி வெளிவந்து, 24 மணி நேரம் கடந்த நிலையில்,
நடக்கக்கூடாத துக்கமெல்லாம் அங்கே நடந்து விட்டதோ என்று நாம் பதறித் தவித்துக் கொண்டு இருந்தோம்.

இங்கே மின்சாரம் தடைப்பட்டு இருள் சூழ்வதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியது இல்லை. வானத்தில் வைகாசி முழுநிலவு ஒளி வீசிக் கொண்டு இருக்கின்றது.இது புத்த பெளர்ணமி என்று, வடபுலத்தில் இருக்கின்றவர்கள் போதிசத்துவர் என்னும் ஞானம் பெற்ற புத்தரைப் பாராட்டி, அன்பை, கருணை யை, அறத்தைப் போதித்த புத்தர் பெருமானுக்குப் பெருமை சேர்க்கின்ற முழு நிலவு நாள் என்று கொண்டாடுகின்றார்கள்.ஆனால்,அந்த புத்த மதம் இலங் கைத் தீவில் கால் எடுத்து வைத்ததோ, அசோகவர்த்தனின் பிள்ளைகள் அங்கே
சென்றார்கள் என்று சொன்னார்களோ, அந்த சிங்கள இனவெறிக் கூட்டம், புத்த பிட்சுக்களை முன்னிறுத்தி, புத்த மதத்தை முன்னிறுத்தி, தமிழர்களின் இரத்தத் திலே குளியல் நடத்திக் கொண்டு இருக்கின்றது.

அங்கே, வெளிக்கடைச் சிறையில் ஒரு புத்தர் சிலை இருந்தது. அதற்கு முன் னால், ஒரு அடி உயரத்துக்குத் தமிழர்களின் இரத்தம் தேங்கி நின்றது. 1983 ஆம்
ஆண்டு, ஜூலை 25 ஆம் நாள், குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்ளிட்டோர் கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். எனக்கு மரண தண்டனை
நிறைவேற்றியதற்குப் பிறகு, என் விழிகளை, பார்வை அற்ற ஒரு தமிழனுக்குப் பொருத்துங்கள். அந்தக் கண்களின் வழியாக, மலரப் போகின்ற தமிழ் ஈழத்தை
நான் தரிசிப்பேன் என்று சொன்னதற்காக, குட்டிமணியின் கண்களை பூட்ஸ் காலால் நசுக்கினார்கள்.

இந்திய இலங்கைக் கூட்டு அறிக்கை
அதேபோல, இன்றைக்குப் புத்த பெளர்ணமியைக்கொண்டாடுகின்ற இந்த நாளில், மேலும் ஒரு துரோகத்தை இந்திய அரசு செய்து இருக்கின்றது. நான்
இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாக, தொலைக்காட்சியிலே ஒரு செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது. இந்திய அரசும், இலங்கை அரசும் சேர்ந்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு இருப்பதாக அறிந்தவுடன், உடனடி யாக, வலைத்தளத்தில் இருந்து அந்த அறிக்கையைப் பெற்று, இங்கே கொண்டு வந்தேன்.

தோழர்களே, இந்திய அரசு, தன் துரோகத்தை நிறுத்திக்கொள்ளவில்லை. உல கத்திலே பல்வேறு நாடுகள்,தமிழர்களைக் குடிமக்களாகக் கொண்டு இராத நாடுகள், தொப்புள் கொடி உறவு இல்லாத நாடுகள், இலங்கைத் தீவிலே ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்; அதை விசாரிக்க வேண்டும்; போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று ஓங்கிக் குரல் கொடுக்கின் றன. ஐக்கிய நாடுகள் மன்றம், போர்க்குற்றங்களை விசாரிப்பதற்காக ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்; ஏன் அமெரிக்காவே விசாரணை செய்யும் என்று கூறிக்கொண்டு இருக்கின்ற வேளையில், ஐ.நா. குழுவின் அறிக்கைக்கு மாறாக, இந்திய அரசும், இலங்கை அரசும் இந்தக் கூட்டு அறிக்கையை வெளி யிட்டு இருக்கின்றது.

தோழர்களே,போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு,இராஜபக்சேயைக் கூண்டில் நிறுத்த வேண்டும்; அதற்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது
என்னுடைய வாதம் அல்ல. நான் எவர் கருத்தையும் விமர்சிக்க விரும்ப வில் லை. வருகின்ற கரங்களையெல்லாம் பற்றிக் கொண்டு நாங்கள் களத்துக்குச் செல்ல விரும்புகின்றோமே தவிர, எந்த வேற்றுமையையும் விதைப்பதற்கு நாங்கள் விரும்பவில்லை.

நடந்து முடிந்த தேர்தல் களத்தைப் பற்றிய செய்திகள் எல்லாம் இங்கே வந்தன. நாங்கள் தேர்தல் களத்தில் பங்கு ஏற்கவில்லை. தற்காலிகமாகத்தான் தேர்தல்
களத்தில் பங்கு ஏற்கவில்லை. ஆனால், ஈழத்தமிழர்களின் உரிமைப் போர்க் களத்தில் நாங்கள் என்றைக்கும் முன்னணியில் நிற்போம். (பலத்த கைதட்டல்)

குற்றவாளிகள்

இந்திய மக்கள் குற்றவாளிகள் அல்ல, இந்திய அரசுதான் குற்றவாளி. இந்திய நாடு அல்ல குற்றச்சாட்டுக்கு ஆளாவது; இந்திய அரசை இயக்குகின்ற காங் கிரஸ் தலைமை, அதன் கைப்பாவையாகச் செயல்பட்டுக்கொண்டு இருக் கின்ற தலைமை அமைச்சர் டாக்டர் மன்மோகன்சிங், அவரது தலைமையி லான அமைச்சரவை, அந்த அமைச்சரவையில் பங்கு ஏற்ற அமைச்சர்கள், அரசியல் கட்சிகள், இவர்கள் எல்லோரும்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்றால், ஏ இந்திய அரசே நீ கொடுத்த ஆயுதங்கள், ரடார்கள், அள்ளிக் கொடுத்த ஆயிரம் கோடி பணம், அனுப்பி வைத்த முப்படைத் தளபதிகள், அவர்கள் கொடுத்த ஆலோச னைகள், நீ தந்து உதவிய நவீனக் கருவிகள், துல்லியமாக இலக்குகளைக் கண்டறிந்து குண்டு வீசுவதற்குச் செய்து தந்த ஏற்பாடுகள்தான் காரணம்.

அடர்ந்த காட்டுக்கு உள்ளே முப்படைகளை உருவாக்கி வைத்து இருந்த பிரபா கரனை, உலகம் இதுவரை கண்டும், கேட்டும் அறியாத சாகசங்களை நிகழ்த் திக் காட்டிய அவர்களைக் களத்திலே எளிதில் வெல்ல முடியாது.

ஆயினும், களத்திலே அவர்கள் தோற்பதற்கு என்ன காரணம்?

என்னுடைய அருமைத் தோழர்களே, இளைஞர்கள், கட்சி எல்லைகளுக்கு அப் பாற்பட்ட வாலிபர்கள் பலர் இங்கே வந்து இருக்கின்றார்கள். அவர்களை நான்
வேண்டுகிறேன். இந்த நிகழ்ச்சியை நாம் சம்பிரதாயமாக நடத்தவில்லை. ஒப்புக்கு நடத்துகின்ற கூட்டம் அல்ல.ஈழத்தமிழர்களுக்காக நாங்களும் ஒரு கச்சேரி நடத்துகின்றோம் என்பது போன்ற கூட்டம் அல்ல.கருப்பையும் ஆயு தம் ஏந்தும் என்று சொன்னதைப்போல, எங்கள் இளைஞர்களும் ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டமும் வரும் (பலத்த கைதட்டல்).

ஈழத்தமிழ் இனத்தை அழிப்பதற்கு, இராஜபக்சேவுக்குத் தோள் கொடுத்துத் துணை நின்று கொண்டு, என்ன தைரியம் இருந்தால் நீ இன்றைக்கு அறிக்கை
கொடுப்பாய்?

ஐ.நா. குழுவின் அறிக்கை

ஐ.நா.பொதுச் செயலாளர் பான்-கி-மூன் ஒன்றும் தன் கடமையை முறையாகச் செய்து விடவில்லை.ஆனாலும்கூட, அனைத்து உலக நாடுகள் பல சுட்டிக்
காட்டியதற்குப் பிறகு, ஒரு பெரும் போர்க்குற்றம் நிகழ்ந்துவிட்டது, இலட்சக் கணக்கான தமிழர்கள், குழந்தகைள், பெண்கள் கொல்லப்பட்டு விட்டார்கள்
என்ற உண்மையை மூடி மறைக்க முடியாத நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி, மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தார்.

ஒருவர், இந்தோனேசிய நாட்டின் முன்னாள் அட்டர்னி-ஜெனரல் மார்சுகி தரிஸ்மன்; இன்னொருவர், அமெரிக்க நாட்டின் முன்னாள் துணை அட்டர்னி ஜெனரல் ஸ்டீவன் ராட்னர்; இன்னொருவர் தென்னாப்பிரிக்க நாட்டின் மனித உரிமைப் போராளி, வழக்கறிஞர் யாஸ்மின் சூகா அம்மையார்.

இந்த மூன்று பேரும், 2008 செப்டெம்பர் மாதம் முதல், 2009 மே மாதம் வரை யி லும் இலங்கையில், சிங்கள அரசுப் படைகளுக்கும், தமிழ் ஈழ விடுதலைப்புலி களுக்கும் இடையே நடைபெற்ற போர்க்களத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங் க ளை மனித உரிமை மீறல்களை, மனிதாபிமானச் சட்ட மீறல்களை விசாரித்து அறிக்கை தர வேண்டும் எனப் பணிக்கப்பட்டனர்.

ஆனால், அவர்கள் மூன்று பேரும் இலங்கைக்கு உள்ளே நுழையக்கூடாது என்று இலங்கை தடுத்தது. இந்தக்குழுவை அமைத்த ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூனை இழிவுபடுத்தி, அதை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தை மகிந்த ராஜபக்சே அறிவித்து, ஒரு அமைச்சர் அங்கே உண்ணாவிரதம் இருந் தார். அதில், ‘பன்னாட்டு விபசாரத் தரகன்’(International PIMP) என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூனை அவமதித்து விளம்பரப் பலகை வைத்தார்கள்.

அதன்பிறகு, உலக நாடுகள் கொடுத்த அழுத்தத்தால், இந்த மூன்று பேரையும் அனுமதித்தார்கள். ஆயினும்,அவர்கள் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகள் அனைத் துக்கும் போய்ப் பார்த்து விடவில்லை.ஆனாலும்கூட, அந்த மூன்று பெருமக் களும், உண்மையை அறிந்து, 204 பக்கங்களில் ஒரு அறிக்கை தந்து இருக் கின்றார்கள்.

அந்த அறிக்கையை, இணையதளத்தைப் பயன்படுத்துகின்ற அருமைத் தம்பி களே, தங்கைகளே, தமிழ்ப் பிள்ளைகளே, கல்லூரி மாணவர்களே, அதை மக் களிடம் கொண்டு செல்லுங்கள். ட்விட்டர், ஃபேஸ் புக் இணையதளங்களின் வழியாகக் கருத்துகளைப் பரப்பி, நைல் நதிக்கரையில், எகிப்து நாட்டில் புரட்சி யை ஏற்படுத்தி விட்டார்கள், ஆட்சியை மாற்றி விட்டார்கள்.அந்தப் புரட்சியின் கனல், வளைகுடா நாடுகளிலும் பரவிக் கொண்டு இருக்கின்றது. அதைப்போ லத் தமிழகத்து இளைஞர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. அந்த இளைஞர்களுக்குச் சொல்லுகிறேன்.

ஐ.நா. மூவர் குழு அளித்த அறிக்கையை படிக்கவே முடியவில்லை. அவ்வளவு கொடூரத்தை அரங்கேற்றி இருக்கின்றான். இந்தியாவின் ஆயுதங்கள் மட்டும் அல்ல, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, இஸ்ரேல், ஈரான் என இத்தனை நாட்டு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதலை நடத்தி இருக்கின்றான்.

தமிழா உன் தலைவிதியைப் பார்த்தாயா? பாகிஸ்தானும், இந்தியாவும், நான்கு முறை களத்தில் மோதிக்கொண்டன. ஆனால், இன்றைக்குத் தமிழன் தலை யி லே குண்டு போட, தமிழச்சியைக் கொல்ல, இரண்டு பேரும் சேர்ந்து ஆயுதங் களை அள்ளிக் கொடுக்கின்றார்கள்.ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் கெடுபிடிப் போர். ஆனால், அந்த இரு நாடுகளும், தமிழனை அளிக்க ஆயுதங்கள் கொடுத் தன. இவையெல்லாம், அணு ஆயுத வல்லரசுகள்.இஸ்ரேல் ஃகைபர் ஜெட் விமானங்களில், ஈரானின் குண்டுகள். இத்தனை நாடுகளின் படைகளும் ஆயு தங்களும் சேர்ந்து, தமிழ் ஈழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க ஏற் பாடு செய்தார்கள். இவை அனைத்தையும் எதிர்த்து ஈடுகொடுத்து நின்றார்கள்
விடுதலைப்புலிகள்.

மகாபாரதத்தில் 13 ஆம் சருக்கத்தில் அபிமன்யுவைச் சுற்றி வளைத்ததைப் போல, இராமாயணத்தில் இந்திரஜித்தனை நிகும்பலையில் வளைத்ததைப் போல, இவ்வளவு படைகளும் சேர்ந்து கொண்டு தாக்கியபோதும் அவர்கள் எதிர்த்து நின்றார்கள்.அவர்களை மட்டும் அல்ல, பச்சிளங்குழந்தைகளையும்
கொன்று குவித்தார்கள். அந்த மெல்லிய கரங்கள் கால்கள், உடல் உறுப்புகள், பீரங்கிகளின் தாக்குதலில் சீறி வருகின்ற கத்தி போன்ற தகடுகள், அப்படியே
அறுத்துப் போட்டு விட்டன. கிழித்துப் போட்டு விட்டன.

அந்தத் துன்பத்தை நாம் எப்போது உணர முடியும் தெரியுமா? உன் மடியிலே தவழுகின்ற பிள்ளையை, உன் பேரப்பிள்ளையை, பேரக்குழந்தையை, அந்த இடத்திலே வைத்துப் பாருங்கள். அப்போதுதான், உணர முடியும்.

அதைவிடக் கொடுமை என்ன தெரியுமா? புலிகள் அமைத்த பதுங்கு குழிகளை விட்டு, பாதுகாப்பு வலையம், பாதுகாப்பு வலையம் என்று சொல்லி அங்கே
போங்கள் என்று இராணுவம் நெருக்கிக் கொண்டே போகிறது. அங்கே குண்டு போட மாட்டோம் என்று சொல்லிக் கொண்டு நெருக்கிக் கொண்டே போனார்கள்.
தொடரும் ....

2 comments: